என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "tag 95580"
- 80 வயது மூதாட்டி வீராயி, வயது மூப்பு காரணமாக நள்ளிரவு தூக்கத்திலேயே உயிரிழந்தார்.
- மறுநாள் வீராயியின் கணவர் முத்து அம்பலமும் (85) தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மதுரை மாவட்டம் கருப்பாயூரணியில் 80 வயது மூதாட்டி வீராயி, வயது மூப்பு காரணமாக பிப்ரவரி 8 நள்ளிரவு உடல்நலக்குறைவால் தூக்கத்திலேயே உயிரிழந்தார்;
இந்நிலையில் இவருடைய கணவரான 85 வயதுடைய முத்து அம்பலம் மனைவியின் பிரிவு தாங்காது தவித்த நிலையில், நேற்று இரவு தூக்கத்திலேயே உயிரிழந்தார்.
67 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்த தம்பதி இறப்பிலும் இணைபிரியாது அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
- கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
- திருமண விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
திருப்போரூர்:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக அருண்ராஜ் உள்ளார். இவர் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சமுத்திரபாண்டியனின் மகன் ஆவார்.
இவருக்கும் அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் நெருங்கிய உறவினரான மேகநாதன் - ஜெயந்தி தம்பதியரின் மகளான டாக்டர். கவுசிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து இன்று காலை திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் உற்சவ மண்டபத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ்-டாக்டர் கவுசிகா திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. திருமணத்தையொட்டி திருப்போரூர் முருகன் கோவில் உற்சவர் மண்டபத்தில் பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
திருமண விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் இரு வீட்டார் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அரசுதுறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
கலெக்டர் அருண்ராஜ்-டாக்டர் கவுசிகா திருமண வரவேற்பு விழா வருகிற 14-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாலை சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் மையத்தில் நடைபெற உள்ளது. திருமணத்தையொட்டி திருப்போரூர் முருகன் கோவிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று முகூர்த்த நாள் என்பதால் கோவில் வளாகத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இதனால் கோவில் வளாகம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- கடைசி நேரத்தில் மணப்பெண்ணின் தாய் மாமா, மணமகனின் சிபில் ஸ்கோரை கேட்டுள்ளார்.
- அவரால் மனைவியின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்ய முடியும்? என்று கேட்டார்.
சிபில் [CIBIL] ஸ்கோர் என்பது நபரின் கடன் பின்னணியைக் குறிக்கும் எண் முறை ஆகும். அவர் கடன் பெறுவதற்குத் தகுதியானவரா என்பதை அவரின் சிபில் ஸ்கோரை வைத்தே வங்கிகள் முடிவு செய்யும்.
இந்நிலையில் சிபில் ஸ்கோர் காரணமாக மகாராஷ்டிராவில் திருமணம் ஒன்று கடைசி நேரத்தில் நின்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிராவின் முர்திசாபூரை சேர்ந்த ஒருவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மணப்பெண்ணின் தாய் மாமா, மணமகனின் சிபில் ஸ்கோரை கேட்டுள்ளார். இதன்மூலம் மணமகன் பல கடன் வாங்கி உள்ளதும், நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதும் தெரியவந்தது.
ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள ஒருவருக்கு ஏன் தங்கள் குடும்ப பெண்ணை தர வேண்டும் என்றும் அவரால் மனைவியின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்ய முடியும்? என்றும் உறவினர் கேள்வி எழுப்பினார்.
இதனை பெண் வீட்டார் அனைவரும் ஏற்றுக்கொண்டு தங்கள் மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, உடனடியாக திருமணத்தை நிறுத்தினர்.
ஜாதக பொருத்தம், மன பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைக்கும் காலம் மாறி சிபில் [CIBIL] ஸ்கோரை பார்த்து பெண் தரும் காலம் வந்துவிட்டதாக நெட்டிசன்கள் நொந்துகொள்கின்றனர்.
- லவ் ஜிகாத் என்ற கூறி முஸ்லிம் இளைஞரை வலதுசாரி அமைப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.
- இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றத்தில், இந்து பெண்ணை திருமணம் செய்யவிருந்த முஸ்லிம் இளைஞர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர் பிபாரியாவைச் சேர்ந்த இந்து பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக போபாலில் உள்ள நீதிமன்றத்துக்கு வந்துள்ளார்.
அப்போது லவ் ஜிகாத் என்ற கூறி முஸ்லிம் இளைஞரை வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
*ब्रेकिंग भोपाल* *भोपाल जिला अदालत में जमकर हुआ हंगामा**मुस्लिम युवक की हिंदूवादी संगठन के कार्यकर्ताओं ने की पिटाई**हिंदूवादी संगठन ने युवक पर लगाए लव जिहाद के आरोप**लव जिहाद का आरोप लगाते हुए की जमकर पिटाई*नरसिंहपुर से मुस्लिम युवक कोर्ट हिंदू लड़की को लेकर पहुंचा था। pic.twitter.com/39wGOamwQr
— tarun yadav / तरुण यादव (@CameramanTarun) February 7, 2025
- வகுப்பறையில் பேராசிரியை மாணவனை திருமணம் செய்து கொண்டதாக ஒரு வீடியோ வைரலானது.
- மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பல்கலைக்கழக பேராசிரியை ஒருவர் முதலாம் ஆண்டு மாணவனை வகுப்பறையில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் வகுப்பறைக்குள் பேராசிரியை மற்றும் மாணவன் என இருவரும் மாலை மாற்றிக் கொண்டு சிந்தூர் பூசிக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதோடு திருமணத்திற்கு சம்மதம் கூறி இருவரும் எழுத்துப்பூர்வமாக கையொப்பமிட்ட கடிதம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீடியோ பரவியதை தொடர்ந்து, பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், பேராசிரியை விடுப்பில் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
அப்போது இந்த விவகாரம் குறித்து பேசிய பேராசிரியை, "இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு திட்டத்தின் ஒரு பகுதி. ஃபிரெஷர்ஸ் பார்ட்டிக்காக நாங்கள் திட்டமிட்டு நடத்திய நாடகம் இது. எனக்கு எதிரான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வீடியோ வேண்டுமென்றே வைரலாக்கப்பட்டது. என் மீது அவதூறு செய்ய முயன்றவர்கள் மீது நான் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன்," என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வகுப்பறையில் மாணவனை மணந்து கொண்டது போன்ற வீடியோ பரவியதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பல்கலைக்கழகத்தில் பணியை தொடர முடியாத நிலை இருப்பதாக கூறி அந்த பேராசிரியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
A lady Professor in MAKAUT is 'getting married' to her young student in the office. pic.twitter.com/coXaVGH7s7
— Abir Ghoshal (@abirghoshal) January 29, 2025
- நடனமாடி கொண்டிருந்த பெண்களுக்கு அஞ்சனி குமார் என்பவர் பணம் கொடுத்து கொண்டிருந்தார்.
- அஞ்சனி குமாரின் தலையில் குண்டு பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் திருமணத்திற்கு முன்பு நடைபெறும் திலக விழாவின் போது இளைஞர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திலக விழாவின் போது மேடையில் நடனமாடி கொண்டிருந்த பெண்களுக்கு 27 வயதான அஞ்சனி குமார் என்பவர் பணம் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது மேடைக்கு கீழே இருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார். அஞ்சனி குமாரின் தலையில் குண்டு பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். துப்பாக்கியால் சுட்டவர் உடனடியாக சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டார்.
பிந்து சர்மா மற்றும் பஞ்சாயத்துத் தலைவர் மகேஷ் சர்மா ஆகியோர் தான் அஞ்சனி மரணத்திற்கு காரணம் என்று இறந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். பிஏசிஎஸ் தேர்தலில் அவர்களுக்கு எதிரான வேட்பாளரை அஞ்சனி ஆதரித்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை. ஆகையால் திட்டம் போட்டு அஞ்சனியை கொலை செய்துள்ளனர் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
तिलक समारोह में युवक की हत्या: मंच पर मारी गोली, अपराधी फरार #Firing #Gaya गया। कोंच थाना क्षेत्र के तुतुरखी गांव में एक तिलक समारोह के दौरान युवक की गोली मारकर हत्या कर दी गई। मृतक की पहचान कोंच के पाली गांव निवासी 27 वर्षीय अंजनी कुमार के रूप में हुई है। pic.twitter.com/PNX8qlqVPz
— Utkarsh Singh (@utkarshs88) February 4, 2025
- சூரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றது.
- மீண்டும் திருமண மண்டபத்துக்கு சென்று திருமணம் நடந்தால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என போலீசார் கருதினர்.
திருமணங்கள் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டு விமரிசையாக நடைபெறும் போது சில நேரங்களில் அற்ப காரணங்களுக்காக மணமக்களின் வீட்டாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அதே போன்ற ஒரு சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.
பீகாரை சேர்ந்த ராகுல் பிரமோத் மற்றும் குஜராத்தை சேர்ந்த அஞ்சலி குமாரிக்கு சூரத்தில் வைத்து திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்தது. இதற்காக சூரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றது. பெரும்பாலான சடங்குகள் நிறைவடைந்து மணமக்கள் மாலை மாற்றுவது மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் திடீரென மணமகனின் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தினர்.
விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறி மணமகனின் குடும்பத்தினர் வாக்குவாதம் செய்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் மணமகளின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பிரச்சனை போலீஸ் நிலையம் சென்றது. போலீசார் விசாரித்து பிரச்சனையை தீர்த்து வைத்தனர். ஆனாலும் மீண்டும் திருமண மண்டபத்துக்கு சென்று திருமணம் நடந்தால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என போலீசார் கருதினர்.
இதையடுத்து மணமக்களை போலீஸ் நிலையத்துக்கே வரவழைத்து அங்கு இரு வீட்டார் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர். வழக்கமாக குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து திருமணம் செய்து கொள்ளும் நிலையில் இந்த சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.
- உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- போலீசார் ஒற்றுமையுடன் வாழுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
கொடைக்கானல்:
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் கலைவாணி (வயது 20). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டலத்தைச் சேர்ந்த சஜின்ராஜ் (27) என்பவரும் பணியாற்றி வந்தார்.
அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சஜின்ராஜூம், காதலிப்பதாக கூறி இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கலைவாணி கேட்டபோது, சஜின்ராஜ் மறுத்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த கலைவாணி கடந்த சில நாட்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
அதன் பின்னர் அவர் வீடு திரும்பினார். இதனையடுத்து தனது காதலனுக்கு போன் செய்தபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் மனமுடைந்த கலைவாணி ராயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சஜின்ராஜை தேடி வந்தனர்.
சஜின்ராஜின் செல்போன் அவ்வப்போது ஆன் செய்து பின்னர் அணைத்து வைக்கப்பட்டது. இதனை வைத்து ஆய்வு செய்ததில் சஜின்ராஜ் கொடைக்கானலில் பதுங்கி இருப்பது உறுதியானது. மேலும் அவர் வேறு ஒரு பெண்ணை கொடைக்கானலில் திருமணம் செய்யவும் தயாராகி வந்தது கலைவாணிக்கு தெரிந்தது.
இதனையடுத்து சென்னையில் இருந்து கொடைக்கானல் வந்த கலைவாணி அங்கு தனியார் விடுதியில் தங்கி இருந்த சஜின்ராஜை கையும் களவுமாக பிடித்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினார். மேலும் அவர் அங்கிருந்து தப்பித்து விடாமல் இருக்க கொடைக்கானல் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களது பெற்றோரிடமும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து திருமணத்துக்கு சம்மதமா என கேட்டனர்.
இதனிடையே கலைவாணியை தானே திருமணம் செய்து கொள்வதாக சஜின்ராஜ் போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் அவர்கள் போலீஸ் நிலையம் அருகிலேயே மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். அவர்களை போலீசார் ஒற்றுமையுடன் வாழுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். சென்னையில் ஏமாற்றிய காதலனை கொடைக்கானலில் தேடி கண்டுபிடித்து இளம்பெண் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருமணங்கள் மிகப்பெரிய அளவில் ஆடம்பரமாக நடைபெறவில்லை. கட்டுப்பாடு மற்றும் பொருளாதார சூழல் காரணமாக எளிமையாக நடந்தது.
கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டதால் ஆடம்பர திருமணங்கள் நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரை ரிசார்ட்ஸ் பகுதிகளில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
கடந்த மாதத்தில் இருந்து மிகப்பெரிய நட்சத்திர ஓட்டல்களில் திருமணங்கள் அதிக அளவில் நடைபெற தொடங்கிவிட்டன.
கடந்த வாரம் தாஜ்கோரமண்டல் ஓட்டலில் ராஸ்மாடாஸ் குழுமத்தின் திருமண கண்காட்சி மிகவும் ஆடம்பரமாக நடந்தது. தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் நடந்த இந்த திருமணக் கண்காட்சி பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதை காட்டியது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூலை வரை நாடு முழுவதும் 40 லட்சம் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதை ஐ.டி.சி. கிராண்ட்சோழா நட்சத்திர ஓட்டல் பொதுமேலாளர் கபின் சாங்கட்வான் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
2019-ம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது தற்போது ஐ.டி.சி.கிராண்ட் சோலாரில் திருமண நிகழ்ச்சிகள் அதிக அளவில் உள்ளன. அறைகளில் தங்கும் வருவாய் கிட்டதட்ட இரட்டிப்பாகும். விருந்து வருவாய் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
வெளிப்புறங்களில் இருந்தும் எங்களுக்கு திருமணங்களுக்கான உணவு ஆர்டர் வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருமணங்கள் மூலம் ஜவுளி, நகைகள், கார்கள் விற்பனை மிகப்பெரிய அளவில் அமோகமாக நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக நகை கடையின் உரிமையாளர் ஒருவர் கூறும்போது:-
இந்த கோடையில் தங்கத்தின் தேவை அதிகமாக இருக்கும். திருமண நிகழ்ச்சிக்காக புதிய வகை பிராண்டுகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். நகை விற்பனை அதிக அளவில் இருக்கும் என்றார்.
பட்டுப்புடவை கடை உரிமையாளர், ஒருவர் கூறும்போது, மணப்பெண் அணியும் முகூர்த்த பட்டுப்புடவைகள் மட்டுமின்றி செமி காட்டன், ஆர்கான்கள், லைட் சில்க்ஸ் போன்ற இலகுவான புடவைகளுக்கும் அதிக தேவைகள் உள்ளது.
![நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதழ் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதழ்](https://img.maalaimalar.com/InlineImage/202205281542331501_1_NAYANTHARA.jpg 1._L_styvpf.jpg)
![நயன்தாரா - விக்னேஷ் சிவன் நயன்தாரா - விக்னேஷ் சிவன்](https://img.maalaimalar.com/InlineImage/202205281700293466_1_nayan-2._L_styvpf.jpg)