என் மலர்
நீங்கள் தேடியது "robbery"
- பீரோ உடைக்கப்பட்டு 1 ஜோடி தோடு, செயின் உள்பட ஒன்றரை பவுன் தங்க நகைகள் கொள்ளை.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை சிவாஜி நகர் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் பிரகதீஷ் (வயது 30 ). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு கும்பகோணம் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 1 ஜோடி தோடு, செயின் உள்பட ஒன்றரை பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அவர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் . அதன் பேரில் போலீசார் சம்பவத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மதுரை அருகே வீட்டின் பீரோவை உடைத்து நகை-பணம் கொள்ளை போனது.
- ராதாகிருஷ்ணன் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
மதுரை
மதுரை சிலைமான் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி உஷா ராணி (வயது 53). ராதாகிருஷ்ணன் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று கண வன்-மனைவி இருவரும் சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றனர். இந்த நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் மாடியில் உள்ள அறை கதவு உடைக்கப்பட் டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்தி ருந்த 3½ பவுன் தங்க நகை கள், 4 ஜோடி வெள்ளி கொலுசுகள், ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டு பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரிய வந்தது.
யாரோ மர்ம நபர் கள் ராதாகிருஷ்ணனின் வீட்டை நோட்டமிட்டு அவர்கள் வெளியூர் சென்றிருந்தபோது கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து உஷாராணி சிலைமான் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றவர் வீட்டில் 13 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
- இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவனந்த புரம் பச்சமடம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பரம சிவம் (வயது 55). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரது மனைவி மகாலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு, கண வரை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றி ருந்தார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் பரமசிவத்தை உள்நோயாளியாக அனு மதித்தனர். இதற்கிடையே அவர்களது மகள் தனலட்சுமி தந்தைக்கு உடைகள் எடுப்பதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நள்ளிரவில் வந்து இந்த திருட்டை அரங்கேற்றியுள்ள னர்.
இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இதற் கிடையே பாளையங் கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவமும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.