என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tejashwi Yadav"

    • பீகாரில் ஊழலை நிறுவனமாக்கியதற்காக நிதிஷ் குமார் பொறுப்பேற்க வேண்டும்.
    • முதல்வர் மாநில அரசின் நிதிகளை அவருடைய தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துகிறார்.

    பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் ஊழலை நிறுவனமாக்கிவிட்டார். அரசு நிதிகள் இந்த வருடம் இறுதியில் நடைபெற இருக்கும் தேர்தலுக்கான அரசியல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:-

    பீகாரில் ஊழலை நிறுவனமாக்கியதற்காக நிதிஷ் குமார் பொறுப்பேற்க வேண்டும். முதல்வர் மாநில அரசின் நிதிகளை அவருடைய தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துகிறார். பெண்கள் அரசுடன் தொடர்பு கொள்வதற்காக சமீபத்தில் தொடங்கப்பட்ட மகிலா சம்வாத் என்ற முன்முயற்சி திட்டம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த முன்முயற்சி திட்டத்திற்காக அமைச்சரவை 225 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மாநில அரசு இந்த பொது நிதியை தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துகிறது.

    மாநில பெண்களுக்கு உறுதியான எதுவும் களத்தில் இல்லை. ஆனால் பிரசாரத்திற்காக கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது.

    டிசம்பர் 2024-ல் இருந்து கட்டுமான செயல்பாட்டிற்காக 76,622 கோடி ரூபாப் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆச்சர்யம் அளிக்கும் வகையில், முதன்முறையாக அரசு இந்த பணிகளுக்காக சர்வதேச அளவிலான டெண்டர்களை கோரியுள்ளது. உலகளாவிய டெண்டருக்கான காணரம் என்ன?.

    மேலும், தொடர்பு சாலைகள் இல்லாமல் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பல கட்டிடங்கள் தயாராக உள்ளன, ஆனால் சம்பந்தப்பட்ட துறைகள் அவற்றை கையகப்படுத்தவில்லை. (புதிய) மருத்துவமனை கட்டிடங்களில் உபகரணங்கள் அல்லது மருத்துவர்கள் இல்லை. 'ஹர் கர் நல் கா ஜல்' திட்டத்திற்காக பல கோடிகள் செலவிடப்பட்டன. ஆனால் தண்ணீர் விநியோகம் இல்லை என்பதை நாம் கண்டிருக்கிறோம்.

    இவ்வாறு தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

    • காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
    • நாளை சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறிவைக்கப்படுவார்கள்

    பீகாரில் தனது கட்சி ஆட்சி அமைத்தால் வக்பு திருத்த மசோதா குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    வக்பு திருத்த மசோதா மசோதா இந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நேற்று ஜனாதிபதி ஒப்புதலை பெற்று சட்டமாக மாறியது. இதற்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை பாஜகவின் இந்த மசோதா பறிக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.

    இந்நிலையில் பீகார் எதிர்கட்சித் தலைவரும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் இந்த மசோதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்த வருட இறுதியில் பீகாருக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் ஆர்ஜேடி ஆட்சிக்கு வந்தால் வக்பு மசோதா குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்று தெரிவித்தார்.

    அவர் கூறியதாவது, இந்த மசோதாவை பீகாரில் செயல்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மாநிலத்தில் அடுத்து அரசாங்கத்தை அமைத்தால், மசோதா குப்பைத் தொட்டியில் போடப்படும் வக்பு மசோதாவுக்கு எதிராக நாங்கள் உச்ச நீதிமன்றத்தையும் நாடியுள்ளோம். இன்று முஸ்லிம்கள் குறிவைக்கப்படுகிறார்கள், நாளை சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறிவைக்கப்படுவார்கள்என்று தெரிவித்தார்.

    மேலும் வக்பு மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்தார். வக்பு மசோதாவுக்கு ஆதரவளித்ததால் நிதிஷ் குமார் கட்சியின் ஐந்து தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதால், கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். 

    • லாலு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருக்கிறார்.
    • லாலு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருக்கிறார்.

    குரானி :

    பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவரது மகளே தந்தைக்கு சிறுநீரகம் தானமாக வழங்க முன் வந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் யாதவுக்கு வருகிற 5-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடப்பதாக அவரது மகனும், மாநில துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி, நேற்று குரானி சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தார்.

    அவர் கூறுகையில், 'லாலு ஜி இங்கு உங்களை சந்திக்க விரும்பினார். ஆனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருக்கிறார். அங்கு அவருக்கு 5-ந்தேதி அறுவை சிகிச்சை நடக்கிறது. ஆனாலும் பா.ஜனதாவை தோற்கடிக்க உங்களிடம் தெரிவிக்குமாறு என்னிடம் அவர் கேட்டுக்கொண்டார்' என்று கூறினார்.

    தனது உடல் நலக்குறைவுக்கு பா.ஜனதாவின் பழிவாங்கும் அரசியல்தான் காரணம் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தக்கூறுமாறும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்ததாக தேஜஸ்வி மேலும் குறிப்பிட்டார்.

    • தமிழ்நாட்டுக்கு சென்றுள்ள பீகார் அதிகாரிகள் குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கிறேன்.
    • இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால் அவற்றை பீகார் அரசும் சகித்துக்கொள்ளாது.

    பாட்னா :

    வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக வெளியான தவறான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டன.

    இதையொட்டி பீகார் மாநில துணை முதல்-மந்திரி ஜேதஸ்வி யாதவ், பாட்னாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாக எழுந்த புகார்களை மறுத்து தமிழ்நாடு டி.ஜி.பி. வெளியிட்ட அறிக்கையை நான் சட்டசபையில் வாசித்தேன்.

    நான் இந்த விவகாரத்தை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. எனவேதான், நான் அங்கம் வகிக்கிற அரசு, நேரில் ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழுவை தமிழ்நாட்டுக்கு அனுப்பி உள்ளது. அதன் நோக்கம், களத்தகவல்களை பெறுவதுதான்.

    இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால் அவற்றை பீகார் அரசும் சகித்துக்கொள்ளாது. தமிழ்நாடு அரசும் சகித்துக்கொள்ளாது.

    தமிழ்நாட்டுக்கு சென்றுள்ள பீகார் அதிகாரிகள் குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கிறேன். அங்கொன்றும் இங்கொன்றுமான சம்பவங்களின் அடிப்படையில் பொதுவான அனுமானங்கள் கூடாது.

    எங்களால் செய்ய முடிந்ததை நாங்கள் செய்திருக்கிறோம். ஆனால் இதில் பீகாரில் எதிர்க்கட்சியாகவும், மத்தியில் ஆளும் கட்சியாகவும் உள்ள பா.ஜ.க.விடம் கேள்விகள் எழுப்ப வேண்டும்.

    இந்த விவகாரம், இரு மாநிலங்கள் தொடர்பானவை என்ற போதிலும் மத்திய அரசு இதுவரையில் அக்கறை காட்டவில்லை.

    தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர், பீகார் பா.ஜ.க. தலைவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, தங்கள் மாநிலத்தில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான தகவல்களை மறுத்தார் என்பது பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

    பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் தவறான தகவல்களை, ஆத்திரமூட்டும் வார்த்தைகளை டுவிட்டரில் வெளியிட்டது தொடர்பாக வழக்கு பதிவாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கெல்லாம் பா.ஜ.க. பதில் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி ஆகியோரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்தனர்.

    பாட்னா:

    கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே துறை மந்திரியாக பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார்.

    இந்த சமயத்தில் ரெயில்வே துறையில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் அதற்கு கைமாறாக குறைந்த விலைக்கு தங்கள் நிலங்களை லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு மாற்றி கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்

    இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி ஆகியோரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்தனர். மேலும் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் வீட்டிலும் இந்த சோதனை நடந்தது. இந்த நிலையில் ரெயில்வே பணிக்கு நிலம் லஞ்சம் பெற்ற வழக்கில் தேஜஸ்வி யாதவ் கடந்த 4 - ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது.

    ஆனால் அன்று அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து தேஜஸ்வி யாதவ் இன்று பிற்பகல் பாட்னாவில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

    • கணக்கில் வராத ரூ.1 கோடி பணம், முறைகேடாக சம்பாதித்த ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
    • வணிக வளாகம் மற்றும் நூற்றுக்கணக்கான நிலங்கள் உள்பட ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடந்ததாக எங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    புதுடெல்லி:

    பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டீரிய ஜனதாதள நிறுவனருமான லல்லு பிரசாத் யாதவ் 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தபோது பீகாரை சேர்ந்த ஏராளமானோர் ரெயில்வேயில் பணியமர்த்தப்பட்டனர்.

    இதற்காக லல்லு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் லஞ்சமாக நிலங்களை பெற்றதாக புகார்கள் எழுந்தது. இதில் லல்லு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேர் மீது கடந்த ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

    இந்த வழக்கில் கடந்த 6-ந்தேதி லல்லு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரிதேவியிடமும், மறுநாள் லல்லு பிரசாத்திடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    இதற்கிடையே இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை நேற்று முன்தினம் லல்லு பிரசாத் யாதவின் மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், லல்லுவின் மகன் ஹேமா, ராகினி, சாண்டா உள்ளிட்டோரின் வீடுகள், ராஷ்டீரிய ஜனதா தள முன்னாள் எம்.எல்.ஏ.அபு டோசனா வீடுகளில் சோதனை நடத்தினர்.

    இதில் கணக்கில் வராத ரூ.1 கோடி பணம், முறைகேடாக சம்பாதித்த ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பீகார் மாநில துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:

    2007-ம் ஆண்டு ஒரு வணிக வளாகம் மற்றும் நூற்றுக்கணக்கான நிலங்கள் உள்பட ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடந்ததாக எங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை. தற்போது பா.ஜனதா அரசு மீண்டும் வதந்திகளை பரப்புகிறது. ரூ. 600 கோடி வரை புதிய கதையை கொண்டு வருவதற்கு முன்பு முந்தைய கணக்கை முதலில் தீர்க்க வேண்டும்.

    சோதனைகளுக்கு பிறகு கையெழுத்திட்ட பிடிப்பு பட்டியலை பகிரங்கப்படுத்தட்டும். அப்படி அதை வெளியிட்டால் பா.ஜனதா அவமானத்தை சந்திக்க நேரிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேஜஸ்வி யாதவின் டெல்லி வீட்டிலும் அமலாக்கத்துறை கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது.
    • நில மோசடி வழக்கில் தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ இன்று மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த, 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ரெயில்வே மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது பீகாரைச் சேர்ந்த சிலருக்கு, ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த வழக்கில், லாலு பிரசாத், அவரது மகன் மற்றும் துணை முதல் மந்திரியான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் 3 மகள்களுடன் தொடர்புடைய நாடு முழுவதும் உள்ள 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது.

    இந்நிலையில், நிலமோசடி வழக்கில் தேஜஸ்வி யாதவுக்கு சி.பி.ஐ. நான்காவது முறையாக இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

    ஏற்கனவே பிப்ரவரி 24-ம், மார்ச் 4, 11 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. மனைவியின் உடல்நிலையைக் காரணம் காட்டி 3 சம்மன்களைத் தவிர்த்த நிலையில், தற்போது 4-வது முறையாக மார்ச் 25-ம் தேதியன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக தேஜஸ்வி யாதவின் டெல்லி வீட்டிலும் அமலாக்கத்துறை கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

    • பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார்.
    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை நிதிஷ் குமார் இன்று சந்தித்தார்.

    புதுடெல்லி:

    பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் நேற்று புதுடெல்லி வந்தார். அங்கு அவர் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்துப் பேசினார். டெல்லியில் லாலு மகள் மிசா பார்தியின் வீட்டில் தங்கியிருந்த அவரைப் பார்த்து உடல்நலம் விசாரித்தார்.

    ரெயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில் தொடர்புடைய பண மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகனும் பீகார் துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேற்று ஆஜரானார்.

    லாலு பிரசாத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட மேலும் சில எதிர்க்கட்சி தலைவர்களை நிதிஷ் குமார் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் நிதிஷ் குமார் இன்று சந்தித்தார். அப்போது அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் உடனிருந்தனர். இச்சந்திப்பின்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தனர்.

    இந்த சந்திப்பு தொடர்பாக நிதிஷ் குமார் கூறுகையில், மேலும் பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க நாங்கள் ஒன்றாக இந்த விஷயத்தில் முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பா.ஜ.க.வை 100 தொகுதிகளுக்குள் கட்டுப்படுத்தி விடலாம் என நிதிஷ் குமார் கூறியிருந்தார்.

    • பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவை நேற்று சந்தித்தார்.
    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை நிதிஷ் குமார் இன்று சந்தித்தார்.

    புதுடெல்லி:

    பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் நேற்று புதுடெல்லி வந்தார். அங்கு அவர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்துப் பேசினார். டெல்லியில் லாலு மகள் மிசா பார்தியின் வீட்டில் தங்கியிருந்த அவரைப் பார்த்து உடல்நலம் விசாரித்தார்.

    லாலு பிரசாத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்து பேசினார். அப்போது துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவும் உடனிருந்தார். அவர்கள் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தனர்.

    அதன்பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டியது அவசியம் என தெரிவித்தனர்.

    • தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
    • முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல் -மந்திரி தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. அதில் கருணாநிதியின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

    தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டத்தில் கருணாநிதியின் பொதுவாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம், 11 மணிக்கு சாலமன் பாப்பையா பட்டிமன்றம் நடை பெறுகிறது.

    மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தது முத்தமிழறிஞர் கலைஞரின் பேச்சே-எழுத்தே என்ற தலைப்பில் நடைபெறும் பட்டிமன்றத்தில் புலவர் சண்முக வடிவேல், கவிதா ஜவகர், எஸ்.ராஜா, எம்.ராமலிங்கம், மாது, பாரதி பாஸ்கர் ஆகியோர் பேசுகிறார்கள்.

    மதியம் 3.30 மணிக்கு பாட்டரங்கம் நடைபெறுகிறது. அதன் பிறகு கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறந்து வைத்து தலைமை உரை நிகழ்த்துகிறார்.

    கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்-மந்திாி நிதிஷ் குமார் திறந்து வைத்து பேசுகிறார். முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல் -மந்திரி தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவே திருவாரூர் சென்று தங்கியிருக்கிறார்.

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நாளை காலை ஐதராபாத் வழியாக திருச்சி விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து திருவாரூருக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். மதியம் சுமார் 2.30 மணிக்கு சென்றடைந்ததும் விழா நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளன.

    நாளை மாலை 4.30 மணிக்குள் விழா முடிந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருச்சி சென்று அதன் பிறகு விமானம் மூலம் பீகார் சென்றடைகிறார்.

    இதையொட்டி விழா நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் நகரமும் விழாக் கோலம் பூண்டுள்ளது.

    • தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
    • முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்கிறார்.

    திருவாரூர்:

    மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.

    அதில் கருணாநிதியின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டத்தில் கருணாநிதியின் பொதுவாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.

    சுமார் 7,000 சதுர அடியில், 12 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது .

    இந்நிலையில், பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் கலைஞர் கோட்டத்தை இன்று திறந்து வைக்கிறார். பீகார் மாநில துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் முத்துவேலர் நூலகத்தை திறந்து வைக்கிறார். கருணாநிதியின் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

    • சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறந்து வைத்து தலைமை உரை நிகழ்த்துகிறார்.

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.

    தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டம் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது.

    இதற்காக ரூ.12 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியின் பொது வாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் இதில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பே திருவாரூர் வந்து விட்டார். நேற்று விழா ஏற்பாடுகளை கவனித்தார். இன்று காலையிலும் கலைஞர் கோட்டம் நிகழ்ச்சியை காண வந்திருந்தார்.

    காலை 10 மணிக்கு திறப்பு விழா நிகழ்ச்சி மங்கள இசையுடன் கோலாகலமாக தொடங்கியது. முதலில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.

    இதில் கபிலன், பா.விஜய், ஆண்டாள் பிரியதர்ஷினி, தஞ்சை இனியன் ஆகியோர் கவிதை வாசித்து சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

    இதன் பிறகு சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தது முத்தமிழறிஞர் கலைஞரின் 'பேச்சே' என்ற தலைப்பில் புலவர் சண்முக வடிவேல், கவிதா ஜவகர், ராஜா ஆகியோர் பேசினார்கள். 'எழுத்தே' என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம், மாது, பாரதி பாஸ்கர் ஆகியோர் பேசினார்கள்.

    நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் வந்து பார்த்து ரசித்தார். அவருடன் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமைக்கழக நிர்வாகிகள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் அமர்ந்து பார்வையிட்டனர்.

    காலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் 3.30 மணிக்கு கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறந்து வைத்து தலைமை உரை நிகழ்த்துகிறார்.

    கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் வரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், சஞ்சய்சிங் எம்.பி. ஆகிய இருவரும் பீகாரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவாரூர் செல்கின்றனர். அவர்களுடன் திருச்சி சிவா எம்.பி.யும் செல்கிறார்.

    இதனால் கலைஞர் கோட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று மாலை திறக்கப்படுகிறது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    இந்த விழாவில் நிதிஷ் குமார் திடீரென கலந்து கொள்ளாதது தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×