என் மலர்
நீங்கள் தேடியது "suddenly"
- கோவை செல்லும் சாலையில் ஓட்டல் வைத்துள்ளார்.
- பெஞ்சில் உட்கார்ந்திருந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (42). இவர் அதே பகுதியில் கோவை செல்லும் சாலையில் ஓட்டல் வைத்துள்ளார். இவரது மனைவி இமாக்குலேட் கீதா (49). இவர் திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்களாகிறது. குழந்தைகள் இல்லை. ஆனந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனது மனைவி பணிபுரிந்து வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், இமாக்குலேட் கீதா திருச்சியில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்றிருந்தார். ஆனந்த் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.
நேற்று காலை சுமார் 8 மணியளவில் வீட்டில், பெஞ்சில் உட்கார்ந்திருந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அவினாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உத்திரபிரதேசத்தை சேர்ந்தர் ஜமுனா பிரசாத்.
- இரவு லாரியிலேயே ஓய்வு எடுத்து தூங்கி கொண்டிருந்தார்
புதுச்சேரி:
உத்திரபிரதேசத்தை சேர்ந்தர் ஜமுனா பிரசாத். டேங்கர் லாரி டிரைவர். இவர் மும்பையில் இருந்து டேங்கர் லாரியில் மெத்தனால் ஏற்றிக்கொண்டு கடந்த 3-ந் தேதி கோர்க்காட்டில் உள்ள தனியார் கம்பெனிக்கு வந்தார். அன்று இரவு லாரியிலேயே ஓய்வு எடுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அங்கிருந்த தனியார் கம்பெனி ஊழியர்கள் கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் ஜமுனா பிரசாத் மயங்கி விழுந்து இறந்து போனார்.
இதுகுறித்து புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
- அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி, ஒத்தக்கடை, கந்தம்பாளையம், நல்லூர், மணியனூர் ,பெருங்குறிச்சி, குப்பிக்காபாளையம், சுள்ளிப் பாளையம், சோளசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லிகோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், பெரியசோளிபாளையம், கபிலக்குறிச்சி, இருக்கூர், வடகரை யாத்தூர், கு.அய்யம்பா ளையம், பிலிக்கல்பாளையம், சேளூர், கொந்தளம், கோப்ப ணம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர் .அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள் ,பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டது. கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருத்தது. மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் காரணமாக வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.