என் மலர்
நீங்கள் தேடியது "திருடிய"
- காடையாம்பட்டி அருகே பொம்மியாம்பட்டி மேல் கோம்பை பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிய வாலிபர்கள்.
- அப்போது அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் மேட்டார்சைக்கிளில் ஒரு ஆட்டை திருடி எடுத்து செல்வதை கண்டு சத்தம் போட்டார்.
காடையாம்பட்டி:
காடையாம்பட்டி அருகே பொம்மியாம்பட்டி மேல் கோம்பை பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 50),இவர், 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று தோட்டம் தார் சாலை அருகே ஆட்டை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் மேட்டார்சைக்கிளில் ஒரு ஆட்டை திருடி எடுத்து செல்வதை கண்டு சத்தம் போட்டார். அங்கிருந்த பொதுமக்கள் மேட்டார்சைக்கிளை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொரு வாலிபரை பிடித்த பொதுமக்கள் தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்து எஸ்.ஐ. கருப்பண்ணனிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் ஆடு திருட்டில் ஈடுப்பட்டவர் காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் சேர்ந்த மெக்கானிக் கோவிந்தராஜ் (25), என்பதும் இவர் ஏற்கனவே கஞ்சநாயக்கன்பட்டி, கருவள்ளி, பூசாரிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் ஆடுகளைத் திருடி விற்பனை செய்து மது குடித்து வந்ததும் தெரிய வந்தது. இவருடன் வந்தவர் பொம்மிடி பகுதியை சேர்ந்த வேடியப்பன் மகன் பாபு என்பதும் தெரிய வந்தது. கோவிந்தராஜை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மகேஸ்வரன் (வயது 27). இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
- இந்த நிலையில் இன்று காலை வந்து பார்த்தபோது, கட்டிடத்தில் இருந்த சுமார் 100 கிலோ இரும்பு கம்பிகள் மற்றும் 2 கட்டிங் மிஷின்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண் மகேஸ்வரன் (வயது 27). இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று மாலை கட்டி ட பணி முடிந்து ஊழியர்கள் சென்று விட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை வந்து பார்த்தபோது, கட்டிடத்தில் இருந்த சுமார் 100 கிலோ இரும்பு கம்பிகள் மற்றும் 2 கட்டிங் மிஷின்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அருண் மகேஸ்வரன் இரும்பாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மாது (வயது 40). இவர் பரமத்திவேலூர் தாலுகா அலுவலகம் எதிரே கார் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
- யாரும் இல்லாத நேரத்தில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்த கார் எஞ்சின் பிளாக்கை எடுத்து அவரது மோட்டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள படமுடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாது (வயது 40). இவர் பரமத்திவேலூர் தாலுகா அலுவலகம் எதிரே கார் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை ஒர்க் ஷாப்பில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்த கார் எஞ்சின் பிளாக்கை எடுத்து அவரது மோட்டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசியுள் ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், பரமத்தி போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். தன்பேரில், அங்கு வந்த போலீசார் சந்தேகத்திற்குரிய அந்த நபரை போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில், அவர் கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம், வள்ளுவர் நகரைச் சேர்ந்த லோக நாதன் (27) என்பது தெரியவந்தது.இதனை யடுத்து போலீசார் லோக நாதனை கைது செய்து, பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
- ராசிபுரம் அருகே உள்ள பில்லா நல்லூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் இவரது தந்தை நாச்சிமுத்துவிற்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- அப்போது இவருக்கு அருகில் நின்றிருந்த ஒரு வாலிபர் ரமேஷின் பாக்கெட்டில் இருந்து ரூ.500 திருடினார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பில்லா நல்லூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (36) இவரது தந்தை நாச்சிமுத்துவிற்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ரமேஷ் உடன் இருந்து கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை மருத்துவர்கள் எழுதிக் கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்குவதற்காக மருத்துவமனை வளாகத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு அருகில் நின்றிருந்த ஒரு வாலிபர் ரமேஷின் பாக்கெட்டில் இருந்து ரூ.500 திருடினார்.இதைக் கண்ட ரமேஷ் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (34) என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சீனிவாசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- பணத்தை கல்லா பெட்டியில் வைத்து விட்டு செல்லுமாறு கடைக்காரர் வாலிபர்களிடம் கூறினார்.
- பணத்தை திருடிச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை அருகே உள்ள பூலுவபட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 54). இவர் சிறுவாணி மெயின் ரோட்டில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார்.
தினசரி இவர் அதிகாலை 2 மணிக்கு டீ கடையை திறப்பது வழக்கம். இதேபோல சம்பவத்தன்று கடையை திறந்து வேலைகளை செய்து கொண்டு இருந்தார். 3 மணியளவில் 3 வாலிபர்கள் டீ குடிப்பதற்காக வந்தனர். அவர்களுக்கு மாரியப்பன் டீ போட்டு கொடுத்தார். பின்னர் போண்டா போட்டு கொண்டு இருந்தார்.
டீ யை குடித்த 3 பேர் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என கேட்டனர். அதற்கு மாரியப்பன் ரூ.30 என்றார். அப்போது அவர் போண்டா போட்டு கொண்டு இருந்ததால் பணத்தை நீங்களே கல்லா பெட்டியில் வைத்து விட்டு செல்லுமாறு கூறினார்.
அவர்கள் சென்ற பின்னர் மாரியப்பன் பார்த்த போது அந்த 3 பேரும் கல்லா பெட்டியில் பொருட்கள் வாங்குவதற்காக வைத்து இருந்த ரூ.37,500 பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அவர் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டீ குடிப்பது போல நடித்து கல்லா பெட்டியில் இருந்த ரூ.37,500 பணத்தை திருடிச் சென்ற 3 பேரை தேடி வருகின்றனர்.
நங்கவள்ளி:
மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஐயம்புதூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப், சார்ஜர் என 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ெபாருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
2 பேர் கைது
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாங்காடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான வகை யில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட தில் அவர்கள் கொளத்தூர் பாலவாடியை சேர்ந்த விஜய் (26), அவரது நண்பர் வெங்கடேஷ் (23) என்பதும் இவர்கள் இரு வரும் தனி யார் கல்லூரியில் கணினி உள்ளிட்ட சாதனங்களை திருடியதும் தெரியவந்தது.
இவர்களிடமிருந்து கல்லூரியில் திருடப்பட்ட 3 சிபியூ, 4 மானிடர், 1 எல்.இ. டி, டிவி, 1 லேட்டாப், 4 சார்ஜர் ஆகியவற்றை பறி முதல் செய்த போலீசார் 2 ேபரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்த னர். இதில் விஜய் என்பவர் மீது ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட வழக்கு ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சேலம் 4 ரோடு ஓமலூர் சாலையில் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே பிரபல நகை கடை செயல்பட்டு வருகிறது.
- இந்த கடையில் வைக்கப்பட்டிருந்த 10 கிராம் எடையுள்ள தங்க டாலர் மாயமானது.
சேலம்:
சேலம் 4 ரோடு ஓமலூர் சாலையில் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே பிரபல நகை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் வைக்கப்பட்டிருந்த 10 கிராம் எடையுள்ள தங்க டாலர் மாயமானது.
இதுகுறித்து அந்த பிரிவின் மேலாளர் சரவணன் (39) என்பவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில் டாலர் வைக்கப்பட்டு இருந்த பிரிவில் வேலை பார்க்கும் சேலம் சூரமங்கலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (38) என்பவர் டாலரை திருடியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கார்த்திக்கை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தங்க டாலரை 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு நகை அடமான கடையில் அடமானம் வைத்தது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட கார்த்திகை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மனோஜ்(20). இவர் 4 நண்பர்களுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
- வீட்டுக்குள் வைத்திருந்த 3 லேப்டாப்புகள், 1 ஆப்பிள் கைக்கடிகாரம் உட்பட 2 கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள வள்ளல் தெரு பகுதியை சேர்ந்த சரவணன் மகன் மனோஜ்(20). இவர் 4 நண்பர்களுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
நண்பர்கள் வெளியில் செல்லும்போது வீட்டை பூட்டி வீட்டுக்கு அருகிலேயே ஒரு மறைவான இடத்தில் சாவியை வைத்து விட்டு செல்வது வழக்கம். கடந்த 26-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சாவியை அந்த பகுதியில் வைத்து விட்டு சென்றவர்கள் மீண்டும் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் வைத்திருந்த 3 லேப்டாப்புகள், 1 ஆப்பிள் கைக்கடிகாரம் உட்பட 2 கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மனோஜ் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். சூரமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். பின்னர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக நாமக்கல் மாவட்டம் கஸ்பா திருமலைபட்டி தெரு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (37) என்பவரை இன்று காலை கைது செய்தனர். அவரிடமிருந்து லேப்டாப் மற்றும் கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட பெரியசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.