என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆற்றில்"

    தாமிரபரணி ஆற்றில் மூழ்கினார்.

    கன்னியாகுமாரி:

    கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பாரதபள்ளி மடத்துவிளையைச் சேர்ந்த வர் தங்கமணி. இவர் பந்தல் கட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி புஷ்பபாய் (60).

    இவர்களுக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள், உள்ளனர். இரண்டு பெண் களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணமாகி விட்டது. கடைசி மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மதியம் புஷ்ப பாய் வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். துணியை துவைத்து கரையில் வைத்து விட்டு ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் இழுத் துச்சென்று நீரில் மூழ்கி யுள்ளார். இதையடுத்து அப்பகுதியினர் திருவட்டார் போலீசுக்கும், குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் விரைந்து வந்து புஷ்பபாயை மாலை 6 மணி வரை தேடினார்கள். பின்னர் இருட்டி விட்டதால் தேடும் பணியை நிறுத்தினர்.

    இந்நிலையில் மலை யோர பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பேச்சிப்பா றை அணையிலிருந்து தொடர்ந்து 800 கன அடி உபரிநீர் வெளியேற்றபட்டு வருவதால் தாமிரபரணி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென்று கொண்டி ருப்பதையடுத்து மாயமான புஷ்பபாயை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இன்று 2-வது நாளாக காலையில் இருந்தே புஷ்பபாயை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கயிறுகட்டி அந்த பகுதி முழுவதும் தேடி வருகிறார்கள்.

    • கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கால்நடைகளை நீர் நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணை யின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் 105 அடியை நெருங்கி வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.08 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 48 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீராக 5, 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    இதனால் பவானி ஆற்றில் இரு கரையோரம் தண்ணீர் தொட்டபடி செல்கிறது. இதனால் பவானி ஆற்றில் பொது மக்கள் துணி துவைக்குவோ குளிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கால்நடைகளை நீர் நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மொத்தம் 5600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. 

    • சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
    • இறந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இக்கரை நெகமம் கெஞ்சனூர் பகுதியில் ஓடும் பவானி ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் உடல் மிதந்து கொண்டிருப்பதாக வி.ஏ.ஓ. ராஜசேகரன், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதன்பேரில், சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்த நபருக்கு சுமார் 55 வயது இருக்கும் எனவும், இறந்த நபர் வெள்ளை நிற கட்டம் போட்ட சட்டை, சிமெண்ட் நிற அரைக்கால் டிராயர் அணிந்துள்ளார்.

    ஆனால், இறந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவிரி ஆற்றில், வடகி ழக்கு பருவ மழையை முன்னிட்டு வேலா யுதம்பாளையம் தீயணைப் புதுறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
    • ஆற்றில் சிக்கிக் கொண்ட வர்களை எப்படி காப்பாற்றுவது? பல்வேறு வகை யான நிகழ்வுகள் குறித்து ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில், வடகி ழக்கு பருவ மழையை முன்னிட்டு வேலா யுதம்பாளையம் தீயணைப் புதுறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    இதில், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு, காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, ஆற்றில் சிக்கிக் கொண்ட வர்களை எப்படி காப்பாற்று வது? காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டால் எப்படி மீட்பது? வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டால், அவர்களை எப்படி காப்பாற் றுவது ? மரம் விழுந்தால் எப்படி தப்பிப்பது? உள்ளிட்ட பல்வேறு வகை யான நிகழ்வுகள் குறித்து ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது, பிளாஸ்டிக் போட்டை நடு காவிரி ஆற்றில் நங்கூரம் போட்டு நிறுத்தி பொதுமக்களை காப்பாற்றுவது போன்ற ஒத்திகைகளையும், வாழை மரங்கள், தென்னை மட்டைகள், வாட்டர் பாட்டில்கள், தண்ணீர் கேன்கள், ரப்பர் குடம், பிளாஸ்டிக் பேரல், லைப் ஜாக்கெட், கயிறு போன்ற வற்றின் மூலம் காவிரி ஆற்றில் ஒத்திகை பயிற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

    ராஜ வாய்க்காலில் குளிக்கும்போது காவிரி ஆற்றில் மூழ்கி பலியான கல்லூரி மாணவன் உடல் மீட்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    பெங்களூர் சிங்காபுரம் லேஅவுட்டை சேர்ந்தவர் பலராமன். இவரது மகன் ஸ்ரீதர் (வயது 20). இவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்துள்ளார்.

    சேந்தமங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாவில் அதே ஊரைச் சேர்ந்த 11 பேர்களுடன் தீர்த்தம் எடுப்பதற்காக ஜேடர்பாளையம் படுகை அணையில் உள்ள காவிரி ஆற்றுக்கு ஸ்ரீதர் வந்துள்ளார். அப்போது படுகை அணை காவிரி ஆற்றுப் பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலில் குளித்தார்.

    திடீரென ஸ்ரீதர் மட்டும் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து அவருடன் வந்தவர்கள் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் நாமக்கல் தீயணைப்பு துறையினர் மூலம் ஸ்ரீதரை தேடியனர்.

    நேற்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் தேடும் பணியில் ‌‌ ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ஸ்ரீ தர்‌ உடலை ராஜா வாய்க்காலின் படித்துறைக்கு கீழ் இருந்து மீட்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரது உடல் வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்துஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×