என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முழக்கம்"

    • விவசாயிகள் பட்டை நாமம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கபிஸ்தலம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆலையைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சர்க்கரை ஆலை முன்பு கடந்த நவ.30-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    போராட்டத்தின் 50-வது நாளான நேற்று முன்தினம், விவசாயிகள் கோவிந்தா! கோவிந்தா ! சத்தமிட்டு பட்டை நாமம் போட்டு நூதன முறையில் முழக்கமிட்டனர்.

    இந்த நிகழ்விற்க்கு இப்போராட்டக்குழு செயலாளர் நாக.முருகேசன் தலைமை வகித்தார்.பின்னர் அவர் கூறியதாவது:-

    வரும் 22-ம் தேதி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த மாநில அளவிலான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சுவாமிமலையில் நடைபெறவுள்ளது. அதில், சென்னையில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, தமிழகத்திலுள்ள அனைத்து விவசாயிகளையும், திரட்டிச் சென்று முற்றுகை போராட்டம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.

    நூதன முறையில் நடை பெற்ற கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • சங்கராபுரத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • கலந்து கொண்ட வரு வா ய்த்துறை அலுவல ர்கள் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மதிய உணவு இடை வேளையில் கோரிக்கை முழக்க போராட்டம் நடை பெற்றது. துணை தலைவர் ராஜா, மகளிர் அணி செயலாளர் கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசால் அறிவிக்க ப்பட்ட அரசாணை எண் 207-ன் படி இளநிலை வருவாய் ஆய்வா ளராக பணிபுரிந்து வரும் சரவணனு க்கு பதவி உயர்வு வழங்க க்கோரி போராட்டம் நடை பெ ற்றது. இதில் கலந்து கொண்ட வரு வா ய்த்துறை அலுவல ர்கள் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

    பேரணியில் ரத்ததானம் வழங்குவதன் நன்மைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி விழிப்புணர்வு முழக்கங்களை மாணவ மாணவிகள் எழுப்பினர்.

    நாகப்பட்டினம்:

    உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு நாகையில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் ஜூன் 14ம் தேதி உலகம் முழுவதும் உலக ரத்ததான தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாகையில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. பேரணியில், ரத்ததானம் வழங்குவதன் நன்மைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி, விழிப்புணர்வு முழக்கங்களை மாணவ மாணவிகள் எழுப்பினர். முக்கிய சாலைகள் வழியாக சென்ற விழிப்புணர்வு பேரணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    • கொரோனா காரணமாக பள்ளிகள் நடைபெறவில்லை இதனையடுத்து மாணவர்கள் கல்வி அறிவு பெற வேண்டும்.
    • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி முக்கூட்டு சாலை, புதுத்தெரு, கொள்ளை தெரு மெயின் ரோடு வழியாக திரும்ப பள்ளிக்கு வந்தடைந்தது.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு நடைபெறுவதை முன்னிட்டு மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

    கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகளில் பள்ளிகள் நடைபெறவில்லை இதனை யடுத்து மாணவர்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி என பல வகைகளில் நடைபெற்று வருகின்றது

    இதன் ஒரு பகுதியாக மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரகாஷ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆரம்பித்து முக்கூட்டு சாலை, புதுத்தெரு, கொள்ளை தெரு மெயின் ரோடு வழியாக திரும்ப அரசு ஆண்கள் பள்ளியில் முடிவடைந்தது

    இதில் சென்ற பள்ளி மாணவர்கள் சேர்ப்போம் சேர்ப்போம் பள்ளியில் சேர்ப்போம், கல்வி என்பது அடிப்படை உரிமை அதை யாரும் மறுத்தாள் அடைப்போம் சிறையில் அடைப்போம் என்று முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.இதில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், ஆசிரியர்கள் மணிகண்டன், ஸ்ரீராம், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் மாணவர்களை வழி நடத்தினர் மேலும் பல ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • சிலிண்டருக்கான முழுத்தொகையை வழங்காவிட்டால் வருடத்திற்கு நான்கு சிலிண்டரை அரசே ஏற்று வழங்க வேண்டும்.
    • மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்துக் கொன்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு மாவட்ட தலைவர் போபி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லதா முன்னிலை வகித்தனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாவட்ட துணை செயலாளர் ராமானுஜம் ஆகியோர் பேசினர்.

    இதில் சிலிண்டருக்கான முழுத்தொகையை வழங்க வேண்டும்.

    இல்லை என்றால் வருடத்திற்கு நான்கு சிலிண்டரை அரசே ஏற்று வழங்க வேண்டும்.

    காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் கொள்ளிடம், சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்துக் கொன்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.

    ×