என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிகழ்ச்சி"

    • முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.
    • பந்தகாலுக்கு மஞ்சள், பால், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 17-ந் தேதி தஞ்சை பெரிய கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.

    தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 வீதிகளில் தேர் வலம் வரும்.

    தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சை மேல வீதியில் உள்ள தேர்நிலையில் உள்ள தேரில் பந்தக்கால் முகூர்த்தம் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இதையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பந்தகாலுக்கு மஞ்சள், பால், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையடுத்து தேரில் பந்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ரெங்கராஜ், முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • தங்களது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    • கல்லூரிக்கு ரூ.2.30 லட்சம் செலவில் 5 குளிர்சாதன பெட்டிகளை வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்ப கல்லூரியில் கடந்த 1989-92-ம் ஆண்டு வரை கட்டிடவியல், மின்னியல், மின்ணணுவியல், எந்திரவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் படித்தவர்கள் தற்போது 31 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இதே கல்லூரியில் படித்த வகுப்பறையிலேயே சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் குமார், துணை முதல்வர் ஆரோக்கியராஜ், முன்னாள் முதல்வர் தங்கமணி முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பா ளர்களாக 1989-92-ம் ஆண்டு பயிற்றுவித்த பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னாள் மாணவர்கள் தங்களது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து, அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    வெளிநாடுகளில் இருந்து வரமுடியாத முன்னாள் மாணவர்கள் இணையம் மூலமாக கலந்து கொண்டு தங்களது நினைவுகளை பகிரிந்து கொண்டனர்.

    முடிவில், கல்லூரிக்கு ரூ.2.30 லட்சம் செலவில் 5 குளிர்சாதன பெட்டிகளை முன்னாள் மாணவர்கள் கருத்தரங்கத்திற்கு அமைத்து கொடுத்தனர்.

    ×