என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "co-operative society"

    • 2021-22 நிதியாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் அதிகளவில் உரம் விற்பனை செய்த மூன்று கூட்டுறவு சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • 527 டன் அளவு உரம் விற்பனை செய்த, பள்ளபாளையம் கூட்டுறவு சங்கம் முதல் பரிசு பெற்றது.

    திருப்பூர் :

    தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உர வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வகையில், 2021-22 நிதியாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் அதிகளவில் உரம் விற்பனை செய்த மூன்று கூட்டுறவு சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இதில், 527 டன் அளவு உரம் விற்பனை செய்த, பள்ளபாளையம் கூட்டுறவு சங்கம் முதல் பரிசு பெற்றது. 354 டன் விற்பனை செய்த ருத்திரபாளையம் கூட்டுறவு சங்கம் இரண்டாம் பரிசும், 343 டன் விற்பனை செய்த தளி கூட்டுறவு சங்கம் மூன்றாவது பரிசையும் பெற்றது.கலெக்டர் அலுவலகத்தில் இந்த மூன்று சங்கங்களுக்கும் பரிசு வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மண்டல இணை பதிவாளர் சீனிவாசன், கரூர் மண்டல இணை பதிவாளர் கந்தராஜா ஆகியோர் இதனை வழங்கினர். சரக துணை பதிபதிவாளர் சண்முகவேல், உடுமலை நகர கூட்டுறவு வங்கி துணை பதிவாளர் கதிரவன் முன்னிலை வகித்தனர்.

    • கிடங்கு பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட்டது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் , அவினாசி வட்டாரம் நடுவச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகள்- வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்களுக்கான கிடங்கு பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இந்த பயிற்சி முகாம் மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட்டது. திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சொ. சீனிவாசன் முகாமை தொடங்கி வைத்தார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அழகுபாண்டியன், இயக்குனர் முனைவர் தர்மராஜ் மற்றும் கள அலுவலர் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி கையேடு மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    • 35 ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஏற்றி வருவதுடன் உறுப்பினர்களுக்கு 25 ஆண்டுகளாக தொடர்ந்து 14 சதவீதம் பங்கு ஈவுத்தொகை வழங்கி வருகிறது.
    • உறுப்பினர்களிடமிருந்து ரூபாய் 598. 29 லட்சம் வைப்புகள் பெறப்பட்டும் 835 புள்ளி 15 லட்சம் கடன் வழங்கப்பட்டது.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு கும்பகோணத்தில் நடைபெற்ற 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட அளவில் சிறந்த சங்கமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    T.1349 மதுக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 30.9.1957ல் பதிவு செய்யப்பட்டு 4050 உறுப்பினர்களுடன் ரூ.40.91 லட்சம் பங்கு மூலதனத்துடன் சிறப்பாக செயல்படும் சங்கம் ஆனது 35 ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஏற்றி வருவதுடன் உறுப்பினர்களுக்கு 25 ஆண்டுகளாக தொடர்ந்து 14 சதவீதம் பங்கு ஈவுத்தொகை வழங்கி வருகிறது.

    இதனை அடுத்து நடைபெற்ற 69 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட அளவில் சிறந்த சங்கமாக தேர்வு செய்யப்பட்டு மாநில அரசின் தலைமை கொரடா மூலம் பரிசு பெறப்பட்டுள்ளது.

    இந்த சங்கத்தின் அனைத்து கணக்கீடுகளும் கணினி மூலம் செயல்படுவது டன் வழங்கப்படும் ரசீதுகள் அனைத்தும் கணிணி வழியில் வழங்கப்பட்டு வருகிறது.

    உறுப்பினர்களிடமிருந்து ரூபாய் 598. 29 லட்சம் வைப்புகள் பெறப்பட்டும் 835 புள்ளி 15 லட்சம் கடன் வழங்கப்பட்டது..வாடிக்கையாளரகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்கின்ற சங்கம் அரசின் சிறப்பு திட்டங்களான கூட்டுறவு ஆங்கில மருந்தகம், பொது சேவை மையம் அக்ரோ சர்வீஸ் சென்டர் மற்றும் பல சேவை மையத்தின் மூலம் கதிர் அறுவடை இயந்திரம், டிராக்டர், டிப்பர் மற்றும் கல்டிவேட்டர் மூலம் குறைந்த செலவில் சேவை செய்ய வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    இந்த சங்கம் மதுக்கூர் சங்க தலைவர் தண்டாயுதபாணி தலைமையிலும், செயலாளர் வீரகுமார் செயல்பாட்டிலும் செயல்பட்டு வருகிறது.

    • சங்கம் தற்பொழுது கடன் வழங்குதல், டெபாசிட் சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வைத்து சிறந்த சங்கமாக தேர்வு செய்யப்படுகிறது.
    • தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் சாத்தான்குளம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் சிறப்பாக செயல்பட்டு கடந்த 1990-ம் ஆண்டு முதல் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. இச்சங்கம் தற்பொழுது கடன் வழங்குதல், டெபாசிட் சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வைத்து சிறந்த சங்கமாக தேர்வு செய்யப்படுகிறது. மாநில அலுவலக போட்டியில் பெரம்ப லூர் மாவட்டம் முதல் இடத்திலும், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை சங்கம் 2-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

    இதற்கான விருது வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. அப்போது சாத்தான்குளம் சங்க தலைவர் பொன் முருகேசனிடம் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார். விழாவில் வங்கி செயலர் எட்வின் தேவஆசிர்வாதம், பணியாளர்கள் முருகேசன், வக்கீல் கிருபா, குணசேகர் உள்ளிட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சங்க தலைவர் பொன்முருகேசன் தலைமையில் வங்கி செயலர் எட்வின் தேவ ஆசிர்வாதம் உள்ளிட்ட வங்கி அலுவலர்கள் தெற்கு மாவட்ட தி.மு.க செயலரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து கேடயத்தை காண்பித்து பாராட்டு பெற்றனர்.


    • விசைத்தறிகூடம், கறிக்கோழி பண்ணை உள்ளிட்ட தொழில்கள் நடைபெற்று வருகின்றன.
    • வங்கி சம்பந்தமான பணிகளுக்கும் விவசாயிகள் பல்லடம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் பணிக்கம்பட்டி கிராமத்தில் கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அந்த பகுதி மக்கள் முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் ஒன்றியம் பணிக்கம்பட்டி ஊராட்சியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு விவசாயம், விசைத்தறிகூடம், கறிக்கோழி பண்ணை உள்ளிட்ட தொழில்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் பணிக்கம்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் இல்லை. இதனால் விவசாயிகளுக்கான உரங்கள், மருந்து பொருட்கள், உள்ளிட்டவை வெளி மார்க்கெட்டில் வாங்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் வங்கி சம்பந்தமான பணிகளுக்கும் விவசாயிகள் பல்லடம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.

    இதற்கிடையே மத்திய அரசு பட்ஜெட்டில் கிராமங்கள் தோறும் கூட்டுறவு சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.எனவே எங்கள் பணிக்கம்பட்டி கிராமத்துக்கு முன்னுரிமை அளித்து கூட்டுறவு கடன் சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நகைக்கடன் மற்றும் மகளிர் கடனாக ரூ.7573 கோடி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதில் ரூ.3415 கோடியை மட்டுமே தமிழக அரசு திரும்பக் கொடுத்திருக்கிறது.
    • கூட்டுறவு சங்கங்களின் நிதி சுமார் ரூ.10,000 கோடி திரும்ப வராததால் அவற்றின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாதவை கூட்டுறவு அமைப்புகள் ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் கூட்டுறவு அமைப்புகள் மூடுவிழாவை நோக்கி பயணிக்கின்றன. அதற்குக் காரணம் தமிழக அரசின் தவறான அணுகு முறை தான். தமிழ்நாட்டில் கடந்த 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் பயிர்க்கடன் தள்ளுபடி நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. நகைக்கடன் மற்றும் மகளிர் கடனாக ரூ.7573 கோடி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதில் ரூ.3415 கோடியை மட்டுமே தமிழக அரசு திரும்பக் கொடுத்திருக்கிறது. இன்னும் ரூ.4158 கோடி கடன் தொகையை திரும்பத் தர வேண்டியுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப் பட்டதில் இன்னும் ரூ.5000 கோடிக்கும் மேல் அரசிடமிருந்து திரும்பப் பெற வேண்டியுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் நிதி சுமார் ரூ.10,000 கோடி திரும்ப வராததால் அவற்றின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

    தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்காக வழங்க வேண்டிய ரூ.10,000 கோடியை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி அவை முழு அளவில் செயல்படவும், அனைத்து சங்கங்களும் லாபம் ஈட்டும் நிலையை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது.
    • மாநிலம் முழுவதும் 34,600 ரேசன் கடைகளை கூட்டுறவு சங்கங்கள் நடத்தி வருகின்றன.

    சென்னை:

    தேசிய கூட்டுறவு தர தகவலின்படி தமிழகத்தில் கிட்டத்தட்ட 22,110 மாநில அளவிலான சங்கங்கள் மற்றும் 140 பல மாநில சங்கங்கள் உள்ளன.

    கடந்த ஆண்டு பிப்ரவரியில் மாநில கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் வெளியிட்ட சுற்றறிக்கையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2.23 கோடியாக இருந்தது.

    இதற்கிடையே கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது. இதையொட்டி அதிகாரிகள் உறுப்பினர்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.

    இறந்தவர்கள் மற்றும் மீண்டும் உறுப்பினர்களாக இருக்க தகுதியற்றவர்கள் தொடர்பாக நீக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி கூட்டுறவு சங்கங்களின் பட்டியலில் இருந்து கிட்டத்தட்ட 44 லட்சம் தகுதியற்ற உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் தான் அதிக பட்சமாக 3.23 லட்சம் தகுதியற்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக மதுரை (2.52 லட்சம்), சேலம் (2.09 லட்சம்), திருச்சி (2.08 லட்சம்), சிவகங்கை (2.03 லட்சம்) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

    பெயர் நீக்கப்பட்டவர்களில் 18 லட்சம் பேர் இறந்தவர்கள் பிரிவின் கீழ் வருகிறார்கள். சுமார் 2 ஆண்டுகளாக ஆதார் எண்ணை வழங்காதவர்களும் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் ஆதார் விவரங்களை அளித்தால் அவர்களை மீண்டும் உறுப்பினராக சேர்த்துக் கொள்வோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது கூட்டுறவு சங்கங்களில் 1.46 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். சேலத்தில் அதிகபட்சமாக 10.8 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதை தொடர்ந்து திண்டுக்கல் (7.12 லட்சம்), கடலூர் (6.66 லட்சம்), திருச்சி (5.92 லட்சம்), கன்னியாகுமரி (5.68 லட்சம்) உள்ளனர்.

    மாநிலம் முழுவதும் 34,600 ரேசன் கடைகளை கூட்டுறவு சங்கங்கள் நடத்தி வருகின்றன. வாக்காளர் பட்டியல் திருத்திய பிறகு கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறும்.

    புதியம்புத்தூர் அருகே புதுப்பிக்கப்பட்ட கூட்டுறவு சங்க கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர்-தட்டப்பறை ரோட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு நாணய சங்க கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. இதனால் இந்த வளாகத்தின் பின் பகுதியில் உள்ள குடோனில் தொடக்க கூட்டுறவு வங்கி செயல்பட்டு வந்தது. தற்போது சங்க கட்டிட பணி முடிந்து 6 மாதம் ஆகியும் வங்கி கட்டிடம் திறக்கப்படவில்லை. 

    குடோனில் வங்கி செயல்படுவதால் விவசாயிகளுக்கு விற்பனை செய்யக்கூடிய பொட்டாஷ், யூரியா போன்ற உரங்கள் வைக்க இடமில்லாமல் உரங்களை வாங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இப்பகுதி விவசாயிகள் வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு உரங்களை வாங்க வேண்டியது உள்ளது. 

    விவசாயிகள் இந்த குடோனில் விவசாய பொருட்களை வைக்க முடிவதில்லை. எனவே புதுப்பிக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் கூட்டுறவு சங்கத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×