என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "General Examination"

    • சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பிளஸ்-2 தேர்வை ஆர்வத்துடன் மாணவ-மாணவிகள் எழுதினர்.
    • பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.



    மதுரை ஈ.வே.ரா. நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவிகள்.

     பரமக்குடி

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு தொடங்கி யது. இந்த தேர்வை 8.75 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 7,920 மாணவர்கள், 8,147 மாணவிகள் என மொத்தம் 16,067 பேர் இன்று தேர்வு எழுதினர். 65 தேர்வு மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதி னர். காலை 10 மணிக்கு தமிழ் மொழி பாட தேர்வு தொடங்கியது.

    தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் புத்தகங்களுடன் கடைசி நேர தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு இருப்பதை காண முடிந்தது. மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்களும் தேர்வு குறித்து அறிவுரைகளை வழங்கினர்.

    தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களை தவிர வேறு எந்த பொருட்களையும் கொண்டு செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்க ப்பட்டிருந்தது. எனவே மாணவ-மாணவிகள் தீவிர சோதனைக்குட்படுத்த ப்பட்ட பின்னர் 9.45 மணி யளவில் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    முன்னதாக தேர்வு மையத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் சென்று ஆய்வு செய்தார். தேர்வு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரிய-ஆசிரி யைகள் ஈடுபடுத்தப்பட்ட னர். மாவட்டத்தில் தொலை தூரங்களில் இருந்து மாணவ -மாணவிகள் தேர்வு மையங்களுக்கு வர அரசு பஸ் வசதிகள் செய்யப் பட்டிருந்தது.

    சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 7,625 மாணவர்கள், 8,808 மாணவிகள என மொத்தம் 16 ஆயிரத்து 433 மாணவ மாணவிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதினர். தேர்வை கண்காணிக்க 46 வினாத்தாள் கட்டுப் பாட்டா ளர்கள், 79 முதன்மை கண்காணிப்பா ளர்கள், துறை அலுவலர்கள் 1239 அறை கண் காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    சிவகங்கையில் உள்ள மையத்திற்கு இன்று மாவட்ட கலெக்டர் மதுசுதன் ரெட்டி நேரடி ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் மாவட்ட முதன்மை கல்வி அலு வலர்கள் அதிகாரிகள் தேர்வு மையங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் இன்று 10,985 மாணவர்கள், 12,383 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 368 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் விருதுநகர் மாவட்டம், மாநில அளவில் பிளஸ்-2 தேர்வு சதவீதத்தில் முதலிடம் பெற்று வருகிறது. இந்த ஆண்டும் அதனை தக்க வைக்க மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் தேர்வுக்கு தீவிரமாக தயார்படுத்தினர்.

    3 மாவட்டங்களிலும் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்களுக்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தி னர். தமிழ் மொழி பாட ேதர்வுடன் இன்று தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.


    • 24 ஆயிரத்து 330 பேர் பொதுத்தேர்வை எதிர்கொண்டனர்.
    • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது.

    திருப்பூர் :

    கடந்த மார்ச் 13ந் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் 92 மைய ங்களில், 24 ஆயிரத்து 330 பேர் பொதுத்தேர்வை எதிர்கொண்டனர்.கடந்த 3-ந் தேதியுடன் தேர்வுகள் நிறை வடைந்தன. விடை த்தாள்களை திருத்தும் பணி தமிழகம் முழுவதும் தொடங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை ப்பள்ளி, தாராபுரம் பொன்னு மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி ஆகிய இரு மையங்களில், தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது.

    மாவட்டத்தில் 9தாலுகா வில் இருந்து 1,605 முதுகலை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் நாளான நேற்று முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர் விடைத் தாள்களை மதிப்பீடு செய்தனர். இன்று (11ந் தேதி) முதல் உதவி தேர்வாளர்கள் விடைத் தாள் திருத்துவர். 10நாட்கள் நடக்கும் பணி வரும் 21-ந் தேதி நிறைவு பெறும். மே 5-ந்தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

    • . வள்ளலார் பள்ளியில் இந்த ஆண்டு 247 மாணவ, மாணவியர் பிளஸ்-2 பயின்று வந்தனர்..பிளஸ்-2 தேர்வுக்கான முடிவுகள் இன்று காலையில் வெளியிடப்பட்டது. இதில் வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து தேர்வெழுதிய 247 மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
    • . இதில் சுவாதி என்ற மாணவி பள்ளி அளவில் முதலிடம் பெற்றதோடு, உயிரியல் குரூப்பில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார். இவர் இயற்பியல், வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்ணும், தமிழ், ஆங்கிலம், கணிதம், உயிரியல் பாடங்களில் 100-க்கும் 99 மதிப்பெண்களும் பெற்று 600-க்கு 596 மதிப்பெண்ணுடன் மாநில அளவில் 2-ம் இடமும் பள்ளி அளவில் முதலிடமும் பெற்றுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி கொள்ளுக்காரன்குட்டையில் வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இந்த ஆண்டு 247 மாணவ, மாணவியர் பிளஸ்-2 பயின்று வந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வில் 247 மாணவர்களும் தேர்வெழுதினர்.பிளஸ்-2 தேர்வுக்கான முடிவுகள் இன்று காலையில் வெளியிடப்பட்டது. இதில் வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து தேர்வெழுதிய 247 மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதில் சுவாதி என்ற மாணவி பள்ளி அளவில் முதலிடம் பெற்றதோடு, உயிரியல் குரூப்பில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார். இவர் இயற்பியல், வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்ணும், தமிழ், ஆங்கிலம், கணிதம், உயிரியல் பாடங்களில் 100-க்கும் 99 மதிப்பெண்களும் பெற்று 600-க்கு 596 மதிப்பெண்ணுடன் மாநில அளவில் 2-ம் இடமும் பள்ளி அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். மாணவி அட்சயா 584மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 2-ம் இடமும், மாணவன் அண்புமணி 583 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 3-ம் இடமும் பிடித்துள்ளார். மேலும், இந்த பள்ளி கடலூர் மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைவர் திருமால்வளன், தாளாலர் கே. நடராஜன், வள்ளலார் கிட்ஸ் பள்ளி தாலாளர் மற்றும் செயலாளர் சக்கரவர்த்தி, பொருளாலர் ராஜா, கண்ணன், சுப்பிரமணி, ஜனார்த்தனன், மணிவாசகம், சாரங்கபாணி, செல்வராஜ், சரவணன், திருவேங்கடம், சண்முகம், சரோஜாம்மாள், வள்ளலார் கல்வியியல் கல்லூரி ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துக்களை கூறினர். மேலும், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்தும், இனிப்பு வழங்கியும், கேக் வெட்டியும் கொண்டாடினார்கள்.

    • 21,875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர்.
    • தேர்வை எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலை.

    தமிழகத்தில் நாளை பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது.

    இந்த தேர்தலில், 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுதுகின்றனர்.

    இதைத்தவிர, 21,875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர்.

    இதற்காக, தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அங்கு மாணவ-மாணவிகள் தேர்வை எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதாகவும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாளை தமிழ் பாடத்தேர்வுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதற்கு அடுத்த தேர்வு வருகிற 5-ந் தேதி என ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 4 நாட்கள் இடைவெளிவிட்டு வருகிற 22-ந் தேதி வரை அவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

    இதற்கிடையில், பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு வருகிற 4-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரையிலும், அதனைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு வருகிற 26-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8-ந் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடக்க இருக்கிறது.

    • +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள்.
    • உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது.

    தமிழகத்தில் நாளை பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது.

    இந்நிலையில், நாளை பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! 

    உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன்.

    தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம்.

    பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டது.
    • வருகிற 20-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

    சென்னை:

    ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் தொடர் கன மழை காரணமாக தேர்வர்களின் நலன் கருதி வருகிற 20-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது சமூக அறிவியல் தேர்வை மாணவர்கள் உற்சாகமாக எழுதினர்.
    சேலம் :

    தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி.,  பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்கவில்லை.

    நடப்பு  ஆண்டு கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில்,  எஸ்.எஸ்.எல்.சி.,  பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள்  நடத்தப்பட்டுள்ளன. இதில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

    சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள  182    மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 80-க்கும் மேற்பட்ட  மையங்களிலும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற்றது.

    தேர்வு முடிவடைந்தது இம்மையங்களில் அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வுகள் எழுதினர்.
     
    கடைசி நாளான இன்று (30-ந்தேதி) திங்கட்கிழமை  சமூக அறிவியல் பாடம் தேர்வு நடைபெற்றது. காலை  10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. 

    வாழ்த்துக்கள்... தேர்வு  நிறைவடைந்ததை அடுத்து தேர்வு மையங்களில் இருந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் தங்கள் வகுப்பில்  பயின்றவர்களை சந்தித்து,   ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் புகைப்படம் எடுத்தும்,  சீருடைகளில் மாறி மாறி மை தெளித்தும், செல்போன் நம்பர் பரிமாறிக்கொண்டும்   மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
    ×