என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 95580"

    கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டதால் ஆடம்பர திருமணங்கள் நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரை ரிசார்ட்ஸ் பகுதிகளில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
    சென்னை:

    கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருமணங்கள் மிகப்பெரிய அளவில் ஆடம்பரமாக நடைபெறவில்லை. கட்டுப்பாடு மற்றும் பொருளாதார சூழல் காரணமாக எளிமையாக நடந்தது.

    கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டதால் ஆடம்பர திருமணங்கள் நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரை ரிசார்ட்ஸ் பகுதிகளில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

    கடந்த மாதத்தில் இருந்து மிகப்பெரிய நட்சத்திர ஓட்டல்களில் திருமணங்கள் அதிக அளவில் நடைபெற தொடங்கிவிட்டன.

    கடந்த வாரம் தாஜ்கோரமண்டல் ஓட்டலில் ராஸ்மாடாஸ் குழுமத்தின் திருமண கண்காட்சி மிகவும் ஆடம்பரமாக நடந்தது. தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் நடந்த இந்த திருமணக் கண்காட்சி பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதை காட்டியது.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூலை வரை நாடு முழுவதும் 40 லட்சம் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதை ஐ.டி.சி. கிராண்ட்சோழா நட்சத்திர ஓட்டல் பொதுமேலாளர் கபின் சாங்கட்வான் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    2019-ம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது தற்போது ஐ.டி.சி.கிராண்ட் சோலாரில் திருமண நிகழ்ச்சிகள் அதிக அளவில் உள்ளன. அறைகளில் தங்கும் வருவாய் கிட்டதட்ட இரட்டிப்பாகும். விருந்து வருவாய் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

    வெளிப்புறங்களில் இருந்தும் எங்களுக்கு திருமணங்களுக்கான உணவு ஆர்டர் வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருமணங்கள் மூலம் ஜவுளி, நகைகள், கார்கள் விற்பனை மிகப்பெரிய அளவில் அமோகமாக நடைபெற்று வருகின்றன.

    இது தொடர்பாக நகை கடையின் உரிமையாளர் ஒருவர் கூறும்போது:-

    இந்த கோடையில் தங்கத்தின் தேவை அதிகமாக இருக்கும். திருமண நிகழ்ச்சிக்காக புதிய வகை பிராண்டுகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். நகை விற்பனை அதிக அளவில் இருக்கும் என்றார்.

    பட்டுப்புடவை கடை உரிமையாளர், ஒருவர் கூறும்போது, மணப்பெண் அணியும் முகூர்த்த பட்டுப்புடவைகள் மட்டுமின்றி செமி காட்டன், ஆர்கான்கள், லைட் சில்க்ஸ் போன்ற இலகுவான புடவைகளுக்கும் அதிக தேவைகள் உள்ளது.

    திருமணத்திற்காக புதிய வாகனங்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் தற்போது பற்றாக்குறை காணப்படுகிறது. இது குறித்து கார் நிறுவன ஏஜெண்டு ஒருவர் கூறும்போது, பொதுவாக நாங்கள் திருமணத்திற்காக டெமோ அல்லது டெஸ்டிங் டிரை கார்களை வழங்குகிறோம். ஏனென்றால் தேர்வு செய்யப்பட்ட கார்களை டெலிவரி செய்ய 4 முதல் 6 மாதங்கள் வரை ஆகிறது. திருமணத்திற்காக எங்கள் டெமோ கார்களை அலங்கரித்து கொடுக்கிறோம். பின்னர் புதிய காரை தொழிற்சாலையில் இருந்து வரவழைத்து கொடுக்கிறோம் என்றார்.

    16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் தங்கமாரி (வயது23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த செப்டம்பர் மாதம்  ஊரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு சிவகாசியில் வசித்தனர்.

    சிவகாசியில் தங்கமாரி சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்து 7 மாதம் ஆன நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற போது டாக்டர் அவரிடம் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு  16 வயது என்பது தெரியவந்தது. 

    இது குறித்து டாக்டர், கள்ளிக்குடி சமூக நல அலுவலர் பேபி ஜீவசெல்வமணிக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் அதிகாரி செல்வமணி அங்கு வந்து விசாரணை நடத்தி இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

    இதன் அடிப்படையில் வாலிபர் தங்கமாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், அவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது,.
    சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

    இதையடுத்து, ரசிகர்கள் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர். ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக இருவருக்கும் ஜூன் 9-ஆம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெறும் என்று தகவல் வெளியானது.

    நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதழ்
    நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதழ்

    மேலும், சமீபத்தில் விக்னேஷ் சிவனின் குல தெய்வம் கோவிலுக்கு சென்று நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வழிபாடு நடத்திய  புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து இருவரின் திருமணத்திற்காக தான் இந்த வழிபாடு என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில், தற்போது சென்னை, மகாபலிபுரத்தில் இருவரின் திருமணமும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதன் அழைப்பிதழ் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. 
    நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறும் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வருகின்றனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வரும் நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.

    இந்நிலையில், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூலை 9-ஆம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெறும் என்று இருவரும் அறிவித்திருந்த நிலையில், தற்போது திருமண இடத்தை மாற்றி வைத்துள்ளனர்.

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    150 விருந்தினர்கள் கூட திருமணத்தில் கலந்து கொள்ள திருப்பதி கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்பதால் திருமண இடத்தை மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் ஜூன் 9-ம் தேதி விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக அழைப்பிதழ் வெளியாகி வைரலாகியுள்ளது.
    பாகிஸ்தானில் திருமண வயது வராத மகளை ஒரு லட்ச ரூபாய்க்காக திருமணம் செய்து கொடுக்க முயன்ற போது தடுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    டாடு :

    பாகிஸ்தானின் லக்கி ஷா சதார் பகுதியைச் சேர்ந்தவர் சுல்பிகர் ஜிஸ்கானி. இவரது மனைவி பாப்லி ஜிஸ்கானி. சுல்பிகர் ரூ. 1 லட்சத்திற்காக தனது மகள் ஹுமேராவை ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றுள்ளார். இதைத் தடுத்த பாப்லியை சுல்பிகர் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்.

    இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாப்லியின் சகோதரர் முனவ்வர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சுல்பிகரை கைது செய்துள்ளனர். மேலும் ஏற்கெனவே, சுல்பிகர் தன்னுடைய இரண்டு மகள்களையும் இதுபோல பணத்திற்காக விற்று விட்டதாகவும் முனவ்வர் தெரிவித்துள்ளார்.

    விரைவில் இதுகுறித்த விசாரணை தொடங்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். செஹ்வான் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, பாப்லி ஜிஸ்கானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    ஷாமா திருமணத்தை இந்து கோவிலில் நடத்துவதற்கு பாரதிய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
    சூரத்:

    குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த ஷாமா பிந்து என்ற 24 வயது இளம்பெண் வருகிற 11-ந்தேதி தனக்குதானே திருமணம் செய்து கொள்வதாக கூறியிருப்பது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மற்ற திருமணங்களைபோல மந்திரங்கள் ஓத வழக்கமான சடங்குகளுடன் இந்த திருமணத்தை அங்குள்ள ஹரி ஹரேஷ்வர் கோவிலில் நடத்தபோவதாகவும் அவர் அறிவித்து உள்ளார். இந்த திருமணத்துக்கு பெற்றோர் குறுக்கே நிற்கவில்லை. அவர்களும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். திருமணத்திற்காக அவர் அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் விநியோகித்து வருகிறார்.

    9-ந்தேதி திருமண சடங்குகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. சமூகவலைதளங்களில் ஷாமா பிந்துவின் இந்த விநோத திருமணம் பற்றி தான் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் அவர் பிரபலமாகிவிட்டார். அவரது இந்த திருமணத்தை தான் தற்போது அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.

    இந்தநிலையில் ஷாமா திருமணத்தை இந்து கோவிலில் நடத்துவதற்கு பாரதிய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பா.ஜனதா நகர துணைத்தலைவர் சுனிதா சுக்லா கூறியதாவது:-

    இது போன்ற தனக்கு தானே திருமணம் செய்வது என்பது இந்து மதத்திற்கு எதிரானது. பிந்துவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளது என்று நினைக்கிறேன்.

    ஒரு ஆணை ஆண் திருமணம் செய்வது, பெண்ணை பெண் திருமணம் செய்வது என்பது இந்து கலாச்சாரம் கிடையாது. அது போன்றுதான் பிந்துவின் திருமணமும் சட்டத்துக்கு புறம்பானது. இதுபோன்ற திருமணத்துக்கு அனுமதி அளித்தால் இந்துக்களின் பிறப்பு குறையும், இதனால் அவரது திருமணத்தை இந்து கோவிலில் நடத்துவதை அனுமதிக்க முடியாது.

    அவர் எந்த இந்து கோவிலிலும் திருமணத்தை நடத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதனை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    இதுபோன்று பலரும் பிந்துவின் புதுமையான திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருவதால் ஷாமா பிந்துவின் திருமணம் அவரை போலவே சர்ச்சையில் சிக்கி உள்ளது. இதனால் அவரது திருமணம் திட்டமிட்ட படி 11-ந்தேதி நடைபெறுமா என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

    பட்டதாரி பெண்ணான ஷாமா பிந்து தற்போது வதோதராவில் உள்ள ஒருதனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது பெற்றோர்கள் இருவரும் என்ஜீனியர்கள் ஆவார்கள். தந்தை தென் ஆப்பிரிக்காவிலும், தாய் அகமதாபாத்திலும் வசித்து வருகின்றனர்.



    சீனாவில் குழந்தைகள் பிறப்புவிகிதத்தை பொறுத்தமட்டில் அது கடந்த ஆண்டில் 0.85 சதவீதமாக இருந்தது. 1978-க்கு பின்னர் தொடர்ந்து பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கு கீழே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    பீஜிங் :

    உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள நாடு சீனா. ஆனால் அங்கு இப்போது குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.இந்த நிலையில் அங்கு இப்போது திருமணங்கள் செய்வதும் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ந்து திருமண பதிவுகள் குறைந்துள்ளதாக சீன புள்ளியியல் ஆண்டு புத்தகம் காட்டுகிறது. நடப்பு 2021-ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் அங்கு 58 லட்சத்து 70 ஆயிரம் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் குறைவுதான்.

    இது தொடர்ந்து குறையும் என எதிர்பார்ப்பதாக சீன அரசு நாளிதழ் கூறி உள்ளது. சீனாவில் குழந்தைகள் பிறப்புவிகிதத்தை பொறுத்தமட்டில் அது கடந்த ஆண்டில் 0.85 சதவீதமாக இருந்தது. 1978-க்கு பின்னர் தொடர்ந்து பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கு கீழே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    திருக்கனூர் அருகே உறவினரின் திருமண நிகழ்சிக்கு விலை உயர்ந்த ஜவுளி எடுத்து தராததால் என்ஜினீயரிங் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே உள்ள காட்டேரிக்குப்பம் ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்தவர் கோவிந்தன். ரைஸ்மில் தொழிலாளி. இவரது மகள் சரண்யா (வயது19). இவர் வில்லியனூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து 2-ம் ஆண்டுக்கு செல்ல தயாராக இருந்தார்.

    இந்த நிலையில் கோவிந்தனின் உறவினர் திருமணம் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் திருமணத்துக்கு ஜவுளி வாங்கி சரண்யாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுவையில் உள்ள ஜவுளி கடைக்கு அழைத்து வந்தனர்.

    அப்போது சரண்யாவுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பில் ஜவுளி வாங்கி கொடுத்தனர். ஆனால் தனக்கு ரூ.4 ஆயிரம் மதிப்பில் ஜவுளி வாங்கி தரவேண்டும் என்று சரண்யா அடம்பிடித்தார். அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால் சமாதானம் அடையாமல் சரண்யா வழியிலேயே பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    வீட்டுக்கு வந்த சரண்யா விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். வீட்டின் மாடி அறைக்கு சென்ற அவர் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார். வெகு நேரமாக மாடியில் இருந்து சரண்யா வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது சரண்யா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சரண்யாவை தூக்கில் இருந்து மீட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே சரண்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சரண்யாவின் தாய் மனோன்மணியம் கொடுத்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருவள்ளூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த தசரதனின் மகள் ஜீவிதா. இவர் தனது உறவுக்காரரான சேலை கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த டில்லிபாபு என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

    டில்லிபாபு திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசமாக இருந்தார். இதில் ஜீவிதா கர்ப்பமானார். இந்நிலையில் டில்லி பாபு திருமணம் செய்ய மறுத்ததோடு தலைமறைவானதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீவிதா திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சித்ராதேவியிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வேலை வி‌ஷயமாக ஆந்திரா மாநிலம் கடப்பாவில் இருந்த டில்லிபாபுவை அழைத்து வந்தனர்.

    போலீசார் இரு வீட்டார் பெரியவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இரு குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் டில்லிபாபு தரப்பில் அதற்கு நீண்ட நேரம் மறுப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இரவு நடந்த பேச்சு வார்த்தையில் பெற்றோர்கள் சம்மதித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 10 மணி அளவில் திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடிக்கு திருமணம் நடந்தது.

    டி,எஸ்.பி., கங்காதரன் தாலி எடுத்து கொடுக்க டில்லிபாபு ஜீவிதாவின் கழுத்தில் தாலியை கட்டினார். இதனால் காலை முதல் நீடித்த திருமணப் போராட்டம் முடிவுக்கு வந்தது. சுமுகமாக திருமணம் நடந்ததால் இருவீட்டாரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ராஜபாளையத்தில் திருமணமான 10 மாதத்தில் மாயமான இளம் பெண்ணை போலீசார் தேடி வருகிறார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் நட்டுக்கால் ராஜா தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 25). இருவருக்கும் அதே பகுதியைச்சேர்ந்த குருலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    சம்பவத்தன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள அக்கா வீட்டுக்கு செல்வதாக குருலட்சுமி கணவர் வீட்டாரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் குருலட்சுமி அங்கு செல்லாமல் மாயமானார்.

    இதனால் பதறிப்போன தினேஷ் மற்றும் உறவினர்கள் குருலட்சுமியை பல்வேறு இடங்களில் தேடினர் பலன் இல்லை.

    இதுகுறித்து குருலட்சுமியின் தாய் மகேசுவரி ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் லிங்குசாமி வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்.

    குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நேற்று ஒரு நாளில் மட்டும் 177 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதுபோல 697 குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலும் ஒன்று.

    குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாக திருவிழாவில் திருமணங்கள் மற்றும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய முகூர்த்த நாள் விழா நேற்று நடந்தது.

    இதையொட்டி குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரு நாளில் மட்டும் 177 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.


    குருவாயூர் கோவிலில் 177 ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததால் திரண்ட உறவினர்கள் கூட்டம்.

    இதுபோல 697 குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. திருமணம் மற்றும் சோறு ஊட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தவர்களால் கோவிலின் திருமண மண்டபம் நிறைந்து காணப்பட்டது.

    குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நடந்த இந்நிகழ்ச்சிகளால் கோவிலுக்கு நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.44 லட்சம் வருவாய் கிடைத்தது.

    கோவிலுக்கு வந்த பக்தர்கள் நடத்திய நெய் அபிஷேகம், பால் பாயாசம், துலாபாரம் நிகழ்ச்சிகள் மூலமும் கோவிலுக்கு கூடுதல் வருவாய் கிடைத்தது.

    குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி கோவில் அமைந்துள்ள பகுதியில் நேற்று போக்குவரத்து மாற்றி விடப்பட்டிருந்தது. கோவிலுக்குச் செல்லும் சாலைகள் மற்றும் திரும்பி வரும் சாலைகள் ஒரு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டிருந்தன.

    இதன் காரணமாக பக்தர்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்காமல் கோவிலுக்குச் சென்று திரும்பினர்.


    மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள கன்னிகாளிபுரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது42). முன்னாள் ராணுவ வீரர். தற்போது கேரளாவில் ஜீப் ஓட்டி வருகிறார். இவருக்கு வேல்மணி என்ற மனைவியும், கீர்த்தனா என்ற மகளும், ஹரீஸ் என்ற மகனும் உள்ளனர்.

    தமிழ்ச்செல்வனின் தங்கையின் மகன் சுதர்சனை கீர்த்தனா காதலித்து வந்துள்ளார். இதற்கு தமிழ்ச்செல்வன் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். தந்தையின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் கீர்த்தனா அவரையே திருமணம் செய்து கொண்டார்.

    இதனால் மன வேதனையடைந்த தமிழ்ச் செல்வன் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×