என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udhayanidhi Stalin"

    • தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
    • கார் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் புறப்பட்டு சென்றார். வழியில் பாளை கே.டி.சி.நகரில் அவருக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நெல்லை:

    தி.மு.க. மாநில இளை ஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் கார் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் புறப்பட்டு சென்றார். வழியில் பாளை கே.டி.சி.நகரில் அவருக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர் சுதா மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அண்டன் செல்லத்துரை, கோபி என்ற நமச்சிவாயம்,

    கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, இளைஞரணி ஆறுமுகராஜா, தி.மு.க. இளைஞரணி செயலளர் வில்சன் மணிதுரை, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், பாளை யூனியன் சேர்மன் கே.எஸ்.தங்கபாண்டியன், பொரு ளாளர் வண்ணை சேகர், நிர்வாகிகள் மணிகண்டன், மேகை செல்வன், சிவா, வினோத், சங்கர், மைதீன், வக்கீல் அருள் மாணிக்கம், கவுன்சிலர்கள் பவுல்ராஜ், ரவீந்தர், உலகநாதன், கிட்டு மற்றும் மணி, மாநகர இளை ஞரணி துணை அமைப்பாளர் மாயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
    • சங்கரன்கோவில் பஸ் நிலையம் முன்பு தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதை முன்னிட்டு சங்கரன்கோவில் பஸ் நிலையம் முன்பு தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, இளைஞர் அணி சரவணன், மாவட்ட துணை அமைப்பாளர்கள், சோமசெல்வ பாண்டியன், அப்பாஸ் அலி, வழக்கறிஞர்கள் சதீஷ், ஜெயக்குமார், மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஜெயக்குமார், வீரமணி, நகர அவைத்தலைவர் முப்பிடாதி, மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார், செய்யது அலி, நகர துணை செயலாளர்கள் மாரியப்பன், சுப்புத்தாய், முத்துக்குமார், நிர்வாகிகள் யோசேப்பு, துரைப்பாண்டியன், வீரிருப்பு முருகராஜ் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.

    • திருப்புவனம், மானாமதுரையில் யூனியன் அலுவலக கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • தமிழக மக்கள் பாராட்டும் வகையில் உதயநிதி ஸ்டாலின் செயல்படுவார் என்று விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மானாமதுரையில் புதிய யூனியன் அலுவலகங்கள் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. இரு இடங்களிலும் தனித்தனியாக நடந்த விழாக்களுக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார்.

    மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் முன்னிலை வகித்தனர். திருப்புவனம் மற்றும் மானாமதுரையில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டுவதற்கு கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் பொருளாதார நெருக்கடியை சீர் செய்து அனைத்து துறைகளின் சார்பில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு அனைத்து துறைகளின் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறார். கிராமப்புற மேம்பாட்டுக்கு தனித்துவம் அளித்து அதற்காக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    குறிப்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் கிராமப் பகுதிகளில் சாலை, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்காகவும், பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் நவீன வசதிகளுடன் உள்ளாட்சி அமைப்புகள் சார்ந்த கட்டிடங்களை சீரமைக்கவும் அறிவுறுத்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    பெரு நகரங்களுக்கு இணையாக கிராமப்புறங்களில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஏராளமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    சிவகங்கை மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் சாக்கோட்டை, எஸ். புதூர், சிவகங்கை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் புதிய அலுவலகங்கள் கட்டிடத்திற்கான பணிகள் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடமும், ரூ5. 55 கோடி மதிப்பீட்டில் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடமும் கட்டப்பட உள்ளன. மாவட்டத்தில் மீதம் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கும் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

    வாரிசு இல்லாதவர்கள் வாரிசு அரசியலை பற்றி பேசுகின்றனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளது. தமிழக மக்கள் பாராட்டும் வகையில் அவர் செயல்படுவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் இளையான்குடி ஒன்றிய செயலாளர்-முன்னாள் எம்.எல்.ஏ. சுபமதியரசன், மானாமதுரை ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, நகராட்சி தலைவர்-முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, யூனியன் துணைத் தலைவர் முத்துச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • உதயநிதி ஸ்டாலின் வரும் 23-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
    • இதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் இடங்களை, திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கொடைரோடு:

    தி.மு.க இளைஞரணி செயலாளரும், இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வரும் 23-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மேலும் விழா கின்னஸ் சாதனைக்காக 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கின்றார்.

    விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி சார்பில் நடைபெற உள்ள எளியோர் எழுச்சி நாள் விழா மற்றும் அன்பழகன் நூற்றாண்டு விழா கொடியேற்று நிகழ்ச்சிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். இதனை அடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 50அடி உயர கொடிக்கம்பத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க கொடியினை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    இதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் இடங்களை, திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட செயலாளர்செந்தில்குமார் எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து கொடைரோடு சுங்கசாவடி அருகே 50 அடி உயரம் கொண்ட தி.மு.க கொடி ஏற்றுதல், வரவேற்பு நிகழ்ச்சி 22-ந்தேதி நடைபெறுகிறது. அந்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் அங்கிருந்த நிர்வாகிகளுடன் விழா நடப்பது குறித்து ஆலோசனையும் மேற்கொண்டார்.

    • காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக தி.மு.க.வின் முன்னணி தலைவர்களும் பிரசாரம் செய்ய உள்ளனர்.
    • இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக தி.மு.க.வின் முன்னணி தலைவர்களும் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    இதில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார். அவரது சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

    சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சம்பத் நகர், மாணிக்கம்பாளையம் கவுசிங் யூனிட் அடுக்குமாடி குடியிருப்பு, சூளை, குளம் வழியாக அக்ரகாரம் வண்டிபேட்டை, சத்யா நகர், நெறிகல் மேடு, காவேரி ரோடு மாரியம்மன் கோவில், 16 நம்பர் பஸ் ரோடு, சத்திரோடு, சுவஸ்திக் கார்னர், பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, மரகதவள்ளி பங்க் வழியாக பட்டேல் வீதி, கலைமகள் பள்ளி வழியாக பிரப் ரோடு, பன்னீர் செல்வம் பார்க், காந்திஜி ரோடு வழியாக அசோக புரி, விக்ரம் மருத்துவமனை வழியாக ரோடு, காளைமாட்டு சிலை வழியாக காந்திஜி சிம்னி ஓட்டல், பழைய ரெயில் நிலையம் வழியாக ஆலமரத்து தெரு, சமாதானம்மாள் சத்திரம், சூரம்பட்டி நால்ரோடு, சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகை வரை பிரசாரம் செய்கிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 19-ந்தேதி சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு குமலன் குட்டை, கணபதி நகர், அடுக்குமாடி குடியிருப்பு, நாராயண வலசு, இடையன் காட்டு வலசு, முனிசிபல் காலனி, அகில் மேடு வீதி, பழனி மலை கவுண்டர் வீதி, சொக்கநாதர் வீதி, மெட்ராஸ் ஓட்டல், ராஜாஜிபுரம், கே.என்.கே.ரோடு, வண்டியூரான் கோவில் வீதி, விநாயகர் கோவில் வீதி, கிருஷ்ணம்பாளையம், திருநகர் காலனி, சகன் வீதி, சேரன் வீதி, வீரப்பன் சத்திரம் தெப்பக்குளம்.

    16 நம்பர் பஸ் ரோடு, நெறிகல் மேடு, சத்யா நகர், அக்ரகாரம் வண்டி பேட்டை, பூம்புகார் நகர், காந்திநகர், வில்லரசம் பட்டி நால்ரோடு வழியாக, சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் முடிக்கிறார்.

    20-ந்தேதி சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் புறப்பட்டு அரசு மருத்துவமனை, நல்லசாமி மருத்துவமனை வீதி, சிதம்பரம் செட்டியார் காலனி, இந்தியன் வங்கி, சென்ட்ரல் தியேட்டர், கால்நடை மருத்துவமனை எதிரில், சித்திக் திடல், மண்டப வீதி, 1,2 செட்டியார் கடை, ஜின்னா வீதி, கிருஷ்ணா தியேட்டர், காந்தி சிலை (ரங்க பவன் வழியாக சின்ன மாரியம்மன் கோவில் வீதி), பொன்னுசாமி வீதி, கே.ஏ.எஸ். நகர், வளையக்கார வீதி, காரை வாய்க்கால், அண்ணா டெக்ஸ், சமாதானம்மாள் சத்திரம், பழைய ரெயில் நிலையம் ரோடு, ஆலமரத்து தெரு, அண்ணாமலை பிள்ளை வீதி, பட்டக்கார வீதி, பொய்யேரிக்கரை வீதி பயர் சர்வீஸ் பின்புறம், காளைமாட்டு சிலை, மணல் மேடு, பழைய எம்ப்லாய்மென்ட் ஆபிஸ் ரோடு வழியாக கிராமடை, சீனிவாசா தியேட்டர், என்.ஜி.ஜி.ஓ காலனி, பெருந்துறை ரோடு, சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    • ஆன்லைன் மூலம் ‘நீட் தடை’ என்ற தலைப்பில் கருத்து தெரிவிக்கும் பகுதியில் 3 லட்சம் பேர் பங்கேற்று கையெழுத்து போட்டுள்ளனர்.
    • நீதிமன்ற வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்.

    சென்னை:

    தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞர் அணி, மருத்துவர் அணி மற்றும் மாணவர் அணி ஆகியவை சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

    அதன் ஒரு பகுதியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கெனவே தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கையெழுத்து பெற சத்தியமூர்த்தி பவன் சென்றார். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்களிடம் கையெழுத்து பெற்றார்.

    இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் கையெழுத்து பெறுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு கட்சித் தலைவர் திருமாவளவனிடம் அவர் கையெழுத்து பெற்றார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் , எம்.எல்.ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷா நவாஸ், பனையூர் பாபு மற்றும் நிர்வாகிகள் கையெழுத்து போட்டனர்.

    இதில், திமுக எம்.எல்.ஏ. மயிலை வேலு கலந்து கொண்டார்.

    பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீட் விலக்கு நம் இலக்கு என்ற கையெழுத்து இயக்கம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து பெறுவதற்காக தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 6 வருடத்தில் அனிதா ஆரம்பித்து 22 மாணவர்கள் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 10 லட்சம் கையெழுத்து பெற்றுள்ளோம்.

    ஆன்லைன் மூலம் 'நீட் தடை' என்ற தலைப்பில் கருத்து தெரிவிக்கும் பகுதியில் 3 லட்சம் பேர் பங்கேற்று கையெழுத்து போட்டுள்ளனர்.

    அனைத்து இயக்கமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அடுத்தகட்டமாக அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சி தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். நாங்கள் உண்மையாக போராடி வருகிறோம், எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்று, ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒன்று என்று இல்லை. இது தி.மு.க. பிரச்சனை மட்டும் இல்லை.

    கேள்வி:- சனாதன மாநாட்டில் பேசியதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளாரே?

    பதில்:- அம்பேத்கர், பெரியார் பேசியதை விட தவறாக ஒன்றும் நான் பேசவில்லை. நான் பேசியது தவறு இல்லை. அமைச்சர் பதவி இன்று வரும், நாளைக்கு போகும். சட்டமன்ற உறுப்பினர் பதவி இன்றைக்கு வரும், நாளைக்கு போகும். இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு இன்றைக்கு வரும், நாளைக்கு போகும். அதைவிட முக்கியம் முதலில் மனிதனாக இருக்க வேண்டும்.

    நீட் தேர்வு என்பது 6 வருட பிரச்சனைதான். முதலில் அதை ரத்து செய்வோம். சனாதனத்தை பற்றி பல ஆண்டுகளாக பேசி வருகிறோம். இது பல நூறு ஆண்டு கால பிரச்சனை. சனாதனத்தை எந்த காலத்திலும், எப்போதும் எதிர்ப்போம். நீதிமன்ற வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது இங்கு வந்து பேசும் போது, 'ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில பட்டியலில் கல்வி உரிமை இருக்க வேண்டும் என்றால் அதை கொடுப்போம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்ன தேவையோ அதை செய்து கொடுப்போம். தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்' என்று கூறி இருக்கிறார்.

    கேள்வி:- நீட் தேர்வு விலக்கு கிடையாது, நீட் தேர்வு எழுதித்தான் ஆக வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் கடைசி நேரத்தில் சொல்லும் போது மாணவர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறதே?

    பதில்:- 6 வருடமாக நீட் விலக்கு கோரிக்கையை வைத்து வருகிறோம். சட்டமன்றத்தில் 230 சட்டமன்ற உறுப்பினர்கள் இதைத்தான் சொல்லி இருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். மக்களின் எண்ணத்தை சட்டமன்றத்தில் பேசுபவர்கள். இதற்கு ஆதரவு தெரிவிக்காத 4 சட்டமன்ற உறுப்பினர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும்.

    நாங்கள் மாணவர்களை குழப்பவில்லை. இன்னொரு உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தான் நாங்கள் செயல்படுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில் 'தி.மு.க. நடத்துகின்ற கையெழுத்து இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் முழுமையாக பங்கேற்கிறது' என்றார்.

    • மருத்துவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மயக்க நிலையில் உள்ளார்.
    • மருத்துவர் இதய நோயாளி என்பதால் 8 மணி நேரத்திற்கு பிறகே அவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும்

    தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்பவர் கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியின் கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார்.

    மருத்துவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மயக்க நிலையில் உள்ளார். மருத்துவர் இதய நோயாளி என்பதால் 8 மணி நேரத்திற்கு பிறகே அவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

    தாக்குதல் நடத்திய விக்னேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

    இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு நேரில் ஆய்வு செய்தார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அரசு மருத்துவரின் உடல்நிலை குறித்து உதயநிதி கேட்டறிந்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மருத்துவர் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படு வருகிறது. அவரது தலைப் பகுதியில் 4 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டுள்ளது. ஆறு மாதங்களாக சிகிச்சையில் இருந்த தாயாருடன் வருபவர் என்பதால் சந்தேகம் எழவில்லை. இது தவிர்க்க முடியாத சம்பவம். இதுபோல் இனி நடக்காமல் பார்த்துக் கொள்வோம். மருத்துவர் குடுப்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளோம். 



    ×