என் மலர்
நீங்கள் தேடியது "upsc"
- ஓபிசி சான்றிதழ் முறைகேடு, உடல் ஊனம் குறைபாடு உள்ளவர் சான்றிதழ் என புகார் கூறப்பட்டது.
- விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பிய நிலையில் சரியாக விளக்கம் அளிக்காததால் ரத்து நடவடிக்கை.
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சேர்ந்தவர் பூஜா கேத்கர். இவர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக புகார் எழுந்தது. அத்துடன் போலி சான்றிதழ் வழங்கி ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றது தெரியவந்தது.
இது தொடர்பாக மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission- UPSC) விசாரணை நடத்தி வந்தது. இதற்கிடையே மகாராஷ்டிரா அரசு பயிற்சி பெறுவதற்கான அளித்த அனுமதியை ரத்து செய்தது.
இந்த நிலையில் பூஜா கேத்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை யுபிஎஸ்சி ரத்து செய்துள்ளது. மேலும் யுபிஎஸ்சி நடத்தும் எந்த தேர்விலும் பங்கேற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு விதிமுறை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
போலி அடையாள சான்றிதழ் கொடுக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி யுபிஎஸ்சி பூஜா கேத்கருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஜூலை 25-ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால, பூஜா ஆகஸ்ட் 4-ந்தேதி வரை அவகாசம் கேட்டிருந்தார் யுபிஎஸ்சி ஜூலை 30-ந்தேதி வரை காலஅவகாசம் கொடுத்தது. இதற்கு மேல் காலஅவகாசம் கொடுக்கப்படமாட்டாது என்பதை தெளிவாக தெரிவித்திருந்தது.
நோட்டீஸ்க்கு பதில் அளிக்காததால் யுபிஎஸ்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பூஜா கேத்கர், தன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறிவிட்டார். விசாரணை மேற்கொண்டதில் தேர்வுக்கான விதிமுறையை மீறியது தெளிவாக தெரியவந்தது என யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. பூஜா தனது பெயரை மாற்றியது மட்டுமல்ல பெற்றோரின் பெயரையும் மாற்றியது தெரியவந்துள்ளது.
பூஜா பயிற்சி காலத்தில் கார், ஸ்டாஃப், அலுவலகம் போன்ற சலுகைகள் கேட்பதாக புனே கலெக்டர் சுஹாஸ் திவாஸ் மகாராஷ்டிர மாநில தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதினார். இரண்டு வருட பயிற்சி காலத்தில் இதுபோன்று சலுகைகள் கேட்க அவருக்கு உரிமை இல்லை எனக் குறிப்பிட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து பூஜா வாஷிம்-க்கு மாற்றம் செய்யப்பட்டடார். இதில் இருந்துதான் பூஜா ஐஏஎஸ் தேர்வுக்காக செய்த மோசடிகள் வெளியில் தெரிய ஆரம்பித்தது.
- பிரதமர் மோடி அரசியல் சாசனம் மீது கடுமையான தாக்குதல் நடத்தி இருக்கிறார்.
- இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தலித், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு வெளிப்படையாக பறிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணை செயலாளர், துணை செயலாளர் மற்றும் இயக்குனர் பதவிகளில் 45 அதிகாரிகளை நேரடியாக நியமிப்பதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுபோன்ற நியமனம் மூலமாக "இடஒதுக்கீடு வெளிப்படையாக பறிக்கப்பட்டு உள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பாஜக அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார். அவர் காங்கிரன் போலித்தனம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அஷ்வின் வைஷ்ணவ் வெளியிட்டள்ள எக்ஸ் தள பதவியில் கூறியிருப்பதாவது:-
அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் விவகாரம் காங்கிரஸ் கட்சியின் போலித்தனத்திற்கு சாட்சி. அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முறையை கொண்டு வந்ததே UPA அரசுதான். இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் 2005-ல் UPA அரசால் உருவாக்கப்பட்டது. அதற்கு வீரப்ப மொய்லி தலைவராக இருந்தார். நிபுணர்கள் தொடர்பான பணிக்கு, சிறப்பு திறமைகள் உள்ளவர்களை கொண்டு நிரப்ப பரிந்துரைக்கப்பட்டது. யுபிஎஸ்சி மூலம் வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் ஆட்சேர்ப்பு நடைபெறும். இந்த சீர்திருத்தம் ஆட்சியை மேம்படுத்தும்.
இவ்வாறு அஷ்வின் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக,
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணை செயலாளர்கள், 35 இயக்குனர்கள் மற்றும் துணை செயலாளர்கள் என 45 அதிகாரிகள் லேட்ரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
பொதுவாக இத்தகைய பதவிகள் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ.எப்.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் மற்றும் குரூப் "ஏ" போன்ற அனைத்து இந்திய பணி அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. தற்போது இந்த பணிகளுக்கு நேரடியாக ஆட்களை நியமிப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதன் மூலம் மேற்படி நியமனத்தில் இடஒதுக்கீடு முறை ஒழிக்கப்படுவதாக குற்றம்சாட்டி இருந்தன.
அந்தவகையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் "யுபிஎஸ்சி-க்கு பதிலாக ஆர்எஸ்எஸ் மூலம் பொது ஊழியர்களை தேர்வு செய்வதன் மூலம் பிரதமர் மோடி அரசியல் சாசனம் மீது கடுமையான தாக்குதல் நடத்தி இருக்கிறார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் முக்கியமான பதவிகளை நேரடியாக நிரப்புவதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தலித், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு வெளிப்படையாக பறிக்கப்பட்டு உள்ளது.
உயர்மட்ட அதிகாரிகள் உள்பட நாட்டின் முக்கிய பதவிகளில் பின்தங்கிய பிரிவினரின் பிரதிநிதித்துவம் இல்லை என நான் எப்போதும் கூறிவருகிறேன். இதை சரிப்படுத்துவதற்கு பதிலாக நேரடி நியமனத்தால் மேலும் மோசமாக்குகின்றனர்.
இது யுபிஎஸ்சி தேர்வுக்காக தயாராகி வரும் திறமையான இளைஞர்களின் உரிமையை திருடுவது மட்டுமின்றி பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி கருத்து மீதான தாக்குதலும் ஆகும்.
ஒரு சில கார்பரேட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் முக்கியமான அரசுப் பதவிகளில் அமர்ந்து என்ன செய்வார்கள்? என்பதற்கு 'செபி' ஒரு தெளிவான உதாரணம் ஆகும்.
அங்கு முதல்முறையாக தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர் தலைவராகி பெரும் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.
நிர்வாக அமைப்பு மற்றும் சமூக நீதியை பாதிக்கும் பிரதமர் மோடியின் இந்த தேச விரோத நடவடிக்கையை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்க்கும்.
ஐ ஏ எஸ் பதவிகளை தனியார்மயமாக்குவது இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர மோடியின் உத்தரவாதம் ஆகும்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
- நேரடி பணிநியமன முறையில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- நேரடி பணிநியமன முறைக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற யு.பி.எஸ்.சி.யில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தன.
ஆனால், கடந்த 2018-ம் ஆண்டு முதல் நேரடி பணிநியமனம் என அரசுப்பணியில் அல்லாத துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு மத்திய அமைச்சகத்தின் முக்கிய பதவிகளில் நியமனம் செய்யும் முறையை பா.ஜ.க. அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே, நேரடி பணிநியமன முறையில் மத்திய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள்/துணைச் செயலாளர்கள் பதவிகளை நிரப்புவதற்கான விளம்பரத்தை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி யு.பி.எஸ்.சி., தலைவருக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் எழுதியுள்ள கடிதத்தில்,மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறையை ரத்துசெய்ய வேண்டும். நேரடி நியமனத்தால் சமூகநீதி பாதிக்கப்படக் கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியுடன் இருக்கிறார். வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்ட இடஒதுக்கீடு அவசியம் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என தெரிவித்தார்.
- நேரடி பணிநியமன முறையில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- கடும் எதிர்ப்புக்கு பிறகு நேரடி பணிநியமன முறையை மத்திய அரசு திரும்ப பெற்றது.
மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற யு.பி.எஸ்.சி.யில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தன.
ஆனால், கடந்த 2018-ம் ஆண்டு முதல் நேரடி பணிநியமனம் என அரசுப்பணியில் அல்லாத துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு மத்திய அமைச்சகத்தின் முக்கிய பதவிகளில் நியமனம் செய்யும் முறையை பா.ஜ.க. அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே, நேரடி பணிநியமன முறையில் மத்திய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள்/துணைச் செயலாளர்கள் பதவிகளை நிரப்புவதற்கான விளம்பரத்தை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி யு.பி.எஸ்.சி., தலைவருக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் எழுதியுள்ள கடிதத்தில்,மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறையை ரத்துசெய்ய வேண்டும். நேரடி நியமனத்தால் சமூகநீதி பாதிக்கப்படக் கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியுடன் இருக்கிறார். வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீடு அவசியம் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இந்தியா கூட்டணியின் கடும் எதிர்ப்பிற்கு பிறகு உயர்பதவிகளில் நேரடி நியமன முறையை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது சமூகநீதிக்குக் கிடைத்த வெற்றி. 50% இட ஒதுக்கீடு வரம்பை உடைத்து சாதிவாரி கணக்கெடுப்பில் சமூகநீதியை நிலை நாட்டுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
- தன்னை கைது செய்யாமல் இருக்க இடைக்கால ஜாமின் வழங்கக் கோரி பூஜா மனுதாக்கல் செய்தார்.
- என்னை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை யுபிஎஸ்சிக்கு கிடையாது என வாதிட்டார்.
புதுடெல்லி:
புனேவைச் சேர்ந்த பூஜா கெத்கர், பயிற்சி பெற்று வரும்போதே ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான அனைத்து வசதிகளையும் கேட்டதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து ஐஏஎஸ் தேர்வுக்கு ஓபிசி மற்றும் உடல் ஊனம் வசதி பெற்றது என அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் கூறப்பட்டன. விசாரணை முடிவில் யுபிஎஸ்சி பூஜா கெத்கரின் ஐஏஎஸ்-ஐ ரத்து செய்தது. மேலும் தேர்வு எழுத தடைவிதித்தது.
இதற்கிடையே இந்த புகார் வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் மறுத்த மாவட்ட நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு எதிரான யுபிஎஸ்சியின் குற்றச்சாட்டுகளுக்கு டெல்லி ஐகோர்ட்டில் பூஜா கேத்கர் பதில் தாக்கல் செய்தார். அந்த பதிலில், என்னை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை யுபிஎஸ்சிக்கு கிடையாது என வாதிட்டார்.
இதுதொடர்பாக சி.எஸ்.இ. 2022 விதிகளின் விதி 19ன்படி 1954-ம் ஆண்டு அகில இந்திய சேவைகள் சட்டம் மற்றும் தகுதிகாண் விதிகளின் கீழ் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
- பூஜாவின் யுபிஎஸ்சி தேர்ச்சி ரத்து செய்யப்பட்டு வருங்காலத்தில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது.
- இதை எதிர்த்து டெல்லி உய்ரநீதிமன்றத்தில் பூஜா பதில் மனு தாக்கல் செய்திருந்தார்
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஐஏஎஸ் பறிச்சி பெண் கலெக்டராக இருந்த பூஜா கெத்கர் காரில் சைரன் பொருத்தியது, கூடுதல் கலெக்டர் அறையை பயன்படுத்தியது என தனது அதிகாரத்துக்கு மீறி செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வில் தான் மாற்றுத்திறனாளி என போலியான சான்றிதழை சமர்ப்பித்தும் சாதிவாரி ஓபிசி இட ஒதுக்கீட்டிற்காக குடும்ப வருமானத்தை குறைத்தும் காட்டி முறைகேடுகளில் ஈடுபட்டு ஐஏஎஸ் ஆகியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதைத்தொடர்ந்து அவரை வேறு இடத்துக்கு மாநில அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க மத்திய அரசு கூடுதல் செயலாளர் மனோஜ்குமார் திவேதி தலைமையில் ஒரு நபர் கமிட்டியை அமைத்தது.
இதற்கிடையே பூஜா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த புகாரில் தன்னை கைது செய்யாமல் இருக்கக்கோரி நீதிமன்றத்தில் பூஜா முன்ஜாமீன் கேட்டும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் யுபிஎஸ்சி முன் ஆஜராக மறுத்தத்ததாலும் அவர் மீது 30 புகார்கள் வரை இருப்பதாலும் பூஜாவின் யுபிஎஸ்சி தேர்ச்சி ரத்து செய்யப்பட்டு வருங்காலத்தில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து டெல்லி உய்ரநீதிமன்றத்தில் பூஜா பதில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் யுபிஎஸ்சியால் உத்ராவிடப்பட்ட தகுதிநீக்கம் ஒரு மாதம் கழித்து தற்போது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன்படி பூஜா கெத்கரை ஐஏஎஸ் சேவையில் இருந்து நீக்கம் செய்து விடுவிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- மைசூருவில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் பயிற்சியை முடித்தார்
- 'பல வருட கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும் போது இப்படி நடந்திருக்கக் கூடாது'
யுபிஎஸ்சி தேர்வில் வென்று பயிற்சியை முடித்து முதல் முதலாக பொறுப்பேற்க வந்துகொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 26 வயது இளைஞர் ஹர்ஷ் பர்தன், கர்நாடகாவில் கேடராக 2023 பேட்ச் ஐபிஎஸ் பேட்சில் பயிற்சி பெற்றவர் ஆவார். மைசூருவில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் அவர் நான்கு வார பயிற்சியை சமீபத்தில் முடித்தார்.'
பயிற்சிக்காலம் முடித்த நிலையில் ஹோலேநரசிபூரில் புரபேஷனரி உதவிக் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்க ஹாசன் மாவட்டத்துக்கு நேற்று [ஞாயிற்றுக்கிழமை] ஹர்ஷ் பர்தன் போலீஸ் வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.
ஹாசன்-மைசூரு நெடுஞ்சாலையின் கிட்டானே எல்லைக்கு அருகே அவர் பயணித்த போலீஸ் வாகனத்தில் டயர் திடீரென வெடித்ததில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் சாலையோரம் இருந்த வீடு மற்றும் மரத்தின் மீது மோதியுள்ளது.

இதில் டிரைவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில் ஹர்ஸ் பர்தனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் இளம் அதிகாரி ஹர்ஸ் பர்தன் மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார். 'ஐபிஎஸ் அதிகாரி ஹர்ஷ் பர்தன் இறந்த செய்தி கேட்டு வருந்துகிறேன். ஐபிஎஸ் பொறுப்பேற்கச் செல்லும் போது இதுபோன்ற விபத்து நடந்தது மிகவும் வருத்தமளிக்கிறது.
பல வருட கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும் போது இப்படி நடந்திருக்கக் கூடாது. ஹர்ஷ் பர்தனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தனது X பக்கத்தில் சித்தராமையா பதிவிட்டுள்ளார்.
- அரசியலில் இணைவதன் மூலம் கல்வியை மேம்படுத்துவதே எனது நோக்கம்
- வரலாறு, அரசியல் மற்றும் நடப்பு விவகாரங்கள் உள்ளிட்ட பாடங்களை கற்பிக்கிறார்.
டெல்லியில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை பிடித்து 10 ஆண்டுகள் அவரை ஆளும் கட்சியாக உள்ளது ஆம் ஆத்மி. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலும் வெற்றிக்கான பணிகளை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பிரபல யுபிஎஸ்சி ஆசிரியர் அவத் ஓஜா டெல்லியில் கட்சோ ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைத்துள்ளார். அரசியலில் சேர்ந்து கல்விக்காக பணியாற்ற தனக்கு வாய்ப்பளித்ததற்காக கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியாவுக்கு ஓஜா நன்றி தெரிவித்தார்.
கல்வி என்பது குடும்பம், சமூகம் மற்றும் தேசத்தின் ஆன்மாவாக இருக்கும் ஒரு ஊடகம். இன்று, எனது அரசியல் இன்னிங்ஸின் தொடக்கத்தில், நான் அரசியலுக்கும் கல்விக்கும் இடையில் எதை தேர்வு செய்யவீர்கள் என்று கேட்டால், அரசியலில் இணைவதன் மூலம் கல்வியை மேம்படுத்துவதே எனது நோக்கம் என கூறுவேன் என்று தெரிவித்தார்.
யார் இந்த அவத் ஓஜா ?
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அவத் ஓஜா [வயது 40] சிறுவயதிலிருந்தே ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் ஆசைப்பட்டார். அதற்காக அவரது தந்தை சொந்த நிலத்தை விற்று மகனை டெல்லியில் படிக்கச் வைத்தார். யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி ஓஜா வெற்றி பெற்றார்.
ஆனால் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. வேறு வேலைக்கு போக பிடிக்காமல் யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி கொடுக்கும் ஆசிரியரானார். டெல்லி முகர்ஜி நகரில் சொந்தமாக பயிற்சி மையத்தை தொடங்கினார். பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் சென்று பயிற்சி அளித்து வருகிறார். 2019 இல் புனேவில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை தொடங்கினார்.
வரலாறு, அரசியல் மற்றும் நடப்பு விவகாரங்கள் உள்ளிட்ட பாடங்களில் ஓஜாவின் பயிற்சி வீடியோக்கள், புத்தகங்கள் பிரசித்தி பெற்றவை ஆகும். யுபிஎஸ்சி மாணவர்கள் மத்தியில் பிரபாலாக அறியப்பட்ட ஓஜா தற்போது திடீரென அரசியலில் குதித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சிவில் சர்வீஸ் முதல்நிலைத்தேர்வு வரும் மே 25ம் தேதி நடைபெறுகிறது.
- 979 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வுக்கான தேதிகளை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. சிவில் சர்வீஸ் முதல்நிலைத்தேர்வு வரும் மே 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு இன்று முதல் வரும் பிப்ரவரி 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. .
ஐ ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற பல பணிகளுக்கான 979 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை 1056 பணியிடங்களை நிரப்ப சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தற்போது நடத்தப்படவுள்ள தேர்வில் அதிலிருந்து 77 பணியிடங்கள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவில் சர்வீஸ் முதல்நிலைத்தேர்வு நடைபெறும் அதே நாளில் இந்திய வன சேவைக்கான (Indian Forest Service) தேர்வும் நடைபெறும் என்று யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. 150 பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த வழக்கில் 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு 4 பேருக்கு 10 ஆண்டுகளை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த மோசடி வெளியான உடனேயே, ரின்கூ தாக்கப்பட்டு ஏழு முறை சுடப்பட்டார். இதில் துப்பாக்கி குண்டு முகத்தில் பாய்ந்தது. இந்த தாக்குதலில் அவரது முகம் சிதைந்து ரின்கூ சிங் தனது பார்வை மற்றும் செவிப்புலனை இழந்தார்.
இதற்கிடையே, ரன்கூ சிங் அரசு நடத்தும் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் இயக்குனராக அவர் பல ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் ஆர்வலர்களுக்கு கற்பித்தும் வருகிறார்.
இந்நிலையில், சக மாணவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க ரன்கூ 2021-ம் ஆண்டு நடத்தப்பட்ட யுபிஎஸ்சி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதுகுறித்து ரின்கூ சிங் ரஹீ கூறியதாவது:-
எனது மாணவர்கள் தன்னிடம் யுபிஎஸ்சி தேர்வை எழுதச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அவர்களின் தூண்டுதலால்தான் நான் தேர்வு எழுதினேன்.
இதற்கு முன் 2004ம் ஆண்டில் நான் மாகாண சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றேன்.
என்னைப் பொறுத்தவரை பொது நலன் முக்கியம். சுயநலத்திற்கும் பொது நலனுக்கும் இடையே எப்போதாவது மோதல் ஏற்பட்டால் நான் பொது நலனைத்தான் தேர்ந்தெடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. திருப்பதியில் கடந்த 4 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியது