என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "celebrate"

    • 2022-ம் ஆண்டு நாளை மறுநாள் முடிவடைகிறது. இதனால் 2023-ம் ஆண்டை வரவேற்க அனைத்து தரப்பினரும் தயாராகி வருகிறார்கள்.
    • அதன் தொடர்ச்சியாக நாமக்கல் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை அமைதியாக கொண்டாடும் வகையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு–கிறார்கள்.

    நாமக்கல்:

    2022-ம் ஆண்டு நாளை மறுநாள் முடிவடைகிறது. இதனால் 2023-ம் ஆண்டை வரவேற்க அனைத்து தரப்பினரும் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் புத்தாண்டை அசம்பாவிதங்கள் இல்லாமல் கொண்டாட தமிழக அரசும், போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    அதன் தொடர்ச்சியாக நாமக்கல் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை அமைதியாக கொண்டாடும் வகையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு–கிறார்கள். 20 இடங்களில் வாகன சோதனை செய்ய போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது.

    31-ந் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட தடை செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக வாகன ஓட்டுபவர்கள் கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்க, வழக்கு பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் குறித்து 100-க்கும், போலீஸ் செயலிக்கும் தகவல் தெரிவிக்கலாம். வழிபாட்டு தளங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவ–தாக நாமக்கல் நகர போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • கேக்குகளை தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் வெட்டி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
    • கேக் வெட்டி பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள்.

    பெரம்பலூர்

    புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேக்கரிகளில் சாக்லெட் கேக், வெண்ணிலா கேக், ஐஸ்கிரீம் கேக், பிளாக் பாரஸ்ட் கேக் உள்ளிட்ட பல்வேறு வகையான கேக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். அவ்வாறு வாங்கப்பட்ட கேக்குகளை தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் வெட்டி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.


    கருணாநிதி பிறந்த நாள் விழாவை மாதம் முழுவதும் கொண்டாட வேண்டும் என இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    திருமங்கலம்

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை மாதம் முழுவதும் கொண்டாட திருமங்கலத்தில் நடைபெற்ற தி.மு.க. தெற்கு மாவட்ட இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்தநாள் விழா நாளை (3-ந் தேதி) தமிழகம் முழுவதும் தி.மு.க.சார்பில்  நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து திருமங்கலத்தில் உள்ள மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மதன்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு அவைத்தலைவர் நாகராஜன்,திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், அணி அமைப்பாளர் சுரேஷ், விமல், வினோத், ஓடைப்பட்டி சிவா, நகர்மன்றத் தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான் மற்றும் நகர நிர்வாகி செல்வம், பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன், கொரடா ஆறுமுகம்,  உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில்  மாவட்ட இளைஞரணி செயலாளர் மதன்குமார் பேசும் போது, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை மாதம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும். பிறந்தநாள் விழாவையொட்டி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.  

    இளைஞரணி பொறுப்பாளர்களுக்கு 8 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் வழங்கியதற்கும், இருமண்டல குழுதலைவர் பதவி வழங்கியதற்கும் தலைமைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    கூட்டத்தில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி நகர, ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    ×