என் மலர்
நீங்கள் தேடியது "கே.எல்.ராகுல்"
- இரண்டாவது போட்டியில் பஞ்சாப், லக்னோ அணிகள் மோதுகின்றன.
- டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது.
லக்னோ:
16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லக்னோவில் இன்று நடைபெறும் 2வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, லக்னோ அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் இறங்கினர். இருவரும் இணைந்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
கைல் மேயர்ஸ் 29 ரன்னில் அவுட்டானார். தீபக் ஹூடா 2 ரன்னில் வெளியேறினார். குருணால் பாண்ட்யா 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.
நிகோலஸ் பூரன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஸ்டாய்னிஸ் 15 ரன்னில் அவுட்டானார். கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 74 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, 160 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.
பஞ்சாப் அணி சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து முழுமையாக குணமாகவில்லை என்று தேர்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
- தேர்வின்போது ஒரு வீரர் தகுதியற்றவராக இருந்தால் நீங்கள் அவரை தேர்வு செய்யக்கூடாது.
புதுடெல்லி:
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 நாடு கள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.
இந்தப் போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக ஆபரேசன் செய்து கொண்ட கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அணிக்கு தேர்வாகி உள்ளனர். இருவரது உடல் தகுதியை சோதிக்காமலேயே தேர்வானது விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது.
அதோடு செப்டம்பர் 2-ந் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போடியில் கே.எல்.ராகுல் ஆடுவது சந்தேகம் என்றும் தேர்வுக்குழு தலைவர் அஜீத் அகர்கர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் முழு உடல் தகுதி இல்லாமல் இருக்கும் கே.எல்.ராகுல் ஆசிய கோப்பை அணிக்கு தேர்வு செய்தது ஏன்? என்று முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கே.ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து முழுமையாக குணமாகவில்லை என்று தேர்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கும்போது அவரை தேர்வு செய்தது ஏன்? தேர்வின்போது ஒரு வீரர் தகுதியற்றவராக இருந்தால் நீங்கள் அவரை தேர்வு செய்யக்கூடாது. இதுதான் எங்களின் கொள்கையாக இருந்தது.
தேர்வு செய்யப்படும் நாளில் ஒரு வீரர் உடல் தகுதியுடன் இல்லாவிட்டால் அவரை தேர்வு செய்யக் கூடாது. நீங்கள் அவரை (கே.எல்.ராகுல்) உலக கோப்பைக்கு தேர்வு செய்ய விரும்பினால் அதற்காக மட்டும் தேர்ந்து எடுக்கவும். தேர்வு குழுவினர் விளக்கம் சரியாக இல்லை.
இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
- முதலில் ஆடிய இந்திய அணி 399 ரன்களை குவித்தது.
- சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி அதிரடியாக ஆடி 200 ரன்கள் சேர்த்தனர்.
இந்தூர்:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெயிக்வாட், சுப்மன் கில் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 16 ஆக இருக்கும்போது ருதுராஜ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் சுப்மன் கில்லுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய அணி 9.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடியைப் பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியினர் திணறினர். இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் சதமடித்து அசத்தினர். ஷ்ரேயஸ் அய்யர் 86 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட சதமடித்தார். அவர் 105 ரன்னில் அவுட்டானார். இது இவரது 3வது ஒருநாள் சதமாகும்.
சுப்மன் கில் 92 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரி உள்பட சதமடித்து அசத்தினார். அவர் 104 ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் 200 ரன்கள் குவித்தனர். இஷான் கிஷன் 31 ரன்னில் வெளியேறினார்.
தொடர்ந்து ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஜோடியில் சிக்சர், பவுண்டரிகளாக அடித்தனர். ராகுல் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.
கேமரூன் கிரீன் வீசிய 43-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 4 சிக்சர்கள் அடித்து அசத்தினார்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்களை குவித்தது. சூர்யகுமார் யாதவ் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.
- இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு பொருத்தமான நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.
- ஆஸ்திரேலிய அணிக்கு 4 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன்
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி வேண்டவே வேண்டாம்! போட்டுடைத்த ஜஸ்டின் லாங்கர்.. கே.எல் ராகுல் கொடுத்த அட்வைஸ் இதுதான்
டி20 உலகக் கோப்பை 2024க்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதற்கிடையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு பொருத்தமான நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.
இந்த பதவிக்கான விண்ணப்பம் வரும் மே 28 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கே.எல். ராகுல், விவிஎஸ். லக்ஷ்மன், ஜஸ்டின் லாங்கர் உள்ளிட்டோரின் பெயர்கள் பிசிசிஐ வட்டாரங்களில் அடிபடுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக, தான் விரும்பவில்லை என்று நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பயிற்சியாளராக உள்ள ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்த லாங்கர், ஐபிஎல் போட்டிகளின் போது சமீபத்தில் லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுலுடன் உரையாடினேன். அப்போது பயிற்சியாளர் பதவி குறித்து கே.எல்.ராகுல் கூறுகையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் எதிர்கொள்ளும் அரசியலும் அழுத்தமும் எந்த ஒரு ஐபிஎல் அணி பயிற்சியாளரையும் விட கிட்டத்தட்ட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். அதை மிகச் சரியான கருத்து என்று தான் கருதுவதாக லாங்கர் குறிப்பிட்டுள்ளார்.

நேர்காணலில் தொடர்ந்து பேசிய லாங்கர், பயிற்சியாளர் பணி அனைத்தையும் உள்ளடக்கிய பாத்திரம் என்பதை நான் அறிவேன். ஆஸ்திரேலிய அணிக்கு 4 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன், அது மிகவும் சோர்வூட்டக் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

- ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்க வைக்காதது பேசுபொருளானது.
- லக்னோ அணி கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி அணி வாங்கியுள்ளது.
ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரெல் ஆகிய 4 வீரர்களை மொத்தமாக 44 கோடி கொடுத்து தக்க வைத்திருந்தது.
கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்க வைக்காதது பேசுபொருளானது. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்-ஐ லக்னோ அணி ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
அதே சமயம் கடந்த சீசனில் லக்னோ அணி கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி அணி வாங்கியுள்ளது. கே.எல்.ராகுலை பெங்களூரு அணி வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெல்லி அணி வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆகவே டெல்லி அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி அணியின் ஓப்பனிங் பேட்டிங்கில் கே.எல்.ராகுல், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், ஹாரி புரூக் என அதிரடி காட்ட பலர் வரிசை கட்டி காத்திருக்கின்றனர். அது சமயம் மிடில் ஆர்டரில் விளையாட டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், அசுதோஷ் சர்மா, சமீர் ரிஸ்வி ஆகிய வீரர்கள் உள்ளனர்.
அக்சர் படேல், குல்தீப் யாதவ் என சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்களும் மிட்செல் ஸ்டார்க், டி.நடராஜன், முகேஷ் குமார், மோகித் சர்மா என்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களும் டெல்லி அணியில் உள்ளனர்.
ஆகவே பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பான வீரர்களை கொண்டுள்ள டெல்லி அணி வரும் ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
23 பேர் கொண்ட டெல்லி கேபிட்டல்ஸ் அணி:
1. அக்சர் படேல், 2. குல்தீப் யாதவ், 3. டிரிஸ்டன் ஸ்டப்ஸ், 4. அபிஷேக் போரல், 5. மிட்செல் ஸ்டார்க், 6. கேஎல் ராகுல், 7. ஹாரி புரூக், 8. ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், 9. டி.நடராஜன், 10. கருண் நாயர், 11. சமீர் ரிஸ்வி, 12. அசுதோஷ் சர்மா, 13. மோகித் சர்மா, 14. ஃபாஃப் டு பிளெசிஸ், 15. முகேஷ் குமார், 16. தர்ஷன் நல்கண்டே, 17. விப்ராஜ் நிகம், 18. துஷ்மந்த சமீரா, 19. டோனோவன் ஃபெரீரா, 20. அஜய் மண்டல், 21. மன்வந்த் குமார், 22. திரிபுரானா விஜய், 23. மாதவ் திவாரி.
- சிகிச்சை முடிந்து அவர் ஓய்வு எடுப்பார் என்றும், அதன் பிறகும் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று உடல்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கே.எல்.ராகுலுக்கு பதில் மயங்க் அகர்வால் அணியில் இடம்பெறுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை:
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்காக இந்திய அணியின் கேப்டனாக முதலில் நியமிக்கப்பட்ட கே.எல்.ராகுல் இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக வெளியேறினார். இதை தொடர்ந்து டி20 தொடரின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ராகுல் மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி செல்லவுள்ளார். இதையடுத்து அவர் ஜூலை 1 முதல் தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை முடிந்து அவர் ஓய்வு எடுப்பார் என்றும், அதன் பிறகும் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று உடல்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தொடரில் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், கே.எல். ராகுலுக்கு பதில் புதிய துணைக் கேப்டன் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. மேலும் கே.எல்.ராகுலுக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வால் அணியில் இடம்பெறுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.