என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupati temple"

    • தனியார் நிறுவன ஊழியர்கள் ஒரு ஷிப்ட்டுக்கு 10 முதல் 12 பேர் வரை மட்டுமே பணிக்கு வருகின்றனர்.
    • தேவஸ்தான அதிகாரிகள் ஸ்ரீ வாரி சேவா பக்தர்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்களை லட்டு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலவசமாக லட்டுகள் வழங்கப்படுகிறது. மேலும் ரூ.50-க்கு சிறிய வகை லட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

    லட்டு தயார் செய்யப்படும் இடத்திலிருந்து விற்பனை செய்யப்படும் கவுன்டர்களுக்கு லட்டு எடுத்து செல்லும் பணி தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் திருப்பதி தேவஸ்தானம் வழங்கி இருந்தது.

    அதன்படி தினமும் ஒரு ஷிப்டுக்கு 30 ஊழியர்கள் வீதம் 3 ஷிப்ட் முறையில் 90 ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். லட்டு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு தனியார் நிறுவனம் சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் தனியார் நிறுவன ஊழியர்கள் ஒரு ஷிப்ட்டுக்கு 10 முதல் 12 பேர் வரை மட்டுமே பணிக்கு வருகின்றனர். இதனால் லட்டு தயார் செய்யும் இடத்தில் இருந்து கவுன்டர்களுக்கு லட்டுக்களை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.

    லட்டுகளை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுன்டர்களுக்கு செல்லும்போது அவர்களுக்கு தேவையான அளவு லட்டு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அவதி அடைந்து வருகின்றனர்.

    இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் ஸ்ரீ வாரி சேவா பக்தர்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்களை லட்டு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு லட்டு கொண்டு செல்லும் முறை சரிவர தெரியாததால் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 67,486 பேர் தரிசனம் செய்தனர். 36,082 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.16 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • லட்டு தயாரிக்கும் பணியில் 3 ஷிப்ட்டுகளாக 24 மணி நேரமும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • லட்டு வழங்கும் 60 கவுண்டர்களில் 30 கவுண்டர்களில் மட்டுமே ஊழியர்கள் இருந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த 3 நாட்களாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 2½ லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக திருப்பதி வந்து இருந்தனர்.

    தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகின்றன. ரூ.50 விலையில் பக்தர்களுக்கு தேவையான அளவு லட்டுக்கள் விற்பனை செய்து வந்தனர்.

    தயாரிக்கப்படும் லட்டுக்களை கவுண்டர்களுக்கு கொண்டு செல்லும் பணியை தனியார் ஒருவருக்கு தேவஸ்தானம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கி இருந்தது. ஒப்பந்ததாரர் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் வாங்காததால் பணியாளர்கள் பாதி பேர் வேலைக்கு வரவில்லை.

    மேலும் லட்டு தயாரிக்கும் பணியில் 3 ஷிப்ட்டுகளாக 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அவர்களால் ஒரு நாளைக்கு 3.50 முதல் 4 லட்சம் லட்டுகள் வரை மட்டுமே தயாரிக்க முடிகிறது.

    இந்த நிலையில் வார விடுமுறையான நேற்று தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா தெலுங்கானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர்.

    பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு லட்டு வாங்க கவுண்டர்கள் முன்பாக குவிந்தனர். லட்டு வழங்கும் 60 கவுண்டர்களில் 30 கவுண்டர்களில் மட்டுமே ஊழியர்கள் இருந்தனர். மீதும் உள்ள 30 கவுண்டர்கள் மூடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு லட்டு வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    அவர்களுக்கு லட்டு வழங்குவது குறித்து முறையான பயிற்சி இல்லாததால் பக்தர்களுக்கு லட்டு வழங்க சிரமப்பட்டனர்.

    இதனால் லட்டு கவுண்டர்கள் முன்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து லட்டுக்களை பெற்று சென்றனர்.

    பக்தர் ஒருவருக்கு 3 முதல் 4 லட்டுக்கள் வரை மட்டுமே வழங்கப்பட்டது. கூடுதலாக லட்டுக்கள் கேட்டால் இல்லை என ஊழியர்கள் பதில் அளித்தனர். எனவே நவீன எந்திரங்களை பயன்படுத்தி ஒரு நாளைக்கு 7 முதல் 7 லட்சம் லட்டுக்கள் தயாரிக்க வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 72,466 பேர் தரிசனம் செய்தனர் 28,123 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.29 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • மாண்டஸ் புயல் காரணமாக திருமலைக்கு செல்லும் ஆந்திர மாநில அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது.
    • பஸ்கள் நிறுத்தப்பட்டதால் ரூ.35 லட்சம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதியில் இருந்து நெல்லூர், விஜயவாடா, குண்டூர், ஐதராபாத் மற்றும் திருமலைக்கு செல்லும் ஆந்திர மாநில அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது.

    நேற்று முன்தினம் 101 பஸ்களும், நேற்று 88 பஸ்களும் நிறுத்தப்பட்டது.

    இதனால் 66,150 கி.மீ. இயக்கப்பட வேண்டிய பஸ்கள் நிறுத்தப்பட்டதால் ரூ.35 லட்சம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருப்பதியில் நேற்று 63,214 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 23,147 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
    • திருப்பதியில் நேற்று 63,214 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 23,147 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.

    திருப்பதி:

    திருப்பதியில் அதிகாலையில் சுப்ரபாத சேவை ஏழுமலையானுக்கு நடத்துவது ஐதீகம். ஆனால், தமிழ் மாதமான, மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் அருளிய திருப்பாவை சேவை பாடப்படும்.

    இதனையொட்டி, இம்மாதம் 16-ம் தேதி மார்கழி மாதம் தாமதமாக பிறப்பதால், மறுநாள் 17-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 14-ம் தேதி வரை திருப்பாவை சேவை நடைபெறும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    மேலும், தேவஸ்தானத்தின் ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டம் சார்பில் நாடு முழுவதிலும் உள்ள 250 வைணவ கோவில்களில் திருப்பாவை மற்றும் 12 ஆழ்வார்களின் மகிமைகள் குறித்து மார்கழி மாதம் முழுவதும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 63,214 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 23,147 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • தேவஸ்தான ஊழியர்கள் 3 பேரும் மீண்டும் கடந்த ஜூன் மாதம் தேவஸ்தானத்தின் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
    • மனுவை விசாரித்த நீதிபதிகள் வரும் 27-ந் தேதிக்குள் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

    திருப்பதி:

    திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.

    ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2011-ம் ஆண்டு இந்து தர்ம பிரசார பரிஷத் திட்ட உதவியாளர் காலி பணியிடம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே தற்கால ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் அறிவிப்பு வெளியிட்டதற்கு தேவஸ்தான ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தேவஸ்தான ஊழியர்கள் கொம்பு பாபு, சுவாமி நாயக், சவேல நாயக் ஆகியோர் ஐதராபாத் ஐகோர்ட்டில் தேவஸ்தானத்தின் அறிவிப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்தனர்.

    அதில் நாங்கள் 17 ஆண்டுகளாக பணி செய்து வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்யாமல் தேவஸ்தானம் புதிய பணியாளர்களை வேலையில் அமர்த்த அறிவிப்பு வெளியிட்டது.

    தேவஸ்தானத்தின் அறிவிப்புக்கு தடை விதித்து தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தனர்.

    அவர்களது மனுவை கடந்த ஏப்ரல் 13-ம் தேதி விசாரித்த ஆந்திர ஐகோர்ட்டு தேவஸ்தானத்தில் அறிவிப்பை ரத்து செய்து மனுதாரர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

    ஆனால் தேவஸ்தானம் மனு தாக்கல் செய்த 3 ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்யவில்லை.

    இதனால் தேவஸ்தான ஊழியர்கள் 3 பேரும் மீண்டும் கடந்த ஜூன் மாதம் தேவஸ்தானத்தின் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் வரும் 27-ந் தேதிக்குள் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டிக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.

    இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
    • தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாக்க கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக நடை அடைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

    தொற்று பரவல் குறைந்ததையடுத்து குறைந்த அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மீண்டும் கொரோனா 2-வது அலை தொடங்கியதால் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்து வந்தனர். கடந்த ஒரு ஆண்டாக கொரோனா பரவல் குறைந்ததையடுத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, இலவச தரிசனம், ரூ.300 ஆன்லைன் டிக்கெட் மற்றும் ஸ்ரீ வாணி அறக்கட்டளை, சுப்ரபாத சேவை உள்ளிட்ட சேவைகள் மூலம் தினமும் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    எப்போதும் இல்லாத அளவுக்கு திருப்பதி தேவஸ்தானத்திற்கு மாதத்திற்கு ரூ.120 கோடி முதல் 130 கோடி வரை வருவாய் கிடைக்கிறது.

    இந்த நிலையில் வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாக்க கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    இதனால் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும்.

    மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று வைத்திருக்க வேண்டும் அல்லது தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 62, 055 பேர் தரிசனம் செய்தனர்.23, 044 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.99 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்படுகிறது.
    • பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவித்துள்ளார்.

    திருப்பதி:

    சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பி.எப்.7 எனப்படும் உருமாறிய கொரோனா பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. இந்த வைரசின் பரவலை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    மேற்படி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதைப்போல பிற வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவித்துள்ளார்.

    • கொரோனா தொற்றுக்கு பிறகு இந்த ஆண்டில் திருப்பதியில் நேற்று அதிகபட்சமாக ரூ 5.88 கோடி உண்டியல் வசூலானது.
    • 70,496 பேர் தரிசனம் செய்தனர். 25,500 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு இந்த ஆண்டு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினந்தோறும் சராசரியாக 65 ஆயிரம் முதல் 80 ஆயிரமாக உள்ளது. தினமும் ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் 25 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனம் மற்றும் இலவச டைம் ஸ்லாட், சேவா டிக்கெட்டுகள் பெற்றும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதனால் மாதம் தோறும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.120 முதல் 130 கோடி வரை உண்டியலில் காணிக்கையாக கிடைக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தேவஸ்தானத்திற்கு அதிக அளவில் வருவாய் கிடைத்து வருகிறது.

    கொரோனா தொற்றுக்கு பிறகு இந்த ஆண்டில் திருப்பதியில் நேற்று அதிகபட்சமாக ரூ 5.88 கோடி உண்டியல் வசூலானது. 70,496 பேர் தரிசனம் செய்தனர். 25,500 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியையொட்டி 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். இதனால் உண்டியல் வருவாய் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    • பக்தர்களின் கூட்டத்தால் டிசம்பர் மாதம் 29-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 3-ம் தேதி வரை திருமலையில் அறைகள் முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது.
    • கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.

    திருப்பதி:

    வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை திருப்பதியில் 8 இடங்களிலும், திருமலையில் ஒரு இடத்திலும் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.

    1-ம் தேதி மதியம் 2 மணியில் இருந்து இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். தொடர்ந்து 4.50 லட்சம் டோக்கன்கள் பக்தர்களுக்கு ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும்.

    இலவச டோக்கன்கள் பெற்றுக்கொண்ட பக்தர்கள், அதில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரத்தின் அடிப்படையில் ஒரு மணி நேரத்துக்கு முன்பு திருமலைக்கு வந்தால் போதுமானது.

    டோக்கன் பெற்றவர்கள், திருமலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தங்கும் விடுதி அருகே ஆஜராக வேண்டும். பக்தர்களின் கூட்டத்தால் டிசம்பர் மாதம் 29-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 3-ம் தேதி வரை திருமலையில் அறைகள் முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசியன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை தங்க ரத ஊர்வலம் 4 மாட வீதிகளிலும் நடைபெறும், மறுநாள் 3-ம் தேதி துவாதசியை முன்னிட்டு, காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடைபெறும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் 3.50 லட்சம் லட்டு பிரசாதங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும்.

    பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் 2 மலைப்பாதைகளும் திறந்தே இருக்கும்.

    கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்றால் சுமார் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.
    • டைம் ஸ்லாட் டோக்கன் பெறாத இலலச தரிசன பக்தர்கள் அங்குள்ள குடோன்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் தொடர் மழை மற்றும் கடும் பனி காரணமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

    தற்போது மழை இல்லாமல் குளிரின் தாக்கமும் குறைந்து உள்ளதால் மீண்டும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி நெருங்கி வருவதாலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

    இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்றால் சுமார் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    டைம் ஸ்லாட் டோக்கன் பெறாத இலலச தரிசன பக்தர்கள் அங்குள்ள குடோன்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    அவர்கள் சுமார் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 71, 299 பேர் தரிசனம் செய்தனர். 28,288 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.26 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • பஸ் நிலையங்களில் பக்தர்களை சிரமம் இல்லாமல் ஏற்றி அனுப்புவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். ‌
    • பயணிகள் எளிதில் டிக்கெட் பெறும் வகையில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

    வேலூர்:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.

    இதனையொட்டி திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஊர்களில் இருந்து திருப்பதிக்கு 354 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

    இதில் தமிழகத்தில் சென்னை மற்றும் வேலூரில் இருந்து கூடுதலாக 25 சிறப்பு பஸ்கள் திருப்பதிக்கு இயக்கப்பட உள்ளது.

    இதற்காக கூடுதலாக போக்குவரத்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பதி மத்திய பஸ் நிலையம், ரெயில் நிலையம், திருமலையில் உள்ள ராம் பகிதா விடுதி வளாகம், பாலாஜி பஸ் நிலையம் திருப்பதி ஏழு குண்டல வாடு பஸ் நிலையங்களில் கூடுதலாக மேலாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    பஸ் நிலையங்களில் பக்தர்களை சிரமம் இல்லாமல் ஏற்றி அனுப்புவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும் பயணிகள் எளிதில் டிக்கெட் பெறும் வகையில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

    சிறப்பு பஸ்கள் வைகுண்ட ஏகாதசி முதல் தொடர்ந்து 5 நாட்கள் வரை இயக்கப்படும். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் அதற்கு ஏற்ப பஸ்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பக்தர்கள் வாடகைக்கு அறை எடுக்க வேண்டும் என்றால் வைப்புத்தொகையுடன் ரூ.3,400 செலுத்தினால் மட்டுமே அறைகள் கிடைக்கும்.
    • தரிசனத்திற்கு வரும் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 6000 அறைகள் கட்டப்பட்டு உள்ளன. தரிசனத்திற்கு வரும் ஏழை எளிய மக்கள் தங்குவதற்காக ரூ.50, 100, 200 என அறை வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர கூடுதல் கட்டணத்திலும் அறைகள் உள்ளது.

    பக்தர்கள் அவர்களது வசதிக்கு ஏற்ப அறையை வாடகைக்கு எடுத்து தங்கி வருகின்றனர்.

    தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு வாடகைக்கு விடப்படும் அறைகளின் மின்விசிறி, கதவு, ஜன்னல்கள், குளியலறை, கழிவறை ஆகியவை போதிய பராமரிப்பின்றி உள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டினர்.

    இந்த நிலையில் வாடகை அறைகளை பராமரிக்க ரூ.110 கோடி டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதேபோல் குடும்பத்துடன் வரும் பக்தர்கள் தங்குவதற்காக ஆங்காங்கே கெஸ்ட் ஹவுஸ்கள் கட்டப்பட்டுள்ளன.

    இந்த கெஸ்ட் ஹவுஸ்களில் ஏ.சி., வெண்ணீர் வசதியுடன் அறைகள் சீரமைக்கப்பட்டன. நாராயணகிரி கெஸ்ட் ஹவுஸில் ரூ.500, ரூ.600-க்கு வாடகைக்கு விடப்பட்ட அறைகள் தற்போது சீரமைக்கப்பட்ட பின் ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ.1,700 ஆக உயர்த்தி உள்ளனர்.

    இதேபோல் நந்தகம், வகுளமாதா, பாஞ்ச ஜன்யம், கவுஸ்துபம் உள்ளிட்ட காட்டேஜ்களின் அறை வாடகை ஜி.எஸ்.டி-யுடன் 2,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு காட்டேஜ்களில் ரூ.750 ஆக இருந்த அறை வாடகை ஜி.எஸ்.டி-யுடன் ரூ.2,800 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. பக்தர்கள் வாடகைக்கு அறை எடுக்க வேண்டும் என்றால் வைப்புத்தொகையுடன் ரூ.3,400 செலுத்தினால் மட்டுமே அறைகள் கிடைக்கும்.

    இதனால் தரிசனத்திற்கு வரும் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்:-

    எந்தவித முன் அறிவிப்பும் இன்றி தேவஸ்தானம் அறை வாடகையை பல மடங்கு உயர்த்தி உள்ளது. அறை வாடகை உயர்த்துவது குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றவில்லை. மாநில அரசுக்கும் தெரிவிக்கவில்லை.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு சேவையாக வழங்கப்பட்ட அறை வாடகையை தேவஸ்தான அதிகாரிகள் வியாபாரமாக மாற்றிவிட்டனர். எனவே உயர்த்தப்பட்ட அறை வாடகையை குறைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 45,887 பேர் தரிசனம் செய்தனர். 17,702 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.53 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    ×