search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "powerloom workers"

    • விசைத்தறி ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18 நாட்க ளாக வேலைநிறுத்த போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் சக்கம்பட்டி பகுதியில் ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18 நாட்க ளாக வேலைநிறுத்த போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை திண்டுக்கல் தொழி லாளர் நல அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் காட்டன் மற்றும் பாலிஸ்டர் சேலை விசைத்தறி கூடங்க ளில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு 14 சதவீதமும், வீட்டில் விசை த்தறியில் உற்பத்தி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கு 10 சதவீதமும் சம்பள உயர்வு கொடுப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

    இருதரப்பு இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனைதொடர்ந்து தொழிற்சங்கத்தினர் மற்றும் நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். எனவே இன்றுமுதல் வழக்கம்போல் விசைத்தறி கூடங்கள் இயங்கும் என எதிர்பார்க்க ப்படுகிறது.

    • தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.
    • விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மார்ச் மாதம் மின் கட்டணம் குறைக்கப்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து விசைத்தறி கூடங்கள் மின் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் விசைத்தறியாளர்கள் மின் கட்டணத்தை குறைக்க கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மார்ச் மாதம் மின் கட்டணம் குறைக்கப்பட்டது. ஆனால் விசைத்தறியாளர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். மின் கட்டணம் கட்டாமல் உள்ள நிலுவை தொகைக்கு அபராதம் விதிக்கக் கூடாது. நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை தவணை முறையில் கட்ட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் சென்னையில் நிதி மற்றும் மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், பூபதி, தெக்கலூர் பொன்னுச்சாமி, கதிர்வேல் மற்றும் மருத்துவர் கோகுல், அவிநாசி பழனிச்சாமி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளனர்.

    • மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
    • தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப் படுகிறது.

    பல்லடம்:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப் படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. இதில் விசைத்தறிகளுக்கும் மின் கட்டண உயர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்த நிலையில் விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மார்ச் மாதம் மின் கட்டணம் குறைக்கப்பட்டது.

    ஆனால் விசைத்தறியாளர்கள் குறைக்கப்பட்ட விசைத்தறி மின் கட்டணத்தை 1.9.2022. முதல் 31.3.2023 வரையிலான விடுபட்ட காலத்திற்கும் அமல்படுத்த வேண்டும்,மின் கட்டணம் கட்டாமல் உள்ள நிலுவை தொகைக்கு அபராதம் விதிக்கக் கூடாது. நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை தவணை முறையில் சட்ட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சென்னையில் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோரை தமிழ்நாடு விசைத்தறியாளர் சங்க கூட்டமைப்பு செயலாளர் வேலுசாமி, பல்லடம் பாலாஜி, முத்துகுமார், மங்கலம் கோபால், கண்ணம்பாளையம் தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் பல்லடம் வேலுச்சாமி, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது:-கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளோம். குறைக்கப்பட்ட மின் கட்டணம் 1.9.2022 முதல் அமல்படுத்தப்படும் என்றும், இது தொடர்பாக கணினியில் ஒரு சில தினங்களில் மாற்றம் செய்யப்படும் என்றும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் என்றார்.

    • தீபாவளி போனஸ் 13.50 சதவீதம் வழங்குவது என ஏற்றுக் கொண்டு கையொப்பம் போடப்பட்டது.
    • விசைத்தறி தொழிலாளா் சங்க மாவட்ட துணைச்செயலாளா் பழனிசாமி, ஏஐடியூசி., செல்வராஜ், ரவி, ஏடிபி., நடராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    அவிநாசி:

    அவிநாசி பகுதி விசைத்தறி தொழிலாளா்களுக்கு இந்த ஆண்டு 13.50 சதவீதம் போனஸ் வழங்குவது என இருதரப்பு பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    அவிநாசி ஒன்றிய பகுதியில் விசைத்தறி கூலித் துணி உற்பத்தியாளா் சங்க பிரதிநிதிகள், விசைத்தறி தொழிற்சங்க நிா்வாகிகள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.இதில் தீபாவளி போனஸ் 13.50 சதவீதம் வழங்குவது என ஏற்றுக் கொண்டு கையொப்பம் போடப்பட்டது.

    இதில் உற்பத்தியாளா்கள் சாா்பில் முத்துசாமி, செந்தில், சம்பத்குமாா், தொழிற்சங்கங்கள் சாா்பில் சிஐடியூ., விசைத்தறி தொழிலாளா் சம்மேளன மாநிலத் தலைவா் முத்துசாமி, சிஐடியூ., விசைத்தறி தொழிலாளா் சங்க மாவட்ட துணைச்செயலாளா் பழனிசாமி, ஏஐடியூசி., செல்வராஜ், ரவி, ஏடிபி., நடராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • கடந்த 3 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட தீபாவளி போனஸ் ஒப்பந்தம் முடிந்து விட்டதால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான புதிய தீபாவளி போனஸ் ஒப்பந்தம் போட வேண்டும்.
    • 3-ம் கட்ட பேச்சு வார்த்தை இரவு 10.30 மணி வரை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இந்த தொழிலில் ஆண்கள், பெண்கள் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட தீபாவளி போனஸ் ஒப்பந்தம் முடிந்து விட்டதால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான புதிய தீபாவளி போனஸ் ஒப்பந்தம் போட வேண்டும். பள்ளிப்பாளையம் விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே கடந்த 4-ந் தேதி முதற்கட்ட போனஸ் பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் உடன்பாடு ஏற்படாததால் 2-ம் கட்ட பேச்சு வார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. தீபாவளிக்கு இன்னும் 2 நாள் மட்டுமே உள்ளதால் போனஸ் பேச்சு வார்த்தை விரைவில் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று 3-ம் கட்ட பேச்சு வார்த்தை இரவு 10.30 மணி வரை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து பள்ளிபாளையம் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி கூறியதாவது:-

    6 மாதங்களுக்கு முன்பு புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டதால் கடந்தாண்டு வாங்கிய போனசை விட இந்தாண்டு தொழிலாளர்களுக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாய் போன்ஸ் கிடைக்கும். மேலும் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் தேக்கம் அடைந்து தொழில் தொய்வு நிலையில் உள்ளதால் போனஸ் சதவீதம் உயர்த்தினால் மேலும் உரிமையாளர்களுக்கு நெருக்கடி ஏற்படும். கடந்தாண்டு வழங்கியது போல 9.50 சதவீதம் போனஸ் இந்தாண்டும் வழங்கப்படும் என தெரிவித்தோம். ஆனால் தொழிற்சங்கத்தினர் இதனை ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    வேலைநிறுத்தம் காரணமாக திருப்பூர், கோவை, மாவட்டங்களில் 2 1/2 லட்சம் விசைத்தறிகள் இயங்கவில்லை.

    பல்லடம்:

    தமிழகத்தில் சுமார் 6 லட்சம் விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விசைத்தறி தொழிலில் நேரிடையாக சுமார் 10 லட்சம் பேரும், மறைமுகமாக சுமார் 50 லட்சம் பேரும் ஈடுபட்டுள்ளனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக இந்த விசைத்தறி ஜவுளி தொழில் உள்ளது.

    இந்த நிலையில்,உற்பத்தியான துணிக்கு உரிய விலை கிடைக்காதது, தொழிலாளர் பிரச்சனை, வங்கி கடன், உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் விசைத்தறி தொழில் ஏறகனவே நலிவடைந்து உள்ளது. இந்த சூழ்நிலையில் விசைத்தறி ஜவுளி தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக இருந்து வரும் நூலின் விலை கடந்த 18 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஜவுளித் தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்தும், விலையை கட்டுப்படுத்தக்கோரியும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த மே.22 முதல் 15 நாட்கள் தொடர் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக திருப்பூர், கோவை, மாவட்டங்களில் 2 1/2 லட்சம் விசைத்தறிகள் இயங்கவில்லை.

    இதனால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். வேலைநிறுத்தம் காரணமாக தினமும் ரூ 100 கோடி மதிப்பிலான காடா ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டு, ரூ.1,000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் விசைத்தறியாளர்கள், தொழிலாளர்களின் நலன் கருதி உற்பத்தி நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக திருப்பூர்,கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

    இது குறித்து பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது; நூல் விலை உயர்வால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை தவிர்க்கவும் குடோனில் துணி தேக்கத்தை கட்டுப்படுத்தவும் ஏதுவாக கடந்த மே 22ம் தேதி முதல் தொடர்ந்து 15 நாட்கள் துணி உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதன்படி திருப்பூர்,கோவை மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் விசைத்தறியாளர்கள், தொழிலாளர்கள் என பலதரப்பினரும் பாதிப்படைந்து இருந்தனர். இந்த நிலையில் தங்களது வாழ்வாதாரம் பாதிப்படைந்து இருப்பதால் ஒரு சிப்ட் நேர துணி உற்பத்தியாவது மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை திருப்பூர்,கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து ஆலோசித்தோம்.

    விசைத்தறியாளர்கள், தொழிலாளர்களின் நலன் கருதி அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று துணி உற்பத்தி நிறுத்த போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெற்று நாளை ( இன்று) ஜூன் 1ம் தேதி முதல் துணி உற்பத்தியை மேற்கொள்வது என்று முடிவு செய்துள்ளோம்.

    மேலும் காட்டன் நூல் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருவதால் வங்காளதேசம், சீனா போன்ற நாடுகளுடன் தொழில் போட்டியை சந்திக்கும் வகையில் ரேயான், நைலான் போன்ற செயற்கை நூல்களை கொள்முதல் செய்து துணி உற்பத்தி செய்வது என்றும் டிசம்பர் 30ம் தேதி வரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து ரக நூல்களுக்கும் மத்திய அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×