என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோதி"

    • சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (50), தொழிலாளியான இவர் நேற்றிரவு சில்லி சிக்கன் வாங்குவதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றார்.
    • அந்த வழியாக வந்த சத்யமூர்த்தி (32) என்பவரின் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (50), தொழிலாளியான இவர் நேற்றிரவு சில்லி சிக்கன் வாங்குவதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சத்யமூர்த்தி (32) என்பவரின் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவ ரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணேசன் இன்று அதிகாலை 2 மணியளவில் பரிதாபமாக இறந்தார். சத்யமூர்த்தி லேசான காயத்துடன் தப்பினார். இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அந்த வாலிபர் முதுகில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்து பொதுமக்கள் குட்ஷெட் நிலைய அதிகாரி பிரகாஷ்குமாரிடம் தெரிவித்தனர். அவர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அந்த வாலிபர் முதுகில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். அவர் தண்டவாளத்தை கடக்கும் போது அந்த வழியாக சென்ற ரெயில் மோதி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்த வாலிபரின் மார்பில் கமலா எனவும் கையில் மணி எனவும் பச்சை குத்தப்பட்டிருந்தது. இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதையடுத்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி பஸ் நிலையத்தில் செந்தில்ராஜா என்பவர் சலூன் கடை நடத்தி வந்தார்.
    • நாமக்கல் மாவட்டம் வேலூரில் இருந்து மேட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் செந்தில்ராஜா மீது மோதியது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி பஸ் நிலையத்தில் செந்தில்ராஜா (41) என்பவர் சலூன் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று இரவு 7 மணியளவில் நங்கவள்ளி பஸ் நிலைய பகுதியில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.

    சக்கரத்தில் சிக்கி பலி

    அப்போது நாமக்கல் மாவட்டம் வேலூரில் இருந்து மேட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் செந்தில்ராஜா மீது மோதியது. இதில் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி செந்தில்ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நங்கவள்ளி போலீசார் செந்தில்ராஜா உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனியார் பஸ்சை பறிமுதல் செய்தனர். மேலும் பஸ்சை ஓட்டி வந்த எடப்பாடி அருகே இருப்பாலியை சேர்ந்த டிரைவர் கண்ணன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் நல்லூர் அருகே நல்லியாம் பாளையம் காட்டுவலவு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம்.
    • மோட்டார் சைக்கிளில் மாட்டுத் தீவனம் வாங்கு வதற்காக வீட்டில் இருந்து கந்தம்பாளையம் பகுதிக்கு திருச்செங்கோடு- பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் நல்லூர் அருகே நல்லியாம் பாளையம் காட்டுவலவு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (60). இவர் தனது மோட்டார் சைக்கிளில் மாட்டுத் தீவனம் வாங்கு வதற்காக வீட்டில் இருந்து கந்தம்பாளையம் பகுதிக்கு திருச்செங்கோடு- பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அதிவேகமாக வந்த கார்

    அப்போது அந்தப் பகு

    தியில் உள்ள ஒரு பெட்ரோல்

    பங்கில் பெட்ரோல் போடு வதற்காக திரும்பியபோது பரமத்திவேலூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி அதிவேகமாக வந்த கார் ரத்தினம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரத்தினம் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார்.

    பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரத்தினம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கைது

    இதுகுறித்து ரத்தினத்தின் மனைவி வசந்தி(54) நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் காரை அதிக வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய திருச்செங்கோடு அருகே ஆலாங்குறைகாடு பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வெளியுறவுத்துறை மந்திரியிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
    • அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் அனைவரும் உயிர்தப்பி கப்பல் மூலம் மாலத்தீவுக்கு சென்றனர்.

    நாகர்கோவில்:

    விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையை சேர்ந்த 7 மீனவர்கள் உள்பட 12 மீனவர்கள் கடந்த 11-ந்தேதியன்று மாலத்தீவு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அந்நாட்டின் இழுவை கப்பல் மீன வர்களின் படகு மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் படகு மற்றும் அதில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் கடலில் முழ்கின. அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் அனைவரும் உயிர்தப்பி கப்பல் மூலம் மாலத்தீவுக்கு சென்றனர்.

    அந்நாட்டு அரசு அவர்களை கைது செய்தது. பின்னர் அவர்களை விடுவிக்க இந்திய தூதரகத்தை நான் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டேன். மீனவர்கள் தாயகம் திரும்பி வரவும் நடவடிக்கை எடுத்தேன். பின்னர் ஊர் திரும்பிய மீனவர்களை சந்தித்து அவர்கள் கோரிகை் கையை கேட்டறிந்தேன். அப்போது சேதம் அடைந்த படகு உள்பட ரூ.1½ கோடி மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனை கப்பல் நிறுவனத்திடம் இருந்து பெற்று தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து நான் நேற்று டெல்லி சென்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தேன். அப்போது மாலத்தீவு கப்பல் மோதி படகு விபத்துக் குள்ளான மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என மனு அளித்தேன்.

    இதுதொடர்பாக மாலத்தீவு அரசை தொடர்பு கொண்டு நிறுவனத்திடம் இருந்து நஷ்டஈடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி உறுதியளித்துள்ளார். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    நெசவு தொழிலாளி கார் மோதி இறந்தார்.
    ஆட்டையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே ஆர்.பெத்தாம்பட்டி பகுதியைசேர்ந்தவர் துரைசாமி(வயது 49) நெசவு தொழிலாளி. இவர் தனது மொபட்டில் பெத்தாம் பட்டியிலிருந்து ஆட்டையாம்பட்டிக்கு சென்றார்.   

    எஸ் பாலம் வளைவில் அவர் ரோட்டை கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக  எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட துரைசாமி மூளை சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    பலியான துரைசாமிக்கு சுமதி என்ற மனைவியும், கோபி என்ற மகனும் சாந்தி என்ற மகளும் உள்ளனர். இன்று அதிகாலை 6 மணிக்கு நடந்த இந்த துயரச் சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    துரைசாமியின் உடலை பார்த்து அவரது மனைவி, மகன், மகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி பார்ப்பவர்களை கண் கலங்க வைத்தன. இந்த விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

    பலியான துரைசாமி உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    தாரமங்கலம் அருேக வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம்  தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் பைப்பூர் பகுதியை சேர்ந்தவர் மணி ( வயது 57). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 20- ந்தேதி காலை சாலையோரம் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றதால் படுகாயம் அடைந்தார்.  

    மணியை மீட்டு உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மணி நேற்று  பரிதாபமாக இறந்தார். இது குறித்த  புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    குமாரபாளையத்தில் மோட்டார்சைக்கிள் மோதி பெண் படுகாயம் அடைந்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நாராயண நகரில் வசிப்பவர் நாகம்மா(வயது 55),கூலி தொழிலாளி. இவர் கே.ஓ.என் தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையை  கடந்தார். 

    அப்போது வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் நாகம்மா பலத்த காயமடைந்தார். இதைய–டுத்து அவர் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், மோட்டார்சைக்கிளில் வந்த வட்டமலை பகுதியை சேர்ந்த ராஜா  என்பவரை கைது செய்தனர். 
    குமாரபாளையம் அருகே கார் மோதி தந்தை- மகன் படுகாயமடைந்ததில் ஆத்தூரை சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஓட்டமெத்தை பகுதியை  சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). கட்டிட கூலித் தொழிலாளி. 

    இவர் நேற்று மாலை  மோட்டார்சைக்கிளில் தனது தந்தை லோகவசீகரன், (57), என்பவரை பின்னால்  உட்கார வைத்துக்கொண்டு சேலம்-கோவை புறவழிச்சாலையில் கோட்டைமேடு பிரிவு அருகே கே.பி.டி பெட்ரோல் பங்க் முன்பு வந்து கொண்டிருந்தார். 

    அப்போது இவருக்கு பின்னால் வேகமாக வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் செந்தில்குமார், லோகவசீகரன் ஆகிய, இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இது பற்றி தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று இருவரையும் மீட்டு  குமாரபாளையம்  அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    விசாரணையில் காரை ஓட்டி வந்தது சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கூலித் தொழிலாளி பூபாலன்  (24), என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபாலனை  கைது செய்தனர்.
    சேலம் குரங்கு சாவடியில் சைக்கிளில் சென்றவர் கிரேன் மோதி பலியானார்.
    சேலம்:

    சேலம் சாமிநாதபுரம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 62).  இவர் இன்று காலை சேலம் குரங்குசாவடி தனியார் ஓட்டல் முன்பு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

    அப்போது அந்த வழியாக வந்த கிரேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார் .

    தகவலறிந்த சூரமங்கலம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். 
    குமாரபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அம்மன் நகரில் வசிப்பவர் கீர்த்திராஜா,(வயது 27). தனியார் நிறுவன பணியாளர். இவர் நேற்றுமுன்தினம் மதியம் குப்பாண்டபாளையம் பஸ் நிறுத்தம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, அப்போது சாலையில் வந்த  கார் இவர் மீது மோதியதில் கீர்த்தி ராஜா பலத்த காயமடைந்தார். 

    அக்கம்பக்கத்தினர்  அவரை மீட்டு குமாரபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதை குறித்து  குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்தில் கரை ஒட்டி வந்தவர் வையப்பமலையை சேர்ந்த காளிதாஸ் (46), என்பது தெரியவந்து.

    தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
    சேலம் பட்டர்பிளை மேம்பாலம் அருகே சென்டர் மீடியனில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.
    சேலம்:
     ஈரோடு மாவட்டம் பெருந்துறையில்  இருந்து நேற்றிரவு ஒரு லாரி இரும்பு
    லோடு ஏற்றி கொண்டு  விழுப்புரம்  மாவட்டம் உளுந்தூர் பேட்டைக்கு புறப்பட்டது. 

     இந்த லாரி  நள்ளிரவில் சேலம் பட்டர்பிளை மேம்பால பகுதியில் வந்து கொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் வி.புதூரை  சேர்ந்த  நாகராஜ் என்பவர்   ஒட்டி வந்தார். அப்போ து  திடீரென லாரி டிரைவரின்  கட்டுப்பாட்டை இழந்து  தாறு மாறாக ஓடியது. 

    பின்னர் சாலையில் நடுவில் உள்ள  சென்டர்  மீடியனில் மோதிய படி   நின்றது.   தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார்   சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர்  லாரியை மீட்டனர்.  
    ×