என் மலர்
நீங்கள் தேடியது "சிறப்பு"
- நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிபட்டியில் உள்ள சாய்பாபா கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடை பெற்றது.
- சிறப்பு பூஜையை முன்னிட்டு சாய்பாபாவுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிபட்டியில் உள்ள சாய்பாபா கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடை பெற்றது. சிறப்பு பூஜையை முன்னிட்டு சாய்பாபாவுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது.
இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த சாய்பாபா பக்தர்கள் அதிகாலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். பக்தர்கள் நேரடியாக சாய்பாபாவுக்கு பசும்பால் அபிஷேகம் செய்தனர்.கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது.
- சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள முருகன் கோயில்களில், கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை, சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இதில் பட்டு வஸ்திர அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள முருகன் கோயில்களில், கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை, சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாழப்பாடியில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோயிலில், மூலவருக்கு தேன், பால், சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் அபிசேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பட்டு வஸ்திர அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பேளூர் வெள்ளிமலை வேல்முருகன் கோயிலில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. மூலவர் வேல்முருகன், ராஜ அலங்காரத்தில் காட்சி யளித்தார்.
இதேபோல், வாழப்பாடி காசி விஸ்வநாதர் மற்றும் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், கொட்டவாடி கந்தசாமி கோயில், பாலசுப்பிரமணியர் கோயில் மற்றும் புதுப்பாளையம், சின்னகிருஷ்ணாபுரம், அத்தனூர்பட்டி, துக்கியாம் பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டியையொட்டி அபிசேக ஆராதனைகளுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதேபோல் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக,ஆரதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூரில்450 ஆண்டுகள் பழமை வாய்ந்த வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர், வடகரையாத்தூர் சிவன் கோவில், ஜேடர் பாளையம் சிவன் கோவில் பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. விழாவில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- வருகிற 17-ந்தேதி கார்த்திகை மாதம் பிறக்கும் நிலையில் சபரிமலையில் மண்டல பூஜை ெதாடங்க உள்ளது.
- சேலத்தில் இருந்தும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
வருகிற 17-ந்தேதி கார்த்திகை மாதம் பிறக்கும் நிலையில் சபரிமலையில் மண்டல பூஜை ெதாடங்க உள்ளது. இதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்கு ஏற்ப வருகிற 17-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 18-ந்தேதி வரை சென்னை உள்பட தமிழக முக்கிய நகரங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி சேலத்தில் இருந்தும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், குழுவாக செல்வோர், மொத்தமாக பஸ்சை வாடகைக்கு எடுத்து பயணிக்க விரும்புவோர், அந்தந்த மாவட்டங்களில் உள்ள விரைவு போக்குவரத்து கிளை மேலாளரை அணுகலாம். தனி நபராக செல்வோர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் . குழுவாக செல்வோருக்கு சிறப்பு கட்டண சலுகை வழங்கப்படும் என தெரிவித்தனர்.
- சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பனம் பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் கோவிலில் விநாயகர் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
- 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பனம் பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் கோவிலில் விநாயகர் பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் பரமத்தி வேலூர் பேட்டை பஞ்சமுக விநாயகர் கோவில், நன்செய்இடையாறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்கள், பரமத்தி, பாண்டமங்கலம், பொத்தனூர், ஆனங்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலிகளில் சங்கடகர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை ஒட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை ஒட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள காலபைரவருக்கு பால், தயிர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் பாண்ட–மங்கலம் புதிய காசி விஸ்வ–நாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோயில் , பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூர் விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள ஈஸ்வரன் கோவில், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஈஸ்வரன் கோவில்–களில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது,
- இரவு 11.15 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7.23 மணிக்கு சேலம் வந்தடையும்.
சேலம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கோட்டயத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது, அதன்படி செகந்திராபாத்-கோட்டயம் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07125) வருகிற 27-ந் தேதி மாலை 6.50 மணிக்கு செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 28-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 12.22 மணிக்கு சேலம் வந்தடையும்.
பின்னர் இங்கிருந்து 12.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் வழியாக இரவு 9 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கத்தில் கோட்டயம்-செகந்திராபாத் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07126) வருகிற 28-ந் தேதி இரவு 11.15 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7.23 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 7.25 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர் வழியாக வருகிற 30-ந் தேதி காலை 4 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
- நாமக்கல் மாவட்டத்தில் 9.11.2022 முதல் 8.12.2022 வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டி யல் திருத்தப்பணிகள் நடை பெற்று வருகிறது.
- வருகின்ற 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்டத்திலுள்ள 686 வாக்குச் சாவடி மையங்களிலும் இப்பணி நடைபெறுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி. சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-
நாமக்கல் மாவட்டத்தில் 9.11.2022 முதல் 8.12.2022 வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டி யல் திருத்தப்பணிகள் நடை பெற்று வருகிறது. அதன்படி வருகின்ற 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்டத்திலுள்ள 686 வாக்குச் சாவடி மையங்களிலும் இப்பணி நடைபெறுகிறது. இந்நாட்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் வழங்கலாம்.
இம்முகாமின்போது, 01.01.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (அதாவது 31.12.2004 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்) பெயரானது ஜனவரி-2023 மாதம் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும்மற்றும் 31.12.2005 அன்றோஅல்லதுஅதற்கு முன்னரோ பிறந்தவர்களும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.
இவர்களின் பெயரானது 18 வயது பூர்த்தியடைந்த காலாண்டில் (ஏப்ரல்-2023, ஜூலை-2023, அக்டோபர்-2023) வெளி யிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். மேலும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி இதுவரை தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்காதவர்கள் இணைத்துக் கொள்ளு மாறும் கேட்டுக் கொள்கி றேன்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- தொட்டிபட்டி சாய்பாபா கோவிலில் உள்ள சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
- பக்தர்களே நேரடியாக சாய்பாபாவிற்கு பசும்பால் அபிஷேகம் செய்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிபட்டி சாய்பாபா கோவிலில் உள்ள சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாய்பாபாவிற்கு பிஸ்கட், நாட்டு வெல்லம், எண்ணைய், பூக்கள், தேங்காய் ஆகியவற்றை நேர்த்தி கடனாக வந்து செலுத்தினர். மேலும் பக்தர்களே நேரடியாக சாய்பாபாவிற்கு பசும்பால் அபிஷேகம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீராங்கணைகளுக்கு சிறப்பு உதவி தொகை வழங்கப்பட உள்ளது.
- தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கெடுத்து பதக்கம் வென்றிருக்க வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீராங்கணைகளுக்கு சிறப்பு உதவி தொகை வழங்கப்பட உள்ளது. தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கெடுத்து பதக்கம் வென்றிருக்க வேண்டும்.
இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் , வீராங்கணைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்கள வருகிற 15.12.2022 மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். ஏற்கனவே அஞசல் வழியில் , நேரடியாக விண்ணப்பித்திருந்தாலும், மீண்டும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர பிற விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையத்தினை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். தகுதியான விண்ணப்பங்கள் இதற்கென அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு மூலம் ஆய்வு செய்யப்படும். அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். இறுதி யாக தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்ப டுவர். அதிகபட்சம் அவர்களுக்கு விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரண்டு ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை இந்த முகாமில் உடனடியாக செய்து கொள்ளலாம்.
- ஆய்வு மற்றும் விசாரணை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் ஏற்பளிக்கப்பட்ட உடன் தேவையான சான்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள வட்டாட்சி யர் அலுவலகங்களில் மாதம்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை இந்த முகாமில் உடனடியாக செய்து கொள்ளலாம்.
அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த முகாம் குறித்து, குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் வசந்தி கூறியதாவது:வட்ட வழங்கல் துறை சார்பில் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை பயனாளர்கள் பெயர்கள் சேர்த்தல், நீக்கல் முகாம் நடைபெறுவது வழக்கம். தற்போது நடைபெற்ற முகாமில் இது சம்பந்தமாக பல மனுக்கள் வந்துள்ளன. அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
சிறப்பு முகாம் குறித்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள் 2017-இன் கீழ் புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கும், தற்போதுள்ள குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், அங்காடி மாற்றம் மற்றும் மாவட்ட மாறுதல் போன்ற பணிகளை செய்து கொள்ள பொது மக்கள் வட்ட வழங்கல் அலுவலத்திற்கு செல்லாமலே தாங்கள் வசித்து வரும் இடத்தில் இருந்து இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பணிகளை செய்து கொள்ளலாம்.
இணையதளத்தில் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து பொது சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் இணை யதளத்தில் விண்ணப்பம் செய்திடவேண்டும். அவற்றின் மீது தொடர்பு டைய வட்ட வழங்கல் அலுவலரால், ஆய்வு மற்றும் விசாரணை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் ஏற்பளிக்கப்பட்ட உடன் தேவையான சான்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.
புதிய மின்னனு குடும்ப அட்டைகள் சென்னை யில் இருந்து அச்சிட்டு வரப்பெற்ற வுடன், உரிய நியாயவிலை அங்காடிகள் மூலம் விண்ணப்ப தாரர்களுக்கு அந்த அட்டை விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கிருஷ்ணா மாளிகா அரங்கம் திறப்பு விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
- குமரி மாவட்டத்தில் பொது மக்களின் நலன் கருதி விமான நிலையம் அமைக்க அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக கூறினார்.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் அருகே கோட்டகம் ஸ்ரீ கிருஷ்ணா அறக்கட்டளையால் நவீன முறையில் ஏசி வசதிகளுடன் கூடிய புதிதாக கட்டப்பட்டு இருக்கும் பிருந்தாவனம் ஸ்ரீ கிருஷ்ண மாளிகா அரங்கத்தினை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு பேராசிரியை முனைவர் ஸ்ரீஜா ஸ்டாலின் குத்து விளக்கு ஏற்றினார். சென்னை நேசம் டெக் உரிமையாளர் மோகனகுமார், நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலய தலைவர் கோட்டகம் விஜயகுமார் தலைமை உரையாற்றினார்.
முன்னதாக கோட்டகம் ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-
குமரி மாவட்டத்தில் பொது மக்களின் நலன் கருதி விமான நிலையம் அமைக்க அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். கிருஷ்ண பகவான் அன்று கூறிய உபதேசங்கள், இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பாடமாக மாணவர்கள் படித்து வருகின்றனர். நமது நாட்டிற்கு எத்தனை பிரச்சனைகள் எத்தனை நெருக்கடிகள், அதையெல்லாம் பிரதமர் மோடி அரசு முறியடித்து வெற்றிக்கொடி நாட்டி வருகின்றது,
அதேபோல குமரி மண்ணும் பல பிரச்சினைகளையும், நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது. எங்கு பெண்கள் அதிகமாக இருக்கிறார்களோ அங்கே சிறப்பு அதிகமாக இருக்கும், கோவில்களின் அருகாமையில் அனைத்து பகுதிகளிலும் மண்டபங்கள் கட்ட வேண்டும், அப்போதுதான் திருமணம் நடைபெற்ற பின்னர் இறைவனை அருகாமையில் தரிசிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட பொருளாளர் முத்துராமன் மற்றும் ஆன்மீகப் பெரியோர்கள், துறவிகள், மடாதிபதிகள், அரசியல் பிரமுகர்கள், இந்து இயக்க தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.