என் மலர்
நீங்கள் தேடியது "தூய்மைப்பணி"
- திருப்பூர் மாநகராட்சியின் பகுதிகளில் கூட்டுத் தூய்மைப் பணி நடைபெற உள்ளது.
- பொது மக்கள் அனைவரும் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
திருப்பூர் :
தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்படி, திருப்பூர் மாநகராட்சி தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் என்னும் தலைப்பில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி நாளை 12.11.2022 அன்று திருப்பூர் மாநகராட்சியின் மண்டலம் 1ல் உள்ள அவினாசி சாலை, மண்டலம் 2ல் உள்ள பெருமாநல்லூர் சாலை, மண்டலம் 3ல் உள்ள பழைய பேருந்து நிலையம் மற்றும் காமராஜ் சாலை,மண்டலம் 4ல் உள்ள பல்லடம் சாலை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகியபகுதிகளில் கூட்டுத் தூய்மைப் பணி நடைபெற உள்ளது.
மேலும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள மற்றும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பதாகைகள், சுவரொட்டிகள் ,விளம்பரப் பலகைகள் மற்றும் அவற்றை வைப்பதற்காக அமைக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் உள்ள பழைய கட்டமைப்புகள், சிதிலமடைந்த சாலைகள் தெருக்களின் பெயர்ப் பலகைகள், சாலைகளின் ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இயக்க இயலா நிலையில் உள்ள வாகனங்கள் மற்றும் இதர கழிவுகள் ஆகியவற்றை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே பொது மக்கள் அனைவரும் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.
- தினமும் ஏறத்தாழ 600 மெட்ரிக் டன் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது.
- 60 வார்டுகளிலும் தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஏறத்தாழ 14 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். வீடுகள், கடைகள், பின்னலாடை தொழிற்சாலைகளில் இருந்து தினமும் ஏறத்தாழ 600 மெட்ரிக் டன் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. மொத்தமுள்ள 60 வார்டுகளில் 30 வார்டில் தனியார் நிறுவனம் மற்றும் மீதமுள்ள வார்டுகளில் மாநகராட்சி துாய்மை பணியாளர் வாயிலாகவும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உள்ளாட்சி பகுதிகளில் தூய்மை பணிகளை தனியார் வெளிச்சந்தை முறையில் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில், 60 வார்டுகளிலும் தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி தினமும் 573.55 மெட்ரிக் டன் குப்பை அகற்ற டன்னுக்கு 3,860 ரூபாய் என்ற அடிப்படையில் டெண்டர் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக தினமும், 22.16 லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு 96 கோடி ரூபாய் தூய்மைப் பணிக்கு செலவிடப்படும். மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து அதனை முறைப்படி கையாள வேண்டும்.
மாநகராட்சியை பொருத்தவரை பல கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பணி முழுமையாக தனியார் மயமாக்கப்படும் நிலையில் இந்த வாகனங்கள் அனைத்தும் வாடகை அடிப்படையில் அதே நிறுவனத்துக்கு வழங்கப்படும்.பேட்டரி வாகனங்கள், 80 இலகு ரக வாகனம், 7 கனரக வாகனம், 12 காம்பாக்டர் மற்றும் 1,099 குப்பை தொட்டிகளும் அந்நிறுவனங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதற்கான வாடகை தினமும் 95,285 ரூபாய் பில்லில் பிடித்தம் செய்யப்படும்.இப்பணியில் ஈடுபடும் ஊழியர்கள் 1.71 லட்சம் வீடுகளில் நேரடியாக பேட்டரி வாகனங்கள் மூலமும், 1.14 லட்சம் வீடுகளில் இலகு ரக வாகனம் மூலமும் குப்பைகளை தரம் பிரித்துப் பெற்று செயலாக்க மையங்களில் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுவர்.
இதுதவிர 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு வணிக நிறுவனங்கள், 9,500 பெரிய நிறுவனங்களில் கழிவு சேகரிப்பர். பிரதான ரோடுகள் 688 கி.மீ., மற்றும் 19 கி.மீ., தெருக்களிலும் தூய்மைப் படுத்தும் பணியில் அந்நிறுவனம் மேற்கொள்ளஉள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பகுதி வாரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் சப்ளை தினமும் வழங்கப்படுகிறது. இதுதவிர 2-வது மற்றும் 3-வது குடிநீர் திட்டம் மூலம் தற்போது குடிநீர் வினியோகம் நடக்கிறது.
தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற கருத்து பரவலாக உள்ளது.
இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:- இரண்டாவது குடிநீர் திட்டத்தில் 2 கோடி லிட்டர், 3 வது குடிநீர் திட்டத்தில் 10 கோடி லிட்டர் என்ற அளவில் தற்போது குடிநீர் பெற்று வழங்கப்படுகிறது. தற்போது 4வது குடிநீர் திட்டத்தில் சோதனையோட்டத்தில் கடந்த வாரம் வரை 46 கோடி லிட்டர் பெற்று வழங்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் பெருமளவு சோதனையோட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது அங்குள்ள 18 மேல்நிலைத் தொட்டிகளில் குடிநீர் நிரப்பி, திட்டம் செயல்படும் விதமாக குடிநீர் சப்ளை துவங்கப்பட்டு விட்டது. அவ்வகையில் தற்போது சராசரியாக தினமும், 5 கோடி லிட்டர் என்றளவில் குடிநீர் வினியோகமாகிறது.
அவ்வகையில் இதற்கு முன் சப்ளை செய்யப்பட்ட 2 மற்றும் 3வது குடிநீர் திட்டங்களின் குடிநீர் தெற்கு பகுதிக்கு வழங்கப்படும். இதுதவிர தெற்கு பகுதியில் கட்டி முடித்து தயார் நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளுக்கு அடுத்த கட்டமாக வெள்ளோட்டம் நடத்தி குடிநீர் வழங்கப்படும்.அனைத்து வார்டுகளிலும் பயன்பாட்டில் உள்ள ஆழ்குழாய் கிணறு மோட்டார்கள் பழுது நீக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதலான கிணறுகள் அமைக்க கவுன்சிலர்களிடம் விவரம் பெறப்பட்டுள்ளது. விரைவில் அப்பணி மேற்கொள்ளப்படும்.குழாய் சேதம், குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் உடனடியாக குடிநீர் வழங்கும் விதமாக 18 லாரிகள் பயன்பாட்டில் உள்ளன.மாநகராட்சி பகுதியில் குழாய் சேதம் போன்ற காரணங்களால் குடிநீர் வீணாவது மற்றும் வினியோகம் தடைப்படுவது போன்றவை தவிர்க்கும் வகையில் கண்காணிப்பு மேற்கொண்டு உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.
- 18 உறுப்பினா்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவினாசி :
திருமுருகன்பூண்டி நகராட்சி மன்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். ஆணையா் அப்துல் ஹாரிஸ், துணைத் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளிலும் நிலவும் குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காணப்படாமல் உள்ளதாகவும், குழாய் உடைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக பெரும்பாலான நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா். இதையடுத்து, நகராட்சியில் தூய்மைப் பணியை தனியாா்மயமாக்குவது குறித்த தீா்மானத்தை நிறைவேற்றுவது குறித்து மன்றத்தில் பொருள் வாசிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நகராட்சி துணைத் தலைவா் ராஜேஸ்வரி உள்பட அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் என மொத்தம் 18 போ் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்ததால் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக நகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.
இதற்கு 13-வது வாா்டு உறுப்பினரும், திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவருமான லதா சேகா் உள்ளிட்டோா் எதிா்ப்பு தெரிவித்து மூன்றில் ஒரு பங்கு ஆதரவு இருந்தால் தீா்மானம் நிறைவேற்றலாம் என்பதற்கான அரசு ஆணையை வழங்குமாறு ஆணையரிடம் கேட்டனா்.இதையடுத்து, அதற்கான அரசு ஆணையை வழங்க முடியாது என அவா் தெரிவித்தாா். இதையடுத்து, தர்ணாவில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். உறுப்பினா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து தூய்மைப் பணியை தனியாா்மயமாக்கும் தீா்மானத்தை ஆணையா் ஒத்திவைத்தாா்.
17வது வாா்டு ராக்கியாபாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், தங்களது பகுதியில் நிலவும் சாக்கடை பிரச்னை தொடா்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி ஆணையரை முற்றுகையிட்டனா். இதையடுத்து பு ஆய்வு மேற்கொள்வதாக அவா் உறுதி அளித்தாா். இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
- கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 2023 -24ம் கல்வியாண்டு விரைவில் துவங்குகிறது.
- தூய்மைப் பணியாளர்களைக்கொண்டு பள்ளியில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடுமலை :
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 2023 -24ம் கல்வியாண்டு விரைவில் துவங்குகிறது.இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து அரசு பள்ளிகளிலும் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில் பள்ளி வளாகம், கழிவறை மற்றும் குடிநீர் தொட்டிகளை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்ய தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி உடுமலை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தூய்மைப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:- உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்டு அரசு பள்ளிகள் செயல்படுகின்றன.எனவே அந்தந்த உள்ளாட்சி அமைப்பு தூய்மைப் பணியாளர்களைக்கொண்டு பள்ளியில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல பள்ளியில் அமைந்துள்ள மின் சாதனங்கள், இணைப்புகள், மின் பணியாளர்களை கொண்டு சரிபார்க்கப்படுகிறது. சிதிலமடைந்துள்ள கட்டடங்கள் இருந்தால் அவற்றை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குடிநீர் குழாயில் உடைப்பு, கசிவு உள்ளிட்டவை சீரமைக்கப்படுகிறது.வகுப்பறைகள், மாணவர்களுக்கான இருக்கைகள் சுத்தப்படுத்தப்படுகிறது. ஆங்கில வழிப் பிரிவுகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் பல்வேறு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.
- நகரம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள், விளம்பர தட்டிகள் அகற்றப்பட்டன.
செங்கல்பட்டு:
மறைமலைநகர் நகராட்சியில் கடந்த ஆண்டு ஜூன் 3-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
அதன்படி ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் பல்வேறு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. மறைமலைநகர் நகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், சுய உதவி குழுக்கள், குடியிருப்போர் நல சங்கங்கள் தன்னார்வலர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் நகராட்சி முழுவதும் மார்க்கெட், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கூட்டு துப்புரவு பணி நடந்து வருகிறது.
திடக்கழிவுகளை பிரித்து சேகரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசக சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் வீடு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. 6 நீர்நிலைகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு சுமார் 1026 மரக்கன்றுகள் நடப்பட்டது. நகரம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள், விளம்பர தட்டிகள் அகற்றப்பட்டன.
கட்டிட இடிபாடுகள் 160 டன் அகற்றப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை பணியில் அன்றாடம் திடக்கழிவுகளை உரிய முறையில் பிரித்தளித்த இல்லத்தரசிகள் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டம் தொடங்கி ஓராண்டு முடிந்த நிலையில் மறைமலை நகராட்சி பகுதியில் இன்று சிறப்பு தூய்மை பணிகள் நடைபெற்றது.
நகராட்சி தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற தூய்மை பணிகள் நிகழ்ச்சியில் பொது மக்கள், வணிக நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், தன்னார்வலர்கள், தொழிற்சாலை பணியாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
- 80 லட்சம் ரூபாய் செலவில் சாலைகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
- 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.
உடுமலை :
உடுமலை நகராட்சியில் தனியார் மற்றும் அரசு பங்களிப்பு நிதியின் கீழ் 80 லட்சம் ரூபாய் செலவில் சாலைகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் சாலைகளில் உள்ள குப்பை, கழிவுகள் மற்றும் மண் ஆகியவற்றை கீழே பொருத்தப்பட்டுள்ள பிரஷ் மற்றும் உறிஞ்சும் தன்மை உள்ள அமைப்பு வாயிலாக சேகரித்து உரக்குடில்களுக்கு கொண்டு வந்து தரம் பிரித்து மறு சுழற்சி செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தனியார் நிறுவனங்கள் 50 சதவீதம் பங்களிப்பு நிதியுடன், ரோடு ஸ்வீப்பிங் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.இரவு நேரங்களில் இந்த வாகனத்தை ரோடுகளில் இயக்கி தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சிகளில் உள்ள இந்த வாகனம் முதல் முறையாக உடுமலை நகராட்சியில் பயன்படுத்தப்படுகிறது என்றனர் .
- ரூ. 80 லட்சம் செலவில் ரோடுகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
- 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.
உடுமலை :
உடுமலை நகராட்சியில் தனியார் மற்றும் அரசு பங்களிப்பு நிதியின் கீழ் ரூ. 80 லட்சம் செலவில் ரோடுகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.இந்த வாகனத்தில் ரோடுகளில் உள்ள குப்பை கழிவுகள் மற்றும் மண் ஆகியவற்றை கீழே பொருத்தப்பட்டுள்ள பிரஸ் மற்றும் உறிஞ்சும் தன்மை உள்ள அமைப்பு வாயிலாக சேகரித்து உரக்குடில்களுக்கு கொண்டு வந்து தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய திட்டமிட்டுள்ளனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் ,தனியார் நிறுவனங்கள் 50 சதவீதம் பங்களிப்பு நிதியுடன் "ரோடு ஸ்வீப்பிங்" எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.
இரவு நேரங்களில் இந்த வாகனத்தை ரோடுகளில் இயக்கி தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சிகளில் உள்ள இந்த வாகனம் முதல் முறையாக உடுமலை நகராட்சியில் பயன்படுத்தப்படுகிறது என கூறினர்.
- வார்டு பகுதிகளில் 1,200 புதிய குப்பை தொட்டி உட்பட பல பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
- நிறுவனத்துக்கு 15 நாள் சோதனை அடிப்படையில் தூய்மை பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது
திருப்பூர்:
தமிழகம் முழுவதும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணி மேற்கொள்ள, தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.
அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சி பகுதியில், தனியார் நிறுவனம் தூய்மைப்பணிக்கு, அகற்றப்படும் குப்பை கழிவுகளின் டன் கணக்கீடு அடிப்படையில் உரிமம் பெற்றுள்ளது.மாநகராட்சி பகுதியில் முழுமையாக குப்பை கழிவுகள் சேகரித்து அவற்றை முறைப்படி அழிக்கும் வரையிலான முழுமையான பணியை அந்நிறுவனம் மேற்கொள்ளும். இதற்காக, தற்போது வார்டு பகுதிகளில் 1,200 புதிய குப்பை தொட்டி உட்பட பல பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இப்பணிக்கு இதற்கு முன்னர் மாநகராட்சி பயன்படுத்திய நிர்வாகத்துக்குச் சொந்தமான வாகனங்கள் வாடகை அடிப்படையில் பயன்படுத்தபடவுள்ளது. மேலும், வார்டு பகுதியில் தூய்மைப்பணிக்கு உரிய எண்ணிக்கையிலான ஆட்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெண்டர் எடுத்த நிறுவனத்துக்கு 15 நாள் சோதனை அடிப்படையில் தூய்மை பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அவ்வகையில் கடந்த, 1-ந் தேதி முதல் நிறுவனம் நடத்திய சோதனை அடிப்படையிலான தூய்மைப் பணி நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், இன்று முதல் முழு வீச்சில் தனியார் நிறுவனம் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் தூய்மைப் பணியை மேற்கொள்ள தொடங்கி உள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப் பணி முழுமையாக தனியார் நிறுவனம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இதற்கான பணியாளர்களை நிறுவனம் முழுமையாக நியமித்துள்ளது. இந்நிலையில் மாநகராட்சியில் தற்போதுள்ள 685 நிரந்தர தூய்மை பணியாளர்கள் மாற்றுப்பணிக்கு அனுப்பப்பட உள்ளனர்.
- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனித்துவமான அழைப்பு விடுத்துள்ளார்.
- நாடு முழுவதும் மார்க்கெட் பகுதிகள், ரெயில் தண்டவாளங்கள், நீர்நிலைகள், சுற்றுலா தலங்கள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தூய்மைப்பணி நடைபெறும்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதிவரை 'சுகாதார சேவை' என்ற பெயரில், பிரமாண்ட தூய்மைப்பணி நடந்து வருகிறது. மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, இந்த பிரசாரம் நடக்கிறது.
அதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 1-ந் தேதி காலை 10 மணிக்கு நாடு முழுவதும் பொது இடங்களில் மெகா தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும் என்றும், அதில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஒரு மணி நேரம் ஒதுக்கி பங்கேற்குமாறும் பிரதமர் மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனித்துவமான அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, அக்டோபர் 1-ந் தேதி காலை 10 மணிக்கு மெகா தூய்மைப்பணி நடைபெறும். நாடு முழுவதும் மார்க்கெட் பகுதிகள், ரெயில் தண்டவாளங்கள், நீர்நிலைகள், சுற்றுலா தலங்கள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தூய்மைப்பணி நடைபெறும். சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அதில் பங்கேற்க வேண்டும்.
ஒவ்வொரு பேரூராட்சி, ஊராட்சிகள், சிவில் விமான போக்குவரத்து, ரெயில்வே, தகவல் தொழில்நுட்பம் போன்ற மத்திய அரசு துறைகள், பொது நிறுவனங்கள் ஆகியவை தூய்மைப்பணிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனியார் அமைப்புகள் ஆகியவை இவற்றை நடத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் இணையதளங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பூங்காக்கள், தெருக்கள், பள்ளிகள், கோவில்கள், நீர் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிகளை செய்தார்கள்.
- ஈக்காட்டுதாங்கலில் பள்ளி வளாகத்தை மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமையில் சுத்தப்படுத்தினார்கள்.
சென்னை:
நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டப்படி இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை அனைவரும் தூய்மை பணிகளில் ஈடுபடும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
இதை பா.ஜனதாவினர் அனைத்து பகுதிகளிலும் மேற்கொண்டனர். சென்னையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தது.
பூங்காக்கள், தெருக்கள், பள்ளிகள், கோவில்கள், நீர் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிகளை செய்தார்கள். பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள்.
மடிப்பாக்கம் ஏரி, வில்லிவாக்கம் பூங்கா, அம்பத்தூர் பகுதிகளில் நடந்த பணிகளில் துணைத்தலைவர் கரு.நாகராஜன் பங்கேற்றார்.
அண்ணா நகரில் மாவட்ட தலைவர் தனசேகர், மகளிரணி லதா சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநில செயலாளர் சதீஷ் தலைமையில் திரு.வி.க. நகரில் தூய்மை பணியில் ஈடுபட்டார்கள்.
ஈக்காட்டுதாங்கலில் பள்ளி வளாகத்தை மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமையில் சுத்தப்படுத்தினார்கள்.
இதே போல் நகரம் முழுவதும் நடைபெற்றது. மாவட்ட தலைவர்கள் தங்கள் மாவட்டங்களில் ஆங்காங்கே தூய்மைப் பணிகளில் ஈடுபட்டார்கள்.
- பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது.
- பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் பற்றிய விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது.
உடுமலை:
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டுதலின்படி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளிகளில் தூய்மை பாரத இயக்கம் தலைப்பில் பல்வேறு நிகழ்வுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம், இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பூச்செடிகள் நடவு செய்யப்பட்டன. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார். இராகல்பாவி ஊராட்சி மன்ற தலைவி சுமதி செழியன் முன்னிலை வகித்தார். ராகல்பாவி இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகி சின்னதுரை பூச்செடிகள் மற்றும் தொட்டிகளை பள்ளிக்கு வழங்கினார். பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் , பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இணைந்து பள்ளி வளாகத்தில் பூச்செடிகளை நடவு செய்தனர்.
அப்போது பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் பற்றிய விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. இதில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் கோகுலப்பிரியா, முன்னாள் மாணவர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் செய்திருந்தார்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் மூலம் தனியாரிடம் தூய்மைப் பணி வழங்கப்பட்டது.
- ஆணையா் ஆண்டவன், துணைத் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அவிநாசி:
அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் மூலம் தனியாரிடம் தூய்மைப் பணி வழங்கப்பட்டது. தற்போது, ஒப்பந்ததாரா் மூலம் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது.
ஆனால், தனியாா் ஒப்பந்ததாரா் குப்பைகளை மட்டுமே அகற்றுவதால், நகராட்சி முழுவதும் கழிவுநீா்க் கால்வாய்கள் தூா்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டு, சுகாதார சீா்கேடு ஏற்பட்டு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ள நிலையில், நிரந்தர தூய்மைப் பணியாளா்களாக 8 போ் மட்டுமே உள்ளனா். இவா்களும் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதால், தூய்மைப் பணி முற்றிலும் முடக்கியுள்ளது.
எனவே தனியாரிடம் வழங்கப்பட்ட தூய்மைப்பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத்தலைவா் குமாா் தலைமை வகித்தாா். ஆணையா் ஆண்டவன், துணைத் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினா்கள் கோரிக்கைக்கு ஏற்ப தனியாரிடம் வழங்கப்பட்ட தூய்மைப்பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.இதைத்தொடா்ந்து குடிநீா் வசதி, தெருவிளக்கு, சாலை வசதி, உயா்மின் விளக்கு, பொதுக் கழிப்பிடம், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி நகா் மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.
நகா்மன்ற உறுப்பினா்களின் கோரிக்கை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் ஆண்டவன் தெரிவித்தாா். நிறைவாக மன்ற பொருள் வாசிக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.