என் மலர்
நீங்கள் தேடியது "Elon Musk"
- நேற்று உலகம் முழுவதும் டுவிட்டர் திடீரென்று முடங்கியது.
- டுவிட்டர் பயனர்கள் தெரிவித்த புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் எலான் மஸ்க், தற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
வாஷிங்டன்:
பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ஊழியர்கள் பலரை பணி நீக்கம் செய்தார். ப்ளூ டிக் வசதிக்கு கட்டண நிர்ணயம் செய்தார்.
இந்நிலையில் நேற்று உலகம் முழுவதும் டுவிட்டர் திடீரென்று முடங்கியது. இதனால் பயனர்கள் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் தவித்தனர். இதுதொடர்பாக புகார்கள் டுவிட்டர் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டன.
இதையடுத்து இப்பிரச்சினையை சரி செய்யும் நடவடிக்கையில் டுவிட்டர் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் டுவிட்டர் பயனர்கள் தெரிவித்த புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் எலான் மஸ்க், தற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
அதன்படி சரிபார்க்கப்பட்ட பயனர்கள் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என்றும், சரிபார்க்கப்படாத பயனர்கள் ஒரு நாளைக்கு 600 பதிவுகளையும், புதிய சரிபார்க்கப்படாத பயனர்கள் ஒரு நாளைக்கு 300 பதிவுகளை படிக்க முடியும் என்றும் அறிவித்தார்.
அதன் பின் இந்த உச்ச வரம்பை உயர்த்தினார். சரிபார்க்கப்பட்ட பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பதிவுகளை படிக்க முடியும் என்றும், சரிபார்க்கப்படாத பயனர்களுக்கு 1000 ஆகவும், புதிய சரிபார்க்கப்படாத பயனர்களுக்கு 500 ஆகவும் அதிகரிப்பதாக தெரிவித்தார்.
தேவையற்ற தகவல்களை அழிப்பதற்காக இந்த தற்காலிகமாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த புதிய கட்டுப்பாட்டால் டுவிட்டர் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலர் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள்.
- வெரிஃபைடு பெற்றிருந்தால் மட்டுமே டுவீட்டெக்கை பயன்படுத்த முடியும்
- ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பதிவுகளைத்தான் படிக்க முடியும் என சில நாட்களுக்கு முன் அறிவிப்பு
உலகின் நம்பர் ஒன் கோடீசுவரரான எலான் மஸ்க் நடத்தி வரும் சமூக வலைதள நிறுவனம் டுவிட்டர் (Twitter). இதற்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான பயனர்கள் இருக்கின்றனர். பயனர்களுக்கு ஒரு தங்குதடையற்ற சேவை வழங்கும் அதே நேரத்தில் அந்நிறுவனத்தை லாபகரமாக நடத்தவும் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி வருகிறார்.
இதில் ஒன்றாக டுவிட்டர் வலைதளத்தில் உள்ள டுவீட்டெக் (TweetDeck) வசதியை பயன்படுத்த வேண்டுமென்றால், இனி பயனர்கள் வெரிஃபைடு (Verified) அதாவது சரிபார்க்கப்பட்டவர்கள்- எனும் தகுதியை பெற்றிருக்க வேண்டும். இந்த நடைமுறை இன்னும் 30 நாட்களில் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுவீட்டெக் பழைய பதிவுகளை எளிதாக பார்ப்பது உட்பட பலவிதமான எளிதான படிக்கும் அனுபவத்தை பயனர்களுக்கு வழங்குகிறது. தற்போது புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட டுவீட்டெக்கை பயன்படுத்தி வெரிஃபைடு அவசியம் என்ற நிலையில், பயனர்களிடம் கட்டணம் வசூலிக்குமா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.
வணிக நிறுவனங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள், டுவிட்டரின் உள்ளடக்கத்தை எளிதாக கண்காணிக்க டுவீட்டெக் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால், இது டுவிட்டர் நிறுவனத்திற்கு அதிக வருவாயை ஈட்டித்தரும். டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து விளம்பர வருவாய்க்கு மிகவும் போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டுவிட்டரை வாங்கியதும் வெரிஃபைடு பெறுவதற்கு கட்டணம் வசூலித்தது. சரிபார்க்கப்பட்ட மற்றும் சரிபார்க்கப்படாத பயனர்கள் ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பதிவுகளைத்தான் படிக்க முடியும் என்று சில நாட்களுக்கு முன்புதான் டுவிட்டர் அறிவித்திருந்தது. இந்த நிலையில் டுவீட்டெக்கில் அடுத்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
- எலான் மஸ்க் செயற்கைக்கோள் தகவல் தொடர்வில முன்னணியில் உள்ளது
- செயற்கைக்கோள் கட்டுமான வசதியை உருவாக்க அமேசான் ஆயிரம் கோடி முதலீடு
உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்கின் பல நிறுவனங்களில் ஒன்று ஸ்பேஸ்எக்ஸ். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், செயற்கைக்கோள் தகவல் தொடர்பிலும், விண்கல உற்பத்தியிலும் ஏவுகணை தொடர்பான சேவைகளை வழங்குவதிலும் முன்னணியில் உள்ள தனியார் நிறுவனமாக உள்ளது.
இந்நிறுவனத்திற்கு போட்டியாக விண்வெளி இணையச்சேவையைத் தொடங்கும் தனது திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் நாசாவுக்கு சொந்தமான கென்னடி விண்வெளி மையத்தில் ஒரு செயற்கைக்கோள் கட்டுமான வசதியை உருவாக்க சுமார் ஆயிரம் கோடி ($120 மில்லியன்) முதலீடு செய்யப்போவதாக அமெரிக்காவின் இணையதள வர்த்தக நிறுவனமான அமேசான் தெரிவித்திருக்கிறது.
அதன் புராஜெக்ட் குய்ப்பர் எனும் திட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் சேவை செய்யப்படாத மற்றும் குறைவான சேவைகளையே பெற்று வரும் சமூகங்களுக்கு வேகமான, தடையற்ற, குறைந்த விலையில் பிராட்பேண்ட் சேவைகளை அமேசான் வழங்கும்.
இதற்காக புவியின் கீழ் சுற்றுப்பாதையில் 3200-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை அமேசான் நிறுவப்போகிறது.
முழு அளவிலான உற்பத்தி வெளியீடுகள் மற்றும் ஆரம்ப வாடிக்கையாளர்களுக்கான "பைலட்" திட்ட செயலாக்கங்களை அடுத்த ஆண்டு அமேசான் தொடங்கும் என்று இத்திட்டத்தின் துணைத்தலைவர் ஸ்டீவ் மெட்டேயர் தெரிவித்துள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், 3700-க்கும் மேற்பட்ட செயல்பாட்டு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களின் முதல் தொகுப்பை 2019-ல் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இத்துறையில் ஈடுபட்டு வரும் மற்றோரு நிறுவனம், இங்கிலாந்தின் லண்டனை தலைமையிடமாகக் கொண்ட ஒன்வெப். தற்போது இப்போட்டியில் அமேசானும் இறங்கியிருக்கிறது.
இந்த 3 நிறுவனங்கள் மட்டுமல்லாமல், இணைய சேவையுடன் பல்வேறு தொழில்நுட்ப காரணங்களுக்காக சீனா - 13000, கனடா- 300 மற்றும் ஜெர்மனி- 600, ஐரோப்பிய ஒன்றியம்- 170, அமெரிக்கா- 300-லிருந்து 500
எனும் எண்ணிக்கையில் பல நாட்டு அரசாங்கங்கள் செயற்கைகோள்களை வானில் ஏவ திட்டமிட்டிருக்கிறது.
- டிரம்பிற்கு P01135809 எனும் அடையாள எண் கொடுக்கப்பட்டது
- புகைப்படத்துடன் எந்த நிலையிலும் சரணடையாதே என செய்தி வெளியிட்டார்
அமெரிக்காவின் அதிபராக 2017-லிருந்து 2021 வரை பதவி வகித்த குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் (77), 2020 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான ஜோ பைடன் முறைகேடாக வெற்றி பெற முயற்சிப்பதாக அப்போது குற்றம்சாட்டி வந்தார். அந்த தேர்தல் நடந்து, முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் போது இரு கட்சியை சேர்ந்த பலர் மோதிக்கொண்டதில் வன்முறை வெடித்தது.
அப்போது உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டர் (தற்போதைய எக்ஸ்), டிரம்ப் தெரிவிக்கும் கருத்துக்களால் வன்முறை அதிகரிக்கலாம் என கூறி டிரம்பின் கணக்கை முடக்கியது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, பைடன் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார்.
சிறிது நாட்களில் டிரம்ப் மற்றும் ஜார்ஜியா மாநில அமைச்சர் பிராட் ராஃபன்ஸ்பெர்கர் (Brad Raffensperger) ஆகிய இருவருக்குமிடையே ஜனவரி 2, 2021 அன்று ஒரு தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாக ஆடியோ ஒன்று வெளியானது.
அந்த ஆடியோவில் "பைடனை முந்துவதற்கு 11,780 வோட்டுகளை தேட முயலுங்கள்" என டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஜார்ஜியா வழக்கு என பெயரிடப்பட்ட இந்த வழக்கில் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சிக்கும் பெரும் குற்றச்சாட்டு உட்பட 13 பிரிவுகளில் வழக்கு பதிவாகி, நீண்ட விசாரணைக்கு பிறகு டிரம்ப் குற்றவாளி என ஃபல்டன் கவுன்டி ஜூரியால் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து அதிகாரிகளிடம் டொனால்ட் டிரம்ப் சரணடைந்தார்.
அவர் அட்லாண்டா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறைக்கு வரும் கைதிகளுக்கு கடைபிடிக்கப்படும் அனைத்து நடைமுறைகளும் அவருக்கும் கடைபிடிக்கப்பட்டது.
அதன்படி, அவரை காவல்துறையினர் மக் ஷாட் (mug shot) எனப்படும் புகைப்படத்தை எடுத்தனர். அவருக்கு P01135809 எனும் அடையாள எண்ணும் கொடுக்கப்பட்டது.
அங்கு சுமார் 20 நிமிடங்கள் இருந்து பிறகு ஜாமீனில் வெளி வந்தார் டிரம்ப்.
சென்ற வருடம் டுவிட்டர் தளத்தை விலைக்கு வாங்கிய உலகின் நம்பர் 1 கோடீசுவரர் எலான் மஸ்க், டிரம்பின் கணக்கை மீண்டும் அக்டிவ் செய்துள்ளார். ஆனாலும் டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தைத்தான் பயன்படுத்தி வருகிறார்.
சிறையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சொந்த வலைதளமான "ட்ரூத்" தளத்தில் "தேர்தல் இடைமறிப்பு; எப்போதும் சரண்டைய கூடாது" என குறுஞ்செய்தியுடன் டிரம்ப் வெளியிட்டார்.
உலகின் முன்னணி நாடான அமெரிக்காவின் அதிபராக பதவியிலிருந்த டிரம்ப், பொதுவாக நற்பெயருக்கு இழுக்காக கருதப்படும் சிறையில் எடுக்கப்படும் மக் ஷாட்களை, தானே வலைதளத்தில் வெளியிட்டுள்ள மன உறுதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இதனை ரசித்த எலான் மஸ்க், அதை மீண்டும் தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்டு "அடுத்த லெவல்" என இரண்டே வார்த்தைகளில் கருத்து கூறியிருக்கிறார்.
- சீனா அரசின் தொழில்துறையின் வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க நிதி ஒரு முக்கியம் காரணம்.
- பி.ஒய்.டி-ன் வளர்ச்சிக்கு அதன் அடிப்படை வணிகமான பேட்டரிகள் காரணமாக இருக்கலாம்.
சீனாவின் பி.ஒய்.டி, முதல் முறையாக உலகின் சிறந்த மின்சார-வாகன உற்பத்தியாளரான எலோன் மஸ்க்கின் டெஸ்லாவை முந்தி முதலிடத்தை பிடித்தது.
சீனாவை சார்ந்த பி.ஒய்.டி நிறுவனம் முதல் முறையாக உலகின் அதிகம் விற்பனையாகும் மின்சார வாகன உற்பத்தியாளரான எலோன் மஸ்கின் டெஸ்லாவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு சீனா அரசின் தொழில்துறையின் வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க நிதி ஒரு முக்கியம் காரணம்.

கடந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்கா குழுமம் 4,84,000 வாகனங்களை வழங்கியுள்ளது, ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ள 473,000 வாகனங்களை விட அதிகமாக இருந்தது. ஆனாலும் பி.ஒய்.டி அதே நேரத்தில் 5,26,000 பேட்டரி வாகன விற்பனையை பதிவு செய்து முதலிடத்தை தக்கவைக்க கொண்டது.
டெஸ்லா 1.8 மில்லியன் ஆட்டோமொபைல்களை விற்றது. பி.ஒய்.டி 1.58 மில்லியன் மின்சார வாகனங்களை வழங்கியது. இந்த சாதனையானது, மின்சார வாகனத் துறையை மேம்படுத்த உதவுவதில் நிறுவனம் கொண்ட முயற்சி. பி.ஒய்.டி நிறுவனம், நுகர்வோரை சீனாவின் குறைந்த விலை மின்சார வாகனங்களை வாங்க தூண்டியது.

நிருபர்களின் கூற்றுப்படி, பி.ஒய்.டி-ன் வளர்ச்சிக்கு அதன் அடிப்படை வணிகமான பேட்டரிகள் காரணமாக இருக்கலாம். அவை மின்சார வாகனத்தின் மிகவும் விலையுயர்ந்த கூறுகளில் ஒன்று. பி.ஒய்.டி-ன் போட்டியாளர்கள் பலர் மூன்றாம் தரப்பு பேட்டரி தயாரிப்பாளர்களை சார்ந்துள்ளனர்.
ஆனால் பி.ஒய்.டி நிறுவனம் தானே பேட்டரி தயாரிப்பதால் இந்த சாதனை பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.
- நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
- 81 பில்லியனர்கள் இதுவரை கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் (வயது 60), குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ளதால் இருவரும் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை ஆதரிக்கும் Future Forward என்ற லாபநோக்கமற்ற நிறுவனத்திற்கு உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் 50 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.420 கோடி) நன்கொடையாக கொடுத்துள்ளார் என்று நியூ யார்க் டைம்ஸ் செய்து வெளியிட்டுள்ளது.
சுகாதாரத்தை மேம்படுத்துதல், வறுமையைக் குறைத்தல் மற்றும் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதிலும் அர்ப்பணிப்போடு இருக்கும் அதிபர் வேட்பாளரை நான் ஆதரிக்கிறேன் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
போர்ப்ஸ் அறிக்கையின்படி, 81 பில்லியனர்கள் இதுவரை கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே சமயம் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் டிரம்பிற்கு ஆதரவு அளித்து வருகிறார்.
- கடந்த மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் 6 பேர் கடத்திச் சென்று கொல்லப்பட்டனர்
- எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த வருடம் முதல் கலவரமான சூழல் நிலவுகிறது. இட ஒதுக்கீடு தொடர்பாக குக்கி- மெய்தேய் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.
2023 மே மாதம் பெண் ஒருவர் வன்முறை கும்பலால் சாலையில் நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் செல்லப்பட்ட வீடியோ வெளியானது நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
240க்கும் அதிகமான மக்கள் இந்த கலவரத்தில் உயிரிழந்தனர். 60,000 பேர் தங்கள் வீடுகளை இழந்து புலம்பெயர்ந்தனர். முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டு ஆயுதங்கள் களவாடப்பட்டன. இடையில் கலவரம் ஓய்ந்திருந்த நிலையில் இரு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதக் குழுக்கள் சமீபமாக மீண்டும் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
கடந்த மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் 6 பேர் கடத்திச் சென்று கொல்லப்பட்டதால் மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்து.

பதுங்கியிருந்து தாக்கும் கிளர்ச்சியாளர்களைப் பிடிக்க மணிப்பூரில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப்படை திணறி வருகிறது.
இந்நிலையில் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் கெய்ராவ் குனூ பகுதியில் பாதுகாப்புப் படையினர் சமீபத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில், ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் சில இணையதள சாதனங்களையும் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் சாதனங்களின் புகைப்படங்களை இந்திய ராணுவம் பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கைப்பற்றப்பட்ட தொலைத்தொடர்பு சாதனம் ஒன்றில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சின்னம் உள்ளதாக எக்ஸ் தள பயனர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

இதனைதொடர்ந்தகு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
இது பொய்யானது. இந்தியாவின் மேல் ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் அலைக்கற்றைகள் செயல்படாது என்று தெரிவித்து உள்ளார்.
செயற்கைக்கோள் இணையதள சேவையை வழங்கும் ஸ்டார்லிங், இந்தியாவில் இயங்க உரிமம் இல்லாதது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கிளர்ச்சியாளர்களுக்கு இதுபோன்ற நவீன சாதனங்கள் எங்கிருந்து கிடைக்கிறது என்பது புதிராகவே இருந்து வருகிறது.
