என் மலர்
நீங்கள் தேடியது "பயிற்சி"
- 37 தொடக்கநிலை குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
- குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தில் எந்த ஒரு இடையூறின்றி மேம்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு தாலுகா உளூர் மேற்கு கிராமத்தில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது :-
உளூர் மேற்கு கிராமத்தில் நீண்ட நாட்களாக பட்டா இன்றி வாழ்ந்து வந்த குடும்பங்களுக்கு, அவர்களின் கோரிக்கையை ஏற்று 16 குடும்பங்களுக்கு அரசு புறம்போக்கு நத்தம் வகைப்பாடுடைய நிலத்தில் 0.16.0 ஏர்ஸ் விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
ஓரத்தநாடு ஒன்றியம் மேல உளூர் ஊராட்சியில் நரிக்குறவர் காலனி குடியிருப்பில் நீண்ட நாட்களாக பள்ளிக்கு செல்லாத 37 தொடக்கநிலை குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி மையம் மேல்நிலைப்பள்ளி மேல உளூரில் தொடங்கப்பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், புத்தகப்பை, வண்ணப் பென்சில்கள், சீருடை போன்றவை வழங்கப்பட்டு இக்குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தில் எந்த ஒரு இடையூறின்றி மேம்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் '' ஊருக்கு ஒரு வனம்" திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் பணியினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், ஓரத்தநாடு தாசில்தார் சுரேஷ், ஒரத்தநாடு ஒன்றிய குழுத் தலைவர் பார்வதி சிவசங்கர், கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் ராதிகா மைக்கேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
- 50 நாட்களுக்கு ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும்.
திருவாரூர்:
தஞ்சாவூா்,திருவாரூர், நாகப்பட்டினம் ,மயிலாடு துறை ஒருங்கிணைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் மோகன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் செயல்படுகிறது . இதில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் நாளை ( சனிக்கிழமை) திருவாரூர் மாவட்டத்தில் பழைய மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு உண்டான தகுதிகள் பின்வருமாறு:-
ஓட்டுநருக்கு உண்டான கல்வித் தகுதி ,பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வு அன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 162.5 சென்டிமீட்டர் குறையாமல் இருக்க வேண்டும்.
இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 15,235 (மொத்த ஊதியம்) வழங்கப்படும்.
தேர்வு முறையானது எழுத்து தேர்வு , தொழில்நுட்ப தேர்வு , மனிதவளத்துறை நேர்காணல் , கண் பார்வை திறன் மற்றும் மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு ,சாலை விதிகளுக்கான தேர்வு அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.
மருத்துவ உதவியாளரு க்கான தகுதிகள் பிஎஸ்சி நர்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ் பிஎஸ்சி ஜுவாலஜி, பாட்னி பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி இதில் ஏதோ ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும் .
மாதம் ஊதியம் ரூ.15,435(மொத்த ஊதியம்) . நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும் தேர்வு முறையானது எழுத்துத் தேர்வு , மருத்துவ நேர்முகம் உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை , மனித வளத்துறையின் நேர்முகத் தேர்வு.
இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும் . மேலும் விவரங்களுக்கு 7397701801 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தடுப்பு கருவியை (சிலிண்டர்) கொண்டு எரியும் தீயை எப்படி அணைப்பது?
- உயர்ந்த கட்டிடங்களில் ஏறியவர்களை எப்படி கீழே இறக்குவது?
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்த இந்த பயிற்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தீ தடுப்பு கருவியை (சிலிண்டர்) கொண்டு எரியும் தீயை எப்படி அணைப்பது என தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பயிற்சி பெற்றார்.
மேலும் தண்ணீரில் விழுந்தவர்களை எப்படி மீட்பது, உயர்ந்த கட்டிடங்களில் ஏறியவர்களை எப்படி கீழே இறக்குவது, தீ விபத்து ஏற்பட்டாலும், வெள்ள ப்பாதிப்பு ஏற்பட்டாலும் எப்படி செயல்பட வேண்டும் எனவும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் மேற்பா ர்வையில் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.