என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "to the police"

    • பழக்கம் 100 வருடங்களுக்கு மேல் உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கின்றனர்.
    • சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்–-இன்ஸ் பெக்டருக்கு தான் இங்கு மரியாதை.

    சென்னிமலை,

    சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டத்தில் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தரும் பழமை மாறாத மரியாதை 100 வருடங்களுக்கும் மேலாக இன்னும் தொடர்கிறது.

    சென்னிமலை முருகன் கோவிலில் விழாக்கள் அனைத்தும் சென்னிமலை டவுன் கிழக்கு ரத வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தான் நடக்கும். திருத்தேரோட்டமும், அதே போல் நகரின் நான்கு ரத வீதிகளில் தான் நடக்கும்.

    சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டத்தில் தேர் நிலை சேர்ந்தவுடன் தேர் நிலையில் இருந்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-–இன்ஸ்பெக்டர்களுக்கு மாலை அணிவித்து மேள, தாளம் முழங்க கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் தலைமையில் ஊர்வலமாக சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விடுவார்கள்.

    இந்த பழக்கம் 100 வருடங்களுக்கு மேல் உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கின்றனர். எந்த வி.ஐ.பி. கலந்து கொண்டாலும் சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்–-இன்ஸ் பெக்டருக்கு தான் இங்கு மரியாதை. மேலும் ஊர்வலமாக போலீஸ் நிலையத்துக்கு செல்லும் தேரோட்டி, கோவில் செயல் அலுவலர், பணியாளர்களுக்கு இனிப்பு, காரம், டீ கொடுத்து மரியாதை செய்வார்கள்.

    இது நடைமுறை என்பதை விட பழக்கம் என கூறலாம். 100 வருடங்களுக்கு மேல் இந்த பாரம்பரியமரியாதை தொடர்வதாக பெரியவர்கள் தகவல் கூறுகிறார்கள்.

    இன்னும் இந்த மரியாதை மாறால் நேற்று தொடர்ந்தது. இந்த மரியாதை தைப்பூச தேர் திருவிழா மட்டும் அல்லாமல் பங்குனி உத்திர தேரோட்டத்திலும் நடக்கும் நேற்று மாலை பங்குனி உத்திர தேர் நிலைசேர்ந்ததும் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், மற்றும் சப்-–இன்ஸ்பெக்டர்களுக்கு கோவில் செயல் அலுவலர் சரவணன் மாலை அணிவித்து மேள, தாளம் முழங்க போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விட்டனர்.

    சேலத்தில் போலீசாருக்கு டிமிக்கி காட்டிய தக்காளி திருடனை போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 26). இவர் பெருமாகவுண்டம்பட்டி, சஞ்சீவிராய பெருமாள் கோவில் அருகே காய்கறி கடை வைத்துள்ளார். இவருக்கு தக்காளி பார்சல் இறக்குபவர்கள் 26-ந்தேதி அதிகாலையில் 60 கிலோ எடையுள்ள 2 கிரேடு தக்காளி பெட்டி இறக்கி வைத்துள்ளனர். 

    இந்நிலையில் கடை உரிமையாளர் சங்கர், வழக்கம்போல் காலையில் கடையை திறக்க வந்த போது ஒரு கிரேடு தக்காளி பெட்டி மட்டுமே வெளியே இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். 

    இதையடுத்து சிசிடிவி கேமராவை பார்த்த போது ஒருவர் மொபட்டில்  தக்காளி பெட்டியை திருடிச் சென்றது தெரிய வந்தது. அந்த நபர் , மொபட்டில் வந்து கடை முன்பு நின்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, தக்காளியை கிரேடுடன் எடுத்து, கொண்டு செல்வது பதிவாகியிருந்தது. அந்த சி.சி.டி.வி வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. 

     இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் சங்கர், புகார் கொடுத்தார். புகாரின் பேரில் எஸ். ஐ. ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து தக்காளி திருடனை தேடிவந்தனர். அந்த மர்ம நபர்   போலீசாரிடம் சிக்காமல் டிமிக்கி காட்டி வந்தார்.இதனிடையே இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, புதுரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக தக்காளி அதிக அளவில் திருட்டு போனதும், இதனால் சிறு வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்திருப்பதும் தெரியவந்தது.

    சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி இருந்த வண்டி நம்பரை வைத்து விசாரணை செய்ததில், அவர் வெண்ணந்தூர் தங்கசாலை வீதி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சின்ராஜ் (வயது32) என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே செவ்வாய்ப்ேபட்டை பகுதியில் ஆப்பிள் பெட்டி திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில்  வெளியே வந்த நிலையில், மகுடஞ்சாவடி காவல் நிலைய எல்லைப் பகுதியில் தக்காளி திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. 

    இதனை அடுத்து தக்காளி திருடிய சின்ராஜை போலீசார் கைது செய்து சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    ×