search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி"

    • இதே பிரிவில் மற்றொரு மாணவி 11-ம் இடம் பிடித்துள்ளார்.
    • நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவி ஜோதிகா பாரதிதாசன் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இதே பிரிவில் புவனேஸ்வரி என்ற மாணவியும் 11-ம் இடம் பிடித்துள்ளார்.

    இந்நிலையில், தங்கப்பதக்கம் வென்ற மாணவி ஜோதிகாவுக்கு, கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

    விழாவில் கல்லூரி முதல்வர் காமராஜ் தலைமை தாங்கினார்.

    துணை முதல்வரும், தமிழ் துறை பேராசிரியருமான குமரேசமூர்த்தி முன்னிலை வகித்தார். தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு கல்லூரி முதல்வர் புத்தகம் பரிசாக வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ராஜா, பிரபாகரன், அறிவுச்செல்வன், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நேற்று இரவு 11:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் விடிய விடிய நீடித்தது.
    • என்.ஐ.டி. கல்லூரி இயக்குநர் அகிலாவுடன் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஆலோசனை நடத்தினார்.

    திருவெறும்பூர்:

    திருச்சி அருகே உள்ள துவாக்குடியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.ஐ.டி. கல்லூரி அமைந்துள்ளது. இது மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர்.

    கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் தற்போது பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று மதியம் மாணவிகள் விடுதியில் வை-பை வசதி ஏற்படுத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி கதிரேசன் விடுதிக்குள் சென்றார்.

    அப்போது தன்னந்தனியாக விடுதி அறையில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் அவர் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டுக் கொண்டு வெளியே ஓடி வந்தார். மேலும் தனக்கு நேர்ந்த அநீதியை வாட்ஸ் அப்பில் பதிவிட்டார்.

    இது விடுதியில் தங்கி பிடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேகமாக பரவியது. இதற்கிடையே விடுதி பெண் வார்டனிடம் பாதிக்கப்பட்ட மாணவி முறையிட்டார். அப்போது அவர், ஆடைகள் சரியாக அணியாத காரணத்தினால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என அவரை கண்டித்ததாக தெரிகிறது.

    இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவ-மாணவிகள் கல்லூரி விடுதி முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் அகிலா மாணவ-மாணவிகளிடம் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதைத் தொடர்ந்து நேற்று இரவு 11:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் விடிய விடிய நீடித்தது. இன்று காலை 2-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட விடுதி மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் மாணவிகள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் என்.ஐ.டி. கல்லூரி இயக்குநர் அகிலாவுடன் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்து என்.ஐ.டி. கல்லூரி மாணவிகளிடம் எஸ்.பி. வருண்குமார், கல்லூரி இயக்குநர் அகிலா பேச்சுவார்த்தை நடத்தி, விடுதி காப்பாளர் மன்னிப்பு கேட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    போராடிய மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் என்.ஐ.டி. நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

    • ஒரு கட்டத்தில் அந்த மாணவி குறித்த வீடியோக்களை தனக்கு வாட்ஸ்-அப் மூலமாக அனுப்ப சொல்லி உள்ளார்.
    • மாணவியும் அந்தரங்க வீடியோக்களை போலீஸ்காரருக்கு அனுப்பி உள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த கலைச்செல்வன் (வயது 35). இவர் ஏர்வாடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இவருக்கும், பாளையங்கோட்டையை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆனந்த கலைச்செல்வன் அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருடன் சகஜமாக பழகி வந்துள்ளார்.

    மாணவி வீட்டில் தனியாக இருக்கும்போது அங்கு செல்லும் ஆனந்த கலைச் செல்வன், ஆபாசமாக பேசி வந்துள்ளார். பாலியல் ரீதியில் அந்த மாணவியிடம் பேசி, ஏமாற்றி வந்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் அந்த மாணவி குறித்த வீடியோக்களை தனக்கு வாட்ஸ்-அப் மூலமாக அனுப்ப சொல்லி உள்ளார். மாணவியும் அந்தரங்க வீடியோக்களை போலீஸ்காரருக்கு அனுப்பி உள்ளார்.

    அந்த மாணவி வசதியான வீட்டை சேர்ந்தவர் என்பதால், அந்த வீடியோக்களை வைத்துக்கொண்டு ஆனந்த கலைச்செல்வன் அந்த மாணவியை அடிக்கடி மிரட்டி பணம் கேட்டு வந்துள்ளார். முதலில் வேறு வழியின்றி பெற்றோருக்கு தெரியாமல் பணத்தை கொடுத்து வந்த மாணவி, ஒருகட்டத்தில் ஆனந்த கலைச்செல்வனின் தொந்தரவு தாங்க முடியாமல் தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தீவிர விசாரணை நடத்தி வந்தார். இதில் மாணவியை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்த உறுதியானது. மேலும் மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து ஆனந்த கலைச்செல்வன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர்நேற்று இரவு ஆனந்த கலைச்செல்வனை கைது செய்ய, போலீசார் கே.டி.சி. நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர் ஏர்வாடி போலீஸ் நிலையத்தில் இரவு பணிக்கு சென்றுவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆனந்த கலைச்செல்வனை கைது செய்தனர்.

    ×