என் மலர்
நீங்கள் தேடியது "thiruchendur"
- திருச்செந்தூர் கோவிலில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதியது.
- வரிசையில் நின்றுக் கொண்டிருந்த ஓம் குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
கோவிலில், 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்ற காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் (50) என்ற பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையான இன்று திருச்செந்தூர் கோவிலில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதியது.
இதற்கிடையே, வரிசையில் நின்றுக் கொண்டிருந்த ஓம் குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
மயங்கி விருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கோவில் சுற்று வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.
- முகாமில் தென் பகுதி மாநிலங்களில் இருந்து 112 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதேபோல் மாணவ, மாணவிகள் மற்றும் படித்து முடித்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 618 பேர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கமும், திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியும் இணைந்து நேற்று கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.
619 பேர் தேர்வு
முகாமில் தென் பகுதி மாநிலங்களில் இருந்து 112 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதேபோல் மாணவ, மாணவிகள் மற்றும் படித்து முடித்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 618 பேர் கலந்து கொண்டனர். இதில் 619 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் முகாமில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, திருச்செந்தூர் யூனியன் தலைவி செல்வி வடமலை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன் வரவேற்றார்.
பணி நியமன ஆணை
சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்பி. கலந்துகொண்டு தேர்வு பெற்ற 619 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கி, வாழ்த்தி பேசினார். முன்னதாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் வீரபத்திரன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ், யூனியன் ஆணையாளர் பொங்கலரசி, தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அஜய்குமார் அங்குள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
- ஆர்.டி.ஓ. புகாரி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே தோப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவபெருமாள். இவரது மனைவி. செல்வக்குமார். இவர்களது மகன் அஜய்குமார் (வயது 10).
அஜய்குமார் அங்குள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால், அந்த பள்ளியில் கழிப்பிட பராமரிப்பு பணி நடைபெற்று வந்துள்ளது. நேற்று முன்தினம் அந்த பகுதியில் அஜய்குமார் உள்பட 5 சிறுவர்கள் விளையாடி உள்ளனர்.
அப்போது அஜய்குமார் திடீரென கீழே விழுந்தான். அவனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அஜய்குமார் பரிதாபமாக இறந்தான்.
இந்த நிலையில் பள்ளி விடுமுறை நாளில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்த தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவனின் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இரவு திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி தலைமையில் மாணவனின் பெற்றோர்கள், உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் இன்று காலை 2-வது கட்டமாக மீண்டும் பேச்சுவார்த்தை கூட்டம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் பரிசு வழங்கினார்.
- பரிசளிப்பு விழாவுக்கு அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமை தாங்கினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 42-வது பாவை விழா நடந்தது.
பாடல் போட்டி
இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம் பாவை பாடல் போட்டி நடந்தது. இதில் திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப்பள்ளி, இந்து தொடக்கப்பள்ளி, மேலத்திருச்செந்தூரர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகடாமி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, காஞ்சி சங்கரா வித்யாஷ்ரம், குலசேகரபட்டிணம் வள்ளி யம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பண்டார சிவன் செந்தில் ஆறுமுகம் நினைவு நடுநிலை பள்ளி ஆகிய 6 பள்ளி மாணவ, மாணவிகள் 87 பேர் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்களுக் கான பரிசளிப்பு விழா திருச்செந்தூர் ஆனந்தவல்லி சமேத சிவக் கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் நடந்தது. விழாவுக்கு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமை தாங்கினார்.
பதக்கம்-பரிசுகள்
இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் ராம்தாஸ், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் ஓதுவார் கோமதிசங்கர் இறைவணக்கம் பாடி, வரவேற்று பேசினார். 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை, 4-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை, 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தனித்தனியாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் முதல் 3 பேருக்கும் மற்றும் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருப்பாவை குறித்து முத்தரசு, திருப்பள்ளி எழுச்சி குறித்து இல்லங்குடி, திருவெம்பாவை குறித்து வேலாண்டி ஓதுவார் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில், கோவில் அலுவலர்கள் ராஜ்மோகன், ரமேஷ், நெல்லையப்பன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கோவில் புலவர் மகாமுனி நன்றி கூறினார்.
- நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் மாநில அளவிலான பொருளியல் மாணவர்களுக்கான வினாடி- வினா போட்டி நடைபெற்றது.
- கடந்த ஆண்டும் இதே போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் 2-ம் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர்:
நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் மாநில அளவிலான பொருளியல் மாணவர்களுக்கான வினாடி- வினா போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பல்–வேறு கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவர்கள் பா.செல்வம் மற்றும் ச.ஞான அபினாஷ் ஆகியோர் கலந்துகொண்டு முதல் பரிசையும், சுழற்கோப்பையையும் தட்டிச் சென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், செயலர் ச.ஜெயக்குமார், பொருளியல் துறை தலைவர் ரமேஷ், வினாடி- வினா போட்டியின் அமைப்பாளர் முத்துக்குமார், வகுப்பு ஆலோசகர் கணேசன் மற்றும் பொருளியல் துறை பேராசிரியர்கள் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.
மேலும் கடந்த ஆண்டும் இதே போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் 2-ம் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.
- தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளி மைதானத்தில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது.
- நவீன் திருக்குறளை கூறிக் கொண்டே ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளி மைதானத்தில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில் 320 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின், ஆதித்தனார் கராத்தே சிலம்பம் கிளப் சார்பாக வணிக நிர்வாகவியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் ஜே.நவீன் கலந்து கொண்டார். அவர் திருக்குறளை கூறிக் கொண்டே ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார்.
இந்த மாணவரை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார், வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அ.அந்தோணி சகாய சித்ரா, உதவி பேராசிரியர்கள் அ.தர்மபெருமாள், ம.ரெ.கார்த்திகேயன், டி.செல்வகுமார், சிலம்பம் பயிற்சியாளர் வி.ஸ்டீபன், கராத்தே சிலம்பம் கிளப் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அ.ரா.ப.தி.முத்துக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
- வணிக நிர்வாகவியல் துறை சார்பில் “புதிய வானத்தை திறப்பதற்கான புதிய வணிக மாதிரிகள்” என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர் ஷேக் அப்துல்லா சிறப்புரையாற்றினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் "புதிய வானத்தை திறப்பதற்கான புதிய வணிக மாதிரிகள்" என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். வணிக நிர்வாகவியல் தலைவர் அந்தோணி சகாய சித்ரா வரவேற்றார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர் ஷேக் அப்துல்லா சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கு ஏற்ற வழிமுறைகளை எடுத்துக் கூறினார். கருத்தரங்கில் கோவிந்தம்மாள் ஆதிததனார் கல்லூரி, காமராஜ் கல்லூரி, சங்கர பகவதி கல்லூரி, அரசு கலை கல்லூரி, போப் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இருந்து மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கில் ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு செயல்முறை விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் ஆதித்தனார் கல்லூரியின் முனைவர் பாலு, வேலாயுதம், ரமேஷ், கவிதா, தீபாராணி, கோகிலா, திருச்செல்வம், ஜெயராமன், அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில், வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் தர்ம பெருமாள், செல்வகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
- திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு பள்ளி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடந்தது.
- நிகழ்ச்சியில் 6 அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 60 மாணவர்களும், 7 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்கள் 43 மற்றும் 48 இணைந்து அரசு பள்ளி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தியது. கல்லூரி முதல்வர் து.சி. மகேந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் கல்லூரியின் நோக்கம், வரலாறு மற்றும் அதன் முன்னாள் மாணவர்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். கல்லூரி செயலர் ச. ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். அரசு பள்ளி மாணவர்களுக்கு உயா் கல்வி பற்றியும், கல்வி நிலையங்கள் பற்றியும், உயர்கல்விக்கான அரசு உதவி தொகை மற்்றும் வேலைவாய்ப்பு பற்றியும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
மாணவர்களுக்கு கல்லூரியில் உள்ள இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் துறை ஆய்வகங்கள், நூலகம், சிவந்தி பண்பலை மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை காண்பித்து மாணவர்கள் விளக்கினார்கள்.
நிகழ்ச்சியில் 6 அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 60 மாணவர்களும், 7 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். முனைவர் ஜிம் ரீவ்ஸ் சைலன்ட் நைட் வரவேற்றார். முனைவர் முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், பேராசிரியை கவிதா மற்றும் பேராசிரியர் அபுல்கலாம் ஆசாத் ஆகிேயார் செய்திருந்தனர்.
- கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி பேசினார்.
- தூத்துக்குடி போஸ்ட்டுலேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான்சன் துரைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் துறையின் ஐ.இ.(ஐ), ஸ்கேன் ஆகிய துறை சார்ந்த கழகங்களின் சார்பில், 'ஜாவா மென்பொருளை பயன்படுத்தி எந்திரவழி கற்றல்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி பேசினார். இணை பேராசிரியர் கேசவராஜா வரவேற்று பேசினார்.
தூத்துக்குடி போஸ்ட்டுலேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான்சன் துரைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், மாணவர்களின் செயல்திட்ட பணி, அதன் முக்கியத்துவம் மற்றும் எந்திரவழி கற்றல், அதனால் ஏற்படும் வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கி கூறி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி பட்டறையில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவி இனிகா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கேசவராஜா, பவானி மற்றும் கணினிதுறை பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.
- உலகநுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் ஒருங்கிணைப்புடன் தூத்துக்குடி மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது.
- இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி 3-ம் ஆண்டு பொருளியல் மாணவர் பா.செல்வம் பங்கேற்று, மூன்றாவது பரிசான ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளார்.
திருச்செந்தூர்:
உலகநுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் ஒருங்கிணைப்புடன் தூத்துக்குடி மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது. இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி 3-ம் ஆண்டு பொருளியல் மாணவர் பா.செல்வம் பங்கேற்று, மூன்றாவது பரிசான ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசனிடம் பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவர் மற்றும் ஆதித்தனார் கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஏ.செல்வக்குமார், இணை ஒருங்கிணைப்பாளர் மு.திலீப்குமார் ஆகியோரை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் பாராட்டினார்.
- அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித் திருவிழா இன்று தொடங்கியது.
- விழாவில் ஒவ்வொரு நாளும் உச்சிப்படிப்பு பணிவிடை, அன்னதர்மம், வழங்குதல் நடக்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் கடற் கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித் திருவிழா இன்று காலையில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
முன்னதாக கொடி பட்டம் பதியைச்சுற்றி வந்து பதியை வந்தடைந்தது. பின்னர் கொடி மரத்தில் கொடியை வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் கொடியேற்றினார். கொடி யேற்றத்தை தொடர்ந்து காலை 7 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாக னத்தில் பவனி, 9 மணிக்கு அன்னதர்மம்,12 மணிக்கு உச்சிபடிப்பு, பணிவி டையம் நடைபெற்றது
பகல் 1மணிக்கு அன்ன தர்மம், மாலை 4 மணிக்கு உகப்படிப்பு பணிவிடை 5 மணிக்கு புஷ்ப வாகன பவனி, 6 மணிக்கு அன்னதர்மம் இனிமம் வழங்குதல் நடக்கிறது.
11நாட்கள் நடக்கும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் உகப்படிப்பு, பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு பணிவிடை, அன்னதர்மம், வழங்குதல் நடக்கிறது
இதே போல் விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு அய்யா வை குண்டர் புஷ்ப வாகனம், மயில், அன்னம், சர்ப்பம்,, கருட வாகனம், குதிரை, ஆஞ்சநேயர்,இந்திரன் என பல்வேறு வாகனங்களில் பவனி நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 31-ந்தேதி பகல் 12.05 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்தை தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பரா மரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் களக்காடு சுந்தர பாகவதர் குமார் ஜெய ராமன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். அன்று இரவு 1மணிக்கு காளை வாகன பவனியும் நடக்கிறது.
கலந்து கொண்டவர்கள்
திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷித்குமார், அன்பாலயம் அகில பாரத அய்யாவழி மக்கள் பேரி யக்க தலைவர் குரு சிவ சந்திர சுவாமிகள், அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை சட்ட ஆலோ சகர் வக்கீல் சந்திரசேகர், நிர்வாக குழு உறுப்பி னர்கள் லட்சு மணன், ராமமூர்த்தி, முத்து குட்டி, பால கிருஷ்ணன், செல்வக் குமார், ஆதி நாரா யணன், ரத்தின பாண்டி, சுதேசன், இளங்கோ, உறுப்பினர்கள் சிவாஜி, வினோத், கண்ணன், கார்த்திக், வரத ராஜன், ஹரிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுத்துரை, துணை தலைவர் அய்யாபழம், துணைச் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமையா நாடார், இணை தலைவர்கள் விஜய குமார்,பால்சாமி, ராஜ துரை, கோபால், இணை செ யலாளர்கள் ராதா கிருஷ்ணன், தங்க கிருஷ் ணன், செல்வின், வரத ராஜ பெருமாள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
- முருகப் பெருமான் அவதாரமாக உதித்தவர். பிறந்தவர் இல்லை.
- முருகன் நமக்கு வீடு பேற்றை அளிக்க வல்லவன்.
ஆறுமுகக் கடவுள் முருகப் பெருமான்!
தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமான், அழகு, வீரம், ஞானம் ஒருங்கே அமையப் பெற்றவர்.
முருகப் பெருமான் அவதாரமாக உதித்தவர். பிறந்தவர் இல்லை.
சத்து, சித்து, ஆனந்தம் சச்சிதானந்தமாக முருகப்பெருமான் கைலாச மலையில் வீற்றுள்ளார். முருகனை வணங்கினால் மும்மூர்த்திகளை வணங்கிய பலன் கிடைக்கும்.
இந்தப் பிறவியில் கைமேல் பலன் தருவது முருகன் திருவருள். ஞானவடிவான முருகனை நினைத்தால் ஞானம் கைகூடும் கவலைகள் நீங்கும். வினைகளும், பயமும் நீங்கும்.
மலையும், மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும். இக்குறிஞ்சி நிலக்கடவுளாக முருகன் கருதப்படுகிறான். இதன் காரணமாக "குன்று தோறாடும் குமரன்" என்று முருகனை வழிபடுகிறோம்.
முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்ற பல பொருள் உண்டு. முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்தது.
தமிழ்மொழியில் மெய்யெழுத்துகள் கண்களாகவும், வல்லினம், மெல்லினம், இடையினம் என வழங்கும் எழுத்துக்கள் ஆறு திருமுகங்களாகவும், அகர முதலிய எழுத்துகள் பன்னிரண்டும் தோள்காளாகவும், ஆயுத எழுத்து ஞான வேலாகவும் விளங்குகிறது.
முருகன் சிவந்த மேனியும், அபயவரதத்துடன் கூடிய கரங்களும், மார்பில் சாய்ந்த வேலும், திருவடியில் மயிலும், தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளிதேவி வலது பக்கத்திலும், நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய்வானை இடது பக்கத்திலும் அமைய காட்சித் தருவார்.
முருகப்பெருமானை உள்ளன்புடன் உபாசனை செய்யும் பக்தர்களின் வாழ்வு என்றும் மலர்ந்திருக்கும்.
சிவபெருமானின் ஈசானம், சத்யோஜாதம், வாமேதேவம், அகோரம், தற்புருடம் என்ற ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர ஆறுமுகங்களாயின.
எப்பொழுதெல்லாம் நம் உள்ளத்தில் பயம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் முருகனை நினைத்தால் ஆறுமுகம் தோன்றி நம் அச்சத்தைப் போக்கும்.
முருகனின் ஆறுமுகத்தின் செய்கைகள்
ஏறுமயில் ஏறி விளையாடுவது ஒரு முகம்.
அடியவர்களின் வினைகளைத் தீர்ப்பது ஒருமுகம்.
சூரபத்மனை வதைத்து அழியாத பேரின்ப வாழ்வினைத் தருவது ஒருமுகம்.
உயிர்களின் மன இருளைப் போக்கி ஒளிபடர்வது ஒருமுகம்.
வள்ளி, தெய்வானைக்கு மோகம் அளிப்பது ஒருமுகம்.
வேத, ஆகமங்களை முற்றுப் பெறச் செய்வது ஒரு முகம்.
முருகன் நமக்கு வீடு பேற்றை அளிக்க வல்லவன். ஆனால் இந்த வீடு பேற்றை நாம் பெறுவதை தடுக்கும் வகையில் நம்முள் ஆறு பகைவர்கள் உள்ளனர். காம, குரோத, லோப, மோக, மத, மாற்சரியங்கள் என்ற ஆறும்தான் அவை.
ஆறுமுகனுக்குரிய ஆறெழுத்தான "சரவணபவ" என்பதை கூறியபடி ஆறு படை வீடுகளுக்கும் சென்று நல்ல எண்ணங்களுடன் நம்மிடம் உள்ள ஆறு பகைவர்களும் நம்மை விட்டு நீங்க வேண்டும் என்று வேண்டி வணங்க வேண்டும்.
இந்த ஆறு பகைவர்களின் உருவகமாகத்தான் சூரபத்மன் கருதப்படுகிறான். அவனை சம்காரம் செய்ததன் மூலம் முருகப்பெருமான் அவன் ஆணவத்தை ஒழித்ததாக சொல்வார்கள்.
சூரபத்மன் கதையை அடுத்த பதிவில் காணலாம்.