என் மலர்
நீங்கள் தேடியது "work"
- சிறுமுதலீட்டில் உங்களுக்கு விருப்பமான தொழிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
- சிறுதொழில் செய்வது என்று முடிவெடுத்து விட்டால் ஆரம்பத்தில் அதிக லாபம் எதிர்பார்க்க இயலாது.
வேலை வாய்ப்புகள் அரிதான இக்காலத்தில் ஏரளமான சிறுதொழில் களுக்கு நம் நாட்டில் பஞ்சமில்லை. சிறுதொழில் செய்வது என்று முடிவெடுத்து விட்டால் ஆரம்பத்தில் அதிக லாபம் எதிர்பார்க்க இயலாது. லாபமானது சிறிது சிறிதாக அதிகரிக்கும். அதே போல் உங்கள் சக்திக்கு ஏற்ற ஒரு சிறுமுதலீட்டில் உங்களுக்கு விருப்பமான தொழிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். உங்கள் லாபமானது உங்கள் பொருள்களின் தரம், உங்களின் சேவையின் நிலைப்பு தன்மை, வாடிக்கையாளர்களை நீங்கள் நடத்தும் விதம், போன்றவற்றால் உங்களின் லாபம் அதிகரிக்கும்.
சரி உங்களக்கு உங்கள் விருப்பமான சிறுதொழில் என்னவென்று தெரியவில்லையா.கீழ் கொடுக்கப்பட்ட பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
உணவு பொருள் சிறுதொழில்:
1.மசாலா பொடி தயாரிப்பு
2.ஊறுகாய் தயாரிப்பு
3.பிஸ்கட்டுகள் மற்றும் பன் தயாரிப்பு
4.ஜாம் தயாரிப்பு
5.சிப்ஸ் தயாரிப்பு
6.அப்பளம் மற்றும் வத்தல் தயாரிப்பு
7.மிட்சேர் போன்ற சிற்றுண்டி தயாரிப்பு
8.சிறு உணவகம்
9.டீ கடை
10.ஜூஸ் கடை
11.சிற்றுண்டி விற்பனை கடை
12.இட்லி மாவு மற்றும் தோசை மாவு தயாரிப்பு
சிறு விற்பனை தொழில்கள்:
13.ஆடைகள் விற்பனை (பெண்கள் ஜாக்கெட் துணி ,சேலை மற்றும் பெட்டிகோட் வீடு, வீடாக சென்று விற்பனை செய்யலாம்).
14.சிறு பாத்திரங்கள் விற்பனை,
15.அழகு சாதன பொருள்கள் விற்பனை
16.கைக்கடிகாரம் மற்றும் பெல்ட் விற்பனை
17.வீட்டுக்கு தேவையான பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை
18.பூ காய்கறி மற்றும் பழ விதைகள் விற்பனை
19.பழம் விற்பனை
20.காய்கறி விற்பனை
ஆபீஸ்களுக்கு எழுதுபொருள் விற்பனை
பண்ணை சிறு தொழில்கள்:
21.முயல் வளர்ப்பு
22.கோழி மற்றும் காடை வளர்ப்பு
23. தேனீ வளர்ப்பு
24.ஆடு வளர்ப்பு (ஆரம்பத்தில் ஒரு ஜோடி வாங்கினால் நல்லது )
மேற்கண்ட பண்ணை தொழில்கள் முறையான பயிற்சி பெற்ற பின் செய்தால் நல்லது. இது போன்ற பல தொழிகள் நம்மை சுற்றியுள்ளன. அவற்றில் உங்களின் விருப்பமான சிறுதொழிலை தேர்ந்தெடுத்துக்கொள்வது முதல் படி. இரண்டாவது அந்த சிறுதொழிகளுக்கான மூலப்பொருள்கள் கிடைக்குமிடங்களை தெரிந்து கொள்வது .
மூன்றாவது அந்த சிறுதொழில்களுக்கான கருவி முதலீடுகளை குறைத்தல். இப்போது நீங்க மசாலா தயாரிப்பு நிறுவனம் நடத்த போகிறீர்கள் என்றால் மசாலா அரைக்கும் கருவியை உடனே வாங்கிவந்து விட கூடாது. ஒரு வருடமாவது கடைகளில் அரைத்து விற்பனை செய்து அதில் வரும் லாபத்தைக்கொண்டு கருவிகளை வாங்கவேண்டும்.
நான்காவது உங்கள் தொழில் மேம்பட தினமும் 5 முக்கிய வேலைகளை ஒவ்வொன் றாக செய்ய வேண்டும். முக்கியமற்ற வேலை களை பின்பு நேரம் இருந்தால் செய்யலாம்.
ஐந்தாவது மனக்காட்சி படுத்துதல் உங்களால் இத்தொழிலை சாதிக்க முடியும் என நம்புவது. சுருக்கமான சொல்ல வேண்டுமானால் உங்களின் படைப்பு திறனை முடிவாகிவிடுதல். 20 நிமிடம் கண்களை மூடி கொண்டு நீங்கள் உங்கள் தொழிலில் அதிக பட்சமாக உங்கள் சாதிக்க முடிந்தால் என்ன என்ன மாற்றங்கள் நிகழும். உங்கள் நிறுவன கணக்கில் ஏராளமான பணம், கார் பங்களா, வெளிநாடு சுற்றுலா மற்றும் பண்ணை வீடு போன்றவற்றை மனக்காட்சி படுத்த வேண்டும்.
- கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும்
- தமிழக அரசுக்கு கோரிக்கை
திருச்சி:
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் யு.ஜி.சி.தகுதியுடைய கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்திடவேண்டும் என்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, கடந்த 10 ஆண்டுகளாக அரசு கலைக்கல்லூரிகளில் நிரந்தர உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததனால் சற்றேறக்குறைய 9000 உதவிப்பேராசிரியர் பணிக்கான காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது.
தற்போது தமிழக அரசு 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நீண்ட காலமாக (ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாக) தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் கவுரவ வரிவுரையாளர்கள் 40 முதல் 50 வயதை கடந்தவர்களாகவும் மாதந்திர ஊதியமாக 20,000 பெற்று வரக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.
எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ள 4000
- பயறு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- கிலோ ரூ.70 வரை கிடைக்கிறது
கரூர்:
கடந்த ஜூலை மாத இறுதியில், கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆற்றுப் பகுதிகளான புகழூர், வாங்கல், நெரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை மற்றும் வெள்ளியணை, ராஜபுரம், சின்னதாராபுரம், க.பரமத்தி, அரவக்குறிச்சி, கடவூர் உள்ளிட்ட பகுதிகளில், மானாவாரி நிலங்களில் பயிறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டன. அதில், ஊடுபயிராக தட்டை பயறு அதிகளவில் சாகுபடி செய் யப்பட்டது. காய் பிடிக்கும் பருவத்தில், மழை பெய்ததால் தட்டை பயிறு நல்ல மகசூலை அடைந்துள்ளது. அதனை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக உள்ளனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது,
கடந்த மூன்று மாதங்களாக காவிரி ஆற்றில் தண்ணீர் செல்கிறது. இதனால், கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்டத்தில் கடந்த, இரண்டு மாதங்களாக மழை, திருப்திகரமாக உள்ளதால், நிலத் தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாய கிணறுகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது.
இதனால், மானாவாரி நிலங்களில் பயிறு வகைகள் நல்ல விளைச்சலை அடைந்துள்ளது. தற்போது, தட்டை பயிறு அறுவடை துவங்கியுள்ளது. விவசாய நிலங்களை தேடி மொத்த வியாபா ரிகள் வருகின்றனர். ஒரு கிலோ தட்டை பயிறுக்கு, 80 ரூபாய் முதல், 90 ரூபாய் வரை கேட்கிறோம். ஆனால், 60 ரூபாய் முதல், 70 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. அடுத்த மாதத்தில் கிராம சந்தைகளில், பயிறு வகைகள் அதிகளவில், விலை மலிவாக விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- கிறிஸ்துமஸ்-புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது
- பெரம்பலூர் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில்
பெரம்பலூர் :
பெரம்பலூர் கல்பாடி பிரிவு சாலையிலுள்ள அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவன தொழிற்சாலையுடன் ஸ்வீட்ஸ் அன்ட் ஸ்நாக்ஸ், பேக்கரி ஆகியவை செயல்பட்டு வருகிறது. மேலும், திருச்சி, சென்னை, துறையூர், சேலம், ஆத்தூர், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், பாண்டிச்சேரி உள்பட 26 கிளைகளுடன் பேக்கரி செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கேக் தயாரிக்கும் பணி தொடங்குவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு பண்டிகையையொட்டி கேக் தயாரிப்புக்காக செர்ரி, உலர் திராட்சை, பேரிச்சை, வெள்ளிரி விதை, ஆரஞ்சு, முந்திரி, திராட்சை, உலர் வண்ணநிற பழங்கள், ஆப்ரிகாட், டியூட்டி புரூட்டிச் ஆகிய பழங்கள், ஜாதிக்காய் பொடி, அத்திப்பழம், லவங்கப் பட்டைப் பொடி போன்றவற்றை கலந்து, சுமார் ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ஒயினில் ஊற வைக்கப்படுகிறது. இவை நன்றாக ஊறிய பிறகு சுவையான, தரமான ரிச் பிளம் கேக் தயாரிக்கப்படுகிறது.
தற்போது தொடங்கப்பட்டுள்ள ரிச் பிளம் கேக் தயாரிப்பு பணி முடிவடைந்து, பின்னர் டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிக்கைக்காக ரிச் பிளம் கேக் மற்றும் வகை வகையான கேக்குகள் தயாரிக்கப்படவுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக், குக்கீஸ், சாக்லெட் ஆகியவை தயாராகி வருகிறது.
தரமாகவும், சுவையாகவும், குறைந்த விலையில் இந்த கேக் வகைகள் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும் என அஸ்வின்ஸ் நிறுவன தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார். அப்போது அஸ்வின்ஸ் நிர்வாக இயக்குநர் அஸ்வின்ஸ், மனித வள மேம்பாட்டு அலுவலர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
- எப்போதும் சிறிய அளவிலான தொகை கைவசம் வைத்திருக்க வேண்டும்.
- தொழில் தொடங்குவோர் கவனத்தில் கொண்டால் வெற்றி பெறலாம்.
செய்யும் தொழிலே தெய்வம். அத்தகைய தொழிலை தேர்ந்து எடுப்பதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். ஏற்கனவே தொழிலில் வெற்றிபெற்றவர்கள், நல விரும்பிகள், வங்கி அதிகாரிகள் ஆகியோரின் ஆலோசனை பெறுதல் என்பது மிக அவசியம். மேலும் நமது நிதி நிலைமை, சுற்றுப்புற சூழல் ஆகியவற்றையும் அறிந்து வைத்து இருக்க வேண்டும்.
தொழில் என்பது 2 பிரிவுகளை கொண்டு உள்ளது. உற்பத்தி அல்லது தயாரிப்பு அடிப்படையிலானது. விற்பனை அல்லது தேவை அடிப்படையிலானது. உதாரணமாக ஸ்டீல் தகடு உற்பத்தி செய்யப்பட்டு அவை பாத்திரங்கள், பொருட்களாக தயாரிக்கப்படுகிறது. அந்த பாத்திரங்களை வாங்கி ஒருவர் விற்பனை செய்கிறார். பாத்திரங்களின் பளபளப்பு குறைந்தால் அதனை ஒருவர் பாலீஷ் செய்து தருகிறார். இவைகளில் உற்பத்தி, தயாரிப்பு, விற்பனை, சேவை என 4 அடிப்படைகள் உள்ளதை புரிந்து கொள்ளலாம். இவற்றில் சேவை என்பது கட்டணம் பெற்று செய்து கொடுக்கும் தொழில்களை குறிப்பிடுவது ஆகும்.
தயாரிப்பு தொழிலை மேற்கொள்வோர் அதற்கு உரிய விற்பனை வாய்ப்பை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். தயாரிக்கப்படும் பொருட்கள் அதிக வியாபார போட்டி இல்லாமல் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பதாக இருக்க வேண்டும். அல்லது நாம் வசிக்கும் பகுதியில் மலிவாகவும், நிறைவாகவும் கிடைப்பதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் பொருட்களின் விற்பனை வாய்ப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அறிந்து இருக்க வேண்டும்.
சிறிய முதலீட்டில் பெரிய அளவிலான தயாரிப்பு தொழில்கள் எதையும் மேற்கொள்ள இயலாது. எனவே, பட்ஜெட்டுக்குள் அடங்கும்படியான சிறிய அளவிலான தயாரிப்பு தொழிலையே மேற்கொள்ளலாம். நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் காலத்தில் ஏற்படும் சூழலை சந்திக்க சிறிது பொருளாதாரம் நம்மிடம் இருக்க வேண்டும். எனவே, எப்போதும் சிறிய அளவிலான தொகை கைவசம் வைத்திருக்க வேண்டும்.
மேலும் உங்களது தயாரிப்பு பொருளை சந்தையில் விற்பதற்கும், மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கும் அவ்வப்போது விளம்பரங்கள் செய்ய வேண்டும். இவற்றுக்கான மூலதனங்களை நீங்கள்தான் கொடுக்க வேண்டியிருக்கும். ஆகவே, தயாரிப்பு தொழிலை செய்ய விரும்புபவர்கள் ஓரளவு பொருளாதாரம் உடையவராக இருக்க வேண்டும். கடன் தொல்லை இல்லாமல், சுய முதலீடு இல்லாதவர்கள் விற்பனை தொழிலை தேர்ந்து எடுக்கலாம். அதுதான் சிறந்தது.
முக்கியமான விஷயம், தொழில் தொடங்க கடன் கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் முழு கடன் தொகையையும் வாங்க நினைக்கக்கூடாது. நம் தொழிலுக்கு தேவையான நிதி எவ்வளவோ அந்த அளவுக்கு மட்டுமே கடன் வாங்க வேண்டும். இல்லையேல் கடன் நம்மை அமுக்கிவிடும். இதை தொழில் தொடங்குவோர் கவனத்தில் கொண்டால் வெற்றி பெறலாம்.
- வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீதமாக உயர்த்தி வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- உலக காதுகேளாதோர் தினவிழா
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட காதுகேளாதோர் சங்கம் சார்பில் உலக காதுகேளாதோர் தினவிழா தனியார் திருமண மகாலில் நடைப்பெற்றது. புதுக்கோட்டை மாவட்ட சங்க தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். வரவேற்புரையை காதுகேளாதோர் சங்க சேர்மன் ஜெயகுமார் வரவேற்புரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக ஒலி, ஒளி அமைப்பாளர் சங்க தலைவரும், தி.மு.க. நகரச்செயலாளருமான செந்தில் கலந்துக் கொண்டு பேசினார்.
விழாவில் பள்ளிகள், கல்லூரிகளில் சைகைமொழி தெரிந்தவர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், அரசு அலுவலங்களில் சைகைமொழி பெயர்ப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7சதவீதமாக உயர்த்தி தரவேண்டும், ரூ.3000 முதல் 5000 வரை உதவி தொகை உயர்வு வேண்டும், சிறப்பு வீடுகள், மனைகள் இலவசமாக வழங்க வேண்டும், ஓட்டுனர் உரிம அட்டை வழங்கப்பட வேண்டும், கபடி போட்டியில் எஸ்டிஏடீ கபடி காதுகேளாதோர் அனுமதியை ஏற்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவில் காது கேளாதோர் சங்க துணை சேர்மன் செல்வராஜ், திரைப்பட நடிகரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான சாத்தையா, அரசு வழக்கறிஞர் சிவா, முத்துரையான்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் வேலுச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் தீத்தப்பன், சென்னை தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு தலைவர் ரமேஷ்பாபு, சென்னை தமிழ்நாடு காதுகேளாதோர் விளையாட்டுக் கழகம்தலைவர் பாலாஜி, மாவட்ட தலைவர் சிவக்குமார். முகமது தாகீர் உட்பட மாவட்டம் முழுவதிலிருந்தும் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
- அவினாசி சாலையில் அமைந்துள்ளது பரி.பவுலின் ஆலயம்.
- ஆலயம் கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
பெருமாநல்லூர் :
திருப்பூர் அவினாசி சாலையில் அமைந்துள்ளது பரி.பவுலின் ஆலயம். இந்த ஆலயம் கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ஆலயத்தின் செயலாளர் ஜெபரூபன் ஜான்சன் தலைமையில் வெள்ளை அடித்தல் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.
- வாா்டு எண் 59 அமராவதிபாளையம்-கட்டுப்பாளையம் பிரதான சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தாா் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
- மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூா் மாநகராட்சி 2, 3 வது மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதில், வாா்டு எண் 59 அமராவதிபாளையம்-கட்டுப்பாளையம் பிரதான சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தாா் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
இதைத்தொடா்ந்து மாநகராட்சி 2 வது மண்டலத்துக்கு உட்பட்ட வாா்டு எண் 32 ல் புது ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சாலைகளின் தரம் மற்றும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அதே போல திருப்பூா் மாநகராட்சி 3 -வது மண்டலத்துக்கு உட்பட்ட வாா்டு எண் 33ல் அம்ருத் 2 திட்டத்தின்கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மூளிக்குளத்தின் கரையை பலப்படுத்தும் பணியையும் ஆய்வு செய்தாா். அப்போது மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது மாநகராட்சி உதவி ஆணையா்கள், அலுவலா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
- நகரப் பகுதிகளுக்கும் 100 நாள் வேலை திட்டம் விரிவுபடுத்த வலியுறுத்தப்பட்டது
- விவசாயத் தொழிலாளர் சங்க ேகாரிக்கை மாநாடு
பெரம்பலூர்:
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பெரம்பலூர் வட்ட மக்கள் கோரிக்கை மாநாடு பெரம்பலூரில் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வீசிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கலையரசி, மாவட்ட பொருளாளர் காமராஜ்,மாவட்ட துணை தலைவர் கோகுல் கிருஷ்ணன், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் ரமேஷ் சிறப்புரையாற்றினார்.அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி, முழுமையான கூலியை வழங்க வேண்டும். நகரப் பகுதிகளுக்கும் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், திருச்சி தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
- 4 ஆண்டாக நடத்தி வரும் இயற்கை வேளாண் பண்ணையில், நேற்று பணி அனுபவப் பயிற்சி பெற்றனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், திருச்சி தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இக்குழுவினர், வாழப்பாடி அருகே மத்தூரில் விவசாயிகள் பழனிசாமி, சக்திவேல் மற்றும் குடும்பத்தினர் 4 ஆண்டாக நடத்தி வரும் இயற்கை வேளாண் பண்ணையில், நேற்று பணி அனுபவப் பயிற்சி பெற்றனர்.
இயற்கை முறையில் கரும்பு, பப்பாளி, வாழை, பீர்க்கங்காய், பாகற்காய், மிளகாய், வெண்டை, வெங்காயம் போன்ற பயிர் சாகுபடி குறித்து கேட்டறிந்தனர். இயற்கை முறை வேளாண்மை , ஊடுபயிர் மேலாண்மை, பல அடுக்கு முறை விவசாயம், இயற்கை வளர்ச்சியூக்கிகள், பூச்சி விரட்டிகள் குறித்தும் அனுபவ பயிற்சி பெற்றனர்.
- பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 3-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
- சுய உதவிக்குழு உறுப்பி னர்கள் உட்பட 75-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து 11 மற்றும் 12-வதுவார்டு ஆகிய பகுதியில் பொது சுகாதாரப் பணிகளை மேற்க்கொண்டனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 3-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
முகமிற்கு பேரூராட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பி னர்கள் உட்பட 75-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து 11 மற்றும் 12-வதுவார்டு பகுதிகளான பாப்பாத்தி அம்மன் கோவில் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, காவேரி சாலை கஞ்சிமடம் தெரு, அக்ரகாரம் தெரு ஆகிய இடங்களில் பொது சுகாதாரப் பணிகளை மேற்க்கொண்டனர்.
மேலும் பராமரிப்பு செய்தல், கொசு ஒழிப்பு மருந்து அடித்தல் மற்றும் பொது மக்களின் தேவைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.
- சேலம் மாவட்டம் சங்ககிரில் இருந்து பவானி செல்லும் சாலையில், சாமியார் தோட்டத்தில் இருந்து கவுண்டனுார் வரை, ரூ.5.1 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப்பணி, தடுப்புச்சுவர் கட்டுதல், வடிகால் கட்டுதல், குழாய் பாலம் அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
- மகுடஞ்சா வடியில் இருந்து இடைப்பாடி வழியாக குமாரபாளையம் வரை ரூ.6.81 கோடி மதிப்பில், இருவழிச் சாலை அகலப்படுத்துதல், மேம்படுத்தும் பணிகளும் நடக்கிறது.
சங்ககிரி:
மாநில நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், சேலம் மாவட்டம் சங்ககிரில் இருந்து பவானி செல்லும் சாலையில், சாமியார் தோட்டத்தில் இருந்து கவுண்டனுார் வரை, ரூ.5.1 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப்பணி, தடுப்புச்சுவர் கட்டுதல், வடிகால் கட்டுதல், குழாய் பாலம் அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல், மகுடஞ்சா வடியில் இருந்து இடைப்பாடி வழியாக குமாரபாளையம் வரை ரூ.6.81 கோடி மதிப்பில், இருவழிச் சாலை அகலப்படுத்துதல், மேம்படுத்தும் பணிகளும் நடக்கிறது. மேலும், ஆலத்தூர்ரெட்டி பாளை யத்தில் இருந்து தேவூர் செல்லும் சாலையில் ரூ.71 லட்சத்தில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை நேற்று, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, சேலம் கண்கா ணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அப்போது, அவர் சாலையோரம் இடையூறாக உள்ள மரங்களை உடனே அகற்றி பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, இடைப்பாடி நெடுஞ்சா
லைத்துறை கோட்டப்பொ றியாளர் சண்முகசுந்தரம், சங்ககிரி உதவி கோட்டப்பொறியாளர் வரதராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.