என் மலர்
நீங்கள் தேடியது "மீது"
- ஒருவர் படுகாயம்
- இந்த விபத்தில் அரசு பஸ் ஓட்டுநரும், பயணிகளும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கன்னியாகுமரி:
திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். லாரி டிரைவர். இவர் இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி லாரியில் சென்றுக்கொண்டிருந்தார்.
களியக்காவிளை அருகே பி.பி.எம். சந்திப்பில் அவர் வந்தபோது அவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற அரசு பஸ்சின் மீது பயங்கரமாக மோதியது. இதில் அரசு பஸ்சின் முன் பக்க கண்ணாடி முற்றுலுமாக நொறுங்கியது.
இந்த விபத்தில் அரசு பஸ் ஓட்டுநரும், பயணிகளும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி டிரைவர் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரி ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் ஜான்போஸ்கோ (வயது 44), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மரிய கொரட்டி பிறீடா (40). இவர்களுக்கு ஜான் பிஜோ (17), ஜான் பினோ (7) என 2 மகன்கள் உள்ளனர்.
ஜான் போஸ்கோ தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டி வருவதால், தற்போது அப்பகு தியிலுள்ள வேறு ஒரு வீட்டில் வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மேக்காமண்ட பத்தில் தனது தாய் இறந்த தால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மரிய கொரட்டி பிறீடா மகன்களுடன் அங்கு தங்கி இருந்தார்.
நேற்று அவர், கணவருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு, தனது மகன் ஜான் பிஜோவுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். குலசேகரம் நாகக்கோடு சந்திப்பு அருகே அரசு பஸ் சென்று கொண்டிருந்ததால், ஜான் பிஜோ திடீரென்று மோட்டார் சைக்கிளை பிரேக் போட்டு நிறுத்தினார். இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது.
இந்த விபத்தில் மரிய கொரட்டி பிறீடா சாலையில் விழுந்தார். அப்போது அங்கு வந்த பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மரிய கொரட்டி பிறீடா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற ஜான் பிஜோ லேசான காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் கடையாலுமூடு குழிக்கால விளையை சேர்ந்த தபசிமுத்துவிடம் (55) விசாரணை நடத்தினர்.
குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று மரிய கொரட்டி பிறீடாவின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. அதன்பி றகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கிடையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற ஜான் பிஜோ மீது குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் ஓட்டுபுற தெருவை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 51), பெயிண்டர்.
இவர் நேற்று வடசேரி பஸ் நிலையத்திற்கு சென்றபோது, அங்கு வந்த அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியானார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில், சுதர்சன், மதுபோதையில் பஸ் நிலையத்தில் சுற்றியதாகவும், அப்போது அங்கு வந்த கன்னியாகுமரியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபருடன் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதன்பிறகு அவர், பஸ் நிலையத்தில் நிலைதடுமாறி விழுந்தபோது அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.
இதனை தொடர்ந்து விபத்து தொடர்பாக அருமனையை சேர்ந்த பஸ் டிரைவர் ஸ்ரீரெங்கநாதன் (50) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து 25 பேர் ஆம்னி பஸ்சில் சுற்றுலா சென்று விட்டு நள்ளிரவில் ஊருக்கு திரும்பினர். இந்த ஆம்னி பஸ்சை சூளகிரிைய சேர்ந்த டிரைவர் மோகன் என்பவர் ஓட்டி வந்தார்.
- சுற்றுலாவுக்கு சென்று விட்டு திரும்பிய ஆம்னி பஸ் அதிகாலை 4 மணி அளவில் லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதனால் ஆம்னி பஸ் முன்பகுதி அப்பளம் போல் நொருங்கியது.
சேலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து 25 பேர் ஆம்னி பஸ்சில் சுற்றுலா சென்று விட்டு நள்ளிரவில் ஊருக்கு திரும்பினர். இந்த ஆம்னி பஸ்சை சூளகிரிைய சேர்ந்த டிரைவர் மோகன் என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த நிலையில், கோவையில் இருந்து இரும்பு கம்பி லோடு ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்டம் வழியாக வந்து கொண்டிருந்த லாரி திடீெரன பழுதானது. இதனால் லாரியை ஓடி வந்த தூத்துக்குடியை சேர்ந்த டிரைவர் ரமேஷ்குமார் என்பவர் லாரியை உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவில் அருகே சாலையோரம் நிறுத்திவிட்டு பழுதை சரி செய்து கொண்டிருந்தார்.
ஆம்னி பஸ் மோதியது
அப்போது சுற்றுலாவுக்கு சென்று விட்டு திரும்பிய ஆம்னி பஸ் அதிகாலை 4 மணி அளவில் லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதனால் ஆம்னி பஸ் முன்பகுதி அப்பளம் போல் நொருங்கியது. அப்போது அதிகாலை என்பதால் பஸ்சில் இருந்த சுற்றுலா பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். விபத்து நிகழ்ந்ததும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதில் டிரைவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் அடிபட்டு இருந்தது. வலி தாங்க முடியாமல் அவர்கள் அலறி துடித்தனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். மேலும் கொண்ட லாம்பட்டி போலீசாருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தினால் பயணிகள் பதட்டத்துடன் காணப்பட்டனர். காயம் அடைந்த பயணிகளை தவிர மற்றவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா மல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
- சிறுமியிடம் சீனிவாசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா மல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 30). இவர் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சீனிவாசன் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் சீனிவாசனை கண்டித்துள்ளனர். இதனையடுத்து சீனிவாசன் மாணவிக்கு செல்போன் வாங்கி கொடுத்து பெற்றோருக்கு தெரியாமல் மீண்டும் பழக ஆரம்பித்தார்.
இந்த நிலையில் சிறுமியிடம் சீனிவாசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சீனிவாசன் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் சாரதா ஆகியோர் சீனிவாசன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் அருகே கட்டிப்பாளை யத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி (50). பால் வியாபாரி.
- சம்பவத்தன்று இரவு இவர் மாவுரெட்டிப்பட்டி அருகே வடுகபாளையத்தில் உள்ள முனியப்ப சாமி கோவில் திருவிழாவிற்கு சென்றார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் அருகே கட்டிப்பாளை யத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி (50). பால் வியாபாரி. சம்பவத்தன்று இரவு இவர் மாவுரெட்டிப்பட்டி அருகே வடுகபாளையத்தில் உள்ள முனியப்ப சாமி கோவில் திருவிழாவிற்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு செல்ல தனது மொபட்டில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மொபட்டில் வந்த அடையாளம் தெரியாத இருவரில் பின்னால் அமர்ந்து வந்த ஒருவர் கட்டையால் பாலுசாமியை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த அவரது உறவினர்கள் அவரை காப்பாற்றி நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பாலுசாமி சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வேலகவுண்டம் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பாலுசாமியை கட்டையால் தாக்கிவிட்டு தலைமறைவான நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அன்னை சத்யா நகரில் வசிப்பவர் பிரகாஷ் (33). அதே பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (25). இருவரும் லாரி டிரைவர்கள்.
- பிரகாஷ் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பிரகாஷ் மனைவியின் அண்ணன் மோகன்ராஜை கைது செய்தனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அன்னை சத்யா நகரில் வசிப்பவர் பிரகாஷ் (33). அதே பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (25). இருவரும் லாரி டிரைவர்கள்.
மோகன்ராஜின் தங்கையை பிரகாஷ் திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
சரமாரி தாக்குதல்
இந்த நிலையில் நேற்று மாலை பிரகாஷ் மற்றும் அவரது தம்பி சுரேஷ் ஆகியோர் மோகன்ராஜின் வீட்டின் அருகே வந்தனர். அப்போது அங்கு குடிபோதை யில் நின்று கொண்டிருந்த மோகன்ராஜ் உன்னால் தான் என் தங்கை வாழ்க்கை வீணாகிப் போனது எனக் கூறி கீழே கிடந்த கல்லை எடுத்து பிரகாஷை சரமாரி யாக தாக்கினார். இதில் பிரகாஷ் மண்டை உடைந்தது.
இதையடுத்து பிரகாஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் சத்தம்போடவே மோகன்ராஜ் அங்கிருந்து ஓடிவிட்டார். அக்கம் பக்கத்தினர் பிரகாஷை மீட்டு குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுகுறித்து பிரகாஷ் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பிரகாஷ் மனைவியின் அண்ணன் மோகன்ராஜை கைது செய்தனர்.