என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலமைச்சர் ஸ்டாலின்"

    • இசை வளர்த்தல் என்பது கலை வளர்த்தல், கலை வளர்த்தல் என்பது பண்பாட்டை வளர்த்தல், பண்பாட்டை வளர்த்தல் என்பது நமது நாகரீகத்தை வளர்த்தல்.
    • ஆண்டுதோறும் மார்கழி மாதம் இந்தியாவில் இருந்து மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள இசை கலைஞர்களை வரவழைக்க கூடிய வேடந்தாங்கலாக மியூசிக் அகாடமி செயல்படுகிறது.

    சென்னை:

    சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியின் 96வது ஆண்டு விழா கருத்தரங்கம், கச்சேரியை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

    மியூசிக் அகாடமி இசைக்கலை ஒன்றியத்தின் 96வது ஆண்டு ஆண்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைக்கிறேன். இங்கு திரு. முரளி அவர்கள் குறிப்பிட்டது போல 1975ம் ஆண்டு நடந்த ஆண்டு விழாவிலும், 1996ம் ஆண்டு நடந்த ஆண்டு விழாவிலும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தியிருக்கிறார்.

    அந்த வகையில் இந்த 96வது ஆண்டு விழாவில் நான் பங்கெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன். 1927ம் ஆண்டு நடந்த இசை மாநாட்டில் இந்திய இசையை வலுசேர்ப்பதற்காக இப்படி ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று நினைத்து உருவாக்கியிருக்கிறார்கள். எந்த அமைப்பாக இருந்தாலும் அதனை உருவாக்குவது எளிது. ஆனால் தொடர்ந்து நடத்துவதுதான் சிரமம். 96 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தியிருக்கும் அனைவரையும் வணங்குகிறேன், வாழ்த்துகிறேன்.

    இன்னும் 4 ஆண்டுகளில் இந்நிகழ்ச்சி என்பது நூற்றாண்டு விழாவாக நடைபெற போகிறது. அதிலும் நான் உறுதியாக கலந்துகொள்வேன் என்று நம்புகிறேன்.

    ஆண்டுதோறும் மார்கழி மாதம் இந்தியாவில் இருந்து மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள இசை கலைஞர்களை வரவழைக்க கூடிய வேடந்தாங்கலாக இந்த மியூசிக் அகாடமி இன்றைக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    இசை வளர்த்தல் என்பது கலை வளர்த்தல், கலை வளர்த்தல் என்பது பண்பாட்டை வளர்த்தல், பண்பாட்டை வளர்த்தல் என்பது நமது நாகரீகத்தை வளர்த்தல் அந்த வகையில் மக்கள் மனதையும், இந்த மாநிலத்தையும் பண்படுத்தும் கடமையை இது போன்ற இசை கலை மன்றங்கள் செய்து வருவது மிகப்பெரிய தொண்டு.

    மியூசிக் அகாடமி போன்ற இசைக் கலை அமைப்புகளை ஏதோ பொழுதுபோக்கு அமைப்பு என்று சொல்லமுடியாது. இவை அனைத்து நமது பண்பாட்டை வளர்க்க கூடியவை. இந்த நிகழ்ச்சியில் விருதுகளை பெற்ற அனைத்து இசை கலைஞர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திரையுலகின் மிகப்பெரிய விருது மியூசிக் அகாடமி விருது என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிந்ததே. அத்தகைய உரிய விருது பெற்றுள்ள நீங்கள் அனைவரும் தொடர்ந்து இத்துறைக்கு தொண்டாற்றி உங்களை போன்ற திறமைசாலிகளை உருவாக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

    • கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பில் அமரன் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
    • அமரன் படத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் திரையில் கண்டு களித்தனர்.

    இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

    இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

    அமரன் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு படக்குழுவினர் சிறப்பு திரையிடல் செய்தனர். அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் இந்த படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

    அமரன் படத்தை பார்த்த முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் தன்னுடைய அழைப்பை ஏற்று படத்தை கண்டுகளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த படத்தின் தயாரிப்பாளரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எங்களது அழைப்பை ஏற்று அமரன் திரைப்படத்தைப் பார்த்து ரசித்ததோடு, படத்தையும், அதில் பங்களிப்பாற்றிய கலைஞர்களையும் மனதார பாராட்டிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், என் அன்பிற்கினிய நண்பர் திரு. முக ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாட்டின் துணை முதல்வர், என் அன்பு இளவல் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி. முதல்வரின் பாராட்டு அமரனின் பெரும் வெற்றிக்கு அறிகுறி. என பதிவிட்டிருந்தார்.

    • டெல்லி கணேஷ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
    • நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் திரு. டெல்லி கணேஷ்.

    வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் (80) இன்று காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது.

    டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது மறைவிற்கு தமிழக முதலமைச்சர் முகஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளது.

    அதில், மூத்த திரைக்கலைஞர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் மக்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் அளவுக்குச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக அவர் திகழ்ந்தார்.

    வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் பல தொடர்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எழுத்தில் உருவான இளைஞன் திரைப்படத்திலும் டெல்லி கணேஷ் அவர்கள் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை, குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும். திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    • முதலமைச்சரை சந்திக்க செல்லும் போது பரீட்சைக்கு செல்லும் பிள்ளைபோல் தயாராவோம்.
    • கல்விக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை கவுண்டம்பாளையத்தில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 413 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த பள்ளியில் தற்போது உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    மார்ட்டின் குழுமம் ரூ.7 கோடி நிதி ஒதுக்கி, இந்த பள்ளியில் டிஜிட்டல் வகுப்பறைகள், புதிய கட்டிடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளது.

    பணிகள் அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து இன்று பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது, அங்குள்ள பள்ளியின் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்கிருந்த மாணவி ஒருவர் நாங்கள் இதுவரை உங்களை டி.வி.யில் மட்டுமே பார்த்து இருந்தோம். தற்போது நேரில் பார்த்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களை அப்பா என்று அழைத்து கொள்ளலாமா என கேட்டு அப்பா என்று அழைத்தது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த நாள் மிகவும் நிறைவான நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    நான் சொல்கிறேன். ஒவ்வொரு நாளுமே நிறைவான நாள் தான். ஏனென்றால் நம்முடைய தி.மு.க. ஆட்சியே நிறைவான ஆட்சியாக தான் இருக்கிறது. மக்கள் அனைவரும் அதை தான் சொல்கிறார்கள். பாராட்டுகிறார்கள்.

    தமிழக முதல்-அமைச்சர் பள்ளிக்கல்வித்துறைக்கு என்று அதிக நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கல்விக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். கல்வியில் செய்யும் செலவானது நல்ல சமுதாயம் என்ற வட்டியை தரும். பிள்ளைகள் படித்தால் சமுதாயம் பயன்பெறும்.

    பள்ளிகளுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்படும். மாணவர்கள் தங்கள் கவனம் முழுவதையும் படிப்பில் செலுத்த வேண்டும். படித்து முடித்து நல்ல நிலையை அடையும் போது மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியை மறந்து விடாதீர்கள். நீங்கள் படித்த பள்ளிக்கு ஏதாவது ஒரு வகையில் நீங்கள் உதவி செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படித்த பழைய மாணவர்கள் பலரை விழுதுகள் என்ற செயலியில் இணைத்துள்ளோம். அதில் 7 லட்சம் பழைய மாணவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை தங்கள் பள்ளிக்கு செய்து வருகிறார்கள்.

    என்னுடைய தலைமை ஆசிரியர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். நாங்கள் அவரை சந்திக்க செல்லும் போது, பரீட்சைக்கு தயாராகும் பிள்ளைபோல தயாராவோம். ஏனென்றால் எங்களை விட அவர் அதிகம் தெரிந்து வைத்து இருப்பார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, மார்ட்டின் குழுமத்தின் இயக்குனர் லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×