என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் கீதாஜீவன்"

    • 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி.
    • சினிமாவில் இருந்து இப்போதுதான் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர்," அடுத்தாண்டு மக்கள் இதுவரை சந்திக்காத தேர்தலை சந்திப்பார்கள்.

    2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன்" என்றார்.

    இந்நிலையில், தவெக தலைவர் விஜய் குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விமர்சனம் செய்துள்ளார்.

    அப்போது அவர்," சினிமாவில் இருந்து இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

    வீதிக்கு வந்து மக்கள் பிரச்னையை பார்க்கட்டும், அதன் பிறகு அவர் குறித்து பதில் அளிக்கிறேன்" என்றார்.

    • தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் தெருக்களில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
    • அமைச்சர் கீதாஜீவன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் மனுவை பெற்றுக் கொண்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1-ந் தேதி நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் கிருஷ்ணராஜபுரம் பகுதியில் 4,5,6 ஆகிய தெருக்களில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதனையடுத்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மழை பெய்தது. இருப்பினும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தா மல் ஆய்வினை முழுமையாக நடத்தி பின்னர் பொது மக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.

    அம்போது, பகுதி சபா கூட்டத்தில் மக்கள் வைத்த கோரிக்கையான கிருஷ்ணராஜபுரம் பகுதியில் 4, 5, 6 ஆகிய தெருக்களில் புதிய கழிவுநீர் கால்வாய் விரைவில் அமைத்து தருவதாக உறுதியளித்தார்.

    ஆய்வின் போது மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், போல் பேட்டை பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணி கண்ணன், வட்ட செயலாளர் சக்கரைசாமி, கவுன்சிலர் அந்தோணி பிரகாஷ் மார்ஷ்லின், சங்கர், அசோக்குமார், கலைச் செல்வன் உள்பட பலர் உடனி ருந்தனர்.

    • தூத்துக்குடி மாநகர் முழுவதும் அமைச்சர், மேயர், அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
    • மழைநீர் தேங்காதவாறு பாதுகாக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மழையின் காரணமாக மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் பல்வேறு கட்ட முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு பாதிப்பை போல் இந்த ஆண்டு மழைகாலங்களில் அது போன்ற நிலை வரக்கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி மாநகராட்சி பகுதி முழுவதும் புதிய கால்வாய் சாலை வசதி என கட்டமைப்பு பணிகளை விரைவாக செய்துகொடுக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை மாநகர் முழுவதும் அதிகாரிகள் உள்பட அமைச்சர், மேயர் கண்காணித்து வருகின்றனர்.

    50-வது வார்டு என்.ஜி.ஓ. காலனி கிழக்கு தாழ்வான பகுதிகளில் மழைநீர் கடந்த காலங்களில் தேங்கியதையடுத்து இந்த ஆண்டு அது போல் நடைபெறாமல் பாதுகாத்து கொள்ளும் வகையில் 50-வது வார்டு கவுன்சிலர் சரவணக்குமாரிடம் பகுதி சபா கூட்டத்தின் போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனையடுத்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதியில் சாலையை உயர்த்துவது, மணல் சரல் போன்றவற்றை நிரப்பி மழைநீர் தேங்காதவாறு பாதுகாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    ஆய்வின் போது மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் சரவணக்குமார், வட்டப்பிரதிநிதிகள் வேல்மணி, ராஜேந்திரன், செல்வம், ராஜேஷ், சங்கரநாராயணன், பகுதி சபா உறுப்பினர் சிவசங்கர், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாலதி மின்னல் தாக்கி உயிரிழந்தார்
    • தமிழக அரசின் நிவாரண நிதி ரூ.4 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கினர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மனைவி மாலதி (வயது 47) கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயப் பணியை முடித்துவிட்டு மார்த்தா ண்டம்பட்டி கிராமத்திற்கு இடையே பாலத்தின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் மின்னல் தாக்கியது.இதில் மாலதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இச்சம்பவம் அறிந்த நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று மார்க்கண்ேடயன் எம்.எல்.ஏ. குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

    இந்நிலையில் அமைச்சர் கீதாஜீவன், மார்கண்டேயன் எம்.எல்.ஏ., கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் அவரது வீட்டிற்கு நேரில் சென்று உயிரிழந்த மாலதி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். மேலும் தமிழக அரசின் நிவாரண நிதி ரூ.4 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கினர்.

    குடும்பத்தார் தரப்பிலும் தனது மகள்களுக்கு அரசு வேலை வழங்கிட கோரிக்கை விடுத்தனர்.

    உயிரிழந்த மாலதிக்கு தங்கப்பிரகாஷ் (24) என்ற மகனும், தங்கமாரி (22), கன்னிகா (18) என்ற 2மகள்களும் உள்ளனர்.

    நிகழ்ச்சியில் கோவில் பட்டி வருவாய் கோட்டா ட்சியர் மகா லட்சுமி, விளா த்தி குளம் வட்டாட்சியர் சசிக்குமார், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்புராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் நகர செயலாளர்

    வேலுச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் ஞானகுருசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், மார்த்தா ண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் முத்து கரும்புலி, குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் கீதாஜீவன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்
    • அரசு மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரம் வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. ஏற்பாட்டின்படி மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. 45-வது பிறந்தநாளையொட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை தாங்கினார்.

    கேக் வெட்டினார்

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.

    விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் சுபேந்திரன், பிரதீப், பார்வதி, நலம்ராஜேந்திரன், சீனிவாசன், அந்தோணிகண்ணன், மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், ஜெயக்கனி, முருகஇசக்கி, டேனியல், தேவதாஸ், பிரபு, வக்கீல் கிறிஸ்டோபர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் துரை, நிர்வாகிகள் பிரபு, ராஜகுரு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தங்க மோதிரம்

    பின்னர் அரசு மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், ஹார்லிக்ஸ் ஆகியவற்றை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். அப்போது மருத்துவகல்லூரி டீன் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி ஆகியோர் உடனிருந்தனர்.

    • சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது.
    • சத்துணவு திட்டத்தை வலுப்படுத்திடவும், தொடர் கண்காணிப்பு செய்திடவும் தான் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    சென்னை:

    சமூகநலம்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தற்போது 43,190 பள்ளி சத்துணவு மையங்களில் சுமார் 46 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில், தற்போது சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை ஆய்வு செய்து, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் குறித்து அனைத்து புள்ளி விவரங்களும், கோரப்பட்டுள்ளன.

    28 ஆயிரம் சத்துணவு மையங்களை அரசு மூட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது. பள்ளி, சத்துணவு மையங்களில் எண்ணிக்கை அல்லது பணியாளர்களின் எண்ணிக்கையினை குறைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.

    சத்துணவு திட்டத்தை வலுப்படுத்திடவும், தொடர் கண்காணிப்பு செய்திடவும் தான் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் ஏற்பட வேண்டிய அவசியமில்லை. முதலமைச்சர் மாணவர்களின் நலனுக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும், அவர்களின் கல்வித் திறனை அதிகரிப்பதற்காகவுமே காலை உணவுத் திட்டத்தை தொடங்கி உள்ளார்கள்.

    அத்திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்திட்டம் முதலமைச்சரின் அலுவலகத்தின் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது மட்டுமில்லாமல் "வரும் ஆண்டில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்" என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.

    அப்படியிருக்க சத்துணவுத் திட்டத்துறையில் உள்ள சத்துணவு மையங்களை எப்படி அரசு மூட முயற்சி எடுக்கும். சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடவும், சத்தான உணவை முறையாக மாணவர்களுக்கு வழங்கிடவும், தொடர் கண்காணிப்பை வலுப்படுத்திடவுமே அரசு திட்டமிட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த 2017-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக என்.பெரியசாமி உயிரிழந்தார்.
    • எனினும் என்.பெரியசாமி குடும்பத்தினர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    தூத்துக்குடி:

    தமிழகத்தில் 1996-2001-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக அப்போதைய மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி இருந்தார்.

    அதன்பின்னர் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், 2002-ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக ரூ.2 கோடியே 31 லட்சத்து 87 ஆயிரம் சொத்து சேர்த்ததாக என்.பெரியசாமி மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் என்.பெரியசாமி, அவரது மனைவி எபனேசர் அம்மாள், இவர்களது மகளும் அப்போதைய மாவட்ட ஊராட்சி தலைவரும், தற்போதைய அமைச்சருமான கீதாஜீவன், அவரது கணவர் ஜீவன்ஜேக்கப், கீதாஜீவனின் அண்ணன் ராஜா, தம்பியும் தற்போதைய மாநகராட்சி மேயருமான ஜெகன்பெரியசாமி ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இதுதொடர்பாக கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக என்.பெரியசாமி உயிரிழந்தார். எனினும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. அந்த வகையில் கடந்த 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அதன்படி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி குருமூர்த்தி தீர்ப்பை வாசித்தார். இதற்காக அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் உள்ளிட்ட 4 பேரும் வந்திருந்தனர். அப்போது சொத்து குவிப்பு வழக்கில போதிய முகாந்திரம் இல்லாததால் கீதாஜீவன், ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

    இதுதொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க. ஆட்சியில் எங்கள் குடும்பத்தினர் மீது வழக்கு போடப்பட்டது. 21 ஆண்டுகளுக்கு பின்னர் நீதி கிடைத்துள்ளது. இது நீதிக்கும், நியாயத்திற்கும் கிடைத்த வெற்றி என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவர்களது கஜானாவை நிரப்பினார்கள்.
    • தமிழகத்தில் புதிதாக முளைத்துள்ள பா.ஜனதாவிற்கு கொள்கையும் தெரியாது, கோட்பாடும் தெரியாது, எதற்கு இருக்கிறோம் என்றும் தெரியாது.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் காய்கறி மாா்க்கெட் அருகில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது. மாா்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தி.மு.க. அரசை பற்றி தவறான தகவல்களை மாற்றுக் கட்சியினர் பரப்பி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. மக்களுக்கு எந்த நலத்திட்ட உதவிகளை உண்மையாக செய்யவில்லை.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவர்களது கஜானாவை நிரப்பினார்கள். மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் எல்லாம் இன்று எங்களது தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை என்று கூறுகிறார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம்.

    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் மக்களிடம் குட்டையை கிளப்பி மீன் பிடிக்கலாம் என்று எண்ணுகிறார்கள் பொதுமக்களை குழப்புகிறார்கள்.

    தமிழகத்தில் புதிதாக முளைத்துள்ள பா.ஜனதாவிற்கு கொள்கையும் தெரியாது, கோட்பாடும் தெரியாது, எதற்கு இருக்கிறோம் என்றும் தெரியாது.

    தமிழகத்தில் நம் உரிமைகளை ஆதிக்க சக்தியிடம் அடிமைப்பட்டு இருந்ததை பாரதி, பெரியார் போன்ற பல்வேறு தலைவர்கள் முயற்சியால் தமிழகத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

    தி.மு.க.வினர் என்றும் மக்களோடு மக்களாக இருப்பவர்கள்.

    வடமாநிலங்களில் எய்ம்ஸ் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு திறக்கப்பட்டு விட்டது. ஆனால் மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு திறக்கப்படவில்லை. தமிழகத்தில் வேண்டாதவர்கள் எல்லாம் வந்து ஆட்டம் போடுவதற்கு காரணம் எடப்பாடி பழனி சாமிதான் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவில்பட்டியில் தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • இது பெரியார், அண்ணா, கருணாநிதியை பெற்ற மண். சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல் அதன் கொள்கைகளை மைக் பிடித்து பேசுகிறார்கள்

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான கருணாநிதி தலைமை தாங்கினார்.

    இதில் தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஒரு பொய்யை தொடர்ந்து கூறினால் உண்மையாகி விடும் என்ற கோயபல்ஸ் தத்துவம் போன்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசி வரு கிறார். அண்ணமாலை அரசியலுக்கு வந்து ஒராண்டு தான் ஆகிறது. நான் அப்படி இருந்தேன், இப்படி இருந்தேன் என சுய புராணம் பாடி வருகிறார்.

    நான் அரசியலுக்கு வந்து 26 ஆண்டுகள் கடந்து விட்டது. இன்றும் ஒரே கொள்கை பிடிப்போடு இருக்கிறேன்.எதிலும் தி.மு.க.வினர் துணிந்து நிற்போம். அண்ணா மலையின் பேச்சைக்கேட்டு யாரும் ஏமாற மாட்டார்கள். இது பெரியார், அண்ணா, கருணாநிதியை பெற்ற மண். சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல் அதன் கொள்கைகளை மைக் பிடித்து பேசுகிறார்கள். சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை திராவிட இயக்கம் தான் மாற்றியது. பெண்களுக்கு கல்வி கிடையாது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு கல்வி கிடையாது. கோவி லுக்குள் செல்ல அனுமதி கிடையாது என்ற நிலையை மாற்றி அமைத்தது நீதிகட்சியும், தி.மு.க.வும் தான் என்பதை மறந்து விடக்கூடாது.

    சாதி, மத பிரச்சினையை உருவாக்கி தமிழகத்தில் பிளவினை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். நிச்சயமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து வாக்குறுதிகளையும் படிப்ப டியாக நிறைவேற்றி வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    • அன்பழகன் நூற்றாண்டு விழாவை தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் கடைபிடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
    • கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்பழகன் படத்திற்குஅமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், அக்கட்சி யின் முன்னாள் பொதுச்செய லாளர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்பழகன் படத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

    இதில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலளார்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணி ஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், அபிராமிநாதன், கஸ்தூரிதங்கம், உமாதேவி, பரமசிவம், ஜெபசிங், மாநில பேச்சாளர் சரத்பாலா, துணை அமைப்பாளர்கள் நலம் ராஜேந்திரன், வக்கீல் சீனிவாசன், அருணாதேவி, ஜீவன்ஜேக்கப், அந்தோணிகண்ணன், சரவணன், கவிதாதேவி, ஜேசையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் மாப்பிள்ளையூரணியில் சிலோன் காலணி பகுதியில் அலங்கரிக்கப்பட்ட அன்ப ழகன் படத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் தலைமையில், தொண்டர்கள் தூத்துக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் திரண்டனர்.
    • பா.ஜனதா தொண்டர்கள் அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர்.

    தூத்துக்குடி:

    பா.ஜனதா மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநில தலைவர் அண்ணாமைலை குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் கீதாஜீவன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் தலைமையில், பா.ஜனதா தொண்டர்கள் இன்று தூத்துக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் திரண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் தனசேகரன் நகரில் இருந்து போல் பேட்டையில் உள்ள அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர். இதில் பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன், துணைத்தலைவர்கள் வக்கீல் வாரியார், சுவைதர், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் சுரேஷ்குமார், மாநில நிர்வாகிகள் விவேகம் ரமேஷ், வக்கீல் நாகராஜன் உள்பட திரளானோர் சென்றனர்.

    புதிய பஸ்நிலையம் அருகே சென்றபோது அவர்களை டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் போலீசார், அனுமதி இல்லாமல் ஊர்வலமாக செல்லக்கூடாது எனவும், திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    தொடர்ந்து அவர்கள், அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவதற்காக சென்றனர். இதைய டுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் அதிரடிப்படையினர் அங்கு விரைந்து வந்தனர்.

    அப்போது முற்றுகையிட சென்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார். எனினும் அதனை மீறி பா.ஜ.க.வினர் ஊர்வலமாக சென்றனர். இதைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் சித்ராங்கதன் உள்ளிட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • கயத்தாறில் கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது.
    • அரசின் ஊட்டச்சத்து உணவு பெட்டகம் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

    கயத்தாறு:

    கயத்தாறில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு 100 கர்ப்பிணிகளுக்கு சத்துணவு பெட்டகத்தை வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட அலுவலர் வீரபுத்திரன், கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், டாக்டர் திலகவதி ஆகியோர் வரவேற்று பேசினர்.

    கயத்தாறு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னபாண்டியன், மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி பாண்டியன், கயத்தாறு பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, நகர செயலாளர் சுரேஷ்கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கருப்பசாமிபாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் ராஜதுரை, அங்கன்வாடி வட்டார அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:-

    தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முதலில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தூத்துக்குடி மாவட்ட மக்கள் சார்பில் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

    இந்த ஊட்டச்சத்து உணவு பெட்டகத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களின் மூலம் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க கர்ப்பிணி பெண்கள் எந்தவித சத்து குறைபாடுகள் இல்லாமல் பிறக்கும் குழந்தைகள் 100 சதவீதம் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்றும், ஊட்டச்சத்து குறை பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு சார்பில் உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களை சிறப்பாக வளர்ச்சி அடைய தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

    கர்ப்பிணி பெண்களுக்கு கருவுற்ற நாள் முதல் குழந்தை வளர்ச்சி அடையும் வரை 'கோல்டன்' நாட்களாகும். ஆகவே மகிழ்ச்சியாக இருந்து ஆரோக்கியமான குழந்தைகள் பெற்று வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட பிரிவு அலுவலர்கள், கயத்தாறு வட்டார வளர்ச்சி துறை அலுவலர்கள்உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×