என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Porn"

    • மாடலிங் துறையில் விருப்பமுள்ள பெண்களை குறிவைத்துள்ளனர்.
    • பெண்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஆபாச படத்தில் நடிக்கும் தொழிலில் தள்ளியுள்ளனர்.

    உத்தரபிரதேசத்தில் வெளிநாட்டினரின் நிதி உதவியுடன் ஆபாசப்படம் எடுப்பதையே 5 ஆண்டுகளாக தொழிலாக செய்து வந்த தம்பதி சிக்கியது.

    உஜ்வால் கிஷோர் மற்றும் அவரது மனைவி நீலு ஸ்ரீவஸ்தவா ஆகியோர் நொய்டாவில் வசித்து வந்தனர். இந்த தம்பதி வெளிநாட்டினரிடம் இருந்து நிதி பெற்றுக்கொண்டு 5 ஆண்டுகளாக ஆபாசப்படம் எடுப்பதையே தொழிலாக செய்து வந்ததை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.

    இதனையடுத்து நொய்டாவில் உள்ள இந்த தம்பதியினரின் வீட்டில் அமலாக்கத்துறை (ED) சோதனை நடத்தியது. இதில் ரூ.15.66 கோடி சட்டவிரோத வெளிநாட்டு நிதியைக் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.

    இந்த தம்பதி சமூக ஊடகங்களை பயன்படுத்தி மாடலிங் துறையில் விருப்பமுள்ள பெண்களை குறிவைத்துள்ளனர். மாடலிங் விளம்பரம் பார்த்து வரும் பெண்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஆபாச படத்தில் நடிக்கும் தொழிலில் தள்ளியுள்ளனர்.

    இந்தியாவில் இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பாக ரஷ்யாவில் இதேபோன்ற மோசடியில் ஈடுபட்டதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. .

    இந்த மோசடியில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆபாச பட தொழிலில் தள்ளப்பட்டிருக்கலாம் என்று அமலாக்கத்துறை தெரிவித்தது.

    • சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
    • அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

    சேலம்:

    சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

    ஆபாச வீடியோ

    இந்த நிலையில் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் நீ ஆஸ்பத்திரியில் தங்கி இருந்த போது குளித்த வீடியோ என்னிடம் உள்ளது. நான் அழைக்கும் இடத்திற்கு வரவேண்டும் என்று மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கதறினார்.

    இதற்கிடையே அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    மிரட்டல்

    இந்தநிலையில் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர் நான் கூப்பிடும் இடத்திற்கு வராவிட்டால் குளிக்கும் வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன அந்த பெண் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது 2 முறையும் வெவ்வெறு செல்போன் எண்களில் இருந்து அந்த நபர் பேசியது தெரிய வந்தது. மேலும் தனது கணவர் சிகிச்சையில் இருந்த போது பக்கத்து படுக்கையில் இருந்த நபர் நான் குளிக்கும் போது வீடியோ எடுத்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக அந்த பெண் கூறி உள்ளார்.

    செல்போன் எண்ணை வைத்து விசாரணை

    இதையடுத்து அந்த பெண்ணுக்கு பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த நபர் தலைமறைவானது தெரிய வந்தது.

    அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • குற்றம்சாட்டப்பட்டவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்து இருந்தார்.
    • ஒருவர் தனது தனிப்பட்ட நேரத்தில் ஆபாச படம் பார்ப்பது குற்றம் இல்லை.

    தனிமையில் இருக்கும் போது, மற்றவர்களுக்கு காண்பிக்காமல் ஆபாச படம் பார்ப்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதால், அதில் எந்த தவறும் இல்லை என்று கேரளா உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

    இதுபோன்ற விஷயத்தை குற்றமாக அறிவிப்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவதாகவும், தனிப்பட்ட விருப்பதில் தலையிடுவதாக இருக்கும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

    2016-ம் ஆண்டு காவல் துறையினர் 33 வயதான நபர் ஒருவர் சாலையின் ஓரத்தில் நின்றுக் கொண்டு தனது மொபைல் போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த போது கைது செய்து, அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 292-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

    வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்து இருந்தார். இது தொடர்பான விசாரணையின் போது, ஆபாச படங்கள் காலம்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அதனை குழந்தைகள் உட்பட அனைவராலும் இயக்க முடிகிறது என்று நீதிபதி தெரிவித்து இருக்கிறார்.

    • 2000 மக்களை கொண்ட ஒரு பழங்குடி குழுவினர் வசிக்கும் பகுதிக்கு எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் கடந்த வருடம் இணையதள வசதியை கொண்டுவந்தது.
    • சமூக வலைத்தளங்களிலும், ஆபாசப் படங்களிலும் இந்த மக்கள் நாள் முழுவதும் மூழ்கியுள்ளதாகக் இனக்குழுவின் மூத்தவர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

     சுமார் 1000 மயில்களுக்கு பறந்து விரிந்து கிடைக்கும் அமேசான் காடுகளில் ஆயிரக்கணக்கான இனக்குழுக்களாக பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவற்றுள் பல இனக்குழுக்கள் வெளியுலக தொடர்பே இல்லாமல் வாழ்ந்து வருகிறது. சில பழங்குடிகள் மட்டுமே வெளியுலகத்தின் வசதிகளை பெற்று தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டுள்ளனர்.

    உலகின் வளர்ந்த நாடுகளில் முதன்மையானதாக விளங்கும் அமெரிக்காவின் அருகில் உள்ளதால் அமேசானில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் சமீப காலங்களில் நிகழலாமல் இல்லை. அந்த வகையில் 2000 மக்களை கொண்ட ஒரு பழங்குடி குழுவினர் வசிக்கும் பகுதிக்கு உலக பணக்காரனாரான எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் கடந்த வருடம் இணையதள வசதியை கொண்டுவந்தது.

     

     

    அப்போதிலிருந்து தொலைத்தொடர்பில் அந்த பழங்குடி மக்கள் மேம்பட்டிருந்தாலும் அந்த இனக்குழுவின் மூத்தவர்களால் ஒரு விஷயத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்க முடிவதில்லை. அதாவது இந்த பழகுடியினத்தைச் சேர்ந்த ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் ஆபாசப் படங்களுக்கு அடிமையாக மாறிவருகின்றனர் என்று கூறப்படுகிறது.

     

    சமூக வலைத்தளங்களிலும், ஆபாசப் படங்களிலும் இந்த மக்கள் நாள் முழுவதும் மூழ்கியுள்ளதாகக் குழுவின் மூத்தவர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஆனால் இணையதளத்தால் ஏற்படும் நன்மைகளையும் அவர்களால் புறக்கணித்து விட முடியாததால் செய்வதறியாது அப்பழங்குடியின மூத்தவர்கள் விழிக்கின்றனர். 

    • பெரும்பாலான சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு என சில விதிமுறைகளும், தனியுரிமை கொள்கைகளும் உண்டு.
    • உலக மக்களால் அதிகமாக பயன்படுத்தபடும் செயலியாக திகழ்கிறது எக்ஸ்.

    உலக மக்களால் அதிகமாக பயன்படுத்தபடும் செயலியாக திகழ்கிறது எக்ஸ்.இதற்குமுன் டுவிட்டர் என்றழைக்கப்பட்ட செயலி எலான் மஸ்க் வாங்கியதற்கு பிறகு அதில் பல மாற்றங்களை அமைத்து, புது லோகோ, புது பிராண்டிங் செய்து 2023 ஆம் ஆண்டு எக்ஸ் என்று பெயரையும் மாற்றினார்.

    பெரும்பாலான சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு என சில விதிமுறைகளும், தனியுரிமை கொள்கைகளும் உண்டு. அதில் பல செயலிகள் அரை நிர்வாண புகைப்படங்களையும், நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் பதிவு செய்ய அனுமதிப்படு கிடையாது. அதை மீறி நாம் அதுபோன்ற புகைப்படங்களை பதிவிட்டால் அந்த செயலியில் இருந்து நம்முடைய அக்கவுண்டை முடக்கிவிடுவர்.

    தற்பொழுது எக்ஸ் தளத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் நாம் இனிமேல் ஆபாச தரவுகளையும் எக்ஸ் தளத்தில் பதிவு செய்யலாம். 18 வயதிற்கு கீழ் செயலியை பயன்படுத்துவோர் இந்த ஆபாசங்களை பார்க்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

    ஒருவரை துன்புறுத்தும் காட்சிகளோ, மைனர் வயதுடையவரின் பாலியல் சீண்டுதல்களோ, அனுமதியின்றி வற்புறுத்தும் காட்சிகளோ இடம் பெறாது என தெரிவித்துள்ளனர். ஆபாசமான புகைப்படங்களை நீங்கள் ப்ரொஃபைல் பிக்-ஆக வைக்கமுடியாது எனவும் கூறியுள்ளனர்.

    இந்த அறிக்கை பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த அறிக்கை மற்ற சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக், டிக்டாக் போன்றவற்றில் இருந்து மாறுப்பட்டவையாக இருக்கிறது.

    எக்ஸ் தளத்தின் இந்த அறிக்கையினால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆபாச திரைப்படங்களை எளிதில் பார்க்க கூடியதாக அமையும் என நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    செக்ஸில் நெருங்கிய உறவுநிலை மற்றும் மெய்மறந்த இன்பம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கும். இது ஆன்மீகத்திற்கு ஒப்பானது என பாதிரியார் கூறியுள்ளார்.
    கரோலினா:

    கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்த நார்ம் செல்ப் என்ற 83 வயது ஓய்வு பெற்ற பாதிரியார் ஆபாச பட நடிகராக மாறினார். தனது வாழ்வின் பெரும் பகுதியை கிறிஸ்தவ ஆலயத்திலேயே செலவிட்டு வந்த அவர் தனது ஆபாச பட வாழ்வில் இருந்து கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஆன்மீக வாழ்வின் மகிழ்ச்சியான பகுதியாகதான் நாம் செக்ஸை நினைக்க வேண்டும். செக்ஸ் என்பது ஒரு விருந்தில் கலந்து கொள்வது போன்றது. அதனாலேயே இந்த தொழிலை செய்வதில் நான் விருப்பம் கொண்டு இருக்கிறேன். கேமராவுக்கு முன் மேற்கொள்ளும் இந்த தொழிலை நான் கட்டணம் எதுவும் பெறாமலேயே செய்து வருகிறேன். 

    ஆபாச பட நடிகராக இருப்பதில் கிடைத்த அனுபவம் மகிழ்ச்சியானது. உண்மையில் எனது உடல் ஒரு கோவில் என்பதை நான் சமீப நாட்களில்தான் கண்டறிந்து கொண்டேன். செக்ஸில் நெருங்கிய உறவுநிலை மற்றும் மெய்மறந்த இன்பம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கும். இது ஆன்மீகத்திற்கு ஒப்பானது. 

    செக்ஸ் சார்ந்த விசயங்களை ஆபத்து என கூறி வரும் சமூகம், அந்த எண்ணத்தை மாற்றும் வரை நான் ஆபாச படங்களில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டு உள்ளேன். ஆபாசம் (போர்ன்) என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஓர் அழுத்தப்பட்ட சுற்று சூழலில் இருந்து இறுதியாக வெளியே வந்து, ஒவ்வொரு மரபுசார்ந்த விதிகளில் இருந்தும் வெளியே வந்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அதற்குதான் இந்த சமூகம் போர்ன் என பெயரிடப்பட்டு உள்ளது. ஆபாச பட நாயகன் பட்டம் தழுவியதில் தனக்கு மகிழ்ச்சிதான்.

    இவ்வாறு நார்ம் செல்ப் கூறுகிறார்.
    ×