என் மலர்
நீங்கள் தேடியது "summer training"
- பயிற்சியில் பங்கேற்கும்அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
- கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்துபந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி வகுப்பு நடக்கிறது.
திருப்பூர்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான இலவச கோடை கால பயிற்சி முகாம் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 1-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்து பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி வகுப்பு நடக்கிறது.
பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படும்.எனவே இந்த பயிற்சி முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலை, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்பவர்கள் தங்கள் பெயரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு நல அதிகாரியை 74017 03515 என்ற எண்ணிலும், தடகள பயிற்சியாளரை 88838 73814 என்ற எண்ணிலும், உதவியாளரை 97886 47557 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால் ஆகிய விளை யாட்டுக்களில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவு ள்ளது.
- காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெறும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் தெரிவித்திருப்ப தாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சேலம் பிரிவு சார்பாக அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் 15.05.2023 வரை சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால் ஆகிய விளையாட்டுக்களில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவு ள்ளது.
பயிற்சி முகாம் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெறும். முகாமில் சிறந்த விளை யாட்டு வீரர்களைக் கொண்டு அந்தந்த விளை யாட்டுக்களில் பயிற்சி அளிக்கப்படும். மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் முட்டை, பால் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
எனவே, சேலம் மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- 250 மையங்களில் நடத்தப்படுகிறது
- ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாக்கள் என தலைப்பு
வேலூர்:
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோடைகால பயிற்சி வகுப்புகள் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாக்கள் என்ற தலைப்பில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கல்வி பயின்று வரும் மாணவ, மாணவிகளின் திறன்களை வெளிக்கொண்டுவரும் விதமாக நடத்தப்பட்டு வருகின்றது.
வேலூர் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் ஒரு ஒன்றியத்திற்கு 30 மையங்கள் விதம் 250 மையங்களில் நடத்தப்படுகின்றது.
அரியூர், நம்பி ராஜபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது,
வேலூர் மாநகராட்சியின் 4-வது மண்டலக் குழு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட துணைத் தலைவர்கள் செ.நா.ஜனார்த்தனன் கே.விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி வழிகாட்டுதலின்படி பயிற்சிகள் நடைபெற்றன. இந்த பயிற்சிகள் மே மாதம் 2-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரையிலும் அனைத்து ஒன்றியங்களில் அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் 30 நாட்கள் நடைபெறுகிறது.
வானவில் மன்ற கருத்தாளர் அருணா மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வ தொண்டர்கள் தீபா, மாலினி, பாரதி, சோனியா மற்றும் லதா ஆகியோரின் பங்கேற்றனர்.
உடுமலை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தனிநபர், குழு விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை கண்டறியவும், விளையாட்டுக்களை கற்றுத்தரவும், ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் விளையாட்டு பயிற்சி முகாம் நடத்துகிறது.
இம்முகாமில் தடகளம், கால்பந்து, டேக்வாண்டோ, பேட்மின்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களுக்கு பயிற்சியாளர் வாயிலாக பயிற்சி வழங்கப்படும். காலை, 6 மணிமுதல்9 மணி வரை, மாலை 3மணி முதல் 6மணி வரை நடக்கும் பயிற்சி முகாம், கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை.
கொரோனா பாதிப்பு பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது பூஜ்ஜியமாகியுள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு போட்டிகள் நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறையும், மாவட்ட விளையாட்டுத்துறையும் கோடை விடுமுறை விட்டு ஒரு வாரமாகியும் சத்தமில்லாமல் உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி ஆய்வாளர் தரப்பில் இருந்து எந்த அறிவுறுத்தலும் இதுவரை வழங்கவில்லை.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபாலிடம் கேட்ட போது,கோடைகால பயிற்சி முகாம் குறித்த அறிவிப்பு, விளையாட்டுத்துறை தரப்பில் இருந்து வந்தவுடன் தெரிவிக்கப்படும் என்றார்.