search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி
    X

    பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி

    • 250 மையங்களில் நடத்தப்படுகிறது
    • ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாக்கள் என தலைப்பு

    வேலூர்:

    தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோடைகால பயிற்சி வகுப்புகள் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாக்கள் என்ற தலைப்பில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கல்வி பயின்று வரும் மாணவ, மாணவிகளின் திறன்களை வெளிக்கொண்டுவரும் விதமாக நடத்தப்பட்டு வருகின்றது.

    வேலூர் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் ஒரு ஒன்றியத்திற்கு 30 மையங்கள் விதம் 250 மையங்களில் நடத்தப்படுகின்றது.

    அரியூர், நம்பி ராஜபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது,

    வேலூர் மாநகராட்சியின் 4-வது மண்டலக் குழு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட துணைத் தலைவர்கள் செ.நா.ஜனார்த்தனன் கே.விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி வழிகாட்டுதலின்படி பயிற்சிகள் நடைபெற்றன. இந்த பயிற்சிகள் மே மாதம் 2-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரையிலும் அனைத்து ஒன்றியங்களில் அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் 30 நாட்கள் நடைபெறுகிறது.

    வானவில் மன்ற கருத்தாளர் அருணா மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வ தொண்டர்கள் தீபா, மாலினி, பாரதி, சோனியா மற்றும் லதா ஆகியோரின் பங்கேற்றனர்.

    Next Story
    ×