என் மலர்
நீங்கள் தேடியது "விழா"
- செங்காட்டுப்பட்டியில் நூலக வார விழா நடைபெற்றது
- வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் செங்காட்டுப்பட்டி கிளை நூலக வாசகர் வட்டம் நடத்திய, 55- வது தேசிய நூலக வார விழா, செங்காட்டுப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் புத்தக கண்காட்சி மற்றும் ஊக்குவிப்பு பயிற்சி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
தமிழ் ஆசிரியர் அனந்தராமன் வரவேற்றார், பள்ளி தலைமை ஆசிரியை கற்பகம் தலைமை ஏற்று புத்தக கண்காட்சி திறந்து வைத்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாஸ்கர் சிறப்புரை வழங்கினார். வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஏற்புரை வழங்கினார். கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேராசிரியர் வைரமணி வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் பள்ளியில் இருபால் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர் வாசகர் வட்ட தலைவர் ராமராஜன், பள்ளி மாணவ மாணவிகள், ஊர்முக்கிய பிரமுகர்கள் செல்லமுத்து, பெரியசாமி செல்வராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் செங்காட்டுப்பட்டி கிளை நூலகர் கார்த்திகேயனிடம் ரூ.1000/- வழங்கி புதிய புரவலராக சிலம்பரசன் இணைந்தார். இறுதியாக கீரம்பூர் கிளை நூலகர் நூர் அஹமத் நன்றி கூறினார்.
- அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது.
- மாணவ, மாணவிகளின் கோலாட்டம் நடந்தது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சிவபுரிப்பட்டி ஊராட்சி மக்கன்டான் கோவில்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. தலைமை ஆசிரியை ஈஸ்வரி தலைமை தாங்கினார்.
வட்டார கல்வி அலுவலர் இந்திரா தேவி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் செந்தில் மற்றும் சேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் கோலாட்டம், ராதா ருக்மணி ஆட்டம், தப்பாட்டம் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி மேலாண்மை குழு தலைவி சுபாஸ்ரீ, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவி ரஞ்சிதா, செல்வம், கோளம்பழனி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை பரிமளா நன்றி கூறினார்.
- 113-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா
- துளிகள் அமைப்பு சார்பில் 20,340 மரக்கன்றுகள்
காங்கயம்:
காங்கயம் துளிகள் அமைப்புசார்பில் 20,340 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்தநிலையில் 113-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா குண்டடம் யூனியன் தும்பலப்பட்டியில் நடைபெற்றது. குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகாசலம் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நந்தவனம்பாளையம் ஊராட்சி தலைவர் தனசெல்வி நாச்சிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் என்.பி. பாண்டியன், 6-வது வார்டு உறுப்பினர் பிரியா பூபதி, ஊராட்சி செயலாளர் ஜெயமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கார்த்திகை மாத இசை விழா நடைபெற உள்ளது
- வருகிற 26 ம் தேதி நடக்கிறது
திருச்சி:
பாரதிய வித்யா பவன், பெங்களூரு இன்போசிஸ் பவுண்டேஷன் சார்பில் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் கார்த்திகை மாத இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இதன் முதல் நாள் நிகழ்வாக வருகிற 26 ம் தேதி( சனிக்கிழமை )மாலை 5:30 மணிக்கு ரெங்கவிலாஸ் மண்டபத்தில் புல்லாங்குழல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் புல்லாங்குழ வித்வான் குழல் இசை மாமணி அனிருத்,வயலின் வித்துவான் ஸ்ரீரங்கம் ஜெ.ஆனந்த், மிருதங்க வித்வான் ஜெ. பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.
கார்த்திகை மாதம் தொடங்கி விட்டதால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து விட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இதைத் தொடர்ந்து ரங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாத இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இசை விழா வருகிற 26 ம் தேதி மற்றும் 27 ம் தேதி ஆகிய விடுமுறை தினங்களில் நடத்தப்படுகிறது. ஆகவே திரளான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க படுகிறது.
- ரெயின்போ ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் அலுவல் வருகைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- மாற்றுத்திறனாளியான செரீப் என்பவருக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பில் அரசு மருத்துவமனை அருகில்பெட்டி கடை அமைத்து தரப்பட்டது.
பல்லடம் :
பல்லடத்தில் ரெயின்போ ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் அலுவல் வருகைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். பொருளாளர் முத்துகுமார் வரவேற்றார்.இதில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் இளங்குமரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் மாற்றுத்திறனாளியான செரீப் என்பவருக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பில் அரசு மருத்துவமனை அருகில்பெட்டி கடை அமைத்து தரப்பட்டது. மேலும் கொரோனா காலத்தில் மக்களுக்காக சேவை புரிந்த மருத்துவம், காவல்,தீயணைப்பு, பத்திரிக்கை துறையினரை பாராட்டி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட பொதுசெயலாளர் வரதராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், உதவி ஆளுநர் ராமகிருஷ்ணன்,ரெயின்போ ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் தங்கலட்சுமி நடராஜன், கவிதா சுந்தர்ராஜன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேசிய நூலக வார விழா நடைபெற்றது
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
திருச்சி
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை ஆலத்தூர் கிளை நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா புலவர் தியாகராஜன் தலைமையில் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் சிவலிங்கம் , கோபால கிருஷ்ணன், அரசினர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, தூயமரியன்னை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வாசகர்கள் கலந்து கொண்டனர். இதில் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு நூலகத்தில் உறுப்பினராக இணைவதற்கு மோகன் மற்றும் திருமலை மதியழகன், சிவகுமார் ஆகியோர் நன்கொடை தொகை வழங்கினர். விழா முடிவில் ஆலத்தூர் நூலகர் சிவகுமார் நன்றி கூறினார்.
- இந்திய அரசியலமைப்பு தின விழா நடந்தது
- வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா சார்பில் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் இந்திய அரசிலமைப்பு தினம் 2022 விழா நடந்தது. விழாவிற்கு யூனியன் சேர்மன் மீனாம்பாள் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டான்லி செல்லகுமார், அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் (பொ) துரைமுருகன், சைபர் கிரைம் (தொழில்நுட்பம்) எஸ்ஐ சிவமீனா. வக்கீல் நிதிகள் அறக்கட்டளை இயக்குநர் ராமச்சந்திரன், மாவட்ட வள அலுவலர் நல்லுசாமி தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜபதி, இயற்கை மருத்துவர் வேல்முருகன் ஆகியோர் பேசினர். பின்னர் அரசியல் அமைப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. முன்னதாக நேருயுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் கீர்த்தனா வரவேற்றார். கணக்காளர் தமிழரசன் நன்றி கூறினார்.
- சிறப்பு புகைப்படக்கண்காட்சி நிறைவு விழா நடந்தது
- அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள்
பெரம்பலூர்:
மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள்நலத்திட்டங்கள் என்ற தலைப்பில் பெரம்பலூரில் 3 நாட்கள் நடைபெற்ற சிறப்பு புகைப்படக்கண்காட்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது. திருச்சி மத்திய மக்கள் தொடர்பக கள விளம்பர அலுவலர் தேவிபத்மநாபன், வக்கீல் காமராஜ் ஆகியோர் பேசினார். பின்னர் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. இக்கண்காட்சியில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. மேலும் ஒருங்கிணைந்தகுழந்தைகள் வளர்ச்சித் திட்டம், இந்திய அஞ்சல் துறை, சித்தா, மாவட்ட சமூக நலத்துறை, தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம்,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றின் சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டு திட்டங்கள், நல திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சிகள் மூலம் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த திரைப்படம் ஒளிப்பரப்பட்டது. இதில் இக்கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பார்வையிட்டு பயனடைந்தனர். கள விளம்பர உதவியாளர் அருண்குமார் வரவேற்றார், முடிவில் கள விளம்பர உதவியாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.
- தேசிய மருந்தியல் வார விழா நடந்தது
- போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் மாவட்ட பார்மசி அன்ட் ஸ்டாகிஸ்ட் அசோசியேஷன் சார்பில் 61-வது தேசிய மருந்தியல் வார விழா மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மருந்து கட்டுப்பாட்டு துறை திருச்சி மண்டல உதவி இயக்குநர் அதியமான், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ஸ்ரீதேவி ஆகியோர் பேசுகையில், போதை பொருள் ஒழிப்பு மற்றும் புதிய சட்டம் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் அனைத்தையும் விதிகளுக்கு உட்பட்டு வியாபாரம் செய்ய வேண்டும், மீறினால் கடுமையான தண்டனைக்குள்ளாவீர்கள் என தெரிவித்தனர். இதில் மருந்து வணிகர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக செயலாளர் சரவணன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.
- கேந்திரிய வித்யாலயா பள்ளியின் விளையாட்டு தின விழா நடைபெற்றது.
- மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன
திருச்சி:
திருச்சி பொன்மலையிலுள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் விளையாட்டு தின விழா நடைபெற்றது.
பள்ளி முதல்வர் நவல் கிஷோர் தலைமை வகித்தார். பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு, விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி கோட்ட ரயில்வே முதுநிலை அலுவலர் (பர்சனல்) சி.சுதாகரன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
மேலும், அண்மையில் ஆக்ரா மற்றும் பரிதாபாத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் ஜூடோ விளையாட்டில் தங்கம் வென்ற 10-ம் வகுப்பு மாணவர் கனிஷ் கண்ணா, துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற 10-ம் வகுப்பு மாணவி பாஸிலா சாரா, வில் வித்தையில் தங்கம் வென்ற 8-ம் வகுப்பு மாணவி கனிஷ்கா, 100 மீ தடை தாண்டுதலில் தங்கம் வென்ற 6-ம் வகுப்பு மாணவர் ரிபு தமன், துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற 7-ம் வகுப்பு மாணவர் குரு சபரீஷ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர் ஆன்டோ ஐசக் ஆண்டு விளையாட்டு அறிக்கை வாசித்தார். பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- தமிழகத்தில் வனப்பரப்பு 22.98 சதம் உள்ளது.
- 3.50 கோடி இலக்கை தாண்டி மரக்கன்று நடும் பணி நடைபெற்று வருகிறது.
பல்லடம் :
பல்லடம் அருகே கள்ளகிணறு பகுதியில் தனியார் நிறுவனத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், தமிழகத்தில் வனப்பரப்பு 22.98 சதம் உள்ளது. அதனை அதிகப்படுத்தும் வகையில் பசுமை தமிழகம் திட்டத்தை முதல-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வரும் 2032 ம் ஆண்டுக்குள் வனப்பரப்பை 33 சதமாக உயர்த்தும் வகையில், இந்த ஆண்டு 2.50 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது 3.50 கோடி இலக்கை தாண்டி மரக்கன்று நடும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு 15 கோடி மரக்கன்று நடப்படும் .அதற்கு அடுத்த ஆண்டு 25 கோடி மரக்கன்றுகள் நடப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி,சோமசுந்தரம்(பல்லடம்), அசோகன் (பொங்கலூர்), பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- அனைத்து பணியாளர்கள் முன்னேற்ற சங்க தொடக்க விழா நடைபெற்றது.
- அமைச்சர் பெயர் பலகையை திறந்து வைத்தார்
அரியலூர்:
அரியலூரில் தமிழ்நாடு நகராட்சிகள் அனைத்து பணியாளர்கள் முன்னேற்ற சங்க தொடக்க விழா நடைபெற்றது. அரியலூர் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சங்க கொடியை ஏற்றி வைத்து, பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் கே.கருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.சக்திவேல், செயலர் ஆர்.சீனிவாசன், துணைச் செயலர் கே.வில்லவன், பொருளாளர் ஓ.சுகுமாறன், கௌரவத் தலைவர் முருகேசன், சங்க காப்பாளர் கே.அருண்ராஜா, சட்ட ஆலோசகர் எஸ்.விஜி மற்றும் திமுக பொதுக் குழு உறுப்பினர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.