என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனிதா ராதாகிருஷ்ணன்"

    • அரசு நிறுவனங்களை தனியார் நிறுவனங்களாக மாற்ற முயற்சி செய்கிறார்கள்.
    • மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் காணாமல் போய்விடும்.

    உடன்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் உடன்குடி பஜாரில் நேற்று இரவு நடந்தது.

    கூட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார்.

    உடன்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் தலைவருமான பாலசிங் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், பாராளுமன்ற குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:-

    இந்தியாவில் உள்ள மக்கள் ஜாதி, மதத்தை மறந்து அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகிறோம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து உதவிக்கரம் நீட்டி ஒற்றுமையாக வாழ்கிறோம்.

    ஆனால் பா.ஜனதா அரசு இந்துக்களை பாதுகாக்கவில்லை. இந்திய மக்களை பிரிக்கிறார்கள். இந்துக்களை அரசியல் கேடயமாக பயன்படுத்துகிறார்கள்.

    விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட திட்டங்களை கொண்டு வருகிறார்கள். அரசு நிறுவனங்களை தனியார் நிறுவனங்களாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். மாநில உரிமைகளை கொஞ்சம், கொஞ்சமாக பறிக்கிறார்கள்.

    மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் காணாமல் போய்விடும். மதத்தை வைத்து அனை வரையும் பிரித்து விடுவார்கள். தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம், பெண்களும் அர்ச்சகராகலாம் என்று ஆணையிட்டு அதை செயல்படுத்தி வருகிறார் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

    அனைத்து தரப்பு மக்களை அரவணைத்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ரூ. 17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல்.
    • அவர்கள் இதிலும் எல்லையை கடந்துவிட்டனர்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைய இருக்கும் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அடிக்கல் நாட்டினார். இதுதவிர, ரூ. 17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

    ராக்கெட் எவுதளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், தமிழ்நாடு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் சார்பில் நாளேட்டில் கொடுக்கப்பட்ட விளம்பரம் சர்ச்சையாகி இருக்கிறது.

     


    அந்த விளம்பரத்தில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எ.வ. வேலு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் சீன ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ராக்கெட் ஒன்றின் புகைப்படமும் இடம்பெற்று இருந்தது.

    இதற்கு பிரதமர் மோடி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "தி.மு.க. எந்த பணியையும் மேற்கொள்ளாமல், அதற்கு பெயரை மட்டும் எடுத்துக் கொள்ள நினைக்கிறது. அவர்கள் நம் திட்டங்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர். தற்போது அவர்கள் இதிலும் எல்லையை கடந்துவிட்டனர். இஸ்ரோ ஏவுதள திட்டத்தில் அவர்கள் சீனாவின் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர்."

    "விண்வெளி துறையில் இந்தியா வளர்ந்து வருவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விண்வெளி துறையில் இந்தியாவின் வெற்றியை உலகிற்கு எடுத்து சொல்ல அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் நம் விஞ்ஞானிகள் மற்றும் நம் விண்வெளி துறையையே அவமதித்து விட்டனர். அவர்களின் தவறுக்கான தண்டனையை அனுபவிக்க வேண்டிய நேரம் தி.மு.க.-விற்கு வந்துவிட்டது," என்று தெரிவித்தார்.


    முன்னதாக இஸ்ரோவின் பெருமையை கூறும் இடத்தில் சீன ஸ்டிக்கர் இடம்பெற்று இருந்ததற்கு பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுருந்தார். 

    • திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி வரவேற்று பேசினார்.
    • கனிமொழி எம்.பி.க்கு இணையாக எந்த எம்.பி.யும் இல்லை.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் முதலமைசசர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்செந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே உள்ள திடலில் நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளரும் நகர்மன்ற துணை தலைவருமான செங்குழி ரமேஷ் தலைமை தாங்கினார். உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ் குமார், ஆழ்வை மத்திய பகுதி செயலாளர் நவின்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க. அமைப்பு துணை செயலாளர் தாயகம் கவி, சண்முகய்யா எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் அமைச்சர் அனிதாராதா கிருஷ்ணன் பேசியதாவது:-


    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோரும் பயன் பெறும் வகையில் பட்ஜெட் தந்திருக்கிறார். இந்த பட்ஜெட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவு படுத்தி உள்ளார்.

    அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கும் மாதம் ரூ1,000, குடிசை வீடுகள் இல்லாத தமிழகம் என்ற அடிப்படையில் வீடு இல்லாதவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டி கொடுத்துள்ளார்.

    இந்த அரசு சிறுபான்மை மக்கள் நலன் காக்கும் அரசாக உள்ளது. கனிமொழி எம்.பி.க்கு இணையாக எந்த எம்.பி.யும் இல்லை. மழை வெள்ளம் காலங்களில் அவர் சிறப்பாக பணியாற்றினார். கலைஞரின் மறு உருவமாக கனிமொழி எம்.பி மீண்டும் இந்த தொகுதியில் எம்.பி.ஆக நிற்கிறார். இந்தியா கூட்டணி வெற்றி பெறப்போகிறது. இந்தியா கூட்டணி ஆட்சி தான் வரப்போகிறது.

    தொழிலாளர் அனைவரையும் காக்கும் ஒரு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் உள்ளார். நிச்சயமாக பா.ஜ.க.வை வீழ்த்தி காட்டுவார் மு.க.ஸ்டாலின். அவர் யாரை கை காட்டுகிறாரோ அவரே பிரதமராக வருவார்.

    தற்போது அ.தி.மு.க. காணாமல் போய்விட்டது. இந்த தேர்தலோடு அதுவும் முடிந்துவிடும். அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. இருக்காது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள், செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
    • கனிமொழியின் மக்கள் பணி, செயல்பாடுகள், திறமைகள் ஆகியவை அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

    உடன்குடி:

    தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி ஜெயகாந்தியுடன் சொந்த ஊரான உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் உள்ள உடன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று காலை 7.20 மணி அளவில் வாக்கு பதிவு செய்தார்.

    தொடர்ந்து அமைச்சரின் குடும்பத்தார்கள் வந்து வாக்குப்பதிவு செய்தனர். பின்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள், செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதுவும் தூத்துக்குடி தொகுதி எம்.பி. ஆக இருந்த கனிமொழி மீண்டும் எனது 2-வதுதாய் வீடு தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று சொல்லி உள்ளார்கள். அவரது மக்கள் பணி, செயல்பாடுகள், திறமைகள் ஆகியவை அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

    அதனால் இந்தியாவில் உள்ள அனைத்து எம்.பி.க்களையும் விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்து சாதனை படைப்பார் என்பது மட்டும் உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் பணிகள் நிறைவடையும்.
    • விரைந்து முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

    சென்னை:

    மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்ரோட்டில் தொடங்கப்பட்ட கால்நடைப் பூங்கா இன்னும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை என குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார். இதுகுறித்து சில விவரங்களைத் தெரிவிக்கிறேன்.

    தலைவாசலில் அமைந்து உள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 1866.28 ஏக்கர் பரப்பில் ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் ரூ.564.44 கோடி திட்ட முதலீட்டில் அமைக்க 2019 ம் ஆண்டில் திட்டமிடப்பட்டது.

    இந்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப்பணிகள், குடிநீர் வழங்கும் பணிகள், 2021-ல் கழக ஆட்சி பொறுப்பேற்ற போது 50 சதவிகித பணிகள் கூட முடிவடையாத நிலையே இருந்தது.

    உலகத் தரத்தில் உயர் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் இடம் அதற்கு ஏற்ற இடம்தானா என்பது குறித்த ஆராய்ச்சி முதலில் நடைபெற்றிருக்க வேண்டும்.

    அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, சரியான திட்டமிடுதல் இல்லாமல், அவசர கதியில், மக்களின் வரிப்பணத்தில் அதிக பொருட்செலவில் இந்நிலையத்தை தொடங்கி உள்ளார்கள்.

    கால்நடை பராமரிப்பு என்பது அதிக அளவில் தண்ணீர் தேவையுடைய தொழிலாகும். தினசரி 11 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் ஒரு நிலையத்தை நீராதாரமே இல்லாத இடத்தில் அமைத்தது எந்த வகையான திட்டமிடல் எனத் தெரியவில்லை.

    எனினும், கடந்த 7.5. 2021-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக ஆட்சி அமைந்த பிறகு இந்நிலையத்தை சீரிய முறையில் கட்டமைத்து கால்நடை வளர்ப்போர் உண்மையாகவே பயன் பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    கடந்த 2021-ம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா நோய்த் தொற்று, 2023-ம் ஆண்டு, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள், பாராளுமன்றத் தேர்தல் ஆகியவை காரணமாக ஜனவரி 2024-ல் முடிக்கப்படவேண்டிய பணிகள் சிறிது தாமதமாக முடிக்கப்பட்டு வருகின்றன.

    அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதை தொடர்ந்து அனைத்துப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு நிலையம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று நாகை மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
    • நாகை மீன்வள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் பெயர் இல்லாத காரணத்தால் கலெக்டரும் பங்கேற்கவில்லை.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று நாகை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி ஸ்தூபியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அருகே உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்றை நினைவு கூரும் புகைப்படங்களை பார்வையிட்டார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

    இந்நிலையில் கவர்னர் பங்கேற்றுள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்.

    நாகை மீன்வள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் பெயர் இல்லாத காரணத்தால் கலெக்டரும் பங்கேற்கவில்லை.

    நேற்று வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்விலும் கலெக்டர் பங்கேற்கவில்லை.

    முன்னதாக, வேதாரண்யம் வந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி காட்டினர். தமிழக அரசின் நலன் சார்ந்த கோப்புகளில் கையொப்பமிடாமல் காலம் தாழ்த்துவதை கண்டித்தும், ஆர்.எஸ்.எஸ், பா.ஜனதா கைப்பாவையாக கவர்னர் செயல்படுவதை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ராஜாஜி பூங்கா எதிரே கருப்பு கொடி காட்டி கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், கறுப்புக்கொடி காட்டியவர்களை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவில்முன்பு மெகா மண்டபம் கட்டும்பணி தொடக்கவிழாகோவில் கலையரங்கத்தில் நடந்தது.
    • இந்துசமயஅறநிலை துறைஅமைச்சர் சேகர்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    உடன்குடி:

    பிரசித்தி பெற்ற தசராபெருந்திருவிழா நடைபெறும் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தண்டுபத்து சண்முககனி நாடார் பிச்சமணியம்மாள் அறக்கட்டளை சார்பில் கோவில்முன்பு மெகா மண்டபம்கட்டும்பணி தொடக்கவிழாகோவில் கலையரங்கத்தில் நடந்தது.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ., உடன்குடியூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி பேரூராட்சிதுணைத் தலைவர் மால்ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்துசமயஅறநிலை துறைஅமைச்சர் சேகர்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையர் அன்புமணி அனைவரையும் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் மண்டப நன்கெடையாளர் தண்டுபத்து ராமசாமி, தி.மு.க.முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜே.ஜெகன், முன்னாள் அறங்காவலர்குழுத் தலைவர் கண்ணன், உடன்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாவட்ட அமைப்பாளர் இளைஞரணி ராமஜெயம், மாவட்ட துணைஅமைப்பாளர் வர்த்தக அணி ரவிராஜா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாய்ஸ், நகர இளைஞரணி செயலாளர் அஜய், மாவட்ட பிரதிநிதிகள் தன்ராஜ், ராஜாபிரபு,

    மகேஸ்வரன், ஜெயபிரகாஷ், சிராசூதீன், செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர்பாலமுருகன், உடன்குடி கூட்டுறவு கடன்சங்க தலைவர் அஸ்ஸாப்கல்லாசி, குலசேகரன்பட்டிணம் பஞ்சாயத்து துணைதலைவர் கணேசன், படுக்கபத்து ராமநாதஆதித்தன்,

    தண்டுபத்து திலகர்.எள்ளுவிளை கிளைசெயலாளர் மோகன், ஒன்றிய தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட முன்னாளபொருளாளர் நடராஜன், உடன்குடி ஜெயராமன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • காலி பதவியிடங்களுக்கும் மறைமுக தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது.
    • 7-வது வார்டு உறுப்பினர் க.சந்திரசேகர் துணைத்தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    கோவில்பட்டி:

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண மறைமுக தேர்தல்களின் போதும், அதன்பிறகும் நடந்த சாதாரண, தற்செயல் மறைமுக தேர்தலின் போதும், குறைவெண் வரம்பின்மை, கோர்ட்டு வழக்கு மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஆகிய காரணங்களால் தேர்தல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட பதவியிடங்களுக்கும், இறப்பு, பதவி விலகல் மற்றும் பதவி நீக்கம் காரணமாக 31.7.22 வரை ஏற்பட்டு உள்ள காலி பதவியிடங்களுக்கும் மறைமுக தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது.

    தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்த செல்வக்குமார் பதவி விலகியதால் அந்த பதவி காலியாக இருந்தது. இந்த மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிக்கு நேற்று மதியம் 2.30 மணிக்கு தேர்தல் நடந்தது.

    போட்டியின்றி தேர்வு

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில், மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் ஜெயசீலி முன்னிலையில் தேர்தல் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தம் உள்ள 17 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதைத் தொடர்ந்து 7-வது வார்டு உறுப்பினர் க.சந்திரசேகர் துணைத்தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை 2-வது வார்டு மிக்கேல் நவமணி முன்மொழிந்தார். 4-வது வார்டு தங்கமாரியம்மாள் வழி மொழிந்தார். தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவராக க.சந்திரசேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    வாழ்த்து

    இதனை தொடர்ந்து கலெக்டர் மற்றும் அதிகாரிகள், தி.மு.க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் துணைத்தலைவர் சந்திரசேகர் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அப்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், முன்னாள் துணைத்தலைவர் செல்வக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • தடம் எண் 70 சி என்ற அரசு பஸ் உடன்குடி, பெரியதாழை, உவரி வழியாக நாகர்கோவில் சென்றது.
    • 3 பஸ்களையும் மீண்டும் இதேவழி தடத்தில் விடவேண்டும் என்று உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மனு கொடுத்தார்.

    உடன்குடி:

    உடன்குடியில் இருந்து தினசரிமாலை 5.15 மணிக்கு தடம் எண் 624 என்ற ஈரோடு விரைவு அரசு பஸ் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டது.

    இந்த பஸ் சாத்தான்குளம், நெல்லை, மதுரை, வழியாக சென்றது. இதைப் போல உடன்குடியில் இருந்து தினசரி மாலை 5:20க்கு தடம் எண் 632 என்ற அரசு விரைவு பஸ் கோவைக்கு பல ஆண்டுகளாக ஓடியது. திருச்செந்தூர் தூத்துக்குடி, மதுரை வழியாக சென்றது.

    அதைப்போல திருச்செந்தூரில் தினசரி அதிகாலை 5 மணிக்கு புறப்பட்ட தடம் எண் 70 சி என்ற அரசு பஸ் சீர்காட்சி, பிச்சிவிளை, உடன்குடி, பெரியதாழை, உவரி வழியாக நாகர்கோவில் சென்றது.

    மீண்டும் இதே வழிதடத்தில் திருச்செந்தூருக்கு வந்துவிட்டு திருச்செந்தூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இதே வழித்தடத்தில் நாகர்கோவில் சென்று திரும்பிவரும். இந்த மூன்று பஸ்களும் திடீரென நிறுத்தப்பட்டது.

    இதனால்இந்த பஸ்சை நம்பி பயணம் செய்த சுற்றுப்புறப் பகுதியில் உள்ள கிராமமக்கள், விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த 3 பஸ்களையும் மீண்டும் இதேவழி தடத்தில் விடவேண்டும் என்று உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக அதிகாரிகளுடன் கலந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    • உடன்குடி சந்தையில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்ய பேரூராட்சி சார்பில் ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டது.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சந்தை மேம்பாட்டுப்பணிகள் நடைபெறவுள்ள இடங்களை ஆய்வு செய்தார்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட் டத்தின் 2-வது மிகப்பெரிய வாரச்சந்தை உடன்குடி மெயின் பஜார் 4 சந்திப்பில் தினசரி மக்கள் கூடும் இடத்தல் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யவும், சுற்றுப்புற பகுதியில் உள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் பொருட்களை வாங்கவும் திங்கள்கிழமை தோறும் இங்கு வருவார்கள்.

    இச்சந்தையில் வியபாரிகள், பொதுமக்களுக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்ய உடன்குடி பேரூராட்சி சார்பில் ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டது

    இப்பணிகளை மேற்கொள்வதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு உடன்குடிபேரூராட்சி மன்றத் தலைவி ஹூமைரா ஆஸ்ஸாப் கல்லாசி தலைமை தாங்கினார்.பேரூராட்சி துணைத்தலைவர் சந்தையடியூர்மால்ராஜேஷ், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், ஒன்றியக்குழு துணைத்தலைவி மீரா சிராஜூதீன், பேரூராட்சி செயல் ஆலுவலர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று அடிக்கல்லை நாட்டி சந்தை மேம்பாட்டுப்பணிகள் நடைபெறவுள்ள இடங்களை ஆய்வு செய்தார்.

    வியாபாரிகள் சிறந்த முறையில் பொருட்களை விற்கும் வகையிலும், பொதுமக்கள் எந்தவித இடையூறுமின்றி பொருட்களை வாங்கக் கூடிய வகையிலும் மேம்பாட்டுப் பணிகளை சிறப்பாக செய்யவேண்டும் என்று அதிகாரிகளிடம் அமைச்சர் வலியுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்ககர், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ, உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், பேரூராட்சி மன்ற நியமனக்குழு உறுப்பினர் ஜான் பாஸ்கர், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் முகமது சலீம், தொழிலதிபர்கள் ஞானராஜ் கோயில்பிள்ளை, ராம்குமார், தி.மு.க. மாவட்ட சார்பு ஆணி நிர்வாகிகள் மகாவிஷ்ணு, ரவிராஜா, சிராஜூதீன், ஓன்றிய, நகர இளைஞரணி அமைப்பாளர்கள் பைஸ், அஜய், செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், ஓன்றிய மகளிரணி அமைப்பாளர் ராஜேஸ்வரி, குலசேகரன் பட்டினம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கணேசன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் நடராஜன், மாவட்டப் பிரதிநிதிமதன்ராஜ் மற்றும் முரளி, ஆனந்த், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது சொந்த ஊரான தண்டுபத்தில் தங்கி இருந்தபோது விவசாயிகள், பல்வேறு பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்தனர்.
    • மழை காலங்களுக்கு முன்பு உடன்குடி வட்டார பகுதி குளங்கள், குட்டைகள் மற்றும் கால்வாய்களை சீர் செய்ய நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டை அமைச்சருக்கு தெரிவித்தனர்.

    உடன்குடி:

    தமிழக மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது சொந்த ஊரான உடன்குடி தண்டுபத்தில் தங்கி இருந்தபோது உடன்குடி வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள், வியாபாரிகள், மற்றும் பல்வேறுபொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் ஆகியோர் நேரில் சென்று அமைச்சருக்கு வாழ்த்துகளையும் பாராட்டையும்தெரிவித்தனர்.

    அப்போது வருகின்ற மழை காலங்களுக்கு முன்பு உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அனைத்து குளங்கள், குட்டைகள் மற்றும் தண்ணீர் வரும் கால்வாய்கள் ஆகியவற்றை சீர் செய்ய நடவடிக்கை எடுத்தமைக்கும், மேலும் செட்டியாவது ஊராட்சியில் புதியதாக குளம் அமைப்பதற்கும் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்தனர். அப்போது செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், கூட்டுறவு சங்க தலைவர் அசாப் அலி, உடன்குடி நகர பஞ்சாயத்து துணை தலைவர் மால்ராஜேஷ் தி.மு.க.வை சேர்ந்த கிழக்குஒன்றிய இளங்கோ, சந்தையடியூர் ரவிராஜா, அஜய், பாய்ஸ், ஜெயபிரகாஷ் உட்பட தி.மு.க.வினர் பலர் உடன் இருந்தனர்,

    • தண்டுபத்தில் உடன்குடி வட்டார காமராஜர் நற்பணி மன்ற அறக்கட்டளை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
    • காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது தி.மு.க. என்பதை யாரும் மறந்து விட வேண்டாம் என்று அமைச்சர் பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் உடன்குடி வட்டார காமராஜர் நற்பணி மன்ற அறக்கட்டளை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

    அறக்கட்டளை செயலர் சிவசுப்பிரமணியன், நிர்வாகிகள் நடராஜன், செந்தில்குமார், வேல்ராமகிருஷ்ணன், சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    வருகிற 15-ந்தேதி காமராஜர் பிறந்தநாளை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடுங்கள். கிராமங்களில் உள்ளவர்களும் படிக்க வேண்டும் என்பதற்காக கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் நிறுவி மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர். அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது தி.மு.க. அரசு தான் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம் என்று பேசினார்.

    நலத்திட்ட உதவிகள்

    பின்பு அறக்கட்டளை நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதன்படி வருகிற 15- ந்தேதி உடன்குடி மேல பஜாரில் நண்பகல் 12 மணி அளவில் 4 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்துடன் உணவு வழங்குதல், மாலை 6 மணிக்கு 4 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உட்பட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×