என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramanathapuram"

    • கடந்த 10-ந்தேதி பூக்குழி இறங்குதல் விமரிசையாக நடந்தது.
    • பூக்குழியில் நிலைதடுமாறி விழுந்தார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை தெற்கு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது 56). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இதற்கிடையே அந்த பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடை பெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 10-ந்தேதி பூக்குழி இறங்குதல் விமரிசையாக நடந்தது. இதில் காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அதேபோல் ரியல் எஸ்டேட் அதிபரான கேசவனும் வேண்டுதல் நிறைவேற பூக்குழி இறங்கினார். அப்போது அவர் நெருப்புடன் கூடிய மரக்கட்டைகள் நிரப்பப்பட்டு இருந்த பூக்குழியில் நிலைதடுமாறி விழுந்தார்.

    இதைப்பார்த்த சக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தயார் நிலையில் இருந்த மீட்பு குழுவினர் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    உடலின் பெரும்பாலான பகுதியில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கேசவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி விக்னேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமி, மாணவரின் பொறுப்பற்ற காதலை ஏற்கவில்லை.
    • பெற்றோருக்கு மகனின் தற்கொலை பேரிடியாக விழுந்துள்ளது.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியை அடுத்த தெய்வதானம் கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாண வர். இவர் சத்திரக்குடி அருகேயுள்ள வளநாடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவரது பெற்றோர் கூலி வேலைக்குச் சென்று வருகிறார்கள்.

    தாங்கள் படிக்காவிட்டா லும், மகனை படிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆசையுடன் பெற்றோர் இருந்தனர். அதிலும் குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கு மகனை நல்லமுறையில் தயார் செய்து வரும் வகையில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்திற்கு வரவேண்டும் என்று கூறி அவ்வப்போது ஊக்கப்படுத்தி வந்தனர்.

    இதற்காக அந்த மாணவர் கடுமையாக படித்து வந்தார். பெற்றோர் பகலில் வேலைக்கு சென்றாலும் மாலையில் வீடு திரும்பியதும் மகனுக்கு தேவையானவற்றை செய்துகொடுத்தனர்.

    அந்த வகையில் இன்று இறுதியாக சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது. இதற்கிடையே அந்த மாணவரின் செயல்பாடுகள் கடந்த சில மாதங்களாக பெற்றோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.

    அவரது நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் இருப்பதையும் பெற்றோர் உணர்ந்தனர். காரணம் கேட்டபோது, எதுவும் இல்லை என்று மாணவர் மறுத்துவந்துள்ளார்.

    இருந்தபோதிலும் மகனை அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது அவர் ஒரு சிறுமியுடன் பழகி வந்ததை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அக்கம்பக்கத்தினரும் இதனை ஏற்கனவே அறிந்து மாணவரின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். முதலில் அதனை நம்ப மறுத்த பெற்றோர், நேரடியாக பார்த்துவிட்டதால் மகனின் செயலை எண்ணி வருந்தினர்.

    தற்போது அரசு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் கடுமையாக கண்டித்தால் மகனின் படிப்பை பாதித்துவிடும் என்று எண்ணி, பக்குவமாக அறிவுரை கூறினர். இது விளையாட்டுத்தனமாக வயது, தற்போதே காதல், திருமணம், வாழ்க்கை என்பதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க கூடாது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

    ஆனாலும் மாணவர் அதனை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இதற்கிடையே அந்த சிறுமி, இந்த மாணவரின் பொறுப்பற்ற காதலை ஏற்கவில்லை. மாறாக மாணவர் மட்டும் அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

    மகனின் செயல்பாடுகள் எல்லை மீறி போனதால் நேற்று பெற்றோர் அவரை கடுமையாக கண்டித்தனர். ஒழுங்காக படித்து இன்று நடைபெறும் இறுதித் தேர்வை எழுதவேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட மாணவர், இன்று நடக்கும் சமூக அறிவியல் தேர்வுக்கு படிக்க இருப்பதாக கூறி, வீட்டில் உள்ள தனி அறைக்கு சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.

    மகன் படிக்கத்தான் செய்கிறார் என்ற எண்ணத்துடன் பெற்றோர் அயர்ந்து தூங்கிவிட்டனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் மாணவர் இருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது.

    நீண்ட நேரம் படித்த களைப்பில் தூங்கியிருப்பான் என்று நினைத்து, பெற்றோர் கதவை தட்டினர். பலத்த சத்தம்போட்டும் எழுப்பினர். ஆனாலும் கதவை திறக்காததால் பதட்டம் அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மாணவர் தாயின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் தொங்கினார். மகனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.

    உடனடியாக அவரை மீட்டு சத்திரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மகனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறித்துடித்தனர்.

    பின்னர் இதுபற்றி அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சத்திரக்குடி போலீசார் தற்கொலை செய்துகொண்ட மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வளர்ந்து ஆளாகி தன்னை காப்பாற்றுவார் என்ற கனவில் இருந்த பெற்றோருக்கு மகனின் தற்கொலை பேரிடியாக விழுந்துள்ளது. இறுதித் தேர்வை எழுத வேண்டியவர் இறுதி ஊர்வலமாக புறப்பட்டுள்ளார். 10-ம் வகுப்பு படிக்கும் வயதில் ஒருதலைக்காதலில் விழுந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் 10ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிப்பு.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

    அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருள்மிகு ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை (04.04.2025) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நாளைய விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் 10ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் கோவில்கள், தேவாலயங்களில் புத்தாண்டு வழிபாடு நடந்தது.
    • இறைமக்கள் மற்றும் பங்குப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.



    ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் தலைமை குருக்கள் மோகன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

     ராமநாதபுரம்

    ஆங்கில புத்தாண்டை யொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்கள், தேவாலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் தலைமை குருக்கள் ஆர். எஸ். மோகன் தலைமையில் நே ற்று இருமுடி கட்டுதலும். அன்னதானமும் நடந்தது. இரவு சிறப்பு பஜனை, சிறப்பு அபிஷேகம் நடந்த பின் இரவு 12 மணிக்கு வல்லபை அய்யப்பனுக்கு புத்தாண்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி, சபரிமலை யாத்திரை புறப்பாடு நடந்தது.

    கொரோனா பரவல் நீங்கி, மக்கள் நலமுடன் வாழவும், மழை வேண்டியும் தலைமை குருக்கள் ஆர். எஸ். மோகன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. குடும்பம் சகிதமாய் பங்கேற்ற பக்தர்கள், வழிபாடு நடத்தி புத்தாண்டு சிறப்பாக அமைய வேண்டினர். பின்னர் காப்பு கட்டிய பக்தர்கள் தலைமை குருக்கள் மோகன் தலைமையில் பஸ்களில் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர்.இதற்கான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்பன் சேவை நிலையம் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ராமநாதபுரம் வழி விடு முருகன் கோவிலில் நடந்த புத்தாண்டு சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானை வழிபாடு செய்தனர். உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவில், திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில் உள்பட பல்வேறு இடங்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    ராமநாதபுரம் தூய ஜெபமாலை அன்னை தேவாலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நடந்த சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு, பரதர்தெரு புனித அந்தோணியார் சர்ச்சில் நள்ளிரவு 12 மணியளவில் பிறந்த புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும், ஆராதனைகளும்நடந்தன. பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். கிறிஸ்துவின் மறையுரை அருளப்பட்டது.

    ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைபரிமாறிக் கொண்டனர். பண்ணாட்டார் தெருவில் உள்ள அந்தோணியார் சர்ச்சில் புத்தாண்டையொட்டி சிறப்பு ஆராதனை நடந்தது. சி.எஸ்.ஐ. தூய பேதுரு சர்ச்சிலும் நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது.

    முத்துப்பேட்டை புனித காணிக்கை அன்னை சர்ச் சில் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு கூட்டுத்தி ருப்பலி நடந்தது. உலக மக்களின் ச மா தானத்தைவலியுறுத்தியும், நன்மை வேண்டியும், ஜெபம் நடத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.இறைமக்கள் மற்றும் பங்குப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

    • ராமநாதபுரத்தில் மலர் கண்காட்சி நடந்தது.
    • மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பது அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே அச்சடிப்பிரம்பில் தோட்டக்கலை துறையின் மூலம் 2-வது மலர் கண்காட்சி நடந்தது. இதன் தொடக்க விழாவுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி மலர் கண்காட்சியை திறந்து வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் நினைவு சின்னங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தோட்டக்கலைத்துறையின் மூலம் ராமநாதபுரம் நகர், அருகாமையில் அச்சடிபிரம்பு பகுதியில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் பாலை ஐந்திணை மரபணு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேல் பூக்கள் வரவழைக்கப்பட்டு ராமநாதபுரம், ராமேசுவரத்தின் பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் கங்காரு, டைனோசர், திமிங்கலம், முதலை ஆகியவற்றின் உருவங்களை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பது அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளது. அதே போல் அப்துல்கலாமின் கண்டுபிடிப்பான பி.எஸ்.எல்.வி ராக்கெட் காய்கறிகள் மூலம் வடிவமைக்கப்பட்டதும், ராமேசுவரத்தில் உள்ள ரெயில்வே மேம்பாலம் போன்று காய்கறிகள் மூலம் வடிவமைக்கப்பட்டது. அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இது மட்டுமின்றி நறுமணம் கொண்ட திரவியங்களால் தயாரிக்கப்பட்ட யானை மற்றும் அகத்தியர் முழு உருவ சிலை நன்றாக உள்ளன. இத்தகைய மலர் கண்காட்சி மாவட்டத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட வன அலுவலர் பகவான் ஜெகதீஷ் சுதாகர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நாகராஜன் மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் சார்பில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மதுக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தெரிவு செய்து கொள்ளலாம். அதே போல இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பினை பெறலாம்.

    இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை 17-ந் தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து

    செய்யப்பட மாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படுமெனவும், மேலும் தனியார் துறை நிறுவனங்கள்மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது. இவ்விணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும் வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம், கீழக்கரையில் திடீரென மழை பெய்தது.
    • வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் காணப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பகுதியில் அனைவரும் எதிர்பார்த்த வடகிழக்கு பருவமழை சில நாட்கள் மட்டும் லேசாக பெய்த நிலையில் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகள் வறண்டு விவசாயம் பாதிக்கப்பட்டது.

    வைகை தண்ணீர் பாய்ந்த பகுதிகளில் மட்டும் நீர் நிலைகள் நிறைந்து விவசாயம் நன்றாக உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கடலோர பகுதியில் கருமேகம் சூழ்ந்து இடைவிடாமல் 2மணி நேரம் மழை பெய்ய தொடங்கியது. சில பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழையாகவும், பல பகுதிகளில் இடை விடாமலும் பெய்தது.

    மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. மழையின்றி பனியின் தாக்கத்தில் இருந்து வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிலத்தடி நீராதாரத்திற்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    காலம் தாழ்ந்து பெய்த மழையால் நெல் விவசாயத்திற்கு எந்த பயனும் இல்லை என்றாலும் வைகை தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்துள்ள பகுதிகளுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்றும் மிளகாய், மல்லி போன்றவற்றிற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    மழையுடன் குளிர் காற்றும் வீசியதால் குளிர்ந்த நிலை நிலவியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கீழக்கரையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. போக்குவரத்து மிகுந்த முக்கிய ரோடு, தெருக்கள் சேதமடைந்து குண்டும் குழியுமாகி தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று காலை பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் காணப்பட்டது.

    • பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    கீழக்கரை பி.எஸ்.எஸ். ஜெ.நாடார் மெட்ரிக் பள்ளி 26-ம் ஆண்டு விழா, விளையாட்டு, பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் 18 மாணவ- மாணவிகளுக்கு நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் பட்டம் வழங்கினார்.

    நாடார் மகாஜன சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் களரி குகன், கீழக்கரை வட்டகை நாடார் ஜனோபகார சங்க தலைவர் ஜெயமுருகன், துணைத்தலைவர் கோவிந்தராஜ், பொதுச்செயலாளர் நாகராஜன், துணை செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் விஸ்வநாதன், நாடார் மகாஜன சங்க நகர் தலைவர் மணிகண்டன், நாடார் மகாஜன சங்க மாவட்ட மகளிரணி தலைவர் பாப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளையாட்டு விழாவில் கீழக்கரை நகராட்சி துணைத்தலைவர் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான், தேவகோட்டை தி பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பவுலியன்ஸ், சரவணன், திருப்புல்லாணி முத்தரையர் சங்க தலைவர் முனியசாமி, வீரமுத்தரையர் சங்கத்தலைவர் செல்வம், தாளாளர் இளையராஜா, கல்வி குழு தலைவர் சுந்தரம், முதல்வர் உமா லிங்கேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்ததன. இதில் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • பொன் ஏர்விடும் மதநல்லிணக்க விழா நடந்தது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை கமுதி டி.எஸ்.பி. நேரடி கண்காணிப்பில் அபிராமம் போலீசார் செய்திருந்தனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள அ.பள்ளப்பசேரி கிராமத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொன் ஏர்விடும் மதநல்லிணக்க விழா நடந்தது. இதில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது இஸ்லாமியர்கள் சார்பில் சந்தன காப்பு மரியாதை செய்யப்பட்டது. இறுதியாக நத்தம் அய்யனார் கோவில் முன்பு பொன் ஏர்விடும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிகாண ஏற்பாடுகளை கிராம பொறுப்பாளர்கள் ஜெய்கணேஷ். செல்லத்துரை மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை கமுதி டி.எஸ்.பி. நேரடி கண்காணிப்பில் அபிராமம் போலீசார் செய்திருந்தனர்.

    • ராமநாதபுரத்தில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் பாரதிநகர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கீம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சந்தான தாஸ், மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட துணை செயலாளர் தொண்டி ராசிக் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.நகர செயலாளர் பாலா வரவேற்றார்

    கடந்த வாரம் கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்று சிறை சென்றவர் களை விடுவிக்க உறுதுணை யாக இருந்த மாநில பொருளாளர் திலகபாமா, மாநில செய்தி தொடர்பாளர் வினோபா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து சிக்கலை தலைமை இடமாக வைத்து புதிய ஒன்றியத்தை உரு வாக்க கோரி சட்டமன்றத்தில் குரல் எழுப்பி கோரிக்கை வைத்த சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் அருளுக்கு இக்கூட் டத்தில் நன்றி தெரி விக்கப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மண்டபம் ஒன்றிய செயலாளர் மக்தூம் நன்றி தெரிவித்தார்.மாவட்ட துணைத் தலைவர் முகமது அலி,ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் இஸ்மாயில், கடலாடி ஒன்றிய செயலா ளர் இருளாண்டி, கீழக்கரை நகரச் செயலாளர் லோக நாதன், கடலாடி ஒன்றிய துணைச் செயலாளர் முனிய சாமி, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோசம், மாவட்ட மாணவர் சங்கத் தலைவர் சரீப், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா ளர் இப்ராஹிம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இமானுவேல், மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக், ஒன்றிய இளைஞர் சங்கத் தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • முளைக்கொட்டு உற்சவ விழா நடந்தது.
    • ஆலோசகர் தனசேகர் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள குஞ்சார் வலசையில் பிள்ளைக்காத்த காளியம்மன், கோட்டைமுனி கருப்பணசாமி கோவிலில் 2-ம் ஆண்டு முளைக் கொட்டு உற்சவ விழா தர்மகர்த்தா சரவணன் தலைமையில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தினமும் இரவில் சமயராஜ், முனியாண்டி தலைமையில் ஒயிலாட்டம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, பூஜைகள் நடந்தன. இரவு இடையர் வலசை சக்தி வடிவேல் முருகன் கோவிலில் இருந்து அம்மன் கரகம் பிள்ளைக்காத்த காளியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. பக்தர்கள் அக்னிசட்டி, பால் குடம் எடுத்து வந்தனர். பொதுமக்கள் பொங்கலிட்டும், மாவிளக்கு எடுத்தும் வழிபாடு செய்தனர்.

    கருப்பணசாமிக்கு கிடா வெட்டும் நிகழ்ச்சியும், பொதுமக்களின் சார்பில் அன்னதானமும் நடந்தது.அம்மன் கரகம் தென் கடற்கரைக்குச் சென்று கடலில் பூஜிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா சரவணன், கோவில் கமிட்டி தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ராம்கி, ஆலோசகர் தனசேகர் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். 

    • ராமநாதபுரம் இசை பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
    • தொலைபேசி 04567-220104, 99422 67837, 94420 4310, 97516 74700, 95664 73769, 99941 34886 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடுஅரசுகலைபண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்டஅரசு இசைப்பள்ளி ராமநாதபுரத்தில் கீழ்காணும் பாடப்பிரிவுகளில் சிறந்த இசை ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. குரலிசை (வாய்ப்பாட்டு), பரதநாட்டியம், நாதசுரம், தவில்,தேவாரம், மிருதங்கம், வயலின் போன்ற வகுப்புகள் நடைபெற உள்ளன.

    2023-24-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.வயது வரம்பு 12 முதல் 25 வயது வரைக்கு உட்பட்டவர்கள் சேரலாம். கல்வித் தகுதி குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் பிரிவுகளில் சேர 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர்களும் பரதநாட்டிய பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

    பயிற்சி காலம் 3ஆண்டுகள். பயிற்சி கட்டணம் முதலாமாண்டு மாணவர்களுக்கு ரூ.350-ம், 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.325-ம் சிறப்பு கட்டணமாக வசூலிக்கப்படும். அரசுவழங்கும் சலுகை இலவச பஸ் பயணஅட்டை, கல்வி உதவித்தொகைமாதம் ரூ.400, அரசுமாணவர்விடுதி வசதி அளிக்கப்படும்.

    இசைக்கல்வியில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் மாணவ-மாணவிகள்தலைமைஆசிரியர் மாவட்டஅரசு இசைப்பள்ளி, எண் 14,கவுரிவிலாஸ் பேலஸ், அரண்மனை ராமநாதபுரம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி 04567-220104, 99422 67837, 94420 4310, 97516 74700, 95664 73769, 99941 34886 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

    ×