என் மலர்
நீங்கள் தேடியது "கங்குலி"
- போட்டி நடப்பது வெஸ்ட் இண்டீஸ். ஆடுகளங்கள் மெதுவாகவும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும்.
- தேர்வாளர்கள் கூடுதலாக ஒரு ஸ்பின்னருடன் (4 பேர்) செல்ல விரும்பியுள்ளனர்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரிங்கு சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை. டி20 உலகக் கோப்பைக்கான எதிர்கால திட்டத்தில் 26 வயதான ரிங்கு சிங் இடம் பிடித்திருந்தார். என்றாலும் பிசிசிஐ நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் செல்ல திட்டமிட்டதால் ரிங்கு சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இது தொடக்கம்தான், ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என கங்குலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கங்குலி கூறுகையில் "போட்டி நடப்பது வெஸ்ட் இண்டீஸ். ஆடுகளங்கள் மெதுவாகவும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும். ஆகவே, அவர்கள் (தேர்வாளர்கள்) கூடுதலாக ஒரு ஸ்பின்னருடன் (4 பேர்) செல்ல விரும்பியுள்ளனர். இதனால் ஒருவேளை ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், இது தொடக்கம்தான். இதற்காக அவர் மனம் தளரக் கூடாது.
தேர்வு செய்யப்பட்டுள்ளது சிறப்பான அணி. அனைவரும் மேட்ச் வின்னர்கள். 15 பேரும் தேர்வுக்கான வீரர்கள். ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்வார்கள் என்பதை நான் நம்புகிறேன்" என்றார்.
- ரோகித் 5 ஐ.பி.எல். பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
- உலகக் கோப்பை தொடரில் அவர் முன்னணியில் இருந்து வழிநடத்தினார் என்றார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
ரோகித் சர்மாவை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க்கை என்பது முழு வட்டம். 6 மாதத்துக்கு முன் அவர் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாகக்கூட இல்லை, அதே மனிதர் இப்போது இந்தியாவை உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அவர் 2 உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளார். அங்கு அவர் தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளார். இது அவரது கேப்டன்சி மற்றும் தலைமைத்துவத் தரத்தைப் பற்றி பேசுகிறது.
நான் பி.சி.சி.ஐ. தலைவராக இருந்தபோதும், விராட் இனி இந்திய அணிக்கு கேப்டனாக இருக்க விரும்பாதபோதும், அவர் கேப்டனாக ஆனதால் எனக்கு ஆச்சரியமில்லை.
அவர் கேப்டனாக தயாராக இல்லாததால் அவரை கேப்டனாக்க அதிக நேரம் பிடித்தது. அவரை கேப்டனாக்க அனைவரிடமிருந்தும் நிறைய உந்துதல் தேவைப்பட்டது, அவருக்கு கீழ் இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ரோகித் 5 ஐ.பி.எல். பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இது மிகப்பெரிய சாதனை ஆகும். ஐ.பி.எல். வெல்வது சில நேரங்களில் மிகவும் கடினம். சர்வதேச கிரிக்கெட்டை விட ஐ.பி.எல். சிறந்தது என்று நான் கூறவில்லை.
ஆனால் ஐ.பி.எல்.லில் வெற்றி பெற 16-17 (12-13) போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். உலகக் கோப்பையை வெல்ல 8-9 போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். உலகக் கோப்பையை வெல்வதில்தான் கவுரவம் அதிகம். நாளை ரோகித் அதை வெல்வார் என நம்புகிறேன்.
உலகக் கோப்பை தொடரில் அவர் முன்னணியில் இருந்து வழிநடத்தினார். அற்புதமாக பேட்டிங் செய்தார். அது நாளை தொடரும் என நம்புகிறேன். இந்தியா மிக சரியாக முடிக்கும் என நம்புகிறேன். அவர்கள் சுதந்திரமாக விளையாட வேண்டும்.
அவர்கள் போட்டியின் சிறந்த பக்கமாக இருந்தனர். நான் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். பெரிய போட்டிகளை வெல்வதற்கு அது அவசியம் என்பதால் நாளை அவர்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்புகிறேன் என குறிப்பிட்டார்.
- விராட் கோலியிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
- பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி தான் ரோகித்திற்கு கேப்டன் பதவியை வழங்கினார்.
9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்தது. தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவைத் தோற்கடித்து உலக கோப்பையை கைப்பற்றியது.
20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.
2013 ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கு அடுத்து 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்றுள்ளது.
2019 ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு விராட் கோலியிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி தான் ரோகித்திற்கு கேப்டன் பதவியை வழங்கினார். அப்போது இந்த முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், ரோகித்தை கேப்டனாக்க முடிவு செய்தது குறித்து சவுரவ் கங்குலி பேசியுள்ளார்.
"இந்திய கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்தபோது எல்லோரும் என்னை விமர்சித்தனர். தற்போது ரோகித் தலைமையில் இந்திய அணி உலக கோப்பை வென்றதும் அனைவரும் விமர்சிப்பதை நிறுத்திவிட்டனர். மேலும், நான்தான் ரோஹித்தை கேப்டனாக நியமித்தேன் என்பதையே அனைவரும் மறந்துவிட்டனர் என்று என்று சவுரவ் கங்குலி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
- கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இந்த கொலை தொடர் பாக போலீசில் தன்னார்வ தொண்டராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவர் கொலையை கண்டித்து நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்து கொண்டார். போராட்டத்தில் பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கோரி கங்குலி மெழுகுவர்த்தி ஏற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கங்குலியின் மனைவி டோனா, "பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். இது மேற்கு வங்கம் மட்டுமல்ல. எங்கிருந்தோ யாரோ ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக ஒவ்வொரு நாளும் செய்தி வருகிறது, அது நல்ல செய்தி அல்ல. ஒவ்வொரு தனிநபருக்கும் பாதுகாப்பான சமூகம் தேவை" என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய கங்குலியின் மகள் சனா, "போராட்டங்கள் தொடர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- ஒவ்வொரு வீரரும் பெரிய சர்வதேச போட்டியில் வெற்றி பெற விரும்புகிறார்கள்.
- 20 ஓவர் உலக கோப்பைக்காக வீரர்களை தயார் செய்யும் பணியில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஈடுபட்டு உள்ளார்.
மும்பை:
ஐ.பி.எல். டெலிவிஷன் உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.48 ஆயிரத்து 390 கோடிக்கு விற்பனையானது. ஏலம் முடிவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த தகவலை தெரிவித்தது.
இந்த நிலையில் ஐ.பி.எல். ஒளிபரப்பு ஒப்பந்தம், 20 ஓவர் உலக கோப்பை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவர் கங்குலி பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் வீரர்கள் பணத்துக்காக மட்டும் விளையாடுவார்கள் என நினைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-
ஐ.பி.எல். ஒளிபரப்பு மெகா ஒப்பந்தம் மூலம் இந்திய கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்த இது அரிய வாய்ப்பாகும். இன்னும் வலுவான உள்கட்டமைப்பை உருவாக்க கிரிக்கெட் வாரியத்துக்கு உதவும். கிரிக்கெட் வீராங்கனைகளின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்திற்கான திட்டமிடல் 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டு. இது நுணுக்கமாக கையாளப்பட்டது. இந்த ஒளிபரப்பு உரிமத்தை வாங்கிய நிறுவனங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். வீரர்கள் பணத்துக்காக மட்டுமே விளையாடுகிறார்கள் என்று நினைக்க வேண்டாம். அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் அந்தஸ்துக்காகவும், பெருமைக்காகவும் ஆடுகிறார்கள். ஒவ்வொரு வீரரும் பெரிய சர்வதேச போட்டியில் வெற்றி பெற விரும்புகிறார்கள்.
ஐ.பி.எல். போட்டியை விட சர்வதேச போட்டிகளில் தான் மதிப்பு அதிகம். ஐ.பி.எல். போட்டியால் இரு நாடுகள் இடையேயான தொடர் பாதிக்காது. அதற்கு ஏற்ற வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்படுகிறது. ஜூனியர் கிரிக்கெட்டுக்கு நாங்கள் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்போம். இளம் வீரர்களை தொடர்ந்து உருவாக்குவோம்.
ஐ.பி.எல். போட்டியால் வீரர்களுக்கு சோர்வு இருப்பதாக கருதவில்லை. 20 ஓவர் உலக கோப்பைக்காக வீரர்களை தயார் செய்யும் பணியில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஈடுபட்டு உள்ளார்.இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து வாய்ப்பு உள்ள வீரர்களுடன் விளையாட தொடங்குவோம்.
இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.
- 20 ஓவர் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா வெளியேறவில்லை.
- உலகக்கோப்பை போட்டியின் இந்தியாவின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 23-ந்தேதி மோதுகிறது.
புதுடெல்லி:
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக விலகி இருந்தார்.
முதுகுவலி காயம் காரணமாக அவரால் உலகக்கோப்பையில் ஆட இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பும்ரா விலகியது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். அவருக்கு பதிலாக மாற்று வீரர்களில் ஒருவர் இடம் பெறுவார் என்று கருதப்படுகிறது. இதற்காக முகமது ஷமி, தீபக் சாஹர் இடையே போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பையில் பும்ரா விளையாட இன்னும் வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
20 ஓவர் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா வெளியேறவில்லை. அவர் இன்னும் நீடிக்கிறார். பும்ராவின் நிலை குறித்து இன்னும் 2 அல்லது 3 நாட் களில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு கங்குலி கூறி உள்ளார்.
20 ஓவர் உலகக்கோப்பையில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வருகிற 6-ந்தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கிறார்கள். 13-ந்தேதி வரை இந்திய அணி பெர்த் நகரில் இருக்கும்.
உலகக்கோப்பை போட்டியின் இந்தியாவின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 23-ந்தேதி மோதுகிறது. அதற்கு முன்பு 2 பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது. அக்டோபர் 17-ந்தேதி ஆஸ்திரேலியாவுடனும், 19-ந்தேதி நியூசிலாந்துடனும் இந்தியா விளையாடுகிறது.
- நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
- நிர்வாகிகள் 12 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருக்க முடியும்
புதுடெல்லி:
மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் பிசிசிஐ ஆகியவற்றில் உள்ள நிர்வாகிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் வகையில் சட்ட விதிகளில் மாற்றம் செய்ய அனுமதி கோரி பிசிசிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மாநில கிரிக்கெட் சங்கம் அல்லது பி்சிசிஐ-யில் ஆறு ஆண்டுகள் பதவி வகித்தால் மூன்று ஆண்டுகள் கழித்துதான் மீண்டும் பதவி வகிக்க முடியும் என்று விதி உள்ளது. கட்டாயம் இடைவெளி விட வேண்டும் என்ற இந்த விதியை (cooling-off period) மாற்ற அனுமதிக்கும்படி பிசிசிஐ தனது மனுவில் தெரிவித்திருந்தது.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, சட்ட விதிகளை மாற்ற பிசிசிஐக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் பதவியில் தொடரமுடியும்.
மாநில கிரிக்கெட் சங்கங்களில் ஆறு ஆண்டுகள் மற்றும் பிசிசிஐயில் ஆறு ஆண்டுகள் என நிர்வாகிகள் 12 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. பிசிசிஐயில் ஒருவர் ஒரு பதவியில் இரண்டு முறை தலா 3 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- நாங்கள் வெவ்வேறு தலைமுறைகளில் கிரிக்கெட் விளையாடினோம்.
- நான் விளையாடியதை விட அதிக போட்டிகளில் அவர் விளையாடுவார் .
ஆசிய கோப்பை டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்தார். இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலியுடன், விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை ஒப்பீட்டு செய்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் காங்குலி அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:
ஒரு வீரரின் திறமையின் அடிப்படையில் ஒப்பீடு இருக்க வேண்டும். அவர் (கோலி) என்னை விட திறமையானவர் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் வெவ்வேறு தலைமுறைகளில் கிரிக்கெட் விளையாடி உள்ளோம், நாங்கள் நிறைய போட்டிகள் விளையாடி இருக்கிறோம் .
நான் எனது தலைமுறையில் விளையாடினேன். அநேகமாக. நான் விளையாடியதை விட அதிகமாக போட்டிகள் அவர் விளையாடுவார் . தற்போது, நான் அவரை விட அதிகமாக விளையாடி இருக்கிறேன், ஆனால் அவர் அதை கடந்து விடுவார். அவர் அபாரமானவர். இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.
- உலக ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- கல்லீஸ், ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன் ஆகியோர் உலக ஜெயிண்ட்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
கொல்கத்தா:
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி என முன்னாள் வீரர்களை வைத்து நடைபெறும் கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் கொல்கத்தாவில் வரும் செப்டம்பர் 16-ம் தேதி ஒரு சிறப்பு ஆட்டம் நடைபெறுகிறது. இதில் இந்திய மகாராஜா அணியும் உலக ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகிறது.
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக நடைபெறும் இந்தப் போட்டியில் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். இதே போன்று அவருக்கு ஜோடியாக அதிரடி வீரர் விரேந்திர சேவாக் அணியில் இடம்பெற்றுள்ளார். இதே போன்று முகமது கைப்பும் இந்திய மகாராஜா அணியில் இடம்பெற்றுள்ளார்.

மேலும் இர்பான் பதான், யூசுப் பதான், தமிழக வீரர் பத்ரிநாத், பார்த்தீவ் பட்டேல், ஸ்டூவர்ட் பின்னி, ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் போன்ற அனுபவ வீரர்களும் ஆகியோரும் இந்திய மகாராஜா அணிக்காக விளையாட உள்ளனர்.
கடந்த சீசனில் அதிரடியாக விளையாடிய நமன் ஓஜா, அசோக் திண்டா, பிரக்யான் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்பி சிங் மற்றும் ஜோகிந்தர் சர்மா போன்ற நட்சத்திர வீரர்களும் மகராஜா அணிக்காக விளையாடுகின்றனர். இந்த தொடரின் ஆணையராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி செயல்பட உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ரவி சாஸ்திரியும், கங்குலியும் இணைந்துள்ளனர்.
உலக ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கல்லீஸ், ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன் ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய மகாராஜா அணி விவரம்:-
கங்குலி (கேப்டன்), வீரேந்திர சேவாக், முகமது கைஃப், யூசுப் பதான், எஸ் பத்ரிநாத், இர்பான் பதான், பார்த்தீவ் படேல், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா, அசோக் டிண்டா, பிரக்யான் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்.பி.சிங், ஜோகிந்தர் சர்மா, ரீதிந்தர் சிங் சோதி
உலக ஜெயிண்ட்ஸ் அணி விவரம்:-
இயன் மார்கன்(கேப்டன்), சிம்மன்ஸ், கிப்ஸ், காலிஸ், ஜெயசூர்யா, மாட் பிராயர், நாதன் மெக்குல்லம், ஜாண்டி ரூட்ஸ், முரளிதரன், டேல் ஸ்டெயின், மசகார்ட்சா, முர்த்தசா, அஸ்கார் ஆப்கான், மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, கேவின் ஓ பிரெயின், தினேஷ் ராம்டின்
- விராட் கோலி 12 முதல் 13 ஆண்டுகள் விளையாடி உள்ளார்.
- டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்கும், எனக்கும் இது மாதிரி நடந்திருக்கிறது.
கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. 33 வயதான அவர் சர்வதேச போட்டியில் சதம் அடித்து 3 ஆண்டுகள் ஆகிறது. அவர் கடைசியாக 2019-ம் ஆண்டு சதம் அடித்து இருந்தார்.
தற்போது விராட் கோலியின் பேட்டிங் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரில் அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
இதை தொடர்ந்து 20 ஓவர் போட்டிக்கான அணியில் விராட் கோலியின் இடம் குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ், முன்னாள் வேகப்பந்து வீரர் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோரை கேள்வி எழுப்பி இருந்தனர்.
அவரது இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கருத்து தெரிவித்து இருந்தனர். அதே நேரத்தில் கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக விராட் கோலி ஆடவில்லை. இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்திலும் அவர் விளையாடுவது சந்தேகமே.
இந்தநிலையில் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி அறிவுரை வழங்கி உள்ளார். அவர் தனது வழியை கண்டுபிடித்து வெற்றி பெற வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-
விராட் கோலி தற்போது சவாலான நிலையில் உள்ளார். இது அவருக்கும் தெரியும். அவர் ஒரு மிகச்சிறந்த வீரராக இருந்துள்ளார். அவர் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
அவர் தனது வழியை கண்டறிந்து வெற்றி பெற வேண்டும். 12 முதல் 13 ஆண்டுகள் விளையாடி உள்ளார். அவர் ஒருவரால் மட்டுமே மீண்டும் நல்ல நிலைககு வர இயலும்.
விளையாட்டில் இது போன்று நடைபெறுவது வழக்கம் தான். ஒவ்வொரு வருக்கும் நடந்துள்ளது. டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்கும், எனக்கும் இது மாதிரி நடந்திருக்கிறது. அது போலதான் தற்போது விராட் கோலிக்கு நடந்துள்ளது.
எதிர்கால வீரர்களுக்கும் இது மாதிரியான நிலை ஏற்படும். இது விளையாட்டின் ஒரு பகுதியாகும். இதனால் விராட் கோலி தனது குறைபாட்டை அறிந்து தனக்குரிய விளையாட்டை ஆட வேண்டும்.
இவ்வாறு கங்குலி கூறினார்.
விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் ஒரு ரன்னும், 3-வது போட்டியில் 11 ரன்னும் எடுத்தார். முன்னதாக நடந்த 5-வது போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 31 ரன்களே எடுத்தார்.
விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தால் மட்டுமே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற முடியும். இல்லையென்றால் அவர் இடம் பெறுவது கடினமாகிவிடும். உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ந் தேதி தொடங்குகிறது.
கேப்டன் பதவி விவகாரத்தில் கங்குலிக்கும், விராட் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்போது அவருக்கு கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரஹானே, அயர்லாந்து 20 ஓவர் தொடர் மற்றும் இங்கிலாந்தில் நடைபெறும் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவிக்கையில், ‘ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியில் இருந்து ரஹானே நீக்கம் செய்யப்பட்டது கடினமான முடிவாகும். நான் தேர்வாளராக இருந்தால் அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக ரஹானேவை தான் தேர்வு செய்து இருப்பேன். அம்பத்தி ராயுடுவை விட இங்கிலாந்து சூழ்நிலையில் ரஹானே சிறப்பாக செயல்படக்கூடியவர்.
இங்கிலாந்து ஆடுகளங்களில் ரஹானே நல்ல சாதனை படைத்து இருக்கிறார்’ என்றார். #Rahane #Ganguly #ENGvIND