என் மலர்
நீங்கள் தேடியது "theemithi thiruvizha"
- பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
- இன்று மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி பகுதியில் அழகு நாச்சியம்மன் ்கோவில் உள்ளது .இக்கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் மற்றும் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் நேற்று குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா நடைபெற்றது. முன்னதாக கடந்த மாதம் 24-ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது.
நேற்று முன் தினம் மதியம் ஒரு மணிக்கு பொங்கல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருகுண்டம் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு கிராம தேவதைகளுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு மேல் திருகுண்டம் பூ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து மாவிளக்கு பூஜை பொங்கல் வைத்தல் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு படைக்கலாம் வீடு திரும்புதால் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இன்று (வெள்ளிக்கிழமை) மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. திருவிழா ஏற்பாடுகளை செங்கப்பள்ளி மற்றும் முத்தம்பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். திருவிழாவை ஒட்டி கலை நிகழ்ச்சிகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊத்துக்குளி போலீசார் செய்திருந்தனர்.
- நாளை 2 கோவில்களின் முன்பும் கம்பங்கள் நடப்படுகிறது.
- 11-ந்தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற சின்னமாரியம்மன் மற்றும் பெரியமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று இரவு 7 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
நாளை (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு 2 கோவில்களின் முன்பும் கம்பங்கள் நடப்படுகிறது. இந்த கம்பத்திற்கு தினந்தோறும் பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபடுவார்கள். வருகிற 11-ந்தேதி காலை 9 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். அதைத்தொடர்ந்து தேர்த்திருவிழா நடக்கிறது. வருகிற 12-ந்தேதி இரவு 7 மணிக்கு கோவில் கரகம் நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந்தேதி பகல் 11 மணிக்கு பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கிறார்கள். பின்னர் மாவிளக்கு எடுத்து பெண்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வருகிறார்கள். 14-ந்தேதி இரவில் கம்பம் பிடுங்கும் விழா நடக்கிறது.
அப்போது கம்பம் பிடுங்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விடப்படுகிறது. 15-ந்தேதி காலை 8 மணிக்கு மஞ்சள் நீராடுதல், சாமி திருவீதி உலாவும் இரவு 7 மணிக்கு சாமி திருக்கோவில் நிலை சேருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.
- நாளை தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
- 15-ந்தேதி தெப்போற்சவம் நடக்கிறது.
கோபிசெட்டிபாளையம் அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடம் தோறும் மார்கழி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.
கடந்த 2 வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக கோவில் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினார்கள். பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை.
இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. குண்டம் இறங்கும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். கடந்த 6-ந் தேதி தேர் நிலை பெயர்தல் நிகழ்ச்சியும், 9-ந் தேதி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடந்தது.
அதைத் தொடர்ந்து 11-ந் தேதி மாவிளக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று இரவு11 மணி அளவில் கோவிலின் முன்புள்ள குண்டத்தில் பொங்கல் வைத்து பூஜை நடந்தது. பின்னர் 50 அடி குண்டத்தில் எரிகரும்பு (விறகுகள்) வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று அதிகாலை 4 மணியளவில் பூசாரிகள் அம்மனிடம் வாக்கு கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை 5.30 மணியளவில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் தலைமை பூசாரி ஆனந்த் குண்டத்தில் உள்ள தீதனல் மற்றும் பழம், பூக்கள் ஆகியவற்றை வானத்தை நோக்கி வீசி, குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து முதன் முதலில் தீமிதித்து தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து ஆண்கள், பெண்கள் கைக்குழந்தைகளுடன் ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.
குண்டம் இறங்குவதற்கு வசதியாக ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக நின்று குண்டம் மிதித்தனர். இதற்கான பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையில் இரண்டு டிஸ்பிக்கள் 13 இன்ஸ்பெக்டர்கள், 93 சப் இன்ஸ்பெக்டர்கள், 532 போலீசார் மற்றும் ஊர் காவல் படை வீரர்கள் என 800-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். மேலும், திருட்டு போன்ற சம்பவங்களை தடுப்பதற்காக மாறு வேடத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
குண்டம் விழாவையொட்டி அரசு போக்குவரத்துகழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நாளை (13-ந் தேதி) மாலை 4 மணியளவில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 14-ந் தேதி சனிக்கிழமை இரவு அம்மன் அலங்கரிக்கப்பட்ட மலர்ப்பல்லக்கில் கோபி நகருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
15-ந் தேதி கோபியில் தெப்போற்சவமும், 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை கோபி, புதுப்பாளையம், நஞ்சகவுண்டம்பாளையம் பகுதிகளில் மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறுகிறது. 21-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
- நாளை இரவு அம்மன் சப்பரம் வீதிஉலா நடக்கிறது.
- புதன்கிழமை பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொடியேற்றத்தன்று மகா யாகசாலை பூஜையும், காலை 10 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது.
தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகின்றன. அம்மன் சப்பரமானது மகிழ்வண்ணநாதபுரம், பெத்தநாடார்பட்டி, பொட்டலூர், நவநீதகிருஷ்ணபுரம், இலங்காபுரிபட்டணம், நாகல்குளம் ஆகிய ஊர்களுக்கு வீதிஉலா சென்று வரும்.
வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு அம்மன் சப்பரம் வீதிஉலாவும், சப்பரம் கோவில் வந்தடைந்த உடன் மறுநாள் (புதன்கிழமை) அதிகாலையில் விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா எம்.எஸ்.சிவன்பாண்டி தலைமையில் பக்தர்கள் செய்துள்ளனர்.
- தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- இன்று முத்துமாரியம்மன், அஷ்டலட்சுமி, சப்தகன்னியர்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி ஸ்ரீஅழகுமுத்து மாரியம்மன் கோயிலில் 10 நாள் திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5.30 மணிக்கு 108 வேத விற்பனர்கள் பங்கு பெறும் மஹா யாக சாலை பூஜையும், கேரளா செண்டை மேளங்கள் முழங்க மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது.
கோவில் தர்மகர்த்தா சிவன் பாண்டி தலையில் பானை வைத்து அம்மனாக நின்று அருள்வாக்கு சொல்லும் நிகழ்வுகள் நடைபெற்றது.
தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இத்திருவிழாவிற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பலர் மாலை அணிவித்தும் விரதத்தை தொடங்கினர்.
10 நாட்களும் வில்லுப்பாட்டு, வான வேடிக்கை மற்றும் மேள தாளங்களுடன் அம்மனுக்கு தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. 10-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு முத்துமாரியம்மன், அஷ்டலட்சுமி, சப்தகன்னியர்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 11 மணி முதல் மாபெரும் அன்னதானம் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. இன்று இரவு பூக்குழி இறங்குதல் திருவிழா மற்றும் வாணவேடிக்கைகள் நடைபெறுகிறது.
திருவிழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி விழாவில் கலந்து கொண்டனர்.
பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி ஸ்ரீஅழகுமுத்து மாரி யம்மன் கோவில் 60-ம் ஆண்டு திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை மஹா யாக சாலை பூஜையும், காலை 10 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அம்மன் சப்பரமானது மகிழ்வண்ணநாதபுரம், பெத்தநாடார்பட்டி, பொட்ட லூர், நவநீதகிருஷ்ணபுரம், இலங்காபுரிபட்டணம், நாகல்குளம் ஆகிய ஊர்க ளுக்கு வீதிஉலா சென்று வந்தது. 10-ம் நாள் திருவிழா வான நேற்று இரவு அம்மன் சப்பர வீதி உலாவும், அதிகாலையில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் பலர் பூக்குழி இறங்கினர். சுரண்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம்,தென்காசி உள்ளிட்ட பகுதியிலிருந்து வந்திருந்த இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி விழாவில் கலந்து கொண்டனர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா எம்.எஸ்.சிவன் பாண்டி தலைமையிலான அருணா பேரி மாரிச்செல்வம், முத்துக் குமார், கோவில் குருசாமி முருகன் மற்றும் பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.
- இந்த கோவிலில் அம்மன் சயனநிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
- 6-ந்தேதி பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள்
கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஆனைமலை மாசாணியம்மன் கோவில். உப்பாற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் அம்மன் சயனநிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தினந்தோறும் இந்த கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக அமாவாசை தினங்களில் இந்த கோவிலில் கூட்டம் அலைமோதும்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் விசேஷமானது ஆகும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நாளை (21-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கொடியேற்றத்துக்காக வனப்பகுதியில் இருந்து மரம் வெட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நற்பணி மன்றத்தினர், முறைதாரர்கள், அம்மன் அருளாளிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் சர்க்கார்பதியில் உள்ள அடர்ந்த காட்டில் இருந்து 65 அடி நீளம் உள்ள மூங்கில் மரத்தை கொடிக்கம்பத்துக்கு தேர்வு செய்து வெட்டி எடுத்து வந்தனர்.
சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் 16 கிலோ மீட்டர் தொலைவுக்கு தோளில் சுமந்து மாசாணியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். அந்த கம்பத்தில் நாளை காலை 7.30 மணிக்கு கொடியேற்றப்படுகிறது.
இதையடுத்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து பிப்ரவரி 3-ந் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு ஆழியாற்றங்கரையில் மயான பூஜையும், 4-ந் தேதி காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனமும், மாலை 6.30 மணிக்கு மகா பூஜையும் நடக்கிறது.
5-ந் தேதி காலை 10.30 மணிக்கு குண்டம் கட்டும் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
6-ந்தேதி காலை 6.30 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 7-ந் தேதி காலை 7.30 மணிக்கு கொடியிறக்குதல், 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜை, 8-ந் தேதி காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயலட்சுமி மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.
- பிப்ரவரி 3-ந்தேதி நள்ளிரவு ஆழியாற்றங்கரையில் மயான பூஜை நடக்கிறது.
- 6-ந்தேதி காலை 6.30 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள்.
பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா தை அமாவாசை நாளான இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு கோவில் முன்பு கொடிக்கம்பத்தில் குண்டம் திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆனைமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், வெளியூர்காரர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்திருந்தனர்.
அவர்கள் கொடியேற்ற விழாவில் பங்கேற்று மாசாணியம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
இன்று தை அமாவாசை என்பதால் கோவிலில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.
கொடியேற்ற திருவிழாவை முன்னிட்டு இன்று பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் பகுதிகளில் இருந்து ஆனைமலைக்கு 45 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து விடிய, விடிய பஸ்கள் சென்று கொண்டே இருந்தன. பஸ்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவிழா தொடங்கியதை அடுத்து இன்று முதல் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து பிப்ரவரி 3-ந் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு ஆழியாற்றங்கரையில் மயான பூஜையும், 4-ந் தேதி காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனமும், மாலை 6.30 மணிக்கு மகா பூஜையும் நடக்கிறது.
5-ந் தேதி காலை 10.30 மணிக்கு குண்டம் கட்டும் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 6-ந் தேதி காலை 6.30 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 7-ந் தேதி காலை 7.30 மணிக்கு கொடியிறக்குதல், 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜை, 8-ந் தேதி காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயலட்சுமி மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.
- 5-ந்தேதி தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
- 6-ந்தேதி குண்டம் இறங்குதல் நடக்கிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மன் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையையொட்டி குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மயான பூஜை நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 1 மணிக்கு ஆழியாற்றங்கரையில் நடக்கிறது. இந்த பூஜையில் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகள் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திரளானோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இதனால் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் வகையிலும் கம்புகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மயான பூஜைக்காக பீடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மயான பூஜைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகா பூஜை, 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு சித்திரைத்தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது. 6-ந் தேதி காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள்
7-ந் தேதி காலை 7.30 மணிக்கு கொடி இறக்குதல், காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையும் நடக்கிறது. 8-ந் தேதி காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
- செவ்வாய்க்கிழமை கொடி இறக்குதல், மகா முனி பூஜை நடக்கிறது.
- 8-ந்தேதி மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைதொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை நேற்று அதிகாலையில் ஆழியாற்றங்கரையில் நடந்தது.
தலைமை முறைதாரர் மனோகரன் தலைமையில் அம்மன் அருளாளி அருண் மற்றும் முறைதாரர்கள் திருஆபரண பெட்டியில் பூஜை பொருட்களை எடுத்து கொண்டு முன்செல்ல பக்தர்கள் படைசூழ மயான பூஜை நடக்கும் ஆழியாற்றங்கரைக்கு வந்தனர்.
அங்கு மயான மண்ணில் சயன கோலத்தில் மாசாணியம்மன் உருவம் செய்யப்பட்டு, அதற்கு பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதைதொடர்ந்து அம்மன் அருளாளி அருண் அருள் வந்து கையில் சூலாயுதத்துடன் ஆடினார். இந்த பூஜையின் போது மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மழையில் நனைந்தபடி அம்மனை தரிசித்தனர்.
அம்மன் அருளாளி அருண் மயானத்தில் இருந்த அம்மன் உருவாரத்தை சிதைத்து எலும்பை கவ்வியபடி பிடிமண் எடுத்து அம்மன் பட்டு சேலையில் பத்திரப்படுத்தினார்.
எலும்புகளை வாயில் கவ்வியபடி ஆழியாற்றங்கரையில் இருந்து உப்பாற்றங்கரைக்கு சென்றார். அவருடன் பக்தர்கள், முறைதார்களுடன் சென்று ஆற்றில் புனித நீராடினர்.
தொடர்ந்து நேற்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு மாசாணியம்மனை தரிசனம் செய்தனர்.
இன்று காலை 10.30 மணிக்கு மேல் சித்திர தேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. அதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தலும் நடைபெற உள்ளது.
சிகர நிகழ்ச்சியான குண்டம் திருவிழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு மேல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குண்டம் இறங்குகிறார்கள்.
நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடி இறக்குதல், காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகா முனி பூஜை ஆகியவை நடக்கிறது. 8-ந்தேதி மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
- இன்று மஞ்சள் நீராடுதல், மகாமுனி பூஜை நடக்கிறது.
- நாளை மகாஅபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
கொங்கு நாட்டு காவல் தெய்வமாக விளங்கி வரும் மாசாணியம்மன் ஆனைமலை உப்பாற்றங்கரையில் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பெண்களின் காவல் தெய்வமான மாசாணியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா தை அமாவாசையான கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மாசாணியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை கடந்த 3-ந்தேதி நள்ளிரவில் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் மயான பூஜையில் எடுத்து வரப்பட்ட பிடிமண் மூலம் 4-ந் தேதி சக்தி கும்பஸ்தாபனம் நிகழ்ச்சி மற்றும் விரதம் இருந்த பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி, மகா பூஜை நடைபெற்றது.
நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு பொள்ளாச்சி-சேத்துமடை சாலையில் உள்ள குண்டம் மைதானத்தில் 47 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்ட குண்டம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் சித்திரதேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேர் வடம் பிடிக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 9 மணிக்கு குண்டம் மைதானத்தை வந்தடைந்தது.
இரவு 10 மணிக்கு செண்டை மேளம் முழங்க வாணவேடிக் கையுடன் குண்டம் பூ வளர்க்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஆபரண பெட்டியில் சூலாயுதம் மற்றும் பூஜை பொருட்கள், அக்னி கலசத்துடன் அர்ச்சகர்கள், முறைதாரர்கள், அருளாளிகள், விரதமிருந்து காப்பு கட்டிய பக்தர்கள் உப்பாற்றங்கரைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு புனித நீராடி சிறப்பு பூஜை செய்து விட்டு குண்டம் நடைபெறும் இடத்திற்கு அரளிப்பூ மாலை அணிந்து கொண்டு வந்தனர்.
குண்டத்தில் காலை 7.10 மணிக்கு மல்லிகை பூவினால் செய்யப்பட்ட பூ பந்தை, அம்மன் அருளாளி குப்புசாமி உருட்டி விட்டார். பூ வாடாமல் அப்படியே இருந்தது. தொடர்ந்து தலைமை முறைதாரர் மனோகரன் எலுமிச்சை பழத்தை உருட்டி விட்டார். தொடர்ந்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதலில் தலைமை முறைதாரர் மனோகரன், அம்மன் அருளாளிகள் அருண், குப்புசாமி ஆகியோர் இறங்கினார்கள். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு பக்தர்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினார்கள்.
குண்டத்திற்கு முன் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாசாணியம்மன் வீற்றிருந்தார். குண்டம் இறங்கும் பக்தர்கள் தேரில் வீற்றிருந்த மாசாணியம்மனை நோக்கி, மாசாணித் தாயே! காப்பாற்று! என்று கூறியபடி ஓடி வந்தனர். ஒரு சில பக்தர்கள் குண்டத்தில் நடந்து வந்து கூடியிருந்த பக்தர்களை பரவசப்படுத்தினர். விரதம் இருந்த ஆண் பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் குண்டம் இறங்கி முடித்ததும், பெண் பக்தர்கள் கையில் குண்டம் பூவை அள்ளி மீண்டும் குண்டத்தில் போட்டு, அம்மனை தரிசித்தனர்.
குண்டம் விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் குண்டம் திருவிழா பக்தர்கள் காணும் வகையில் மைதானத்திற்கு வெளியே பெரிய திரையில் நேரடியாக நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப்பட்டன. குண்டம் விழாவையொட்டி போலீசார், ஊர்க்காவல் படையினர் என 400 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் குண்டம் திருவிழாவுக்கு வந்த பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் விடிய, விடிய இயக்கப்பட்டன.மேலும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
மாசாணியம்மன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜை, நாளை (புதன்கிழமை) காலை 11.30 மணிக்கு மகாஅபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
- 20-ந்தேதி குண்டம் திருவிழா நடைபெற உள்ளது.
- 21-ந்தேதி பரிவேட்டை தெப்பத்தேர் நடக்கிறது.
அவினாசி காந்திபுரத்தில் பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு 20-ந்தேதி குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. முன்னதாக 16-ந்தேதி அம்மன் சாட்டு விழா, 18-ந தேதி கொடியேற்றமும், 19-ந்தேதி காலை அலகு தரிசனம் ஆகியவை நடைபெறுகிறது.
20-ந்தேதி காலை 7 மணியளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு ரிஷப வாகன காட்சியும், 21-ந் தேதி பரிவேட்டை தெப்பத்தேர் நிகழ்ச்சி, 22-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் அங்காளபரமேஸ்வரி அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.