என் மலர்
நீங்கள் தேடியது "குடித்து"
- கெங்–க–வல்லி அருகே கூட–மலை பகு–தி–யில் உள்ள ஒரு அரசு மேல்–நி–லைப்–பள்–ளி–யில் 16 வய–து–டைய மாணவி ஒரு–வர் பிளஸ்-2 படித்து வரு–கி–றார்.
- இவ–ருக்கு உடல்–நிலை சரி–யில்–லா–ததால் கடந்த 8-ந் தேதி மாத்–திரை சாப்–பி–டு–மாறு பெற்–றோர் தெரி–வித்–த–னர்.
சேலம்:
கெங்–க–வல்லி அருகே கூட–மலை பகு–தி–யில் உள்ள ஒரு அரசு மேல்–நி–லைப்–பள்–ளி–யில் 16 வய–து–டைய மாணவி ஒரு–வர் பிளஸ்-2 படித்து வரு–கி–றார். இவ–ருக்கு உடல்–நிலை சரி–யில்–லா–ததால் கடந்த 8-ந் தேதி மாத்–திரை சாப்–பி–டு–மாறு பெற்–றோர் தெரி–வித்–த–னர். ஆனால் அவர் சாப்–பி–டா–த–தால், பெற்–றோர் திட்டி உள்–ள–னர். இதில் மன வேதனை அடைந்த மாணவி வீட்–டில் இருந்த எறும்பு மருந்தை (விஷம்) குடித்து விட்டு 9-ந் தேதி அன்று பள்–ளிக்கு சென்–றுள்–ளார். அங்கு மயக்–கம் அடைந்–த மாண–வியை கூட–மலை அரசு ஆரம்ப சுகா–தார நிலை–யத்–தில் சேர்த்–த–னர். முத–லு–தவி சிகிச்சை அளிக்–கப்–பட்டு, மேல் சிகிச்–சைக்–காக ஆத்–தூர் அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் சேர்த்–த–னர். அங்கு அவ–ருக்கு தீவிர சிகிச்சை அளிக்–கப்–பட்டு வரு–கிறது. இது–கு–றித்து கெங்–க–வல்லி போலீ–சார் விசா–ரணை நடத்தி வரு–கி–றார்–கள்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அருகே பொக்லைன் ஆபரேட்ட ராக வேலை பார்த்து வந்த தனசேகரன், தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார்.
- சுண்டக்காம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள செட்டுக்காரன் குட்டை அருகே விஷம் குடித்த நிலையில் சாலையோரமாக இறந்து கிடந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அருகே அப்பி நா யக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் தனசேகரன் (வயது 32). இவருக்கு திருமணம் ஆகவில்லை.
பொக்லைன் ஆபரேட்ட ராக வேலை பார்த்து வந்த தனசேகரன், தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் அவரது பெற்றோர் தனசேகரனை திட்டினர்.
இதனால் மனம் உடைந்த அவர், தேசிய நெடுஞ்சாலை யில் உள்ள தனியார் நூல் மில்லில் இருந்து சுண்டக்காம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள செட்டுக்காரன் குட்டை அருகே விஷம் குடித்த நிலையில் சாலையோரமாக இறந்து கிடந்தார்.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து, தனசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 11-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
- முதிய வரை மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை அளித்தும் பல னின்றி முத்துசாமி உயிரிழந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் கந்தம்பாளையம் அருகே தேவனாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 61).
இவருக்கு தீராத முழங்கால் வலி இருந்து வந்தது. இதன் காரணமாக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் வலி சரியாகவில்லை. இதனால் விரக்தியில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த
11-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதனால் வயிறு எரிச்சல் ஏற்படவே சத்தம் போட்டு உள்ளார். அதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர், முதிய வரை மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பல னின்றி முத்துசாமி உயிரி ழந்தார். இதுகுறித்து முத்து சாமியின் மகள் மாலதி (28) கொடுத்த புகாரின்பேரில், நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
- இவரது மனைவி தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே சேக்கல் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரெஞ்சிதா (27). இவர் தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சதீசுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புதியதாக வீடு ஒன்று கட்டினார். இதற்கு பலரிடம் கடன் வாங்கியிருந்தார். அதனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை. இதனால் மன முடைந்த நிலை யில் அவர் இருந்து வந்தார்.
இந்த நிலை யில் நேற்று சதீஷ் தென்னை மரத்துக்கு வைக்கும் விஷ மாத்திரை தின்று மயங்கிய நிலையில் இருந்தார். உடனே அவரை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர் பரிசோதனையின் போது சதீஷ் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இது குறித்து குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பூட்டிய அறையில் பிணமாக கிடந்தார்
- ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா?
கன்னியாகுமரி:
நாகர்கோவில் கோட்டார் இருளப்பபுரம் மதுசூதன பெருமாள் தெருவை சேர்ந்த வர் நாகராஜன். இவரது மகன் கவுதமன் (வயது 24). இவர் சென்னை யில் உள்ள சட்ட கல்லூரியில் படித்து வந்தார். தற்பொழுது கல்லூரிக்கு செல்லாமல் ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்தார்.
இந்நிலையில் கவுதமன் கடந்த சில நாட்களாக சரிவர வீட்டில் யாருடனும் பேசாமல், சாப்பிடாமல் மனவிரக்தியில் இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு கவுதமன் தனது அறைக்கு சென்றார். மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் அவரது அறையின் கதவு திறக்கப்பட வில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த நாகராஜன் மகனை பலமுறை அழைத் துப் பார்த்தும் கதவு திறக்கப் படாததால் கதவை உடைத்து பார்த்தபோது கவுதமன் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகராஜன் கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த கவுதமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கவுதமன் ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பலியான கவுத மனின் உடல் பிரேத பரிசோ தனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவி னர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.
- வாவிபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.
- கடந்த 19-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை குன்னமலை சமத்துவபுரம் நிழற்கூடத்தில் அமர்ந்து செல்வராஜ் அங்கு தான் வாங்கி வந்த பூச்சிக்கொல்லி மருந்து குடித்துள்ளார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா குன்னமலை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49). இவர் வாவிபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மல்லிகா (45). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் செல்வராஜ் மருத்துவமனைக்கு சென்று தனது உடலை பரிசோதனை செய்தார். ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாகவும், அதே போல் உடலில் ரத்த அழுத்த அளவும் அதிகமாக இருப்ப தாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் செல்வராஜ் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். வீட்டில் இருக்கும் போது நான் சீக்கிரமாக செத்து விடுவேன் என்று புலம்பிக்கொண்டிரு ந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை குன்னமலை சமத்துவபுரம் நிழற்கூடத்தில் அமர்ந்து செல்வராஜ் அங்கு தான் வாங்கி வந்த பூச்சிக்கொல்லி மருந்து குடித்துள்ளார்.
பின்னர் வீட்டிற்கு சென்று தனது மனைவி மல்லிகாவிடம் தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சை க்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டது. அங்கிருந்து ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற் கனவே செல்வராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செல்வராஜின் மனைவி மல்லிகா நல்லூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இச்சம்பவ குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இரவு ஆன பிறகும் அவர் வீடு திரும்பவில்லை.
- வேலை பார்க்கும் விவசாய தோட்டத்தில் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தார்.
கன்னியாகுமரி:
மேலசங்கரன்குழி பகுதியைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் (வயது 61). இவரது மகன்கள் பிரபு, மணிகண்டன் ஆகியோர் சென்னையில் பணி புரிந்து வருகின்றனர். சக்திவேல் தனது மனைவி சிவந்திகனியுடன் மேலசங்கரன்குழியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை யடுத்து சக்திவேல் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். இரவு ஆன பிறகும் அவர் வீடு திரும்ப வில்லை. ஆகவே அவரை அவருடைய உறவினர்கள் இன்று தேடினர்.
அப்போது சக்திவேல், வேலை பார்க்கும் விவசாய தோட்டத்தில் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக விஷம் குடித்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- சேலம் அம்மாபேட்டை சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த வேலு மனைவி ராமாயி வீட்டை வாங்கியவர் வீட்டை காலி செய்யுமாறு மூதாட்டியிடம் கூறியுள்ளார்.
- இதனால் மனமுடைந்த ராமாயி சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த வேலு மனைவி ராமாயி (72). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது வீட்டை அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு விற்று விட்டார். இருப்பினும் அதே வீட்டில் குடியிருந்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டை வாங்கியவர் வீட்டை காலி செய்யுமாறு மூதாட்டியிடம் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த ராமாயி சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.