என் மலர்
நீங்கள் தேடியது "அபிஷேகம்"
- சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- நாளை 5-ம்தேதி சாமி மலைக்கோவிலுக்கு திரும்ப உள்ளது.
சுவாமிமலை:
சுவாமிமலை தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும். இங்கு அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமைந்த கட்டு மலைக்கோயிலாகும். இத்தலத்தினை தரிசனம் செய்ய வருகை தரும் முருக பக்தர்களுக்கு 60 தமிழ் வருட தேவதைகளும் 60 படிகட்டுகளாக இருந்து சேவை செய்வதாக ஐதீகம். மேலும் இத்தலத்தில் தான் முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை, குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்பதும் வரலாறு எனவே இத்தலத்தில் முருகப்பெருமான் சுவாமியே நீ என்றும் சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார். இத்தகைய சிறப்பு பெற்ற நான்காம் படைவீடான சுவாமிமலையில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழா ஜனவரி 26 கொடியேற்றத்துடன் துவங்கியது.
வள்ளி தெய்வானை சமேத சண்முகசுவாமி சிறப்புமலர் அலங்காரத்தில் விநாயகர் மற்றும் சண்டிகேஸ்–வரருடன் தங்க கொடிமரம் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வேலுடன் கூடிய யானை சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளுக்கும் கோபுர ஆர்த்தி செய்யப்பட்டது,
இதனை தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.
கடந்த ஜனவரி 30-ம் தேதி இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நடைபெற்றது தைப்பூச அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இன்று 4-ம் தேதி காலை 11 மணியளவில் காவிரியில் தீர்த்தவாரி நடைபெற்றது பின்னர் இரவு கொடிஇறக்கம் செய்யப்பட்டு, 5-ம் தேதி சுவாமி மலைக்கோயிலுக்கு திரும்ப உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் உபய தாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
- முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.
- பந்தகாலுக்கு மஞ்சள், பால், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 17-ந் தேதி தஞ்சை பெரிய கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.
தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 வீதிகளில் தேர் வலம் வரும்.
தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சை மேல வீதியில் உள்ள தேர்நிலையில் உள்ள தேரில் பந்தக்கால் முகூர்த்தம் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பந்தகாலுக்கு மஞ்சள், பால், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து தேரில் பந்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ரெங்கராஜ், முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- அமிர்தகர சுப்பிரமணியருக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- சுப்பிரமணியர் ஒரு முகம், 6 கரங்களை கொண்ட குழந்தை முகத்துடன் அருள்பாலிப்பது சிறப்பாகும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதி கோவில்களில் வைகாசி மாத கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுகருக்கும், வெளிபிர காரத்தில் உள்ள மேலக்குமர ருக்கும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடைபெற்றது.
பின்னர், சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல், கோடியக்காடு அமிர்தக டேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியருக்கு மஞ்சள், பால் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின், விபூதி அலங்கா ரத்துடன் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரா தனை காண்பிக்கப்பட்டது.
இக்கோவிலில், சுப்பிரம ணியர் ஒரு முகம், 6 கரங்களை கொண்ட குழந்தை முகத்துடன் அருள்பாலிப்பது சிறப்பாகும்.
இதேபோல், தோப்பு த்துறை கைலாசநாதர் கோவிலில் உள்ள முருகருக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் உள்ள முருகருக்கும், வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து முருகனை வழிபட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகில் உள்ள வல்லத்தில் யோக நரசிங்கப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் பக்தர்கள் குழந்தை பேறு வேண்டி பிரதி பவுர்ணமி தோறும் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குழந்தை வரம் தரும் அம்மனை பிரதி வெள்ளி கிழமை மற்றும் பவுர்ணமி அன்று அர்ச்சனை செய்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட கிரக தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில் இன்று ஆனி மாதம் பவுர்ணமியை முன்னிட்டு கமலவல்லி தாயாருக்கு சிறப்பு பாலாபிஷேகம், அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கமலவல்லி தாயாருக்கு மங்கள வாழ்வு தரும் மஞ்சள் காப்பு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.