என் மலர்
நீங்கள் தேடியது "சதுரகிரி கோவில்"
- தொடர் மழை காரணமாகவும் மலையேறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
- குறைந்தளவே பக்தர்கள் வந்திருந்தனர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் நாள்தோறும் செல்வதற்கு சில நிபந்தனைகளுடன் கடந்த 2-ந் தேதி அனுமதி அளித்தது. எனினும் கோவிலில் நாள்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்படும் செய்தி மக்களை சென்றடையாததாலும், தொடர் மழை காரணமாகவும் மலையேறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதனிடையே, நேற்று முன்தினம் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில், குறைந்தளவே பக்தர்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில், வத்திராயிருப்பு பகுதியில் நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்ததால் ஓடையில் நீர்வரத்து அதிகரித்து வருவதை அடுத்து பக்தர்கள் இன்று மட்டும் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.
இதனால் சாமி தரிசனம் செய்வதற்காக தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பாக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
- அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
- காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. 4 பக்கமும் மலைகள் சூழ்ந்துள்ள இந்த கோவில் பகுதி அடர்ந்த வனப்பகுதியை கொண்டது.
சித்தர்கள் வாழும் பூமியாக அறியப்படும் இந்த மலையில் உள்ள சிவனை வழிபட்டால் நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் நாட்களில் பக்தர்கள் மலையேறிச் சென்று தரிசனம் செய்து வருவார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. இதனால் விசேஷ நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் பக்தர்கள் சென்று வந்தனர்.
இந்த நிலையில் மலையில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோரை வனத்துறையினர் பல்வேறு மீட்டனர்.
இதை தொடர்ந்து சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது வரை இந்த நடைமுறை வழக்கத்தில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக சதுரகிரி கோவில் பிரபலமடைய தொடங்கியது.
இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். ஒவ்வொரு முறையும் கூட்டம் அதிகரித்தது. குறிப்பாக ஆடி, தை, மகாளய அமாவாசை, சிவராத்திரி போன்ற விழாக்களின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு குவிந்து வருகின்றனர்.
இதற்கிடையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவிலுக்கு பக்தர்களை தினமும் அனுமதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் பக்தர்களை தினமும் தரிசனம்செய்ய அனுமதிக்க வேண்டும் என உத்தர விட்டதோடு சில வழிகாட்டு தல்களையும் வழங்கினர்.
மதுரை ஐகோர்ட்டு உத்தரவை நடை முறைப்படுத்துவது குறித்து விருதுநகர் மாவட்ட அதிகாரிகள், வனத்துறை யினர் தீவிர ஆலோசனை நடத்தினர். இறுதியில் இன்று (3-ந் தேதி) முதல் நாள்தோறும் பக்தர்களை சதுரகிரிக்கு அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் கூறுகையில், மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி சதுரகிரிக்கு தினமும் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே சோதனை சாவடி வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படு வார்கள். மாலை 4 மணிக்குள் லையில் இறங்கி திரும்பி வந்துவிட வேண்டும்.
உரிய அனுமதியின்றி எவரேனும் மலையில் தங்கி இருந்தால் கடுமு நடவடிக்கை எடுக்கப்படும். சதுரகிரிக்கு அனு மதிக்கப்பட்ட வழியில் மட்டுமே செல்ல வேண்டும். வேறு எந்த பகுதியிலும் நுழையக்கூடாது. மதுரை ஐகோர்ட்டு வழிகாட்டுதல்களை பின்பற்றி பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
இதற்கிடையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்பட்டி இன்று முதல் சதுரகிரிக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட னர். காலை 6 மணிக்கு தாணிப்பாறை அடிவார கேட் திறக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் யாரும் வரவில்லை.
நேற்று இரவு உத்தரவு வந்ததால் பொது மக்களுக்கு உடனடியாக விபரம் தெரியவில்லை. இதனால் இன்று பக்தர்கள் யாரும் சதுரகிரிக்கு வரவில்லை. இனிவரும் நாட்களில் பக்தர்கள் நாள்தோறும் வர ஆர்வம் காட்டுவார்கள் என தெரிகிறது.
- நாளை முதல் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதாலும், பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வழிபட பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட மாதத்தின் 8 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
நாளை (21-ந் தேதி) முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் வருகிற 23-ந் தேதி கார்த்திகை மாத அமாவாசையையொட்டி பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாளை (21-ந் தேதி) முதல் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனாலும், தாணிப்பாறை, வழுக்குப்பாறை, சங்கிலிப்பாறை ஆகிய ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதாலும், பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.
கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை மலை அடிவாரத்துக்கோ, கோவிலுக்கு தரிசனம் செய்யவோ பக்தர்கள் வர வேண்டாம். அதேநேரம் கோவிலில் பிரதோஷம், அமாவாசை பூஜைகள் வழக்கம் போல் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தின் பல்வேறு மாட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்வார்கள்.
- சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் கார்த்திகை தீப திருநாள் மற்றும் பவுர்ணமி பூஜைக்காக இன்று முதல் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி அளித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.
இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அனுமதி வழங்கப்படும்.
தமிழகத்தின் பல்வேறு மாட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் அதிகரித்து காணப்பட்டதால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த மூன்று பிரதோஷங்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமிக்கு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் மலைப்பகுதியில் உள்ள நீர் ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்ததாலும் தொடர்மழை அறிவிப்பு காரணமாகவும், நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலையேறி சென்ற சாமி தரிசனம் செய்ய வனத்துறை தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் கார்த்திகை தீப திருநாள் மற்றும் பவுர்ணமி பூஜைக்காக இன்று முதல் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி அளித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
- 10 வயதுக்கு உட்பட்டோர்களும், 60 வயதுக்கு மேற்பட்டோரும் மலையேற அனுமதி கிடையாது.
- கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சதுரகிரியை ஒட்டியுள்ள ஊஞ்சிக்கல் மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவியது.
திருமங்கலம்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
கடல் மட்டத்தில் இருந்து 3000 அடிக்கு மேல் உள்ள இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தலா 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் இந்தப் பகுதி உள்ளதால் மலையேறும் பக்தர்களுக்கு கெடுபிடிகள் விதிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் தமிழகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
அதன்படி இந்த ஆண்டு வருகிற 16-ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்கள் அதிக அளவில் திரளுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு நாளை (12-ந்தேதி) முதல் 17-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 வயதுக்கு உட்பட்டோர்களும், 60 வயதுக்கு மேற்பட்டோரும் மலையேற அனுமதி கிடையாது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது. இரவில் மலை கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை, விருதுநகர், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
நாளை முதல் பக்தர்கள் சதுரகிரிக்கு வரத்தொடங்குவார்கள் என்பதால் இந்தமுறை ஆடி அமாவாசைக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் குவிவார்கள் என தெரிகிறது. இதையொட்டி வனத்துறை மற்றும் போலீசார் சார்பில் பாதுகாப்பு பணிகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சதுரகிரியை ஒட்டியுள்ள ஊஞ்சிக்கல் மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவியது. இதன் காரணமாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முறை காட்டுத்தீ ஏற்பட வாய்ப்பில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் சதுரகிரி மற்றும் அதனை ஒட்டியுள்ள வனப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என தெரிகிறது.
- உப்புத்துறையில் இருந்து 18 கி.மீ தூரம் நடந்து சென்றால் சுந்தரமகாலிங்கம் கோவிலை அடைந்து விட முடியும். இதற்காக உப்புத்துறைக்கு 50க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டது
- வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவி லுக்கு செல்ல அனுமதிக்க ப்படுகின்றனர்.
வருசநாடு:
விருதுநகர் மாவட்டம் வத்ராப் அருகில் அமைந்து ள்ள சதுரகிரி சுந்தரமகா லிங்கம் கோவிலுக்கு ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த கோவிலுக்கு செல்ல தாணிப்பாறை வழியாகவும், தேனி மாவட்டம் உப்புத்துறை வழியாகவும் 2 பாதைகள் உள்ளது. உப்புத்துறை பகுதி மேகமலை வனச்சரணா லயத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் இந்த பாதை வருடம் முழுவதும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசை அன்று மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். உப்புத்துறையில் இருந்து 18 கி.மீ தூரம் நடந்து சென்றால் சுந்தரமகாலிங்கம் கோவிலை அடைந்து விட முடியும். இதற்காக உப்புத்துறைக்கு 50க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமி தரிச னத்துக்காக நேற்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உப்புத்துறை கிராமத்திற்கு வந்து மலைப்பாதை வழியாக கோவிலுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். மேகமலை வனப் பாதுகாப்பு வன சரகர் சாந்தினி தலை மையிலான வனத்துறையி னர் வருசநாடு, மேகமலை, கண்டமனூர் வனத்துறை யினர் யானைக்கஜம் பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து கோவி லுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து பிளாஸ்டிக், தீப்பெட்டி, பீடி, சிகரெட் உள்ளிட்ட தடை செய்யப்ப ட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
உணவு மற்றும் குடிநீர் பாட்டில்களுக்கு மட்டுமே வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவி லுக்கு செல்ல அனுமதிக்க ப்படுகின்றனர். அதேபோல மயிலாடு ம்பாறை போலீ சாரும் தொடர்ந்து பாது காப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்கள் வரும் போது சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர்.
- மழை பெய்தாலோ, காட்டுத் தீ ஏற்பட்டாலோ பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
திருமங்கலம்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சந்தன மகாலிங்கம்-சுந்தர மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவில் அடர் வனப்பகுதியில் உள்ளது.
இதனால் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்கள் வரும் போது சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாளை 28-ந்தேதி பிரதோஷம் வருவதை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் தாணிப்பாறை கேட்டில் இருந்து மலையேறி சென்று தரிசிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பயணிகள் மலையேறிச் செல்ல அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் கத்தி போன்ற ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மழை பெய்தாலோ, காட்டுத் தீ ஏற்பட்டாலோ பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
- உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கோவிலுக்கு பக்தர்கள் செல்ல எவ்வாறு உரிமை கோர முடியும்.
- வேண்டுமென்றால் மனுதாரர் குறிப்பிட்ட நாளில் காலை 1 மணி நேரம் மாலை 1 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதி வழங்கலாம்.
மதுரை:
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சடையாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி மலைக்கு மேல் உள்ள ஆனந்த வள்ளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா நடைபெறும். நவராத்திரி திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க மூன்று நாட்கள் அனுமதி வழங்க விருதுநகர் கலெக்டர், இந்து சமய அறநிலைத்துறை மற்றும் காவல்துறையிடம் அனுமதி கோரி மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அனுமதி மறுத்து விட்டனர்.
எனவே மூன்று நாள் இரவு தங்கி நவராத்திரி விழா கொண்டாட அனுமதிக்க உத்தரவிட கோரிய மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை நீதிபதி புகழேந்தி நேற்று விசாரித்து, அங்கு ஒருநாள் மட்டும் பக்தர்கள் தங்க அனுமதிக்கலாமா? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பு வக்கீல் ஆஜராகி, மலைக்கோவிலுக்கு செல்ல மூன்று பாதைகள் உள்ளன. மூன்று பாதைகளிலும் 3 போலீஸ் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 350 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி, உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கோவிலுக்கு பக்தர்கள் செல்ல எவ்வாறு உரிமை கோர முடியும். ஒரு பிரிவினருக்கு கோவிலில் தங்க அனுமதி கொடுத்தால் மற்றவர்களும் நீதிமன்றத்தை அணுகுவார்கள். இதை அனுமதிக்க முடியாது.
வேண்டுமென்றால் மனுதாரர் குறிப்பிட்ட நாளில் காலை 1 மணி நேரம் மாலை 1 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதி வழங்கலாம். அந்த முடிவை வனத்துறை தான் எடுக்க வேண்டும். இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
- கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
- மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சந்தன மகாலிங்கம், சுந்தர மகாலிங்கம் கோவில் பவுர்ணமி, பிரதோஷ வழிபாட்டிற்கு பிரசித்தி பெற்றதாக உள்ளது.
கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் பவுர்ணமியையொட்டி வருகிற 24-ந் தேதி முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்-மேக மலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சாப்டூர் வனச் சரகத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளது. கடல் மட்டத்தி லிருந்து 3500 அடி உயரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு கட்டாறுகள் மற்றும் நீரோடைகளை கடந்து கரடு முரடான மலைப்பாதை வழியாக 10 கி.மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.
இங்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக கடந்த மாதம் அமாவாசை வழிபாட்டிற்கு கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தற்போது வத்திராயிருப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் வழிபாடு செய்ய முடியுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த கோவிலுக்கு மலையேறிச் செல்வதற்கு காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு அனுமதி இல்லை. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல கூடாது உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளுடன் மட்டுமே வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.
- பக்தர்கள் மலைப்பகுதியில் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை.
- மலையேறுவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வத்திராயிருப்பு:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு வருகிற 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் மலைப்பகுதியில் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை. கோவிலுக்கு நடந்து செல்லும் மலைப்பாதைகளில் உள்ள ஆற்றுப்பகுதியில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தாலோ, ஆற்றுப்பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி, மலையேறுவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- பிரதோஷம் மற்றும் அமாவாசை உள்ளிட்ட நாட்களுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பாலித்தீன் பை, பீடி சிகரெட், மது மற்றும் போதைப்பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
சித்திரை மாத அமாவாசை, பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரிக்கு நாளை (5-ந்தேதி) முதல் 8-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
நாளை சித்திரை மாத பிரதோஷம் என்பதால் மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் பிரதோஷத்தை ஒட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், பழம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது.
அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. வருகிற 7-ந்தேதி சித்திரை மாத அமாவாசை அன்று சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையில் நடைபெற உள்ளது.
பிரதோஷம் மற்றும் அமாவாசை உள்ளிட்ட நாட்களுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது. பாலித்தீன் பை, பீடி சிகரெட், மது மற்றும் போதைப்பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவக் குழுவினர் இந்த 4 நாட்களும் தாணிப்பாறை வனத்துறை கேட்பகுதியில் இருப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
- கடந்த 2 நாட்களாக திரளான பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
- அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகாலிங்கத்திற்கு இன்று காலை 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சித்திரை மாத அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக திரளான பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை மாத அமாவாசையான இன்று (7-ந்தேதி) அதிகாலை சென்னை, கோவை, திருச்சி, ராமநாதபுரம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வாகனங்கள் மூலம் மலையடி வாரமான தாணிப்பாறைக்கு வந்து காத்திருந்தனர். காலை 6 மணிக்கு மலைப்பாதை திறக்கப்பட்டது. முன்னதாக பக்தர்களின் உடமைகளை வனத்துறையினர் சோதனை செய்து மலையேற அனுமதித்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால் பக்தர்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சதுரகிரி மலையேற அடிவாரத்தில் திரண்டிருந்த பக்தர்களை காணலாம்.
மலைப்பாதை மற்றும் கோவில்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக மலைப் பாதைகளிலும் கோவில் பகுதியிலும் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகாலிங்கத்திற்கு இன்று காலை 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் செய்திருந்தனர்.
பலர் முடி காணிக்கை செலுத்தினர். காலை 11 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் 10 மணிக்கே சாமி சரிசனம் செய்து விட்டு மலையில் இருந்து இறங்கினர். மேலும் பக்தர்களின் வசதிக்காக தாணிப்பாறையில் இருந்து மதுரை, திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சாமி தரிசனம் செய்ய சதுரகிரிக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.