என் மலர்
நீங்கள் தேடியது "Adithanar College"
- கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
- மாணவர்கள் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தேர்வுக்கு தயாராகும் முறைகள் குறித்து சபரிகணேஷ் எடுத்துரைத்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்தர மதிப்பீட்டு மையம், வேலைவாய்ப்பு மையம் சார்பில், 'தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு மைய பொறுப்பாளர் சேகர் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மனிதவளத்துறை பொது மேலாளர் ரமேஷ், உதவி மேலாளர் சபரி கணேஷ், இளங்கோ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
வங்கி பொது மேலாளர் ரமேஷ் பேசுகையில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் உள்ள பணியிடங்கள், ஊழியர்களுக்கான தேர்வு முறைகள், சம்பளம், சலுகைகள் குறித்து விளக்கி கூறினார். மனித வளத்துறை உதவி மேலாளர் சபரிகணேஷ் பேசுகையில், மாணவர்கள் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தேர்வுக்கு தயாராகும் முறைகள் குறித்து எடுத்துரைத்தார். இதில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கல்லூரி உள்தர மதிப்பீட்டு மைய இயக்குனர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட்நைட் நன்றி கூறினார்.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி, உறுதி மொழியை வாசிக்க, அலுவலக கண்காணிப்பா ளர் பொன்துரை, கல்லூரி அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றனர்.
- திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
- சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற பேராசிரியர் தணிகாசலம் கலந்து கொண்டார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அகதர உறுதிப் பிரிவின் சார்பில், 'அனுபவ கற்றல்- தொடர்பு திறனை மேம்படுத்தும் பயனுள்ள கருவி' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் லெனின் வரவேற்று பேசினார்.
கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் தணிகாசலம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அனுபவ கற்றலின் வகைகளை எடுத்துரைத்தார். மேலும் பல்வேறு பயிற்சிகள், செயல்பாடுகள் மூலம் தொடர்பு திறனை மேம்படுத்துவது குறித்தும் விளக்கி கூறினார். பேராசிரியர்கள் பாலு, ஷோலா பெர்னாண்டோ, முத்துகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி உள்தர மதிப்பீட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ் நன்றி கூறினார்.
- கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
- சிறந்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பொருளியல் துறை சார்பில், 'இந்திய பொருளாதாரத்தில் சமகால பிரச்சினைகள்' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறை தலைவர் ரமேஷ் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். நெல்லை ராணி அண்ணா மகளிர் கல்லூரி உதவி பேராசிரியை வைஜெயந்தி, கருத்தரங்க அமைப்பு செயலாளர் மருதையா பாண்டியன் ஆகியோர் கருத்தரங்கம் குறித்து சிறப்புரையாற்றினர்.
புதுச்சேரி பல்கலைக்கழக பொருளியல் துறை இணை பேராசிரியர் சிவசங்கர் இந்திய பொருளாதாரத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும், அதனை எவ்வாறு சமாளிப்பது குறித்தும் விளக்கி கூறினார். அம்பை கலைக்கல்லூரி பேராசிரியர் முத்துசுப்பிரமணியன் இந்திய பொருளாதாரத்தில் மின்துறையில் காணப்படும் பிரச்சினைகள் பற்றியும், அதனை சரிசெய்யும் முறைகள் பற்றியும் விளக்கி பேசினார். தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளில் இருந்து பங்கேற்ற பேராசிரியர்கள், மாணவர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிறந்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பேராசிரியர் கணேசன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முத்துகுமார், மாலைசூடும் பெருமாள், சிவ இளங்கோ, சிவமுருகன், முருகேசுவரி, அசோகன், உமா ஜெயந்தி ஆகியோர் செய்து இருந்தனர்.
- மாணவர்களுக்கு கேமராவின் வகைகள், செயல்பாடு மற்றும் நுட்பங்கள் சார்ந்த பயிற்சியை பாலமுருகன் வழங்கினார்.
- திருச்செந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மாணவர்களுக்கு வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி அடைவது என்பது பற்றி விளக்கினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்தர உறுதிப்பிரிவு மற்றும் போட்டோகிராபி கிளப் சார்பில் "புகைப்பட கலையின் நுணுக்கங்கள்" என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். போட்டோகிராபி கிளப் இயக்குனர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். அகதர மதிப்பீட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி பிக்ஸ்டாக்ல்க் போட்டோகிராபி கிளப்பின் தலைவர் பாலமுருகன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கேமராவின் வகைகள், செயல்பாடு மற்றும் நுட்பங்கள் சார்ந்த பயிற்சியை வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி நூலகர் முத்துகிருஷ்ணன், பேராசிரியர்கள் லிங்கத்துரை, லோக்கிருபாகர், மணிகண்ட ராஜா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவர்கள், போட்டோகிராபி கிளப் மாணவ உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பயிற்சி பட்டறையின் முடிவில் போட்டோகிராபி கிளப் மாணவ செயலாளர் புரோசேகர் நன்றி கூறினார்.ஆதித்தனார் கல்லூரியில் முதல்வர் து.சி.மகேந்திரன் ஆலோசனையின் பெற்றது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். உள்தர உறுதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஈரோட்டை சேர்ந்த உளவியல் மருத்துவர் அசோக், மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே "இன்றைய சூழலில் கல்லூரி மாணவிகள் எதிர்கொள்ளும் பாலியல் மற்றும் உளவியல் பிரச்சினைகள்" குறித்தும், அவற்றை மேற்கொண்டு சிறப்புற வாழும் வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தார். திருச்செந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மாணவர்களுக்கு வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி அடைவது என்பது பற்றி தன் அனுபவங்கள் மூலம் விளக்கினார். முடிவில் 2-ம் ஆண்டு முதுகலை ஆங்கில மாணவி லிபியா நாராயணி நன்றி கூறினார்.
- கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
- சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அச்சுதன், ஏட்டு காளிதாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்தர உறுதிப்பிரிவின் சார்பில், 'சைபர் கிரைம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி உள்தர உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.
தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அச்சுதன், ஏட்டு காளிதாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். மின்னணு தகவல் தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சைபர் குற்றங்கள், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வது குறித்து விளக்கி கூறினர்.
பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். பேராசிரியர்கள் ரமேஷ், கணேசன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் சிவ இளங்கோ நன்றி கூறினார்.
- இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20,22-ந்தேதிகளில் நடந்தது.
- விண்ணப்பிக்காத மாணவர்கள் நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிக்கலாம்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இக்கல்லூரியில் சேர www.aditanarcollege.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20 மற்றும் 22-ந்தேதிகளில் நடந்தது. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். இதில் இடம் கிடைக்காத மாணவர்கள் அனைவரும் வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கண்டிப்பாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இளம் அறிவியல் பாடப்பிரிவுகளான கணிதம், இயற்பியில், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் சில இடங்கள் உள்ளன. இளங்கலை பாடப்பிரிவுகளான ஆங்கிலம், பொருளியல், பி.காம். போன்றவற்றிலும் சில இடங்கள் உள்ளன. எனவே இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் நாளை மறுநாளுக்குள் (வியாழக்கிழமை) விண்ணப்பித்து, வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9.45 மணிக்கு நடைபெறும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சுயநிதி பிரிவுக்கு தனி விண்ணப்பமும், அரசு உதவிபெறும் பிரிவுக்கு தனி விண்ணப்பமும் மாணவர்கள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் சுந்தரவடிவேல் விலங்கியல் துறைமன்றத்தை தொடங்கி வைத்து பேசினார்.
- விழாவில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி இளம் அறிவியல் விலங்கியல் துறை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் விலங்கியல் துறை மன்ற தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு துறைத்தலைவர் வசுமதி தலைமை தாங்கினார்.
விலங்கியல்துறை மாணவர் முத்துக்குட்டிராஜா வரவேற்று பேசினார். திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் சுந்தரவடிவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விலங்கியல் துறைமன்றத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆரோக்கியமேரி பர்னாந்து நன்றி கூறினார். இதை தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 3-ம் ஆண்டு மாணவர் ம.முத்துராஜ் வரவேற்று பேசினார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. மாணவர் சப்பாணிமுத்து ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியை மாணவர் சிவனேசன் தொகுத்து வழங்கினார்.ஏற்பாடுகளை விலங்கியல் துறை பேராசிரியர்களும், ஆய்வு உதவியாளர்களும் செய்திருந்தனர்.
- இயற்கையை பாதுகாக்க வேண்டியதின் அவசியம் குறித்து கல்லூரி முதல்வர் மகேந்திரன் விளக்கி கூறினார்.
- விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்தர உறுதிப்பிரிவின் சார்பில், உலக இயற்கை பாதுகாப்பு தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், நிலம், நீர், காற்று, ஆகாயம் மாசுபடாமல் இயற்கையை பாதுகாக்க வேண்டியதின் அவசியம் குறித்து விளக்கி கூறினார். கல்லூரி வளாகத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனியாக சேகரித்து அப்புறப்படுத்தினர்.
பேராசிரியர்கள் சாந்தி, வசுமதி, கவிதா, சிவக்குமார், திலீப்குமார், கருப்பசாமி, கொளஞ்சிநாதன், பார்வதிதேவி, திருச்செல்வன், பெனட், சுமதி, ரூபன் ஜெசு அடைக்கலம், கரோலின் கண்மணி, ஸ்வீட்லின் டயானா, சிங்காரவேலன், ஆன்டனி பிரைட்ராஜா, தேசிய மாணவர் படை அலுவலர் சிவமுருகன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மருதையா பாண்டியன், சத்தியலட்சுமி, சுற்றுச்சூழல் இயக்கத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். உள்தர உறுதிப்பிரிவின் உதவி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உள்தர உறுதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட்நைட் செய்து இருந்தார்.
- சிறப்பு விருந்தினர்கள் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக மாணவர்களுக்கு சமூக நல்லிணக்கத்தை விளக்கி பேசினர்.
- மாணவர்களுக்கு, ‘நல்வாழ்வுக்கான வாழ்வியல் பயிற்சி’ 3 நாட்கள் யோகா பயிற்சி பட்டறை தொடக்க விழா நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக 77-வது சுதந்திர தினவிழா, சமூக நல்லிணக்க விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் மருதையா பாண்டியன் வரவேற்று பேசினார்.
தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை சு.விஜயா கலைவாணி, ஆதித்தனார் கல்லூரி பொருளியில் துறை தலைவர் வ.மாலைசூடும் பெருமாள் ஆகிய 2பேரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தமிழ் இலக்கியங்கள் வாயிலாக மாணவர்களுக்கு சமூக நல்லிணக்கத்தை விளக்கி பேசினர்.
இவ்விழாவில் பேராசிரியர்கள் கணேசன், சிவமுருகன், உமாஜெயந்தி, அந்தோணி பிரைட் ராஜா மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முதல்வரின் ஆலோசனைப்படி பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் மருதையா பாண்டியன் மற்றும் முதுகலை பொருளி யல் துறை மாணவர்களும் செய்திருந்தனர். மாணவர் பா.செல்வம் நன்றி கூறினார்.
மேலும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் யோகா மன்றம், ஐ.கியூ.ஏ.சி. சார்பில் மாணவர்களுக்கு, 'நல்வாழ்வுக்கான வாழ்வியல் பயிற்சி' 3 நாட்கள் யோகா பயிற்சி பட்டறை தொடக்க விழா நடந்தது. இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். விலங்கியல் துறை தலைவர் வசுமதி வரவேற்று பேசினார். ஈசா யோகா பயிற்றுனர் வினோத் குமார், யோகா பயிற்சி கொடுத்தார். விழாவி ற்கு ஐ.கியூ.ஏ.சி.ஒருங்கி ணைப்பாளர் ஜீம்ரீவ்ஸ் சைலண்ட் நைட், தாவரவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன், வேதியி யல் துறைதலைவர் கவிதா, பேராசிரியை தீபாராணி, பேராசிரியர் கார்த்திகா தொகுத்து வழங்கினார்.
இதில் 3-ம் ஆண்டு விலங்கியல் மற்றும் வேதியி யல் துறை மாணவர்கள் பங்குபெற்று பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் யோகா மன்ற இயக்குனர் ஆரோக்கிய மேரி பர்னாந்தஸ் மற்றும் இணை இயக்குனர் லிங்கதுரை ஆகியோர் செய்திருந்தனர்.
- ஜி-20 மாநாட்டில் இந்தியா சுற்றுப்புற சூழல் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
- கருத்தரங்கத்தில் 130 தேசிய தரைப்படை, கப்பற்படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில் ஜி-20 அமைப்பின் தலைமைத்துவமும், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்பணர்வும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படையின் கடற்படை அதிகாரி வீ.சிவஇளங்கோ வரவேற்று பேசினார்.
கல்லூரி தாவரவியல் துறைதலைவர் சி.பி.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், ஜி-20 மாநாட்டில் இந்தியா சுற்றுப்புற சூழல் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இதில் மாணவர்களின் பங்களிப்பு மிக அவசியம், என்றார். தேசிய மாணவர் தரைப்படை அதிகாரி லெப்டினன்ட் சிவமுருகன் நன்றி கூறினார்.
தூத்துக்குடி 29-வது தரைப்படை கம்பெனி ஆபீஸர் கமாண்டிங் லெப்டினன்ட் கர்ணல் பிரகோஷ் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், தேசிய மாணவர் படை அதிகாரிகள் சேக்பீர் முகம்மது காமில், சத்யன், ஐசக் கிருபாகரன், சூரிய பொன்முத்து ேசகரன் மற்றும் கே.ஏ. மேல்நிலைப்பள்ளி எல்.கே. மேல்நிலைப்பள்ளி, டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆதித்தனார் கல்லூரியை சேர்ந்த 130 தேசிய தரைப்படை, கப்பற்படை மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனைப்படி தேசிய மாணவர்படை அதிகாரிகள் சிவமுருகன், சிவ இளங்கோ மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
- கண்காட்சியில் பல்வேறு பள்ளியில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் சி. கிருஷ்ணா மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர்.
உடன்குடி:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நெகிழிப்பை கழிவுகளை மேம்படுத்தும் நுணுக்க திறன் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் பல்வேறு பள்ளியில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். தொழில்நுட்ப திறனைப் பயன்படுத்தி நெகிழிக் கழிவுகளை எரிப்பதின் மூலம் மின்சாரம், தார்ச்சாலை போடுவது குறித்த செயல்பாடுகள் பற்றி மாணவர்கள் செயல் விளக்கம் மூலம் காட்சிப்படுத்தினர்.
இதில் தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சி. கிருஷ்ணா மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்குபெற்று 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர். இந்த மாணவர்களை பள்ளி ஆலோசகர் பேராசிரியர் தி. ஆழ்வார், முதல்வர் சோ. மீனா, நிர்வாக அதிகாரி கண்ணபிரான், துணை முதல்வர் சாந்தி ஜெயஸ்ரீ மற்றும் பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
- தனி மனிதனின் தலைமை பண்பின் குணாதிசயங்கள் குறித்து ரத்தினபிரபு எடுத்துரைத்தார்.
- ராஜகுமரன் தமது உரையில் மிகச்சிறந்த தலைவர்களை மேற்கோள் காட்டினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்தர மதிப்பீடு உறுதிப் பிரிவு மற்றும் சமவாய்ப்பு மையம் சார்பில் 'தலைமை பண்புகள்' என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
உள்தர மதிப்பீடு உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்று பேசினார். சமவாய்ப்பு மையத்தின் ஆலோசகர் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியை ராமஜெய லட்சுமி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த பயிற்சி முகாமிற்கு பாளை ஜான்ஸ் கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் ரத்தினபிரபு மற்றும் மெப்கோ ஸ்லனக் பொறியியல் கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ராஜகுமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.
சிறப்பு விருந்தினர் ரத்தினபிரபு தமது உரையில் தனி மனிதனின் தலைமை பண்பு சூழ்நிலை வரும் பொழுது வெளிவரும் என்றும் தலைமை பண்பின் குணாதிசயங்களான தகவல் பரிமாற்றம், அணுகுமுறை, பொறுப்புணர்ச்சி, உணர்ச்சிபூர்வ அறிவு ஆகியவற்றை விளக்கமாக எடுத்துரைத்தார்.
முனைவர் ராஜகுமரன் தமது உரையில் மிகச்சிறந்த தலைவர்களை மேற்கோள் காட்டினார். மேலும் தலைமை பண்புகளான புரிதல், ஏற்று கொள்ளுதல் ஆகியவற்றை மாணவர்களிடையே விளக்கமாக எடுத்துரைத்தார். இந்த பயிற்சி முகாமில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
சமவாய்ப்பு மையத்தின் உறுப்பினர் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியை முனைவர் முனீஸ்வரி மற்றும் முதலாம் ஆண்டு முதுகலை பொருளியல் துறை மாணவர் செல்வம் ஆகியோர் நன்றி கூறினார்கள்.
இந்த பயிற்சி முகாமில் ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி மற்றும் பேராசிரியைகள் ஆரோக்கிய மேரி, பெர்னான்டஸ், ரீட்டா யசோதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.