என் மலர்
நீங்கள் தேடியது "சோதனை"
- ரெயில்வே போலீசார் நேற்று நள்ளிரவு ஈரோடு வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர்.
- போலீசார் ரெயிலில் கஞ்சா கடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த சில நாட்களாக தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவு பேரில் போலீசார், மதுவிலக்கு போலீசார் ஒருங்கிணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ஈரோடு-பள்ளிபாளையம் மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் காவிரி ஆறு சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நாமக்கல் மாவட்டம் தேவனாங்குறிச்சியை சேர்ந்த சிவசக்தி (வயது 22) என்பவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்திய பொழுது அவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரை கைது செய்த மதுவிலக்கு போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த மதிவாணன் (40) மற்றும் சின்னாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் (25) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் மதுவிலக்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல ஈரோடு ரெயில்வே போலீசார் நேற்று நள்ளிரவு ஈரோடு வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் சோதனை மேற்கொண்ட போது கழிவறை அருகே கருப்பு நிற பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது.
இதையடுத்து அந்த பையை திறந்து பார்த்த போது அதில் சுமார் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா பையை கைப்பற்றிய ஈரோடு ரெயில்வே போலீசார் அதை ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ரெயிலில் கஞ்சா கடத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓட்டல்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
- விசாரணை முடிவில் மிரட்டல் குறித்து விவரங்கள் வெளியாகும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கே.கே. நகர்:
திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாநகரில் விமான நிலையப் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
கடந்த வாரம் பள்ளி, கல்லூரிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்திய நிலையில், அது புரளி என்பது தெரியவந்தது.
இதனால் நகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று திருச்சியில் 4 பிரபல ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாநகர காவல் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு இமெயில் மூலம் இன்று காலை ஒரு தகவல் வந்தது. அதில் திருச்சி மாநகரில் உள்ள பிரபலமான 4 ஓட்டல்களின் பெயர் குறிப்பிட்டு அந்த ஓட்டல்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து 4 ஓட்டல்களுக்கும் போலீசார் விரைந்தனர். ஓட்டல்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்பு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் 4 பிரிவுகளாக சென்று 4 ஓட்டல்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். ஓட்டல் அறைகள், வளாகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
எனினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து இதுபற்றி போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? எந்த முகவரியில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
சைபர் கிரைம் போலீசாரும் விசாரணையில் இறங்கி உள்ளனர். விசாரணை முடிவில் இந்த மிரட்டல் குறித்து விவரங்கள் வெளியாகும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.