என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teacher arrested"

    • ஆசிரியர் மணிமாறன் குறிப்பிட்ட 3 மாணவிகளுக்கு தொடர்ந்து ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்தார்.
    • பள்ளி வகுப்பறையிலும் பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் தன்னிடம் படித்த 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு பள்ளி முடிந்ததும் சிறப்பு வகுப்பு நடத்தினார். அப்போது ஆசிரியர் மணிமாறன் குறிப்பிட்ட 3 மாணவிகளுக்கு தொடர்ந்து 'செக்ஸ்' தொல்லை கொடுத்தார். இதே போல் பள்ளி வகுப்பறையிலும் பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் 3 பேரும் பள்ளியில் நடைபெறும் சிறப்பு வகுப்புக்கு செல்ல மறுத்தனர். இதுபற்றி பெற்றோர் விசாரித்தபோது ஆசிரியர் மணிமாறன் செக்ஸ் தொல்லை கொடுத்து வருவதை அறிந்து அதிர்ந்து போனார்கள்.

    இதுபற்றி 3 மாணவிகளின் பெற்றோரும் ஆசிரியர் மணிமாறன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியில் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் ஏராளமானோர் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி நிர்வாகம் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

    தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் மகளிர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் மணிமாறன் 3 மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து மணமாறன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருப்பூரில் மெழுகுவர்த்தியால் 4-ம் வகுப்பு மாணவனுக்கு சூடு வைத்ததது குறித்து ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
    திருப்பூர்:

    திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பனியன் பிரிண்டிங் பட்டறை தொழிலாளியின் 9 வயது மகன் கோல்டன் நகரில் உள்ள பாரத் தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல மாணவன் தயாரானான். அப்போது அவனின் இரு கைகளிலும் தீக்காயம் இருந்ததை பெற்றோர் கவனித்தனர். உடனடியாக அவனிடம் விவரம் கேட்டனர்.

    அப்போது அவன், பள்ளி ஆசிரியை தன்னை மெழுகுவர்த்தியால் சூடுவைத்ததாக பெற்றோரிடம் கூறினான். இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பெற்றோர் தனது மகனுடன் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு நேற்று காலை வந்து புகார் கொடுத்தனர்.

    புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், பள்ளியில் 4-ம் வகுப்பு ஆசிரியையாக உள்ள ரம்யா(வயது 22) அந்த மாணவனுக்கு வீட்டுப்பாடம் கொடுத்துள்ளார். ஆனால் மாணவன், வீட்டுப்பாடத்தை தவறாக எழுதிக்கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது வகுப்பறையில் நோட்டுகளை வாங்கி பார்த்த ரம்யா, கோபத்தில் மெழுகுவர்த்தியை பற்ற வைத்து, உருகிய மெழுகை மாணவனின் கைகளில் ஊற்றி சூடுவைத்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார், ஆசிரியை ரம்யா மீது சிறுவர்களை துன்புறுத்துதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு அவரை கைது செய்தனர். ரம்யா அந்த பள்ளி தாளாளரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சூடுவைத்ததால் காயம் அடைந்த மாணவனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #tamilnews
    பழனி அருகே மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    பழனி:

    பழனி முல்லைநகரை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது45). இவர் கீரனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவிகளிடம் ஆபாசமாக பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பழனி சட்டப்பணிகள் குழுவிற்கு புகார் அனுப்பப்பட்டது. இதனைதொடர்ந்து சட்டப்பணிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

    ஆசிரியர் ஸ்டீபன்ராஜ் மற்றும் மாணவிகளிடம் தனித்தனியாக விசாரித்தனர். விசாரணையில் ஸ்டீபன்ராஜ் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் பழனி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

    பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்ககோரி மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    செங்கம்:

    செங்கம் மேல்நாச்சிபட்டு அரசுப்பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆசிரியர் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    முன்னதாக, நேற்று பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த கும்பல் ஆசிரியரை அடித்து உதைத்தனர்.

    அப்போது, ஆசிரியரை விட்டு விடுமாறு மாணவ, மாணவிகள் கதறி அழுதனர். ஆசிரியர் மீது எந்த தவறும் இல்லை என்று கூறினர்.

    இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஆசிரியர் கண்ணனை விடுவிக்ககோரி மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து, கண்ணக்குருக்கை- மேல்நாச்சிப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    ஆசிரியர் கண்ணனை விடுதலை செய்ய கோரி கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
    ×