search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிடம்"

    • நாலுவேதபதி ஊராட்சியில் ரூ. 44 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • தலைஞாயிறு மாநில விவசாயிகள் குழு உறுப்பினர் மகா குமார் அடிக்கல் நாட்டினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி ஊராட்சியில் ரூ. 44 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதில் தலைஞாயிறு மாநில விவசாயிகள் குழு உறுப்பினர் மகா குமார் அடிக்கல் நாட்டினார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசுந்தரி சுந்தரபாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர் உதயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெபஸ்டி அம்மாள், அண்ணாதுரை, ஒன்றிய பொறியாளர்கள் கோவிந்தராஜ், ரசுகுமாரன், ஒன்றிய மேற்பார்வையாளர் தர்மராஜன், உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க இயக்குனர் மச்சழகன், வழக்கறிஞர் ஜெய்சங்கர், தி.மு.க.மாவட்ட பிரதிநிதி வீரகுமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தர வேண்டும்.
    • நடுநிலைப்பள்ளி கட்டிடம் கட்டித்தரவேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே மணக்குடி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குநர் சிலேகா முன்னிலை வகித்தார்.

    துணைத் தலைவர் காளிதாஸ் அனைவரையும் வரவேற்றார். கிராம சபை கூட்டத்தில் மணக்குடி ஊராட்சிக்கு சாலை வசதிகளை செய்து தருமாறும், அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தரக் கோரியும், நடுநிலைப்பள்ளி கட்டிடம் கட்டித் தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொது மக்கள் வலியுறுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் குமாரராஜா, மகளிர் சுய குழு அலுவலர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி செயலர் உமாபதி நன்றி கூறினார்.

    • கால்நடை மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
    • ரூ. 47 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியம் மாதானத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை கட்டிடம் சிதிலமடைந்து இருப்பதால் கால்நடை சிகிச்சைக்கு வந்து செல்பவர்கள் அச்சத்துடன்வருவதோடு, பணியாற்றும் மருத்துவர்கள், ஊழியர்களும் பாதுகாப்பின்றி பணியாற்றும் சூழல் நிலவிவந்தது.

    இதனையடுத்து கால்நடை மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என கோரிக்கை விடுக்கப்ப ட்டுவந்த நிலையில் அதற்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.47லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கால்நடை மருத்துவர் மணிமொழி தலைமை வகித்தார்.பொதுப்பணித்துறை (கட்டிடம்) உதவிசெய ற்பொறி யாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் ஜான்டிரோஸ்ட், மாதானம் ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதிசிவராமன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கென்னடி, திமுக மாவட்ட பிரதிநிதியும், ஒப்பந்ததாரருமான வேட்டங்குடி இளங்கோவன், ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி எம்.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பூமிபூஜையில் பங்கேற்று புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

    தொடர்ந்து பணிகளை துரிதமாக செய்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.

    • தடுப்பு கருவியை (சிலிண்டர்) கொண்டு எரியும் தீயை எப்படி அணைப்பது?
    • உயர்ந்த கட்டிடங்களில் ஏறியவர்களை எப்படி கீழே இறக்குவது?

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்த இந்த பயிற்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தீ தடுப்பு கருவியை (சிலிண்டர்) கொண்டு எரியும் தீயை எப்படி அணைப்பது என தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பயிற்சி பெற்றார்.

    மேலும் தண்ணீரில் விழுந்தவர்களை எப்படி மீட்பது, உயர்ந்த கட்டிடங்களில் ஏறியவர்களை எப்படி கீழே இறக்குவது, தீ விபத்து ஏற்பட்டாலும், வெள்ள ப்பாதிப்பு ஏற்பட்டாலும் எப்படி செயல்பட வேண்டும் எனவும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் மேற்பா ர்வையில் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×