என் மலர்
நீங்கள் தேடியது "Death"
- சைக்கிள் மீது பைக் மோதி 2 பேர் பலியானார்கள்.
- இந்த விபத்து குறித்து புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி குமார் (வயது 45). இவரது மைத்துனரான புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கோபால்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் (40) இருவரும் மோட்டார் சைக்கிளில் பொன்னமராவதியில் இருந்து கோட்டையூர் நோக்கி சென்றனர்.
கே.புதுப்பட்டிக்குள் வரும்போது அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி அழகன் என்பவர் சைக்கிளை ஓட்டி வந்தார். எதிர்பாராத விதமாக பைக்கும், சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகராஜ், அழகன் ஆகியோர் படுகாய மடைந்தனர். இருவரும் ஆம்புலன்சு மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அழகனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த நாகராஜ் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலியானார்
- அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
புதுக்கோட்டை
விராலிமலை தாலுகா வடுகப்பட்டி பூங்கா நகரை சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவருடைய 3-வது மகன் பொன் ஆதவன் (வயது 15). இவர் விராலிமலை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்த தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். வேலூர் சாலையில் உள்ள திருமலை நகர் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோர கட்டிடத்தின் மீது சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. மேலும், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த பொன் ஆதவனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சிறுவன் பொன் ஆதவன் பரிதாபமாக இறந்தான். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின்சாரம் பாய்ந்து முதியவர் உயிரிழந்தார்
- கூலி வேலை செய்து வந்தார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழவண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவமூர்த்தி(வயது 62). கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டிற்கு செல்லும் மின் இணைப்பில் மரத்தின் இலைகள் சிக்கியிருந்தது.
இதைக்கண்ட கேசவமூர்த்தி, அந்த இலைகளை அகற்றிவிட முயற்சி செய்துள்ளார். அப்போது கேசவமூர்த்தி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கேசவமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
- சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பவ்னீத் கவுர் தெரிவித்தார்.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிப்பு.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். அமராவதியில் உள்ள பிரபாத் டாக்கீஸ் திரையரங்கம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படையினரும், போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பவ்னீத் கவுர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள துணை முதல்வர், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை மாநில அரசு ஏற்கும் என்றும், விசாரணை நடத்த கோட்ட ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
- கார் சின்ன சேலத்தில் உள்ள சேலம் சென்னை நெடுஞ்சாலையில் கொங்கு திருமண மண்டபம் அருகே உள்ள மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.
- விபத்தில் பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி:
பெங்களூரை சேர்ந்தவர் ஜன்னபாவா (வயது 30). அவரது மனைவி பிரியா (23). இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஜன்னபாஷ்வா தனது மனைவியுடன் பணிபுரியும் தினேஷ், புபாலன், நிஷ்த்தா ஆகியோருடன் சேர்ந்து புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல பெங்களூரில் இருந்து காரில் புறப்பட்டனர்.காரை ஜன்னபாஷ்வா ஓட்டினார். கோயமுத்தூர் வழியே வந்த கார் சின்ன சேலத்தில் உள்ள சேலம் சென்னை நெடுஞ்சாலையில் கொங்கு திருமண மண்டபம் அருகே உள்ள மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீதமுள்ள 4 பேரும் காயங்களுடன் உயிர்த்தப்பினர் பின்னர் அடிபட்டவர்களை சின்ன சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர். பிரியாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மின்சார கம்பியில் அடிப்பட்டு மயில் இறந்தது
- வனத்துறையினர் மரியாதை செலுத்தி புதைத்தனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே செம்பட்டி விடுதி பஸ் நிறுத்தம் அருகில் உயர் மின்னழுத்த கம்பியில் அடிபட்டு ஆண் மயில் உயிரிழந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் செம்பட்டிவிடுதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து இறந்த மயிலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் மயிலுக்கு உரிய மரியாதை செலுத்தி அப்பகுதியில் புதைத்தனர்.
- மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழந்தார்.
- வடமாநிலத்தை சேர்ந்தவர்
பெரம்பலூர்
உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத்தில் இருந்து சுமார் 50 பேர் ஆன்மிக சுற்றுலாவாக ராமேசுவரம் கோவிலுக்கு பஸ்சில் சென்றனர். நேற்று முன்தினம் அதிகாலை அவர்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் வழித்துணை ஆஞ்சநேயர் கோவில் அருகே பஸ்சை நிறுத்தி ஒரு டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தனர். அப்போது ஜவகர்லால் சிங் என்பவரின் மனைவி சியாம்குமாரி (வயது 60) சாலையின் மறுபக்கம் சென்று விட்டு, மீண்டும் பஸ் ஏறுவதற்காக சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சியாம்குமாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- ஆயுதப்படை போலீஸ்காரர் விபத்தில் பலியானார்
- பணி முடித்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்
கரூர்:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் தமிழ்ச்சோலை தெற்குப்பட்டியை சேர்ந்த செல்வம் மகன் ராகவன் (வயது 29), இவர் திருச்சி ஆயுதப்படை பிரிவில் கடந்த 2016- ஆண்டில் இருந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் திருச்சியில் இருந்து நெய்தலூர் வழியாக பெருகமணி செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தார். வாரிக்கரை அருகே வந்த போது, எதிரே வந்த மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் மோதியதில், ஆயுதப்படை போலீஸ்காரர் ராகவன் தலையில் பலத்த காயம் அடைந்து கீழே விழுந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த பொதுமக்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராகவன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராகவன் திருமணம் ஆகாதவர்,
- மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானார்.
- எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மகன் பாரதி என்ற பார்த்திபன் (வயது 28), எலக்ட்ரீசியன். இவர் நேற்று மாலை 17 வயதுடைய சிறுவனை அழைத்து கொண்டு விளாமுத்தூர் கோகுலம் நகரில் வசிக்கும் ராஜா என்பவரின் வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்றார்.
அப்போது பார்த்திபன் வீட்டின் பின்புறம் உள்ள மின் விளக்கை சரி செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் பார்த்திபனுடன் வந்த சிறுவனிடம் மின்சாரத்தின் மெயின் சுவிட்சை ஆன் செய்யுமாறு கூறியுள்ளார். அப்போது பார்த்திபன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பார்த்திபனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பார்த்திபன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கிடங்கில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டிப்பர் லாரி மோதி என்ஜினீயர் பலியானார்.
- தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52), என்ஜினீயர். இவர் பெரம்பலூரில் தனியார் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், திருசன் என்ற மகனும், கீர்த்திஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு செல்வராஜ் தனது மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் ஏரிக்கரை எதிரே உள்ள நெடுவாசல் பிரிவு சாலையில் இருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தவழியே சென்ற டிப்பர் லாரி செல்வராஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் பீதியடைந்த டிரைவர் டிப்பர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், விபத்தை ஏற்படுத்தியவர் திருச்சி மாவட்டம் லால்குடி நடராஜபுரத்தை சேர்ந்த மாரி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- ரியல் எஸ்டேட் அதிபர் விபத்தில் பலியானார்
- இரு சக்கர வாகனத்தில் வந்தபோது பஸ் மோதியது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மகாராஜபுரம் திருவப்பூர் பகுதியை சேர்ந்தவர் தங்கையா மகன் விஜயன் (வயது 50). இவர் வீட்டு மனைகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் இவர் இடம் விற்பது, வாங்குவது மற்றும் தேவைப்படுவர்களுக்கு அவர்களுக்குரிய இடத்தை விலை பேசி முடித்து தருவாராம்.
இதனால் எந்த நேரமாக இருந்தாலும் தனது வாடிக்கையாளர் அழைக்கும் போது தனது இருசக்கர வாகனத்தில் சென்று அவர்களை பார்த்து தொழில் ரீதியாக பேசிவிட்டு வருவாராம்.
இந்நிலையில் நேற்று இரவு வாடிக்கையாளர்களை சந்தித்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வருமான வரி அலுவலகம் முன்பாக வந்த போது, எதிரே வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் தலை நசுங்கி விஜயன் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் அதிபர் விபத்தில் இறந்த செய்தி அறிந்து அப்பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
- ஆறுமுக பாண்டி தலையாரியாக வேலை பார்த்து வந்தார்.
- மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் ஆறுமுகபாண்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள தடியம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுக பாண்டி (வயது 58). இவர் அதே கிராமத்தில் கிராம உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஆறுமுகபாண்டி பணி நிமித்தமாக கூவாச்சிபட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்தது. இதில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் ஆறுமுகபாண்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ஆறுமுகபாண்டி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.