என் மலர்
நீங்கள் தேடியது "tag 94419"
செங்கல்பட்டில் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மத்திய அரசின் தடுப்பூசி மையம் திறக்க தயாராக உள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த கிருஷ்ணன் காரணை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் இந்திய மருந்து விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பின் 13-வது மாநில மாநாடு நடைபெற்றது.
இதில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாநாட்டு மலரை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:- எலிக்காய்ச்சல், தக்காளி காய்ச்சல், குரங்கம்மை குறித்து மக்கள் பயப்பட வேண்டாம்.
செங்கல்பட்டில் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மத்திய அரசின் தடுப்பூசி மையம் திறக்க தயாராக உள்ளது. அதில் விரைவில் உற்பத்தியை தொடங்க, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விரைவில் அங்கு உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் இதுவரை 93.74 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழ்நாட்டில் சமீப நாட்களாக கொரோனா மிகவும் குறைந்து வந்தது. நேற்றைய கணக்கின்படி 59 பேருக்கு தினசரி கொரோனா தொற்று பதிவாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார். அவற்றை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் எழுதிய கடித்தத்தில், தமிழகத்தில் இதுவரை 93.74 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 82.55 சதவீதம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.ஐ.டி. கல்லூரி மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 234 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.
திருச்சி:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருண்ணன் இன்று திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், புதியதாக அமைக்கப்பட்டு வரும் உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒவ்வொரு படுக்கையும் தலா ரூ.2.90 லட்சம் மதிப்பில் என மொத்தம் 32 படுக்கைகள் அமைத்துள்ளதை பார்வையிட்டார்.
மேலும் இந்த வார்டில் அமையவுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவ அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்தப் பிரிவில் 32 படுக்கைகளில் 20 படுக்கைகள் பெரியவர்களுக்கும், 12 படுக்கைகள் சிறுவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் அனைத்து நோய்களும் கட்டுப்பாட்டில் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு ஓமைக்ரான் அதிவேகமாக பரவி வந்தது. டெல்லியிலும் நோய் தாக்கம் ஏற்றம் அடைய தொடங்கியிருக்கிறதே தவிர குறையவில்லை.
இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 15-ந்தேதிக்கு பிறகு ஏறக்குறைய நாள் ஒன்றுக்கு 22 என்ற அளவிற்கு மிக குறைந்த அளவில் நோய் தொற்று பதிவானது.
தற்போது கொஞ்சம் அதிகமாக தொடங்கி இருக்கிறது. ஆகவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா மூன்று அலைகளையும் நாம் முழுமையாக வென்றிருக்கிறோம். தற்போது கரை ஒதுங்கும் நேரத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது. கவனமாக இருக்க வேண்டும்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.ஐ.டி. கல்லூரி மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 234 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்குரிய முழு ஒத்துழைப்பையும் கல்லூரி நிர்வாகம் அளித்தது. அதன்பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அதுவும் சரி செய்யப்பட்டது.
வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடியவர்கள் கல்யாண நிகழ்ச்சி, சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளில் கலந்து கொள்ளும் பொழுது அதிகமான நபருக்கும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது நாம் கவனமாக இருக்க வேண்டும்.
மார்ச் 17-ந்தேதிக்கு பிறகு இறப்பு எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் மீண்டும் தொற்று அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் எச்சரித்து உள்ளோம். பொதுவாக எதிர்ப்பு சக்தி படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.
93 சதவீதம் பேர் தடுப்பூசி முதல் தவணை செலுத்தியுள்ளார்கள். 80 சதவீதம் பேர் இரண்டாவது தவணை செலுத்தி உள்ளனர். மருத்துவ கட்டமைப்பு வலுப்படுத்த வேண்டும். பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும்.
இரண்டாவது தவணை தடுப்பூசி 1.21 கோடி பேர் போட்டுள்ளனர். உலக அளவில் குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் பரவி வந்தாலும் தமிழகத்தில் இன்னும் இல்லை. ஆனால் இந்தியாவில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு எச்சரிக்கை தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை சார்பில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவோம். குரங்கம்மை அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக டாக்டர்களை அணுகவேண்டும்.
வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் பாதுகாப்பாக வரவேண்டும். தமிழகத்தில் 100-க்கும் கீழ் பாதிப்பு இருக்கிறது. பொது மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிவது கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வது கட்டாயமாக இருக்கவேண்டும். கொரோனா பரிசோதனையையும் தீவிரப்படுத்த இருக்கிறோம். ஏர்போர்ட் உள்ளிட்ட பகுதிகளிலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு இருக்கிறது.
பயோமெட்ரிக் முறையை படிப்படியாக அனைத்து மருத்துவமனைகளிலும் பயன்படுத்த இருக்கிறோம். தவறுகள் செய்யும் டாக்டர்கள் மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும். காப்பீட்டு திட்டத்தில் 46 சதவீதம் அரசு மருத்துவமனையில் சலுகைகள் வழங்கப்படுகிறது. இண்டர்நெட் அடிக்சன் மையம் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு சேவை வழங்கப்படுகிறது.
ஆறு மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி இல்லாமல் இருக்கிறது அதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு பரிசீலனை நடந்து வருகிறது. மருத்துவமனைகளில் முறைகேடுகள் நடந்தால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு கட்டாயமாக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
நோய்கள் பரவாமல் தடுப்பதற்கு உரிய வழிமுறைகள் தற்போது தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா, கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருண்ணன் இன்று திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், புதியதாக அமைக்கப்பட்டு வரும் உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒவ்வொரு படுக்கையும் தலா ரூ.2.90 லட்சம் மதிப்பில் என மொத்தம் 32 படுக்கைகள் அமைத்துள்ளதை பார்வையிட்டார்.
மேலும் இந்த வார்டில் அமையவுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவ அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்தப் பிரிவில் 32 படுக்கைகளில் 20 படுக்கைகள் பெரியவர்களுக்கும், 12 படுக்கைகள் சிறுவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் அனைத்து நோய்களும் கட்டுப்பாட்டில் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு ஓமைக்ரான் அதிவேகமாக பரவி வந்தது. டெல்லியிலும் நோய் தாக்கம் ஏற்றம் அடைய தொடங்கியிருக்கிறதே தவிர குறையவில்லை.
இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 15-ந்தேதிக்கு பிறகு ஏறக்குறைய நாள் ஒன்றுக்கு 22 என்ற அளவிற்கு மிக குறைந்த அளவில் நோய் தொற்று பதிவானது.
தற்போது கொஞ்சம் அதிகமாக தொடங்கி இருக்கிறது. ஆகவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா மூன்று அலைகளையும் நாம் முழுமையாக வென்றிருக்கிறோம். தற்போது கரை ஒதுங்கும் நேரத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது. கவனமாக இருக்க வேண்டும்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.ஐ.டி. கல்லூரி மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 234 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்குரிய முழு ஒத்துழைப்பையும் கல்லூரி நிர்வாகம் அளித்தது. அதன்பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அதுவும் சரி செய்யப்பட்டது.
வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடியவர்கள் கல்யாண நிகழ்ச்சி, சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளில் கலந்து கொள்ளும் பொழுது அதிகமான நபருக்கும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது நாம் கவனமாக இருக்க வேண்டும்.
மார்ச் 17-ந்தேதிக்கு பிறகு இறப்பு எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் மீண்டும் தொற்று அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் எச்சரித்து உள்ளோம். பொதுவாக எதிர்ப்பு சக்தி படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.
93 சதவீதம் பேர் தடுப்பூசி முதல் தவணை செலுத்தியுள்ளார்கள். 80 சதவீதம் பேர் இரண்டாவது தவணை செலுத்தி உள்ளனர். மருத்துவ கட்டமைப்பு வலுப்படுத்த வேண்டும். பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும்.
இரண்டாவது தவணை தடுப்பூசி 1.21 கோடி பேர் போட்டுள்ளனர். உலக அளவில் குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் பரவி வந்தாலும் தமிழகத்தில் இன்னும் இல்லை. ஆனால் இந்தியாவில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு எச்சரிக்கை தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை சார்பில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவோம். குரங்கம்மை அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக டாக்டர்களை அணுகவேண்டும்.
வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் பாதுகாப்பாக வரவேண்டும். தமிழகத்தில் 100-க்கும் கீழ் பாதிப்பு இருக்கிறது. பொது மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிவது கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வது கட்டாயமாக இருக்கவேண்டும். கொரோனா பரிசோதனையையும் தீவிரப்படுத்த இருக்கிறோம். ஏர்போர்ட் உள்ளிட்ட பகுதிகளிலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு இருக்கிறது.
பயோமெட்ரிக் முறையை படிப்படியாக அனைத்து மருத்துவமனைகளிலும் பயன்படுத்த இருக்கிறோம். தவறுகள் செய்யும் டாக்டர்கள் மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும். காப்பீட்டு திட்டத்தில் 46 சதவீதம் அரசு மருத்துவமனையில் சலுகைகள் வழங்கப்படுகிறது. இண்டர்நெட் அடிக்சன் மையம் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு சேவை வழங்கப்படுகிறது.
ஆறு மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி இல்லாமல் இருக்கிறது அதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு பரிசீலனை நடந்து வருகிறது. மருத்துவமனைகளில் முறைகேடுகள் நடந்தால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு கட்டாயமாக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
நோய்கள் பரவாமல் தடுப்பதற்கு உரிய வழிமுறைகள் தற்போது தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா, கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 100-ஐ எட்டியுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி வளாகம் போன்ற இடங்களில் மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகங்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 100-ஐ எட்டியுள்ளது. இதனால் அடுத்தடுத்த நாட்களில், குறிப்பாக வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற உத்தரவுகள் கடைபிடிக்கப்படுவதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். மேலும் மொத்த பரிசோதனையின் முடிவில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தை தாண்டும் பட்சத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தற்போது கட்டுக்குள் வந்து விட்டதாக பலரும் அலட்சியமாக முக கவசம் அணியாமல் செல்வதை பார்க்க முடிகிறது. இது மிகப்பெரிய தவறாகும் என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை:
தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’ மிக வேகமாக வெளிநாடுகளில் பரவி வருகிறது.
இந்த புதிய வைரஸ் இந்தியாவுக்குள் பரவி விடாமல் தடுக்க மத்திய அரசு அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இதுகுறித்து தமிழக அரசுக்கும், மத்திய அரசு கடிதம் எழுதி உஷார்படுத்தி உள்ளது.

இதுபற்றி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
கொரோனா தற்போது கட்டுக்குள் வந்து விட்டதாக பலரும் அலட்சியமாக முக கவசம் அணியாமல் செல்வதை பார்க்க முடிகிறது. இது மிகப்பெரிய தவறாகும். எந்த ஒரு வைரசும் நம்மை தாக்காமல் இருக்க வேண்டுமானால் முக கவசம்தான் பாதுகாக்கும். எனவே கண்டிப்பாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.
தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதியதாக உருமாறி வந்துள்ள ஒமிக்ரான் வைரஸ் பல நாடுகளில் வேகமாக பரவி விட்டது. இன்னும் இந்தியாவிற்குள் நுழையவில்லை.
ஆனாலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஏனென்றால் அது போன்ற வீரியமிக்க வைரஸ் பரவினால் அதன் எதிர்விளைவுகள் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். அதிக உயிரிழப்பு கூட உருவாக்கி விடும்.
இதை கருத்தில் கொண்டு கொரோனா காலத்தில் நாம் மேற்கொண்ட அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதும் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.
இப்போதுள்ள சூழலில் கொரோனாவுக்குதான் தடுப்பூசி உள்ளது. இதில் 2 தவணை தடுப்பூசி போடாதவர்கள் இன்னும் பலர் உள்ளனர். அவர்களையும் கண்டறிந்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு தவணை தடுப்பூசி போடாதவர்களும் விரைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
முன் எச்சரிக்கையாக வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை நடத்தப்படுகிறது.
தென்ஆப்பிரிக்கா, ஐரோப்பா, பிரேசில், வங்காளதேசம், போட்ஸ் வானா, மொரிசீயஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு வைரஸ் தொற்று இல்லாவிட்டாலும் சொல்லும் அறிவுரை என்னவென்றால், அரசு சொல்லும் வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுங்கள். கண்டிப்பாக முககவசம் அணிந்து சொல்லுங்கள், தனி நபர் இடைவெளி, தனி நபர் சுகாதாரம் ஆகியவற்றை மிகச்சரியாக கடைபிடியுங்கள். இதுதான் முக்கியம்.
தற்போது மழை காலமாக இருப்பதால் காய்ச்சிய தண்ணீரை அனைவரும் குடிக்க வேண்டும். வயிற்றுபோக்கு போன்ற உடல் உபாதைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’ மிக வேகமாக வெளிநாடுகளில் பரவி வருகிறது.
இந்த புதிய வைரஸ் இந்தியாவுக்குள் பரவி விடாமல் தடுக்க மத்திய அரசு அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இதுகுறித்து தமிழக அரசுக்கும், மத்திய அரசு கடிதம் எழுதி உஷார்படுத்தி உள்ளது.
இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து ‘ஒமிக்ரான்’ வகை கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், விமான நிலைய இயக்குனர்கள் சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

இதுபற்றி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
கொரோனா தற்போது கட்டுக்குள் வந்து விட்டதாக பலரும் அலட்சியமாக முக கவசம் அணியாமல் செல்வதை பார்க்க முடிகிறது. இது மிகப்பெரிய தவறாகும். எந்த ஒரு வைரசும் நம்மை தாக்காமல் இருக்க வேண்டுமானால் முக கவசம்தான் பாதுகாக்கும். எனவே கண்டிப்பாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.
தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதியதாக உருமாறி வந்துள்ள ஒமிக்ரான் வைரஸ் பல நாடுகளில் வேகமாக பரவி விட்டது. இன்னும் இந்தியாவிற்குள் நுழையவில்லை.
ஆனாலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஏனென்றால் அது போன்ற வீரியமிக்க வைரஸ் பரவினால் அதன் எதிர்விளைவுகள் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். அதிக உயிரிழப்பு கூட உருவாக்கி விடும்.
இதை கருத்தில் கொண்டு கொரோனா காலத்தில் நாம் மேற்கொண்ட அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதும் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.
இப்போதுள்ள சூழலில் கொரோனாவுக்குதான் தடுப்பூசி உள்ளது. இதில் 2 தவணை தடுப்பூசி போடாதவர்கள் இன்னும் பலர் உள்ளனர். அவர்களையும் கண்டறிந்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு தவணை தடுப்பூசி போடாதவர்களும் விரைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
முன் எச்சரிக்கையாக வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை நடத்தப்படுகிறது.
தென்ஆப்பிரிக்கா, ஐரோப்பா, பிரேசில், வங்காளதேசம், போட்ஸ் வானா, மொரிசீயஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு வைரஸ் தொற்று இல்லாவிட்டாலும் சொல்லும் அறிவுரை என்னவென்றால், அரசு சொல்லும் வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுங்கள். கண்டிப்பாக முககவசம் அணிந்து சொல்லுங்கள், தனி நபர் இடைவெளி, தனி நபர் சுகாதாரம் ஆகியவற்றை மிகச்சரியாக கடைபிடியுங்கள். இதுதான் முக்கியம்.
தற்போது மழை காலமாக இருப்பதால் காய்ச்சிய தண்ணீரை அனைவரும் குடிக்க வேண்டும். வயிற்றுபோக்கு போன்ற உடல் உபாதைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...நாளை உருவாகும் காற்றழுத்தம்- புயல் சின்னமாக மாற வாய்ப்பு
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் இன்று மீண்டும் ஆஜரானார். #JayaDeathProbe #TNHealthSecretary #Radhakrishnan
சென்னை:
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதா பாதுகாப்பு அதிகாரிகள், போயஸ் கார்டன் ஊழியர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள் உள்பட பலர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

ஆணையத்தில் ஆஜர் ஆவதற்காக காலை 10 மணியளவில் எழிலகத்துக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் வந்தார். காலை 10.20 மணிக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார்.
பிற்பகல் 1 மணி வரை அவர் விசாரணை முடிந்து வெளியில் வரவில்லை. #JayaDeathProbe #TNHealthSecretary #Radhakrishnan
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதா பாதுகாப்பு அதிகாரிகள், போயஸ் கார்டன் ஊழியர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள் உள்பட பலர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
தமிழக சுகதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் ஏற்கனவே ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் 2-வது முறையாக இன்றும் ஆஜராகி அவர் விளக்கம் அளித்தார்.

பிற்பகல் 1 மணி வரை அவர் விசாரணை முடிந்து வெளியில் வரவில்லை. #JayaDeathProbe #TNHealthSecretary #Radhakrishnan
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆஜர் ஆனார். #JayaDeathProbe #Radhakrishnan
சென்னை:
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.
இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் டிரைவர்கள், அப்பல்லோ டாக்டர்கள், அரசு டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இதுவரை 142 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இவர்களில் சிலரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். சசிகலா தனது வாக்குமூலத்தை வக்கீல் மூலம் கடந்த மாதம் தாக்கல் செய்தார்.
தற்போது விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அதன்படி ராதாகிருஷ்ணன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனிடையே ஜெயலலிதாவின் வீட்டுப் பணிப்பெண்களான தேவிகா, பூமிகா, சிவயோகம் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள்.
வருகிற 18-ந்தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடமும், 20-ந்தேதி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. #JayaDeathProbe #Radhakrishnan
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.
இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் டிரைவர்கள், அப்பல்லோ டாக்டர்கள், அரசு டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இதுவரை 142 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இவர்களில் சிலரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். சசிகலா தனது வாக்குமூலத்தை வக்கீல் மூலம் கடந்த மாதம் தாக்கல் செய்தார்.
தற்போது விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற விவரங்கள் அனைத்தும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு தெரியும் என்பதால் அவரிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்திருந்தது. அவர் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இதனிடையே ஜெயலலிதாவின் வீட்டுப் பணிப்பெண்களான தேவிகா, பூமிகா, சிவயோகம் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள்.
வருகிற 18-ந்தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடமும், 20-ந்தேதி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. #JayaDeathProbe #Radhakrishnan
கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடலூர்:
கடலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வந்தார். மருத்துவமனையில் உள்ள டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை வார்டில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். பின்னர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 564 பேர் உள்நோயாளிகளாக இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 260 ஆக குறைந்துள்ளது. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளின் எண்ணிக்கை 146-ல் இருந்து 65 ஆக குறைந்துள்ளது. பொதுவாக நவம்பர் மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு 40 சதவீதம் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் டெங்கு, பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 23 ஆயிரத்து 294 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 65 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு 3,845 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 13 பேர் இறந்துள்ளனர்.
அதேபோல் கடந்த ஆண்டு 3,800 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 17 பேர் இறந்தனர். இந்த ஆண்டு 2,100 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, இதுவரை 37 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டை விட டெங்கு காய்ச்சல் இறப்பு குறைந்துள்ளது, பன்றி காய்ச்சல் இறப்பு அதிகரித்துள்ளது. கோவையை ஒட்டியுள்ள பகுதிகளில் பன்றி காய்ச்சல் பாதிப்பை தடுக்க கூடுதலாக கண்காணிக்க வேண்டியது உள்ளது.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் ஆண், பெண் விகிதாச்சாரம் குறைவாக உள்ளது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருந்த பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. தற்போது திருவண்ணாமலை மாவட்டம் தான் சவாலாக இருக்கிறது. பாலின விகிதத்தை அதிகரிக்க சட்டம் மற்றும் விழிப்புணர்வு மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வந்தார். மருத்துவமனையில் உள்ள டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை வார்டில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். பின்னர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 564 பேர் உள்நோயாளிகளாக இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 260 ஆக குறைந்துள்ளது. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளின் எண்ணிக்கை 146-ல் இருந்து 65 ஆக குறைந்துள்ளது. பொதுவாக நவம்பர் மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு 40 சதவீதம் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் டெங்கு, பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 23 ஆயிரத்து 294 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 65 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு 3,845 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 13 பேர் இறந்துள்ளனர்.
அதேபோல் கடந்த ஆண்டு 3,800 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 17 பேர் இறந்தனர். இந்த ஆண்டு 2,100 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, இதுவரை 37 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டை விட டெங்கு காய்ச்சல் இறப்பு குறைந்துள்ளது, பன்றி காய்ச்சல் இறப்பு அதிகரித்துள்ளது. கோவையை ஒட்டியுள்ள பகுதிகளில் பன்றி காய்ச்சல் பாதிப்பை தடுக்க கூடுதலாக கண்காணிக்க வேண்டியது உள்ளது.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் ஆண், பெண் விகிதாச்சாரம் குறைவாக உள்ளது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருந்த பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. தற்போது திருவண்ணாமலை மாவட்டம் தான் சவாலாக இருக்கிறது. பாலின விகிதத்தை அதிகரிக்க சட்டம் மற்றும் விழிப்புணர்வு மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
டெங்கு, பன்றி காய்ச்சலால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தாமதமாக சிகிச்சைக்கு வருவதால் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். #Dengue #SwineFlu #TNHealthSecretary
சென்னை:
டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பரவி வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
சென்னை சைதாப்பேட்டை தாடண்டன் நகர் அரசு குடியிருப்பில் இன்று காலை சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் டெங்கு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்.
அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களிடத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வழங்கினார்கள். சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோர் தலைமையில் இந்தவிழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
பின்னர் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பன்றி காய்ச்சலை பொறுத்தவரையில் கைகழுவும் பழக்கத்தை தினமும் பின்பற்றி வந்தாலே இந்நோயை தவிர்க்கலாம். நல்ல தண்ணீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பாதிப்பு உண்டாகிறது. நீரில் கொசுக்கள் உருவாகும் பகுதிகளை கண்டறிந்து அவற்றை முழுமையாக அப்புறப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் முழுமையாக கட்டுப்படுத்த முடியும். காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுக வேண்டும். டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது.
பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பன்றி காய்ச்சலால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மக்கள் கூடும் இடங்களில் தான் இவை அதிகமாக பரவுகிறது. அதனால் கை கழுவும் பழக்கத்தை பொதுமக்கள் வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
காலை மற்றும் மாலை நேரங்களில் மனிதர்களை கடிக்கும் கருப்பு, வெள்ளை நிறங்கள் கொண்ட கொசுக்களால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. கொசுக்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள முழு கை உடைகளை அணிய வேண்டும்.

பன்றி காய்ச்சலுக்கு இதுவரையில் ஏற்கனவே 11 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்குடியில் 2 பேரும், கோவை, ஈரோட்டில் இருவரும் அறிகுறியுடன் இறந்துள்ளனர். தாமதமாக சிகிச்சைக்கு வருவதால் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் வந்தவுடன் மருத்துவமனைக்கு வந்தால் இறப்பை முற்றிலும் தவிர்த்திருக்கலாம்.
டெங்கு காய்ச்சலுக்கு இந்த வருடம் இதுவரையில் 9 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #Dengue #SwineFlu #TNHealthSecretary
டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பரவி வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
சென்னை சைதாப்பேட்டை தாடண்டன் நகர் அரசு குடியிருப்பில் இன்று காலை சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் டெங்கு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்.
அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களிடத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வழங்கினார்கள். சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோர் தலைமையில் இந்தவிழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
பின்னர் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பன்றி காய்ச்சலை பொறுத்தவரையில் கைகழுவும் பழக்கத்தை தினமும் பின்பற்றி வந்தாலே இந்நோயை தவிர்க்கலாம். நல்ல தண்ணீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பாதிப்பு உண்டாகிறது. நீரில் கொசுக்கள் உருவாகும் பகுதிகளை கண்டறிந்து அவற்றை முழுமையாக அப்புறப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் முழுமையாக கட்டுப்படுத்த முடியும். காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுக வேண்டும். டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது.
பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பன்றி காய்ச்சலால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மக்கள் கூடும் இடங்களில் தான் இவை அதிகமாக பரவுகிறது. அதனால் கை கழுவும் பழக்கத்தை பொதுமக்கள் வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
காலை மற்றும் மாலை நேரங்களில் மனிதர்களை கடிக்கும் கருப்பு, வெள்ளை நிறங்கள் கொண்ட கொசுக்களால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. கொசுக்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள முழு கை உடைகளை அணிய வேண்டும்.
கர்ப்பிணிகள், முதியவர்கள், சர்க்கரை நோய் மற்றும் எடை அதிகம் உள்ளவர்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பன்றி, டெங்கு காய்ச்சல் குறித்து பீதி அடைய வேண்டாம். கவனக்குறைவாகவும் இருக்க வேண்டாம்.

பன்றி காய்ச்சலுக்கு இதுவரையில் ஏற்கனவே 11 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்குடியில் 2 பேரும், கோவை, ஈரோட்டில் இருவரும் அறிகுறியுடன் இறந்துள்ளனர். தாமதமாக சிகிச்சைக்கு வருவதால் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் வந்தவுடன் மருத்துவமனைக்கு வந்தால் இறப்பை முற்றிலும் தவிர்த்திருக்கலாம்.
டெங்கு காய்ச்சலுக்கு இந்த வருடம் இதுவரையில் 9 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #Dengue #SwineFlu #TNHealthSecretary
டெங்கு கொசு ஒழிப்பு குறித்து ஆய்வு செய்த போது நாயை அவிழ்த்துவிட்டு சுகாதாரத்துறை செயலாளர் ராதகிருஷ்ணன் மற்றும் கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளி மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து வீடு, வீடாக ஆய்வு செய்தனர்.
அப்போது மணவாளநகர், காந்தி தெருவில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டை ஆய்வு செய்ய உள்ளே நுழைந்தனர்.
உடனே பாலகிருஷ்ணன் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென வீட்டில் இருந்த நாய்களை அவிழ்த்து விட்டார்.
இதனை கண்டு ஆய்வுக்கு வந்த சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பாதுகாப்புக்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் பாலகிருஷ்ணனை எச்சரித்து நாய்களை வெளியே விரட்டி விட்டனர்.
பின்னர் அவரது வீட்டில் ஆய்வு செய்தனர். இதில் அந்த வீட்டில் டெங்கு கொசு உருவாகும் வகையில் சுகாதாரம் இல்லாமல் இருந்தது.
இதையடுத்து பாலகிருஷ்ணனுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவரது வீட்டுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
இதற்கிடையே அதிகாரிகளை பணி செய்யவிடாமல், அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக பாலகிருஷ்ணன் மீது மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மணவாளநகர் காந்தி தெருவில் சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ஆகியோர் டெங்கு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்ய சென்ற போது பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் டெங்கு கொசு உற்பத்திக்கான அனைத்து ஆதாரங்களுடன் மிகவும் சுகாதாரமின்றி சீர்கேட்டுடன் இருந்தது. வீட்டின் உள்ளே செல்ல முயன்றபோது நான்கு பெரிய நாய்களை கொண்டு வீட்டின் உள்ளே வரவிடாமல் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டார்.
ஏற்கனவே இதே போன்று துப்புரவு பணியாளர் மற்றும் டிபிசி பணியாளர்கள் பலமுறை இந்த வீட்டிற்கு சென்றபோது வீட்டிற்கு உள்ளே வரவிடாமல் நான்கு பெரிய நாய்களை கொண்டு பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் பணி செய்ய விடாமல் நடந்து கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாலகிருஷ்ணன் என்பவரின் பயன்படுத்த படாமல் இருந்த மற்றொரு ஒடு; போட்ட வீடு முழுவதும் டெங்கு கொசு ஆதாரம் உள்ளது கண்டறியப்பட்டது. எனவே பொது சுகாதாரம் விதி 1939ன்படி ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த வீடு வருவாய்த்துறை மூலம் ‘சீல்’ வைக்கப்பட்டது.
மணவாளர் நகர் காவல் நிலையத்தில் சுகாதாரதுறை மற்றும் உள்ளாட்சி துறை பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மூலம் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
எனவே அரசுத்துறை அலுவலர்கள், அரசு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும். தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் பொது சுகாதாரம் சட்டம் 1939 ன்படி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #tamilnews
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து வீடு, வீடாக ஆய்வு செய்தனர்.
அப்போது மணவாளநகர், காந்தி தெருவில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டை ஆய்வு செய்ய உள்ளே நுழைந்தனர்.
உடனே பாலகிருஷ்ணன் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென வீட்டில் இருந்த நாய்களை அவிழ்த்து விட்டார்.
இதனை கண்டு ஆய்வுக்கு வந்த சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பாதுகாப்புக்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் பாலகிருஷ்ணனை எச்சரித்து நாய்களை வெளியே விரட்டி விட்டனர்.
பின்னர் அவரது வீட்டில் ஆய்வு செய்தனர். இதில் அந்த வீட்டில் டெங்கு கொசு உருவாகும் வகையில் சுகாதாரம் இல்லாமல் இருந்தது.
இதையடுத்து பாலகிருஷ்ணனுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவரது வீட்டுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
இதற்கிடையே அதிகாரிகளை பணி செய்யவிடாமல், அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக பாலகிருஷ்ணன் மீது மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மணவாளநகர் காந்தி தெருவில் சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ஆகியோர் டெங்கு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்ய சென்ற போது பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் டெங்கு கொசு உற்பத்திக்கான அனைத்து ஆதாரங்களுடன் மிகவும் சுகாதாரமின்றி சீர்கேட்டுடன் இருந்தது. வீட்டின் உள்ளே செல்ல முயன்றபோது நான்கு பெரிய நாய்களை கொண்டு வீட்டின் உள்ளே வரவிடாமல் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டார்.
ஏற்கனவே இதே போன்று துப்புரவு பணியாளர் மற்றும் டிபிசி பணியாளர்கள் பலமுறை இந்த வீட்டிற்கு சென்றபோது வீட்டிற்கு உள்ளே வரவிடாமல் நான்கு பெரிய நாய்களை கொண்டு பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் பணி செய்ய விடாமல் நடந்து கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாலகிருஷ்ணன் என்பவரின் பயன்படுத்த படாமல் இருந்த மற்றொரு ஒடு; போட்ட வீடு முழுவதும் டெங்கு கொசு ஆதாரம் உள்ளது கண்டறியப்பட்டது. எனவே பொது சுகாதாரம் விதி 1939ன்படி ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த வீடு வருவாய்த்துறை மூலம் ‘சீல்’ வைக்கப்பட்டது.
மணவாளர் நகர் காவல் நிலையத்தில் சுகாதாரதுறை மற்றும் உள்ளாட்சி துறை பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மூலம் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
எனவே அரசுத்துறை அலுவலர்கள், அரசு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும். தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் பொது சுகாதாரம் சட்டம் 1939 ன்படி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #tamilnews
தமிழகத்தில் இந்த வருடம் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #DengueFever #SwineFlu #DengueDeaths #TNHealthSecretary
சென்னை:
டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தை பலியானதை அறிந்ததும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெங்குவை பரப்பும் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளாட்சி துறை ஊழியர்கள் இணைந்து இந்த பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.
பொது மக்களும் இணைந்து செயல்பட்டால் தான் கொசுக்களை ஒழிக்க முடியும். டெங்குவினால் உயிர் இழப்பு என்பது ஒரு சதவீதம் என்று கூறலாம். உடலில் தட்டணுக்கள் குறைந்து ரத்தம் வெளியேறும் ஆபத்தான கடைசி நேரத்தில் மட்டுமே உயிர் இழப்பு நேரிடும்.
அந்த ஒரு சதவீதமும் டெங்கு பாதிப்பு மட்டுமல்லாமல் வேறு நோய்களிலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு தாமதமாக வருவதால் உயிர் இழப்பு ஏற்படுகிறது. காய்ச்சல் வந்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

குடிநீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். மழை நீர் தேங்கக் கூடிய வீடு-கடைகளில் அவற்றை அப்புறப்படுத்த மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கொசு உற்பத்தியாகக் கூடிய இடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்படுகிறது. ஒன்றரை லட்சம் தடுப்பூசிகள் தயாராக இருக்கின்றன. பொது மக்கள் பீதி அடைய வேண்டாம். காய்ச்சல் வந்த உடனே ஆஸ்பத்திரிக்கு வந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அலட்சியமாக இருக்க வேண்டாம்.
பன்றிக் காய்ச்சல் சங்கரன் கோவில், மதுரை, கோவை, சென்னை போன்ற இடங்களில் பரவி வருகிறது. கிருமி பரவாமல் தடுக்க அடிக்கடி கை கழுவ வேண்டும். பன்றி காய்ச்சல் ஆஸ்துமா, நீரிழிவு நோய் பாதிப்பு உடையவர்கள், கர்ப்பிணிகளை எளிதாக தாக்க கூடியது. சுகாதாரத் துறை தீவிரமாக கண் காணித்து அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. 2012-ம் ஆண்டு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு 22 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இந்த வருடம் 2 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.
பன்றிக் காய்ச்சலால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு நாள் ஒன்றுக்கு 25 முதல் 50 பேர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரையில் 5 பேர் டெங்கு காய்ச்சலிலும், 11 பேர் பன்றி காய்ச்சலிலும் உயிர் இழந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #DengueFever #SwineFlu #DengueDeaths #TNHealthSecretary
டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தை பலியானதை அறிந்ததும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெங்குவை பரப்பும் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளாட்சி துறை ஊழியர்கள் இணைந்து இந்த பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.
பொது மக்களும் இணைந்து செயல்பட்டால் தான் கொசுக்களை ஒழிக்க முடியும். டெங்குவினால் உயிர் இழப்பு என்பது ஒரு சதவீதம் என்று கூறலாம். உடலில் தட்டணுக்கள் குறைந்து ரத்தம் வெளியேறும் ஆபத்தான கடைசி நேரத்தில் மட்டுமே உயிர் இழப்பு நேரிடும்.
அந்த ஒரு சதவீதமும் டெங்கு பாதிப்பு மட்டுமல்லாமல் வேறு நோய்களிலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு தாமதமாக வருவதால் உயிர் இழப்பு ஏற்படுகிறது. காய்ச்சல் வந்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தேவையான மருந்து, மாத்திரைகள், தடுப்பூசி போன்றவை போதுமானதாக உள்ளன. டெங்குவை கண்டுபிடிக்க கூடிய ‘எலிசா’ பரிசோதனையும் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ளது. காலி இடங்களில் மழைநீர் தேங்காமல் மக்கள் பார்த்து கொள்ள வேண்டும்.

கொசு உற்பத்தியாகக் கூடிய இடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்படுகிறது. ஒன்றரை லட்சம் தடுப்பூசிகள் தயாராக இருக்கின்றன. பொது மக்கள் பீதி அடைய வேண்டாம். காய்ச்சல் வந்த உடனே ஆஸ்பத்திரிக்கு வந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அலட்சியமாக இருக்க வேண்டாம்.
பன்றிக் காய்ச்சல் சங்கரன் கோவில், மதுரை, கோவை, சென்னை போன்ற இடங்களில் பரவி வருகிறது. கிருமி பரவாமல் தடுக்க அடிக்கடி கை கழுவ வேண்டும். பன்றி காய்ச்சல் ஆஸ்துமா, நீரிழிவு நோய் பாதிப்பு உடையவர்கள், கர்ப்பிணிகளை எளிதாக தாக்க கூடியது. சுகாதாரத் துறை தீவிரமாக கண் காணித்து அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. 2012-ம் ஆண்டு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு 22 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இந்த வருடம் 2 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.
பன்றிக் காய்ச்சலால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு நாள் ஒன்றுக்கு 25 முதல் 50 பேர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரையில் 5 பேர் டெங்கு காய்ச்சலிலும், 11 பேர் பன்றி காய்ச்சலிலும் உயிர் இழந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #DengueFever #SwineFlu #DengueDeaths #TNHealthSecretary
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் அனைத்தும் போதிய கையிருப்பில் உள்ளன என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:
தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று சிவகங்கை வந்தார். அவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கான வார்டுகளை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள பேரிடர் மேலாண்மை பிரிவு, முதியோர்களுக்கான தனிப்பிரிவு, குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு, டெங்கு நோய் தடுப்பு வார்டு, சிடி ஸ்கேன் பிரிவு, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்து, அங்கு போதுமான வசதிகள் உள்ளதா என்றும் அவைகள் சரியாக செயல்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து ரூ.4½ கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் விபத்து சிகிச்சை பிரிவு பகுதியை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவத் துறை இணை இயக்குனர் விஜயன்மதமடக்கி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் சுாதாரத்துறை செயலாளர் நிருபர்களிடம் கூறியதாவது:- பருவமழை தொடங்க உள்ளதால் மழை காலத்தில் ஏற்படும் டெங்கு, சிக்குன்குனியா, பன்றிகாய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வைரஸ்காய்ச்சல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் இந்த நோய்களின் தாக்கம் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கையாக தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. மாவட்டத்தில சிங்கம்புணரி, அழகமாநகரி மற்றும் காரைக்குடி ஆகிய பகுதிகளில் கலெக்டர், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஆகியோர் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது ரூ.87 லட்சம் மதிப்பில் முதியோர்களுக்கான புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. விபத்து சிகிச்சை பிரிவு இன்னும் 2 மாதத்தில் செயல்படும். மேலும் நிலவேம்பு கசாயம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று சிவகங்கை வந்தார். அவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கான வார்டுகளை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள பேரிடர் மேலாண்மை பிரிவு, முதியோர்களுக்கான தனிப்பிரிவு, குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு, டெங்கு நோய் தடுப்பு வார்டு, சிடி ஸ்கேன் பிரிவு, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்து, அங்கு போதுமான வசதிகள் உள்ளதா என்றும் அவைகள் சரியாக செயல்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து ரூ.4½ கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் விபத்து சிகிச்சை பிரிவு பகுதியை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவத் துறை இணை இயக்குனர் விஜயன்மதமடக்கி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் சுாதாரத்துறை செயலாளர் நிருபர்களிடம் கூறியதாவது:- பருவமழை தொடங்க உள்ளதால் மழை காலத்தில் ஏற்படும் டெங்கு, சிக்குன்குனியா, பன்றிகாய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வைரஸ்காய்ச்சல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் இந்த நோய்களின் தாக்கம் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கையாக தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. மாவட்டத்தில சிங்கம்புணரி, அழகமாநகரி மற்றும் காரைக்குடி ஆகிய பகுதிகளில் கலெக்டர், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஆகியோர் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது ரூ.87 லட்சம் மதிப்பில் முதியோர்களுக்கான புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. விபத்து சிகிச்சை பிரிவு இன்னும் 2 மாதத்தில் செயல்படும். மேலும் நிலவேம்பு கசாயம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.