என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டுமனை"

    • விலையில்லா இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணை.
    • சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடனுதவி.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 321 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொ ள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவல ர்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமைதடுப்பு சட்டத்தின் கீழ்கொலை செய்யப்பட்ட வாரிசுதா ரர்களுக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணை களும், 3 நபர்களுக்கும், ஆதிராவிடர் நலத்துறை சார்பில் 19 பயனாளிகளுக்கு இலவச வீட்டு பட்டாவிற்கான ஆணைகளும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பேராவூரணி வட்டத்தைச் சேர்ந்த 1 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளும், மாவட்ட வழங்கல் துறை சார்பில் புதிய குடும்ப அட்டை 1 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி தலா ரூ. 25,000 வீதம் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 50,000 மதிப்பிலான காசோலைகளையும் என மொத்தம் 26 நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட விளையாட்டு துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்ட வில்வித்தை சங்கத்தில் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-, மாணவிகள் கலெக்டரிடம் வெற்றி பெற்ற பதக்கங்களை காண்பித்து பாராடடு மற்றும் வாழ்த்துக்களை பெற்றனர்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா ,கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சுமார் 35-க்கும் நரிக்குறவர் குடும்பங்களை சேர்ந்த நாங்கள் பல தலைமுறைகளாக சாலையோரம் வசித்து வருகிறோம்.
    • மேற்படி நாங்கள் வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்டு வருகின்றோம்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே லால்புரம் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்கள் வீட்டு மனை வழங்க கோரி சேகர் தலைமையில் சப்-கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினர்.

    மனுவில் சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் பஞ்சாயத்து உட்பட்ட பகுதியில் சுமார் 35-க்கும் நரிக்குறவர் குடும்பங்களை சேர்ந்த நாங்கள் பல தலைமுறைகளாக சாலையோரம் வசித்து வருகிறோம். எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளது. ஆனால் எங்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லை. மேற்படி நாங்கள் வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்டு வருகின்றோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளனர்.

    • நரிக்குடி அருகே அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையை அபகரிக்க முயற்சி செய்வதாக பாதிக்கப்பட்ட விவசாயி தாசில்தாரிடம் புகார் செய்தார்.
    • சர்ச்சைக்குரிய இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே உள்ள நெடுக னேந்தல் கிராமத்தை சேர்ந்த வர் முனியசாமி (வயது65), விவசாயி. இவர் கடந்த பல வருடங்க ளாக நெடுக னேந்தல் கிராமத்தில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இவருக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது விருதுநகரில் நடை பெற்ற புதிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முனியசாமி உள்பட சிலருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.

    இந்த நிலையில் தமி ழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முனியசாமிக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா ரத்து செய்யப்பட்டதாக தெரி விக்கப்பட்டது. இதற்கி டையே முனிய சாமிக்கு வழங்கப்பட்ட இடத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கடப்பாரை போன்ற ஆயுதங்களுடன் அத்துமீறி உள்ளே நுழைந்து மரக்கன்றுகள் வைத்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்த னர். இதற்கு முனியசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு அந்த கும்பல் ெகாலை மிரட்டல் விடுத்தது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திருச்சுழி தாசில்தார் பாண்டி சங்கர் ராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அரசால் முனியசாமிக்கு வழங்கப் பட்ட சர்ச்சைக்கு ரிய இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது பாதிக்கப்பட்ட முனியசாமி குடும்பத்தினர் தங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • வழக்கில் சிலர் விடுவிக்கப்பட்டும், வழக்கு ரத்து செய்யப்பட்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
    • குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் 30ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் உள்ளிட்ட சிலருக்கு 2008-ஆம் ஆண்டு சென்னை திருவான்மியூரில் 3 ஆயிரத்து 457 சதுர அடி மற்றும் 4 ஆயிரத்து 763 சதுர அடி கொண்ட வீட்டுமனைகளை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

    இந்த நிலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்ததாக அப்போது வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவி வகித்த ஐ.பெரியசாமி, ஜாபர் சேட், அவரது மனைவி பர்வீன், க.முருகையா, ராஜமாணிக்கம், துர்கா, சங்கர் ஆகிய 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் 2013-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் சிலர் விடுவிக்கப்பட்டும், வழக்கு ரத்து செய்யப்பட்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் 30ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் உத்தரவிட்டுள்ளார்.

    • விற்பனையாகாத மனைகளை வரன்முறை செய்து, அங்கீகாரம் பெறவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
    • .விண்ணப்பங்களை அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் சமர்ப்பித்து அதிகாரிகள் பரிந்துரையுடன்அங்கீகார சான்று பெற்றுக்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    தமிழக அரசு 2016ம் ஆண்டுக்கு முன் கிரயம் செய்த வீட்டுமனைகளை அங்கீகாரம் செய்து கொள்ள அவகாசம் வழங்கியது. விற்பனையாகாத மனைகளை வரன்முறை செய்து, அங்கீகாரம் பெறவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

    கடந்த ஐந்து ஆண்டுகளாக வீட்டுமனை வரன்முறை செய்யப்படுகிறது. இருப்பினும் கிராமப்புறத்தில் உள்ள வீட்டுமனைகளைவரன்முறை செய்வதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. மனை உரிமையாளர்கள் எவ்வித அங்கீகாரம் செய்வது குறித்து விழிப்புணர்வு இல்லை.

    திருப்பூர் மாவட்டத்தில் நகரையொட்டியுள்ள ஊராட்சிகளில் வீட்டுமனை வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்துவிட்டது. இதனால் சற்று தொலைவில் உள்ள கிராமங்களுக்கு சென்று, அங்கு வீட்டுமனை வாங்கினர்.கடந்த 2016க்கு பின் அங்கீகாரம் பெற்ற மனைகள் மட்டுமே விற்கப்படுகிறது. முறையான அங்கீகாரம் பெறாமல் இருக்கும் மனைகளை, மனை உரிமையாளர்கள் வரன்முறை செய்து கொள்ளலாம் என ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    வீட்டுமனை உரிமையாளர், மனை ஒன்றுக்கு பரிசீலனை கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். வளர்ச்சி கட்டணமாக சதுர மீட்டருக்கு 25 ரூபாய் வீதம் கணக்கிட்டு, வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். அரசுக்கு சேர வேண்டிய வரன்முறை கட்டணமாக சதுர மீட்டருக்கு, 45 ரூபாய் வீதம் கணக்கிட்டுகருவூலத்தில் செலுத்த வேண்டும்.

    இதுகுறித்து திருப்பூர் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    அங்கீகாரமற்ற வீட்டுமனையை வரன்முறை செய்துகொள்ளலாம். ஊராட்சிகளில் அதற்கான சலான்களை பெற்றுபூர்த்தி செய்து அந்தந்த வங்கிகளில் செலுத்த வேண்டும்.விண்ணப்பங்களை அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் சமர்ப்பித்து அதிகாரிகள் பரிந்துரையுடன்அங்கீகார சான்று பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு நடைமுறைகள் எளிதாக மாற்றப்பட்டுள்ளன. மனை உரிமையாளர்இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×