என் மலர்
நீங்கள் தேடியது "கப்பல் போக்குவரத்து"
- வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
- அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதால் இன்று முதல் மீண்டும் கப்பல் சேவை தொடங்கியது.
சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்தது. தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் தனது சேவையை தொடங்கியது.வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான கப்பல் போக்குவரத்து கடந்த 12-ந்தேதி முதல் மீண்டும் தொடங்க இருந்தது. ஆனால், தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
பின்னர், அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதால் இன்று முதல் மீண்டும் கப்பல் சேவை தொடங்கியது. காலை தொடங்கிய கப்பல் சேவையை மும்மதத்தை சேர்ந்தவர்களும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த கப்பலில் 83 பயணிகள் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணம் செய்தனர்.
- மார்ச் 1-ந் தேதி முதல் கப்பல் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும்.
- சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழ்நாட்டின் நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் வரை இந்தியா-இலங்கை இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி 'செரியா பாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.
ஆனால், வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23-ந்தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையிலிருந்து காங்கேசன்துறைமுகத்துக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் சேவையை தொடங்கியது. வாரத்தில் 2 நாட்களுக்கு கப்பல் இயக்கப்பட்டு வந்தது.
பின்னர் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் தற்காலிமாக சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இந்தாண்டுக்கான கப்பல் போக்குவரத்து இம்மாதம் 22-ந்தேதி தொடங்கியது. தினமும் காலை 7.30 மணிக்கு நாகையில் கிளம்பி 11.30 மணிக்கு காங்கேசன் துறைமுகத்தை அடையும் கப்பல், அங்கிருந்து மறுமார்க்கத்தில் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு நாகையை வந்தடைந்தது. இதனை பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 28-ந்தேதி வரை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படியே நேற்று முன்தினம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த காற்று வீசி வருகிறது.
மோசனமான வானிலை காரணமாக கப்பலை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இன்று 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், மார்ச் 1-ந் தேதி முதல் கப்பல் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும் என்றும் கப்பலை இயக்கும் சுபம் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாகை-இலங்கை இடையே நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு கப்பல் போக்குவரத்து தொடங்கி 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- விரைவில் கடல் வழி போக்குவரத்து நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- காரைக்காலில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கை சென்றடையலாம்.
புதுச்சேரி:
யாழ்ப்பாணம் காரைக்கால் இடையே விரைவில் கப்பல் போக்கு வரத்து தொடங்கும் என இலங்கை மந்திரி அறிவித்துள்ளார்.
புதுவையில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கடற்கரை காந்தி சிலை அருகே துறைமுகம் செயல்பட்டது. அப்போது கப்பல் போக்குவரத்து நடைபெற்றது. அதன் பின்னர் துறைமுகம் செயல்படவில்லை. புதுவையில் தற்போது தேங்காய் திட்டில் மீன் பிடி துறைமுகமும் வம்பா கீரபாளையத்தில் மீனவர்களின் படகுகளை நிறுத்தும் துறைமுகம் அமைந்துள்ளது. புதுவை மாநிலம் காரைக்காலில் துறைமுகம் உள்ளது. இங்கு தற்போது சரக்கு கப்பல்கள் வந்து செல்கிறது.
காரைக்கால்- இலங்கை யாழ்பாணம் இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்க புதுவை அரசு முடிவு செய்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவர்னர் தமிழிசை காரைக்கால்- யாழ்பாணம் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் இதற்காக மத்திய கப்பல் போக்கு வரத்து ஆணையத்திடம் அனுமதி பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம்-காரைக்கால் இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்-காரைக்கால் இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் கடல் வழி போக்குவரத்து நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது நடைமுறை படுத்தப்பட்டால் காரைக்காலில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கை சென்றடையலாம். ஏற்கனவே கடந்த ஆண்டு தமிழகம் வந்து இருந்த இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டை மான், இலங்கை கிராம அபிவிருத்தி ராஜாங்க மந்திரி வியாழேந்திரன் ஆகியோர், இந்தியா-இலங்கை இடையிடையிலான கப்பல் போக்குவரத்து தொடங்க ஆயத்த பணிகள் நடைபெற்றுவருவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.