என் மலர்
நீங்கள் தேடியது "e-waste"
- சிமென்ட ஆலைக்கும், மின்கழிவுகள் தூய்மை பணியாளர்கள் மூலம் விற்பனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மீறி குப்பைகள் கொட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் விதித்திடவும் திட்டம்.
சீர்காழி:
சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்ப தாவது: -
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சீர்காழி நகராட்சியில் உள்ள24 வார்டுகளிலும் தற்காலிக மற்றும் நிரந்த தூய்மைபணியாளர்களை 107பேரை கொண்டு நாள்தோ றும் வீடுகளில் வழங்ப்படும் மக்கும்குப்பைகள்,மக்காத குப்பைகளை தரம்பிரித்து வாங்கப்படுகிறது.
நகரில் நாள்தோறும் மக்கும் குப்பை ஆறரை டன் உட்பட 12டன் குப்பைகள் அள்ளப்படுகிறது.இவ்வாறு சேகரம் ஆகும் குப்பைகள் நகராட்சி உரகிடங்கிற்கு கொண்டுசெல்லப்படுகிறது.
அதில் மக்கும் குப்பைகள் மட்டும் உரகிடங்கில் கொட்டப்படுகிறது.மக்காத உடைந்த பாட்டில், நெகிழி போன்ற குப்பைகள் அரியலூர் சிமென்ட ஆலைக்கும், மின்கழிவுகள் தூய்மைபணியாளர்கள் மூலம் விற்பனை செய்து கொள்ளவும் அறிவுறுத்த ப்பட்டுள்ளது.
உரகிடங்கில் குப்பை மேடு இல்லாத நிலையை உருவாக்கிட நடவடிக்கைகள் நடை முறைப்படுத்தபடுகிறது.
அவ்வாறு நகரில் பொதுஇடங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுத்திட குப்பை கொட்டப்படும் இடத்தின் அருகருகே வசிக்கும் மக்கள் அந்த பகுதி நகர்மன்ற உறுப்பினர் கொண்ட குழு அமைத்து, குப்பைகள் கொட்டுவதை கண்காணித்து தடுத்திடவும் மீறி கொட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் விதித்திடவும் திட்டம் நடைமுறை ப்படுத்த ப்படவுள்ளது. தூய்மையான நகராட்சியாக மேம்படுத்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
- பிளாஸ்டிக்களை பண்டல்களாக செய்து சிமெண்ட் ஆலைக்கு எரிபொருளுக்காக அனுப்பி வைக்கின்றனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் சேகரம் செய்யப்படும் திடக்கழிவுகளை பொதுமக்களே மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் அபாயக ரமான கழிவுகள் என தரம் பிரித்து ஒப்படைக்க வலியுறுத்தப்படுகிறது.
சேகரம் செய்யப்படும் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மக்காத மறுசுழற்சிக்கு உதவும் பொருட்களை தூய்மை பணியாளர்களே விற்பனை செய்து அதற்கான பணப்பயன் அடைகின்றனர்.
மறுசுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக்களை பண்டல்களாக செய்து சிமெண்ட் ஆலைக்கு எரிபொருளுக்காக அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் இ வேஸ்ட் எனப்படும் பழுதடைந்த பல்ப்கள், டியூப் லைட்கள், பேட்டரிகள், கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சி பிக்சர் டியூப்கள் போன்ற கழிவுகளை வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளில் சேகரம் செய்யும் பணிகளை நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிவக்குமார் உத்தரவின்படி, நகராட்சி துப்புரவு அலுவலர் சோழ ராஜ் துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சவுந்தரராஜன் துப்புரவு பணி மேற்பார்வையாள ர்கள் தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
சேகரம் செய்யப்படும் மின் கழிவுகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற மின்னணு கழிவுகளை முறைப்படி அப்புறப்படுத்தும் மறுசுழற்சி யாளரிம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடுமலை:
உடுமலை நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்டிரானிக்ஸ் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களிடம் பயன்படுத்தாமல் வீணாக உள்ள மின்சாதன பொருட்களான லைட், பிரிட்ஜ், ஏ.சி., மொபைல் போன் பாகங்கள், பேட்டரி, பல்பு, சிடி, சி.எப்.எல். பல்பு, டி.வி., மிக்சி, பேன், வாஷிங் மிஷின், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் உள்ளிட்ட மின்னணு கழிவுகள் பொது இடங்களில் வெளியேற்றப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனையடுத்து இவற்றை சேகரிக்கும் சிறப்பு முகாம் உடுமலை நகராட்சியில் நடந்தது. நகராட்சி தலைவர் மத்தீன், கமிஷனர் சத்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம்முகாமில் 1.5 டன் மின்னணு கழிவுகளை பொதுமக்கள் கொண்டு வந்து வழங்கினர்.
மக்கள் வீணாக உள்ள மின்னணு கழிவுகளை பஸ் நிலையம் சுகாதார வளாகம், சர்தார் வீதி சுகாதார அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.