என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old"

    • தொல்லியல் துறை கல்வெட்டுகள் குறித்தும் தர்காவின் பழமை குறித்தும் ஆய்வு.
    • நாகூர் தர்கா ஒரு வரலாற்று பொக்கிஷம், பல்வகை கலாச்சரத்துக்கு மூல காரணம்.

    நாகப்பட்டினம்:

    நாகை சட்டமன்ற உறுப்பினர்ஷா நவாஸ் தலை மையில் தொல்லியல் துறை சம்பந்தமாக டாக்டர் க.சுபாஷிணிதலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஜெர்மனி, டாக்டர். பாப்பா, டாக்டர். இறைவாணி, ஆய்வாளர் ப்ரீத்தி, மணி வண்ணன்வரலாற்றுப் பயணம் பிரிவு, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் அருங்காட்சியக பிரிவு, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பினர் ஆகியோர் நாகூர் தர்கா வருகை புரிந்து நாகூர் தர்காவின் தொல்லியல் துறை கல்வெட்டுகள் குறித்தும் தர்காவின் பழமையினை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

    நாகூர் தர்கா ஒரு வரலாற்று பொக்கிஷம், பல்வகை கலாச்சரத்துக்கு மூல காரணம். இதற்க்கு அத்தாட்சி நாகூர் தர்காவில் உள்ள கல்வெட்டுகள் என பாராட்டினர்.

    நாகூர் தர்கா பிரசிடன்ட் கலீபா சாஹிப் நாகூர் தர்கா சிறப்பினை பற்றி விளக்கினார். உடன் போர்டு ஆப் டிரஸ்டிகள், முக்கிய பிரமுகர்கள் இருந்தனர்.

    நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷா நவாஸ் நாகூர் தர்கா கந்தூரிக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடதக்கது.

    • சேலம் அருகே வேம்படிதாளம் பகுதியில் சேலையில் தீப்பிடித்து கருகிய மூதாட்டி சிகிச்சை பலியானார்.
    • சேலம் அரசு மருத்துவமனையில் சுலோச்சனா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 65). இவர் கடந்த 1-ந் தேதி காலை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்தது.

    இதனால் உடலில் தீக்காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சுலோச்சனா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பழைய மார்க்கெட் கட்டிடம் சேர்மன் உத்தரவுப்படி இடிக்கப்பட்டது.
    குமாரபாளையம்:

     குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடியே 28 லட்சம் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது. 

    கட்டு–மான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில்  அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நடைபெற பூமி பூஜையும் போடப்பட்டது. 

    பணிகள் துரிதமாக நடைபெற பழைய மார்க்கெட் கட்டிடம் சேர்மன் விஜய்கண்ணன் உத்திரவுப்படி இடிக்கப்பட்டது.
    ×