என் மலர்
நீங்கள் தேடியது "TDP"
- 135 இடங்களில் முன்னிலை பெற்று தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
- ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார்.
ஆந்திரா சட்டசபைக்கு பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.
இதில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 135 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், மற்றவை 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
இதில் அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார். அவர் வருகிற 9-ந்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் சந்திரபாபு நாயுடு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
- தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஜூன் 9-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
- முதல் மந்திரி ஜெகன் ரெட்டி தனது ராஜினாமாவை கவர்னரிடம் அளித்துள்ளார்.
அமராவதி:
பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ம் தேதி முடிவடைந்ததால் கடந்த 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
ஆந்திராவில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். இந்த தேர்தலில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிட்டது.
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜனதா 10 இடங்களிலும் போட்டியிட்டது.வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே தெலுங்கு தேசம்- பா.ஜனதா கூட்டணி முன்னிலையில் இருந்தது.
ஆந்திர சட்டசபை தொகுதிகளில் 175-ல் 158 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. கூட்டணி இல்லாமல் தனித்து 131 தொகுதிகளில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது.
ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமோக வெற்றி பெற்று வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜூன் 9-ம் தேதி அமராவதியில் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அமோக வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆந்திர கவர்னர் அப்துல் நசீரிடம் ஜெகன்மோகன் ரெட்டி தனது ராஜினாமா கடிதத்தை இன்று அளித்துள்ளார்.
- தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது.
- ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார்.
ஆந்திரா சட்டசபைக்கு பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 134 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், மற்றவை 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
இதில் அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார். அவர் வருகிற 9-ந்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றிய சந்திரநாயுடுக்கு தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதே போல் நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்து தற்போது ஆந்திராவில் அதிக இடங்களை வென்ற பவன் கல்யாணுக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். பவன் கல்யாணின் கட்சி தற்போது ஆந்திராவில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
- நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
- பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியை இழுக்க ‘இந்தியா’ கூட்டணி முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் அறுதிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது தெலுங்கு தேசம் கட்சி. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக வருகிற 9-ந்தேதி பதவியேற்கிறார். அக்கட்சி பாராளுமன்ற தேர்தலில் 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே போல் பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் (ஐக்கிய) 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதனிடையே, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டிய நிலை உள்ளது. இதை பயன்படுத்தி, பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியை இழுக்க 'இந்தியா' கூட்டணி முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆதரவோடு ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி முயற்சித்து வரும் நிலையில், இவர்கள் யாருக்கு ஆதரவு தரப்போகிறார்கள் என்பது தான் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார். காலை 10 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி.
- தெலுங்கு தேசம் வெற்றியானது ஆந்திர மாநில வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி.
ஆந்திர முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள சந்திரபாபு நாயுடு இன்று விஜயவாடாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தனர்.
தெலுங்கு தேசத்திற்கு கிடைத்த வெற்றி மக்களுக்கான வெற்றி. என் வாழ்நாளில் இதுபோன்று வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலை நான் கண்டதில்லை.
வெளிநாடுகளில் இருந்து வந்தும் தெலுங்கு தேசம் கட்சிக்கு விருப்பப்பட்டு வாக்களித்து சென்றுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் தெலுங்கு தேசம் கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர்.
மக்களுக்கு சேவையாற்ற அதிகாரத்திற்கு வரும் போது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பயணிப்பதில் உறுதியாக இருக்கிறேன். பா.ஜனதா கூட்டணியில் உறுதியாக நீடிப்பேன். தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறேன். மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளேன்.
நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மக்கள் எங்களுக்கு வாக்களித்து உள்ளனர். ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் மிக மோசமான துன்பங்களை சந்தித்தேன்.
தற்போது 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு அங்கமாக நாங்கள் இந்த வெற்றியை பெற்றுள்ளோம். தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா கட்சிகள் இணைந்து பணியாற்றியதால் இந்த வெற்றி கிடைத்தது.
ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் என்னை எதற்காக கைது செய்தார்கள் என்பதற்கு சரியான விளக்கம் தரப்படவில்லை. நான் பல்வேறு அரசியல் மாற்றங்களை பார்த்திருக்கிறேன். நான் அனுபவமிக்கவன். தேசம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் வேலை செய்ததால் தேர்தலில் வென்றோம்.
உள்துறை மந்திரி அமித்ஷா, கூட்டணி கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
- சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் கிங் மேக்கராக உள்ளனர்.
- இருவரும் அவரவர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெற முயற்சிப்பார்கள்.
மக்களவை தேர்தல் முடிவு நேற்று வெளியானது. பா.ஜனதா தனித்து பெரும்பான்மை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து மொத்தமாக 296 இடங்களைத்தான் பிடித்துள்ளார்.
பாஜக-வுக்கு 240 இடங்கள்தான் கிடைத்துள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 32 இடங்கள் தேவை. என்டிஏ கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு (16), நிதிஷ் குமார் (12) ஆகியோரின் உதவி பிரதமர் மோடிக்கு தேவைப்படுகிறது.
இதனால் இருவரும் கிங் மேக்கர்களாக திகழ்கிறார்கள். இருவரும் பிரதமர் மோடி வீட்டில் இன்று நடைபெற்ற என்டிஏ தலைவர்கள் கூட்டணியில் கலந்து கொண்டார்கள்.
மோடி மீண்டும் பிரதமராக 3-வது முறையாக பதவி ஏற்க இருவரும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பார்கள் எனக் கூறப்படுகிறது. அதேவேளையில் மந்திரி சபையில் முக்கியமான இலாகாக்களை பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
நிதிஷ் குமாரின் எதிர்பார்ப்பு
நிதிஷ் குமார் கட்சியின் மூத்த தலைவரான கேசி தியாகி, மந்திரி சபையை நீட்டிக்க விரும்பி அழைப்பு விடுத்தால் அது தொடர்பாக பரிசீலனை செய்வோம். புதிதாக அமையும் அரசாங்கத்திடம் நாங்கள் எதிர்பார்ப்பது பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து, நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவைதான். இருந்தபோதிலும் எந்த கண்டிசனும் போடமாட்டோம். நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம். பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு முயற்சி இருக்கும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக நாடு தழுவிய சாதி வாரிய கணக்கெடுப்பை விரும்பவில்லை. இந்தியா கூட்டணியின் முக்கிய வாக்குறுதியில் இது ஒன்று.
பீகாரில் வேலையாப்பின்மை மிகப்பெரியதாக உள்ளது. இதனால் சிறப்பு அந்தஸ்துதான் ஒரு வழி என நிதிஷ் குமார் நினைக்கிறார். இதனால் இந்த இரண்டையும் பா.ஜனதாவுடன் வலியுறுத்தும்.
சந்திரபாபு நாயுடுவின் எதிர்பார்ப்பு
சந்திர பாபு நாயுடு கட்சி சார்பில் மத்திய அமைச்சரவையில் அதிகமான இடங்களை கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து என்பது பிரதான கோரிக்கையாக இருக்கும். இந்த விவகாரத்தில்தான் கடந்த 2016-ல் சந்திரபாபு நாயுடன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலத்தை மீண்டும் சிறந்த மாநிலமாக கொண்டு வருவேன். மாநிலத்தின் தலைநகரை சிறந்த நகராக உருவாக்குவேன் என்பதை வாக்குறுதியாக அளித்து பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளார். தற்போது ஐதராபாத் ஆந்திராவின் மாநிலம் அல்ல. தெலுங்கானா மாநிலமாகிவிட்டது. இதனால் புதிய தலைநகரை உருவாக்க வேண்டும். இதனால் சிறப்பு அந்தஸ்து முக்கியமானதாக தெலுங்குதேசம் கருதும்.

இதனால் நாட்டின் வளர்ச்சிதான் முக்கியம். நாட்டின் வளர்ச்சியல் அரசியல் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் தற்போது இருவரின் உதவி இருந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்பதால் என்ன விலை கொடுக்கப் போகிறதோ? தெரியவில்லை.
தற்போது என்டிஏ-வுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் கிங் மேங்கராக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது எந்த வாய்ப்பையும் நிராகரிக்க முடியாது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
- டெல்லி விமான நிலையத்தில் தலைவர் கலைஞரின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
- சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தேன்.
இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று பகல் 1 மணி அளவில் டெல்லி சென்றார்.
விமான நிலையத்தில் அவரை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா எம்.பி., டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து அவர் தமிழ்நாடு அரசு இல்லத்துக்கு சென்றார். அங்கு போலீஸ் மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டம் முடிந்ததும், சென்னை திரும்ப டெல்லி விமான நிலையத்துக்கு இரவு 8 மணிக்கு முதலமைச்சர் சென்றார். அப்போது, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனையில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்ப விமான நிலையம் சென்றிருந்தார்.
அப்போது இருவரும் நேரில் சந்தித்துக்கொண்டனர். அந்த தருணத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து, தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். அதைப்போல மு.க.ஸ்டாலினுக்கும் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
டெல்லி விமான நிலையத்தில் தலைவர் கலைஞரின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தேன். அவர் மத்திய அரசியலில் முக்கிய பங்காற்றுவார், தென் மாநிலங்களுக்காக வாதிடுவார், நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என்று நான் நம்புகிறேன் என கூறியுள்ளார்.
Met Thiru @ncbn garu, a longtime friend of Thalaivar Kalaignar, at Delhi Airport. I conveyed my best wishes to him and expressed hope that we will collaborate to strengthen the ties between the brotherly states of Tamil Nadu and Andhra Pradesh. I am confident that he will play a… pic.twitter.com/IElYek4hQi
— M.K.Stalin (@mkstalin) June 5, 2024
- ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவி ஏற்க உள்ளார்.
- ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், ஜன சேனா 21 இடங்களிலும் வெற்றி பெற்றது.
ஆந்திரா சட்டசபை தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்க உள்ளது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக வருகிற 9-ந்தேதி பதவியேற்பார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா ஜூன் 9-ந்தேதிக்கு பதிலாக ஜூன் 12-ந்தேதிக்கு (புதன்கிழமை) தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 8-ந்தேதி தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்க உள்ளதால் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், ஜன சேனா 21 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- பா.ஜ.க.வுக்கு நிபந்தனைகளை விதித்து இருப்பதாக தகவல்.
- விரும்பும் இாக்காகள் அடங்கிய பட்டியல் ஜே.பி. நட்டாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காததால் சந்திரபாபு நாயுடு ஆதரவு கட்டாயமாகி உள்ளது. அரசியலில் பல ஆண்டுகால அனுபவசாலியான சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்திற்கு தேவையானவற்றை கேட்பதில் கில்லாடியாக செயல்பட்டு வருகிறார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பா.ஜ.க.வுக்கு அவர் சில நிபந்தனைகளை விதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த வகையில் மத்திய அமைச்சரவையில் மூன்று கேபினட், இரண்டு இணை அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். குறிப்பாக சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம் கட்சிக்கு தர வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பால யோகி மக்களவை சபாநாயகராக இருந்தார். அதேபோல இந்த முறையும் சபாநாயகர் பதவி தர வேண்டும் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
இதேபோல நிதித்துறை, வேளாண்மைத்துறை, நீர்வளத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சுகாதரம், கல்வித்துறை உள்ளிட்ட மந்திரி பதவிகளை தெலுங்கு தேசம் கட்சி கேட்டு சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
விரும்பும் இாக்காகள் அடங்கிய பட்டியலை தெலுங்கு தேசம் சார்பில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
- ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக வருகிற 9-ந்தேதி பதவியேற்பார் என்று கூறப்பட்டது.
- விஜயவாடாவில் எம்.பி.க்களுடன் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்த உள்ளார்.
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், ஜன சேனா 21 இடங்களிலும் வெற்றி பெற்றது. அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்க உள்ளது.
இதையடுத்து ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக வருகிற 9-ந்தேதி பதவியேற்பார் என்று கூறப்பட்டது.
மத்திய அமைச்சரவையில் தெலுங்கு தேசம் இணைய உள்ள நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் எம்.பி.க்களுடன் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்த உள்ளார்.
மத்திய அமைச்சரவையில் சபாநாயகர், 2 கேபினட் மற்றும் 3 இணை அமைச்சர் பதவிகளை கேட்டு பெறுவது குறித்து எம்.பி.க்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் கட்சி முக்கிய துறைகளை கேட்பதாக தகவல்.
- சபாநாயகர் மற்றும் முக்கிய இலாகாக்களை விட்டுக்கொடுக்க பாஜக விரும்பாது.
மக்களவை தேர்தல் வாக்குகள் கடந்த 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் கூறியது போல பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கூட்டணியாக 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தனிக்கட்சியாக 240 இடங்களை கைப்பற்றியுள்ளது.
ஆட்சி அமைப்பதற்கு 272 இடங்கள் தேவை. இதனால் 32 இடங்களுக்கு கூட்டணி கட்சிகளை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தெலுங்குதேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12), ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா (7), சிராக் பஸ்வான் கட்சி (5) முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த நான்கு கட்சிகளும் 40 இடங்களை பெற்றுள்ளது. 40 இடங்களை தவிர்த்தால் பாஜக கூட்டணியில் 253 இடங்கள்தான் இருக்கும் ஆட்சி அமைக்க முடியாது. கடந்த இரண்டு முறை தனி மெஜாரிட்டி பெற்றதால் பாஜக கொடுத்த இலாகாக்களை கூட்டணி கட்சிகள் பெற்றுக் கொண்டன.
தற்போது இந்த நான்கு கட்சிகளில் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கிங் மேக்கராக திகழ்கின்றன. இருவரையும் பகைத்தால் பாஜக ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மந்திரி சபையில் முக்கியமான இலாகாக்களை இரண்டு கட்சிகளும் குறிவைத்துள்ளன. நிதி, ரெயில்வே, உள்துறை, வெளியுறவுத்துறை என தாங்கள் விரும்பிய இலாகாக்களை பெற விரும்புகின்றன. அதுவும் கேபினட் அந்தஸ்து இலாகாக்களை கேட்கிறது. அதனுடன் சபாநாயகர் பதவி மேலும் கண் வைத்துள்ளன.
ஆனால் 2040 ஆண்டில் வளர்ச்சி இந்தியா என்பதை நோக்கி நகர பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த துறைகளை கொடுத்தால் சரிபட்டடு வராது என நினைக்கிறது.
சபாநாயகர் பதவி
இரு கட்சிகளும் சபாநாயகர் பதவிக்கு அடி போடுகின்றன. தற்போது மெஜாரிட்டி இல்லாத நிலையில் சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிக்கு வழங்கினால் அது பேராபத்தாக முடியும் என நினைக்கிறது. இதனால் சபாநாயகர் பதவி கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கும்.
போக்குவரத்து, நெடுஞ்சாலை அல்லது நலத்திட்டம் தொடர்பான இலாகாக்களை கொடுத்தால் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என நினைக்கிறது. அதனால் இதுபோன்ற இலாக்களையும் கொடுக்க பாஜகவுக்கு விருப்பம் இல்லை.
தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி ஏழை, பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய நான்கும்தான் ஜாதிகள் என குறிப்பிட்டார். இதனால் இது தொடர்பான துறைகளை கையில் வைத்துக் கொள்ள முயற்சிக்கும்.
நிதின் கட்கரி வசம் உள்ள சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை மூலமாக நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை கட்டமைப்புகளை வலுப்படுத்தியுள்ளது. இதனால் கிடைத்த பெருமையை கூட்டணி கட்சிக்கு விட்டுக்கொடுக்க விரும்பாது.
ரெயில்வே துறை
ஐக்கிய ஜனதா தளம் ரெயில்வே துறையை கேட்கிறது. வந்தே பாரத், புல்லெட் ரெயில் போன்ற திட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இதையும் கூட்டணியிடம் கொடுத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என நினைக்கிறது.
கடந்த இரண்டு முறையும் கூட்டணி கட்சிகளுக்கு உணவுத்துறை, கனரக தொழில்துறை போன்ற துறைகளை ஒதுக்கியது. ஆனால் தற்போது கூட்டணி ஆட்சி என்பதால் சில துறைகளை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பஞ்சாயத்து, கிராமப்புற வளர்ச்சி போன்ற துறைகளை அளிக்க முன்வரலாம்.
இணை அமைச்சர் பதவிகள்
தெலுங்குதேசம் கட்சிக்கு விமானத்துறை, ஸ்டீல் துறை போன்ற இலாகாக்கள் வழங்க முன்வரலாம். அதேவேளையில் நிதி மற்றும் பாதுகாப்பு துறையில் இணை அமைச்சர் பதவியை பெற கூட்டணி கட்சிகள் முயற்சி மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
சுற்றுலா, திறன் வளர்ச்சி, அறிவியல் மற்றும் புவியியல் துறைகளை ஒதுக்க பாஜக முன்வரும். இதனால் இலாகாக்கள் தொடர்பான விசயத்தில் ஒருமித்த கருத்து நிலவுவதில் இன்னும் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.
- எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
- தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு அடுத்த வாரம் பதவியேற்க உள்ளார்.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரை அந்த பகுதியில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இந்த கடற்கரை சார்ந்த சுற்றுலா தலத்திற்கு, முன்னதாக இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் - அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டு இருந்தது.
எனினும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்த சுற்றுலா தலத்திற்கு ஒய்.எஸ்.ஆர். வியூ பாயிண்ட் என பெயர் மாற்றம் செய்தார். இவரது இந்த நடவடிக்கைக்கு அப்போதைய எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜென் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தது. இதனால் ஆந்திராவின் அடுத்த முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு அடுத்த வாரம் பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர். வியூ பாயிண்ட் கடற்கரையின் பெயர் பலகையில் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் அப்துல் கலாம் வியூ பாயிண்ட் என்ற பழைய பெயரை மீண்டும் ஸ்டிக்கரிங் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.